August 5, 2011

கிரேண்ட் பேரண்ட்ஸ் டே

டிஸ்கி:காமெடி பதிவிட்டு நாளாச்சு என்பதால் இந்த பதிவில் காமெடி சற்றுஅதிகமாகத்தான் இருக்கும்.”என்ன இது காமெடி தூக்கலாக இருக்கு” என்று புருவம் தூக்குபவர்கள் தயவு கூர்ந்து கோச்சுக்க மாட்டீர்கள் என்று அபார நம்பிக்கை வைத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.

நேற்று பேரன் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு சர்குலர்.வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி ஆடிட்டோரியத்தில் வைத்து கிரேண்ட் பேரண்ட்ஸ் டே கொண்டாட்டம் நடத்தப்படுவதாக.பேரண்ட்ஸ் டே சரி..கிரேண்ட் பேரண்ட்ஸ் டே என்பது இந்த பள்ளியை பொறுத்த வரை புதியதாக உள்ளதே!என் பிள்ளைகளுக்கான பள்ளி அழைப்புகள் அனைத்துக்கும் தவறாது ஆஜர் ஆகி விடும் நான்,மாதம் ஒரு முறை சப்ஜெக்ட் வாரியாக ஒவ்வொரு ஆசிரியர்களையும் போய் சந்தித்து பிள்ளைகளின் பெர்பார்மன்ஸ் பற்றி அறிய விழையும் நான் இதற்கு போகாமல் இருப்பேனா?காலையிலே ரெடியாகி விட்டேன்.

சென்ற மே மாதம் வரை தாயாக அந்த பள்ளி வளாகத்தினுள் நுழைந்து வந்த நான் இன்று ஒரு பாட்டியாக உள்ளே நுழையும் பொழுதே...

எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்டாஃப் ஒருவர்,கிட்டத்தட்ட என் வயதுக்காரர்,சாதரணமாக ஒருவருக்கொருவர் மேடம்,ஸிஸ்டர் என்று அழைத்துக்கொள்ளும் நாங்கள் இன்று அவரது அழைப்பை கேட்டு அதிர்ந்து விட்டேன்.

“வெல்கம் ஆண்டி..வெல்கம் ஆண்டி..”வாயாற நமுட்டு சிரிப்போடு வரவேற்று அழைகின்றார்.அடிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.......

“இரும்மா..இரு..அப்புறம் வச்சிக்கறேன் ஆப்பு”முணு முணுத்தபடி ஆடிட்டோரியத்தினுள் நுழையும் பொழுது கும்பலாக பலர் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

“என்னடா இது .பத்துமணி அழைப்புக்கு பத்தரை மணிக்கு ஆஜர் ஆனதால் பங்சன் முடிந்து திரும்புகின்றார்களா இல்லை இடம் இல்லாமல் வெளியேறுகின்றனரா”புரியாமல் உள்ளே எட்டிப்பார்த்த பொழுது ஆரம்பிக்கவே இல்லை என்று புரிந்தது.கிரேண்ட் பேரண்ட் அல்லாதவர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

உள்ளே நுழைந்து முதல் வரிசையில் அமர எத்தனிக்கும் பொழுது பக்கத்தில் இருந்த பாட்டி “இங்கே கிராண்ட் பேரண்ட்ஸை மட்டும்தான் அலோவ் பண்ணுவார்கள் “என்றவரை உற்றுப்பார்த்தேன்.

“ஏன் என்னைப்பார்க்க கிரேண்ட் மதரா தெரியலியா”கேட்ட படி அமர்ந்த பொழுது அந்த பாட்டி அசடு வழிய நெளிந்தார்.

அட்றா சக்கை..அந்த பரிச்சயமான டீச்சர் ஆண்டி என்று அழைத்து டஞ்சர் பண்ணியதற்கு இந்த பாட்டி டிஞ்சர் தடவி விட்டது எனக்கு முழு ஜாங்கிரியையும் அப்படியே சாப்பிட்டது போல் தித்திப்பு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சுற்றும் முற்றும் பார்த்தேன்.மண்டையில் கொண்டை,குற்றால அருவியோடும் தலை,சோடா புட்டிகண்ணாடி,கலர்ஃபுல் கல்யாணி சாரி,ஆங்காங்கே அசத்தலான மடிசார் சேலை,ரெட்டை வட சங்கிலி,வெற்றிலைபோடும் வாய் இப்படி இமேஜின் பண்ணி வைத்து பாட்டிகளை உற்றுப்பார்த்தால் எனக்கு நிறைய ஏமாற்றம்.

அநேகர் ஹைடெக் பாட்டிகளாக இருந்தனர்.அனார்கலி ,பாட்டியாலா சுடிதாரும்,பேரலல் பாட்டமும்,சைட் ஸ்லிட்,பேக் ஸ்லிட் டாப்புகளுமாக பாட்டிகளே பட்டாம்பூச்சிகளாக தெரிந்தனர்.இன்னொரு பாட்டி என்னை மட்டுமல்ல வந்திருந்தவர்கள் அனைவரையும் அசத்தி விட்டார்.கால்களை இறுக்கி பிடிக்கும் லெக்கின்ஸ்,அதற்கு மேட்சாக டாப்.சில பழைய பாட்டிகள் ”கஷ்ட காலம்..கலி முத்திப்போச்சு” என்பார்கள்.சில ஃபிரெஷ் பாட்டிகள் ”அட செம அட்வான்சா இருக்காங்க”என்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்

’தேமே’ என்று அமர்ந்திருந்த (ரங்க மணிகள் மன்னிக்க) தாத்தாக்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் பேரக்குழந்தைகளுடன் பாட்டிகள் அடிக்கும் லூட்டிகளைப்பார்த்து எட்டிப்பார்க்கும் பொக்கை வாய் திறக்க பார்த்துக்கொண்டிருந்தனர்.
பஞ்சு பொட்டி தலை,தலையில் வாங்கிய அரை முக்கால் கிரவுண்ட் என்று இருந்த தாத்தாக்களை பார்க்கும் பொழுது ஏன் பாட்டிகளுக்குறிய பியூட்டி கான்சியஸ் தாத்தாக்களுக்கு இல்லவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தனர்.(மீண்டும் ரங்க மணிகள் மன்னிக்க)
இந்த சமயம் இந்த மாத இவள் புதியவள் இதழில் “இன்றைய ஹீரோக்கள் மிகவும் சுமார் ரகமாக இருக்க,ஹீரோயின்கள் மட்டும் மிக அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்கின்றனரே.இது என்ன நியாயம்”என்று நடிகை சுஹாஷினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ”அது என்ன சினிமாவில் மட்டுமா?உங்கள் பேட்டையிலேயே பாருங்கள்.கணவர்கள் எல்லோரும் தொப்பை,வழுக்கையுடன் திடகாத்திரமாக இருப்பார்கள்.மனைவிமார்கள் பளிச் என்று இளமையாக இருப்பார்கள்.சினிமாவிலும் கேட்கவேண்டுமா?அந்தப்பிரச்சினை வேண்டாம்.வசீகரமான ஹீரோக்களை எண்ணிப்பார்க்கலாமா?எம்ஜியாருக்கு பிறகு கமல்,கார்த்திக்,அரவிந்த்சாமி,அஜித்,சூர்யா அவ்வளவுதான்...முற்றுப்புள்ளி.இவர்கள் மனைவிகளும் இளமைதான்,அழகுதான்”என்று நடிகை சுஹாஷினி கூறிய பதில் நினைவுக்கு வருகின்றது.

பெண்களுக்குத்தனியாக ஆண்களுக்குதனியாக விளையாட்டுப்போட்டிகள் நடந்தேறின.சுமார் 50,60 பேர் கலந்து கொண்ட லக்கிகார்னரில் வென்ற கடைசி ஆறு பேரில் நானும் ஒருத்தி.கடைசியாக வென்ற ஆறு பேருக்கும் தனியாக மற்றுமொரு போட்டி (குச்சியில் கலர் பேப்பர் சுற்றுதல்) வைத்ததில் வெற்றிகரமாக தோல்வியைதழுவினேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

“அச்சச்சோ..என்ன மேடம் கடைசி நேரத்தில் இப்படி ஆச்சே”பரிதாபப்பட்ட மிஸ்ஸிடம் “என்ன செய்வது வயசாச்சி இல்லே கையெல்லாம் நடுங்குது”சிரித்து சமாளித்து வைத்தேன்.
ஐயோ..இதென்ன அநியாயமாக இருக்கு?தாத்தா,பாட்டின்னா தும்பைப்பூ தலையும்,காந்திதாத்தா கண்ணாடியும்,தள்ளாடும் நடையும்,நடு நடு நடுங்கும் குரலும் என்று இலக்கணமே வகுத்து விட்டனர்.பார்த்தீர்களா?தாத்தா,பாட்டி வேஷம் போட்ட வாண்டுகளின் கெட்அப்பை?
மேடையில் போட்டிகளில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும் கிரேண்ட் மா&கிரேண்ட்பாக்களின் ஒவ்வொரு அசைவுக்கும் குழந்தைகள் கத்தி,கைதட்டி,குதித்து,ஆர்ப்பாட்டம் பண்ணுவதைப்பார்த்து மலைத்தே விட்டேன்.காவலுக்கு நின்ற ஆயாக்களைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.கேஜி யில் இப்படின்னா நாளைக்கு யுஜி,பிஜி யில் என்ன ஆட்டம் போடப்போகின்றார்களோ இந்த நாளைய மன்னர்கள்.
அத்தனை குட்டீஸுக்கும் நடுவில் எழுந்து போஸ் கொடுக்கும் எங்கள் வீட்டு செல்லக்குட்டி.
நிகழ்ச்சி முடிந்ததும் ஆடிட்டோரியத்தை விட்டு குட்டீஸை வரிசையில் கிளாஸ் ரூமுக்கு போகச்செய்கையில் எங்கள் வீட்டு செல்லக்குட்டி என்னை விட்டு பிரிய மனதில்லாமல் கடைசி வரை என்னுடனே இருந்து கியூவின் கடைசி ஆளாக கண்களை கசக்கிக்கொண்டே ,விம்மியபடி செல்லும் காட்சி.




60 comments:

ஹுஸைனம்மா said...

எக்காவ், கலக்கிட்டீங்க. நானும் இனி “ஆஆஆஆஆண்ட்ட்ட்டீடீடீ”னு கூப்பிடலாம்னு பாக்கிறேன்.

கமெண்ட் எழுத நிறைய இருக்கு. இப்ப நேரம் இல்லை. அப்பாலிக்காக் கவனிச்சிக்கிறேன்..... :-)))))))))

முற்றும் அறிந்த அதிரா said...

ஐ.... ஸாதிகா அக்கா பூஸின் அக்காதான் என்பதைக் காட்டிட்டாஆஆஆஅ... என்னா ஸ்பீட்டூஊஊஉ.. நான் பதிவைச் சொன்னேனாக்கும்:).

நான் பின்பு வாறேன் படிக்க...

ஷர்புதீன் said...

//கடைசி ஆளாக கண்களை கசக்கிக்கொண்டே செல்லும் காட்சி//

cute!!

Asiya Omar said...

thozhi(paatti) shadiqava kokka? rasiththu vaasiththeen.paasakkaara paatti enpathu peeranai paarththaalee therikiRathu.nalla pakirvu.sila veedukalil paatti oldaakavum thaaththa youngakavum irukkaanga theriyumoo? avvvv...rangamanikalum santhosappadattum.

ஜெய்லானி said...

ஆண்ட்டீஈஈஈஈஈஈ......:-)))))

ஜெய்லானி said...

ஆண்டீ..போட்டோஸ் சூப்பர் :-))

ஆமினா said...

எக்கோவ்வ்வ்.......

செம கலக்கல் பதிவு....

மாஷா அல்லாஹ்... குழந்தை அழகு

vanathy said...

பாட்டிகளாக இருந்தனர்.அனார்கலி ,பாட்டியாலா சுடிதாரும்,பேரலல் பாட்டமும்,சைட் ஸ்லிட்,பேக் ஸ்லிட் டாப்புகளுமாக பாட்டிகளே பட்டாம்பூச்சிகளாக தெரிந்தனர்//
ஹையோ! சூப்பர்.
ஏன் பாட்டிகளுக்குறிய பியூட்டி கான்சியஸ் தாத்தாக்களுக்கு இல்லவே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தனர்.//
ஆண்களுக்கு எதையாவது நினைச்சு கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும்!!!!!

குட்டி சூப்பர்.

வெரி நைஸ், ஆன்டி!!!!!????

Chitra said...

so cute!!!!!!! :-)

முற்றும் அறிந்த அதிரா said...

//கிரேண்ட் பேரண்ட் அல்லாதவர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.//

என்னா கொடுமை கர்ர்ர்ர்ர்:).

//இந்த பாட்டி டிஞ்சர் தடவி விட்டது எனக்கு முழு ஜாங்கிரியையும் அப்படியே சாப்பிட்டது போல் தித்திப்பு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

அந்தப் பாட்டி கண்ணாடியை வீட்டில வச்சுட்டு வந்திட்டாபோல .... ஹையோ.. நான் இப்பவும் இமாட கட்டிலுக்குக் கீழதான்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//(மீண்டும் ரங்க மணிகள் மன்னிக்க)//

பயப்பூடாதீங்க அடிக்கடி இப்பூடியெல்லாம் சொல்லத் தேவையில்லை.. அவங்க மன்னிப்பாங்க:))))... மன்னிச்சுத்தானே ஆகணும்..:)) ஹையோ... வாயில வாறதையெல்லாம் கொட்டுறேனே...:))) ஆராவது காப்பாத்துங்கோ:)).

குட்டி சூப்பர் போஸ் கொடுக்கிறார்... இப்பத்தான் பிறந்தவர்போல இருக்கு அதுக்குள்... நேசறியா?..

கடை போட்டோ... கலக்கல்... நல்ல போஸ் அண்ட் கப்ஷன்.

மொத்தத்தில சூப்பர்.

முற்றும் அறிந்த அதிரா said...

//(ஜெய்லானி said...

ஆண்டீ..போட்டோஸ் சூப்பர் :-)))//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உப்பூடிச் சொல்லப்பூடா...

பாட்டீஈஈஈஈஈஈஈ இப்பூடித்தான் சொல்லோணும்.. ஆஆஆ மீ உண்மையிலயே எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

குறையொன்றுமில்லை. said...

கலக்கல் பதிவு சூப்பர் படங்கள்
பாட்டி (அலைஸ்) ஆண்டி.

அந்நியன் 2 said...

எல்லோரும் ஆன்ட்டி என்றும் பாட்டி என்றும் அழைக்கிறதைப் பார்க்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றது.

உங்கள் பதிவும் சூப்பர் பேரன் கடைசியில் அழுதுகொண்டு போகும் காட்சி மனதை பாரமாக்கின்றது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Kalakkal...

இமா க்றிஸ் said...

ஹை! ஸாதிகா மாட்டிட்டாங்க. மாட்டிட்டாங்க. மாட்டிட்டாங்க. ;)))

எனக்கு சந்தோஷமா இருக்கே!!!!!!!!!!!
(ரெண்டு கையையும் மேல தூக்கிப் பிடிச்சு இமா கத்தறாங்க, தெரியுதா மக்கள்ஸ்?) ;)))))))))

இமா க்றிஸ் said...

குட்டியர் க்யூட்.

நீங்க என்ன ப்ரோக்ராம் கொடுத்தீங்கன்னு சொல்லவே இல்லையே ஸாதிகா.

Mahi said...

என்று அழைத்து டஞ்சர் பண்ணியதற்கு இந்த பாட்டி டிஞ்சர் தடவி விட்டது எனக்கு முழு ஜாங்கிரியையும் அப்படியே சாப்பிட்டது போல் தித்திப்பு..///// சூப்பர் ஸாதிகாக்கா! நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க போல? செமையா எழுதிருக்கீங்க! முழுப்பதிவுமே ஜாங்கிரி சாப்பிட்டமாதிரிதான் இருக்குது எனக்கு! :)
குட்டி க்யூட்டாக இருக்கிறார்!

கோமதி அரசு said...

அருமையான நகைசுவை பதிவு.

பேரன் பாட்டியுடன் வரவேண்டும் என்று கண்ணை கசக்கி கொண்டு செல்கிறாரா?

நானும் டெல்லியில் கிரேண்ட் பேரண்ஸ்டேயில் கலந்து கொண்டேன்.

இரு பாட்டிகளும் கலந்து கொண்டனர்.
அம்மாபாட்டி, அப்பாபாட்டி எல்லாம் இளமையாகத் தான் இருந்தனர்.

MANO நாஞ்சில் மனோ said...

பேரன் அழுதாலும் ரொம்ப அழகு....!!!

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நகைசுவையோடு அருமையாக எழுதி இருக்கீரகள்.கலக்குகிறீங்க. வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

// நானும் இனி “ஆஆஆஆஆண்ட்ட்ட்டீடீடீ”னு கூப்பிடலாம்னு பாக்கிறேன்.
// ஹுசைனம்மா தெரியுமே.இப்படி ஒரு லைன் உங்க கிட்டே இருந்து வரும் என்ரு.இனி எத்தனை பேருக்கு பாட்டியாக.ஆண்ட்டியா போகின்றோமோ என்று தெரிந்துதான்,மனதை திடப்படுத்திக்கொண்டுதான் இந்த பதிவைப்போட்டேன்.

ஸாதிகா said...

//ஐ.... ஸாதிகா அக்கா பூஸின் அக்காதான் என்பதைக் காட்டிட்டாஆஆஆஅ..// பின்னே..ஸாதிகா அக்காவுக்கு பூஸைப்பார்த்து ரோஷம் வந்துவிட்டது,

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஷர்புதீன்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா சூப்பரான பதிவு
எல்லோருக்கும் ஆண்டி என்றாலும் எனக்கு என்றைக்குமே நீங்க அக்கா தான்
அங்கு வந்த பாட்டிக்களை வர்ணித்ததும் அருமை.
பேரன் அழகாக போஸ் கொடுக்கீறான்
கடைசியில் கண்ண கசக்கியது டச்சிங்காக எழுதி இருக்கீங்க
பதிவு படிகக் ப்டிக்க மிக ஸ்வாரசியமா இருக்கு ,
ஜாங்கிரி சாப்பிட்ட தித்திப்பூ ஹிஹி

நாஸியா said...

மாஷா அல்லாஹ்... உங்க பேரப்புள்ளை ரொம்ப அழகு.. அவனை பார்த்ததும் நானும் சின்ன வயசில இப்படி ஸ்கூல்ல கண்ண கசக்கிட்டு நின்டது நினைவுக்கு வருது.. ஹிஹி...

அப்புறம், ஸாதிகா கன்மா... எப்படி இருக்கு? நானும் அப்படியே கூப்பிடவா? ;) சரி சரி நோ டென்சன்.. ஹம்தானை அப்படி கூப்பிட சொல்றேன் ஓகே!

புல்லாங்குழல் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக கிரேண்ட் பேரண்ட்ஸ் டே பள்ளியில் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி..

இந்த காலத்தில் பெற்றோர்கள் பொரும்பாலும் வேலைக்கு செல்வதால், தாத்தா பாட்டிகள் தான் குழந்தைகளை பள்ளியிற்கு கூட்டு சொல்வது எல்லாம்...அந்த காலத்தில் இப்படி ஒரு டே இல்லாமல் போச்சே...அப்படி இருந்து இருந்தால் எங்க தாத்தா எவ்வளவு சந்தோசம் பட்டுஇருப்பார்...பாவம் அவருக்கு கொடுத்து வைக்கவில்லை..

உங்க செல்ல குட்டி செம cute...

நல்ல வேலை பாட்டி வாங்க என்று சொல்லாமல் ஆன்டி வாங்க என்று சொல்லி விட்டாங்க...

Kanchana Radhakrishnan said...

சூப்பர்.

ஸாதிகா said...

மிக்க நன்றிதோழி.நீஙளும் கிண்டல்பண்ண ஆரம்பித்தாச்சா?:-)
விரைவில் வந்து பதிவு போடுங்கள்.

ஸாதிகா said...

// ஜெய்லானி said...
ஆண்ட்டீஈஈஈஈஈஈ......:-)))))
//
இறைவா!40.50 வயசுக்காரர்களுக்கு எல்லாம்நான் ஆண்ட்டியா?இதென்ன கொடுமை:-))

ஸாதிகா said...

உற்சாகபின்னூட்டலுக்கு மிக்க நன்றி ஆமினா.

ஸாதிகா said...

//ஆண்களுக்கு எதையாவது நினைச்சு கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும்!!!!!
// வான்ஸ் அப்படீங்கறிங்க?
கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மிக்கநன்றி சித்ரா.

ஸாதிகா said...

//அந்தப் பாட்டி கண்ணாடியை வீட்டில வச்சுட்டு வந்திட்டாபோல .... ஹையோ.. நான் இப்பவும் இமாட கட்டிலுக்குக் கீழதான்:))))..//.இல்லே பூஸ்..அந்த பாட்டி நெஜமாலுமே பெரீய சோடா புட்டி கண்ணாடி மாட்டிட்டு இருந்தாங்க பூஸ்.உங்களுக்கு ஏன் பூஸ் இப்படி பட படக்குது ?:-)மிக்க நன்றி அதிரா.

ஸாதிகா said...

//பாட்டீஈஈஈஈஈஈஈ இப்பூடித்தான் சொல்லோணும்.. ஆஆஆ மீ உண்மையிலயே எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))// அதீஸ் அப்புறம் வச்சிக்கறென் ஆப்பு.

ஸாதிகா said...

// Lakshmi said...
கலக்கல் பதிவு சூப்பர் படங்கள்
பாட்டி (அலைஸ்) ஆண்டி.// லக்‌ஷ்மிம்மா..நீங்களுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்..மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

//பேரன் கடைசியில் அழுதுகொண்டு போகும் காட்சி மனதை பாரமாக்கின்றது.
// உண்மைதான் அந்நியன்.அவன் அழுது கொண்டே சென்ற பொழுது மனதை வலித்தது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ரத்னவேல் ஐயா.

ஸாதிகா said...

மிக்க நன்றி நிஜாமுதீன்.

ஸாதிகா said...

// இமா said...
ஹை! ஸாதிகா மாட்டிட்டாங்க. மாட்டிட்டாங்க. மாட்டிட்டாங்க. ;)))
//
இமாஆஆஆஆஆஆஅ..என்னா கொல வெறி.இன்று நான்.நாளை நீங்கள்.இன்னும் ஒரு சில வருடங்களிலேயே நீங்களும் கிரேண்ட் பேரண்ட்ஸ் டே க்கு ரெடி ஆகிடுவீங்க.அப்ப வச்சிக்கறேன்.:-)

ஸாதிகா said...

//ஜாங்கிரி சாப்பிட்டமாதிரிதான் இருக்குது எனக்கு! :) // மகீ...ரொம்ப சந்தோஷம்.இந்த வரிகளைப் பார்க்கறச்சே முழு பாக்ஸ் ஜாங்கிரி சாப்பிட்டது போல் இருக்கு எனக்கு.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

மிக்க நன்றி நாஞ்சில் மனோ

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

நாஸியா,வாங்க வாங்க..என்ன பிரியாணி சட்டியை திறக்கவே மாட்டேன்கின்றீர்கள்.ஹம்தானுக்கு பிரியாணி சாப்பிடும் வயது வந்தாச்சே.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி நூருல் அமீன்

ஸாதிகா said...

//நல்ல வேலை பாட்டி வாங்க என்று சொல்லாமல் ஆன்டி வாங்க என்று சொல்லி விட்டாங்க...// அதானே?கருத்துக்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்

ஸாதிகா said...

காஞ்சனா ராதா கிருஷ்ணன் கருத்துக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

இமா said...


(ரெண்டு கையையும் மேல தூக்கிப் பிடிச்சு இமா கத்தறாங்க, தெரியுதா மக்கள்ஸ்?) ;)))))))))
///

ஹையோ.... நல்ல வடிவாத் தெரியுது இமா:))))... கையைக் கீழ விடுங்க பிறகு ரைப்பண்ண முடியாமல் கை நோ வந்திடப்போகுதூஊஊஊஊஊஊஉ... ஆஆஆ... ஸாதிகா அக்கா காப்பாத்துங்கோ....:)))

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பதிவு மிக மிக அருமை
குழந்தைகளை எல்லாம் யூனிஃபாமுடன்
பார்க்க ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பதுபோல்
அவ்வளவு அழகு
அப்படியே ஆண்டீஸ்கள் ஃபோடாவையும்
இணைத்திருக்கலாம்
ரசித்துப் படித்த நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்......

ஸாதிகா said...

அதீஸ் ..இமா நல்லா வலுவா செய்த தோதல் சாப்பிட்டு நல்ல ஸ்ட்ராங்.கைநோ வராதூஊஊஊ

ஸாதிகா said...

//அப்படியே ஆண்டீஸ்கள் ஃபோடாவையும்
இணைத்திருக்கலாம்// ரமணி சார் நான் ஆண்டீஸ் போட்டோ போட்டேன்னா ஆண்ட்டீஸ் அடிக்க வந்துடுவாங்க.:-)கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அம்பாளடியாள் கருத்துக்கு மிக்க நன்றி.

Unknown said...

சூப்பர் கலக்குங்க ஸாதிகா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி கே ஆர் விஜயன்.

Sakthi said...

nice reading. salam