June 24, 2011

டி.எம்.சௌந்தரராஜன்



கம்பீரக்குரலால் செயியுறுபவர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரர் டி எம் எஸ்.

அந்தக்காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி படங்கள் என்றால் டி எம் எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு அநேக படங்களுக்கு இவர்கள் இருவருக்காகவும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி படங்கள் இமாலய வெற்றிபெற உதவி இருக்கின்றார்.

பக்திபாடல்கள், குறிப்பாக முருக பக்திபாடல்கள் பாடி நடித்து இயக்கி இப்படி பன்முகம் காட்டி திரையுலகில் வலம் வந்த ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர்.

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்ற தத்துவப்பாடலாகட்டும்,எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற சோகப்பாடலாகட்டும்,
குறத்தி வாடி என் குப்பி என்ற ஹைபிட்சில் ஒலித்த பாடலாகட்டும்,ஞாயிறு என்பது பெண்ணாக என்ற மெலடிபாடலாகட்டும்,
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ என்ற டப்பாங்குத்து பாடலாகட்டும்,
பாவடை தாவணியில் பார்த்த உருவமா என்ற அமைதிப்பாடலாகட்டும்,மலர்களை போல் தங்கை என்ற பாசத்தைக்குழைத்து குரலெடுத்து பாடிய பாடலாகட்டும்,
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற காதல் பாடலாகட்டும் குரலை ரப்பர் போன்று வளைத்து,நெளித்து,கேட்போரை நெகிழ வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.

பல்லாயிரக்கணக்கான அவர் பாடிய பாடல்களில் இருந்து ஒரு சத பாடலகளை மட்டும் தேர்ந்தெடுத்து உங்கள் முன் படைக்கின்றேன்.கேட்டு மகிழுங்கள்.
















.17.ஒரு கொடியில் இரு மலர்கள்



20.ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்



















Link40.சுகம் எதிலே மதுரசமா கண்ணாடி கிண்ணமா






























































June 11, 2011

காணாமல் போனவைகள்

இந்த நவீன யுகத்தில் பல பழக்க வழக்கங்கள்,பொருட்கள் மறைந்து காண்பதற்கு அரிதாகி விட்டது.பெரியம்மா,பெரியப்பா,சித்தி,சித்தப்பா,மாமா,மாமி,என்ற முறைகள் எல்லாம் மறைந்து பொதுவில் ஆண்ட்டி,அங்கிள் என்று தங்களின் பாசத்தினைப்போன்று உறவு முறைகளையும் சுருக்கிக்கொள்கின்றனர்.

சகோதரி மாதேவி(சின்னு ரேஸ்ரி ) அரிதாகிப்போன பொருட்கள் ,சாதனங்கள் என்று அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்களை அழகாக படம் எடுத்து போட்டு கருத்தை கவர்ந்து இருந்தார்.நான் சிறிய வயதில் கண்டு,அனுபவித்து களித்த பொருட்களை இப்பொழுது காண்பது அரிதாகிவிட்டது.அப்படி அரிதாகிப்போன பொருட்கள்,ஜீவன்களை கூகுளில் தேடிப்பிடித்து உங்கள் முன் படைக்கிறேன்.
வெற்றிலை தட்டு

அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும் சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில் மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.
பூம் பூம் மாடு

மாடுகளை கன்னா பின்னா வென்று துணிகளால் அலங்கரித்து உடுக்கை ஒலியுடன் வருவார் மாட்டுக்காரர்.உடுக்கையை ஒலிக்கச் செய்து கேள்வி கேட்டால மாடு தலையை தலையை ஆட்டும் .இதனை வேடிக்கைப்பார்ப்பதற்காக ஒரு கூட்டமே பின்னால் திரியும்.

பொட்டு வண்டி

"மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை மாட்டு வண்டியிலே.பொண்ணு வர்றா பொண்ணு வர்றா பொட்டு வண்டியிலே"என்று ஒரு சினிமா பாடல் கூட உண்டு.மாட்டுவண்டியில் அழகாக வேயபட்ட கூடாரத்துக்குள் திண்டுகள் அமைத்து,அழகாய் அலங்கரித்து மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் சலங்கை சல் சல் என்ற ஒலியின் பின்னனியில் திண்டில் படுத்துக்கொண்டே இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே பயணிக்கும் சுகத்திற்கு பிசினஸ் கிளாஸ் விமானப்பயணம் கூட ஈடாகாது

கோலி சோடா

பெப்சி கோக் என்று வெளிநாட்டு சமாச்சாரங்கள் வந்த பின் காணாமல் போன வஸ்து.அப்பொழுதிருந்தே இந்த கோலியை எப்படி பாட்டிலுக்குள் அடைக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.கோலிசோடா உடைப்பானை வைத்து கோலியில் அழுத்தினால் புஸ் என்று வரும் சப்தத்திற்கு பயமாக இருக்கும்.
தெருக்கோழி

க்ஹும்..க்ஹும் என்று குரல் கொடுத்துக்கொண்டு தெருவில் குடு குடு வென்று ஓடும் கோழி.கோழியின் உரிமையாளர்கள் அந்தி சாயும் நேரம் தங்கள் கோழிகளை அடைப்பதற்காக தேடி பிடிப்பார்கள்.என்னுடைய போந்தா கோழியை பார்த்தியா?செவலைக்கோழியைப்பார்த்தியா?நாட்டுககோழியைப் பார்த்தியா? என்று தேடும் குரல்களாகவே ஒலிக்கும்
நுங்கு வண்டி

உபயோகித்த நுங்கு கோந்தைகளில் கம்பை வைத்து வண்டியாக செய்து தெருவில் இழுத்து செல்வார்கள்.


கடலைக்காரர்

"கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?எப்படித்தான் பக்குவமாக வறுத்தாலும் அந்த டேஸ்ட் வரவே செய்யாது.

பல்லாங்குழி

14 குழிகள் அமைந்த அந்தகால இண்டோர் கேம்.சோழிகளை போட்டு விளையாடுவார்கள்.

பட்டுப்பூச்சி
மழைகாலங்களில் வரும் ஒரு அழகான பூச்சி.அழகிய சிகப்பு நிறத்தில் சிலந்தி வடிவில் பட்டுப்போன்ற மெனமையுடன் கரங்களில் குடு குடு என்று ஓடும் பொழுது மயிற்கால்களெல்லாம் சிலிர்த்துப்போகும்.இந்த பூச்சிகளை சேகரித்து தீப்பெட்டிகளில் வீடு அமைத்து மகிழ்வார்கள்.

ஸ்கூல் பெல்

எப்போதடா நாண்கு மணியாகும் என்று காத்திருந்து பல சிறார் உள்ளங்களை துடிப்புடன் எதிபார்க்க வைக்கும் சஞ்சீவி.காண்டா மணி போன்று பெரிய மணியை வைத்து கைகளால்,அல்லது கயிற்றினால் ஆட்டுவார்கள்.சில பள்ளிகளில் பெரிய இரும்பு தகட்டை தொங்க விட்டு சுத்தியலால் அடிப்பார்கள்.பள்ளி பியூன் அடித்து முடியும் வரை காத்திருந்து சுத்தியலை கெஞ்சி கேட்டு வாங்கி ஓங்கி ஒரு அடி கொடுத்து வரும் ஒலியில் பூரித்து நிற்பார்கள் மாணவர்கள்.
அம்மி கொத்துபவர்

அம்மி கொத்தலையோ அம்மி என்று தெருவில் கூவார்கள்.அரைத்து அரைத்து தேய்ந்து போன அம்மியை உளியை வைத்து கொத்தினால் நன்றாக அரைபடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.அம்மியில் தாமரைப்பூ,சூரியன்,ரோஜாப்பூ சூரியகாந்தி போன்ற வடிவில் நம் விருப்பத்துக்கேற்ப கலைநயத்துடன் அம்மி கொத்தும் அழகே தனிதான்.இப்பொழுது அம்மி கொத்துபவர் மட்டுமல்ல அம்மியுமே காணாமல் போய் விட்டது.

ஐஸ் வண்டி

சைக்கிள் கேரியரில் சதுர வடிவ மரப்பெட்டியை கட்டி வைத்துக்கொண்டு ஆரஞ்ச் கலர் குச்சி ஐஸை ஆரஞ்சு ஐஸ் என்றும்,ஊதா நிற குச்சி ஐஸை திராட்சை ஐஸ் என்றும்,வெள்ளை நிற குச்சி ஐசை சேமியா ஐஸ் என்று நாமகரணம் வைத்து விற்பார்கள்.ஐஸை சாப்பிட்டு விட்டு நாக்கை நீட்டி கலர் நன்றாக ஏறி இருக்கின்றதா என்று சிறுவர்கள் பார்த்துக்கொள்வதே அழகுதான்.

குடுகுடுப்பைக்காரர்

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டே வருபவர்.இவரைக்கண்டால் சிறுவர்களுக்கு கிலி.மை போட்டு மயக்கம் கொடுத்து சுடுகாட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்று பெரியவர்கள் எச்சரித்ததின் விளைவு.குடு குடுப்பை ஓசையை அநேகமாக ஒளிந்திருந்தே கேட்பார்கள்.

டூரிங் டாக்கீஸ்

டெண்டு கொட்டகை,சினிமா கொட்டகை என்று அழைக்கப்படும்.அநேகமாக ஆஸ்பெடாஸ் ஷீட்களை கூரையாக கொண்டது.தரை டிக்கட் என்பது மணலில் அமர்ந்து படம் பார்ப்பது.இருப்பதிலேயே ஒசத்தியான டிக்கட் பால்கனி,திரைக்கு முன்பாக சிகப்பு நிற பெயிண்ட் பூசப்பட்ட வாளிகளில் மணலை நிரப்பி இருப்பார்கள்.தீப்பிடித்தால் மணலை வீசி தீயை அணைப்பதற்காகவாம்.தியேட்டருக்குள்ளேயே முறுக்கு,வடை,பூரி போன்ற தின்பண்டங்களை பாடல் காட்சிகளின் போது தட்டில் வைத்து கூவி கூவி விற்பார்கள்.திரையில் எம் ஜி ஆர் தொட்டால பூ மலரும் என்று ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு இருப்பார்.அலுமினிய தட்டுகளில் பண்டங்களை வைத்துக்கொண்டு வடே,முருக்கூகூ,பூரீஈஈஈ கூவலும் கூடவே வரும்.
பட்டை சோறு

தென்னந்தோப்புகளுக்கு,தூரத்து தீவுகளுக்கு பிக்னிக் செல்லுவார்கள்.சாப்பிடுவதற்கு தட்டோ,டிஸ்போசபிள் தட்டோ இருக்காது.பனை ஓலையில் அழகாக செய்யப்பட்ட தொன்னையில் சூடான சாதத்தின் மேல் களறிக்கறியும்,தாளிச்சாவும் பச்சை ஓலை மனத்துடன் கூடிய பட்டை சாப்பாடு..ஆஹா..

பாம்படம்

அந்த காலத்து மாற்றுமத பாட்டிகள் காதில் அணிந்து இருந்த ஒரு பயங்கரமான ஐட்டம்.காது ஓட்டையை பார்த்தாலே கிலியாக இருக்கும்.பாம்படம் தொங்க அம்மியில் உட்கார்ந்து மசாலா அரைக்கும் பொழுது பாம்படங்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே சொல்லி மாளாது.அதை ரசிக்கவென்றே ஒரு சிறார் கூட்டம் நிற்கும்.


பொம்மலாட்டம்

திருவிழா,பெருநாள் திடல்,மற்றும் தர்ஹாக்களில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றில் இந்த பொம்மலாட்டாக்காரர்கள் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்கள்.பொம்மைகள் நடனத்தை கண் கொட்டாமல் உட்கார்ந்து ரசிப்பது மட்டுமல்லாமல் ஆட்டம் முடிந்ததும் மெதுவாக திரைக்கு அருகில் போய் எப்படி இப்படி பொம்மைகள் இந்த ஆட்டம் போடுகின்றது என்று ஆராயும் நிமித்தமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

மிக்சர் வண்டி

இரவானால் டொடய்ங்..டொடய்ங் என்று மணி சப்தம் கேட்டாலே மிக்சர் வண்டிக்காரர் வந்து விட்டார் என்று அர்த்தம்.ஓமப்பொடி,காராபூந்தி,வறுத்த கடலைவகைகள்,சிப்ஸ்,காராச்சேவ்,இனிப்புசேவ் ,ரிப்பன் பகோடா,பகோடா,வேர்க்கடலை முறுக்கு என்று அடுக்கிக்கொண்டு கலர் கலர் கண்ணாடி போட்டு அடைத்த தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் விற்பனை செய்யப்படும் வணடியை சுற்றி சிறுவர் பட்டாளம் மட்டுமின்றி பெரியவர்களும் வாடிக்கையாளர்கள்.பெட்ரோமாக்ஸ் சூட்டில் பட்சணங்கள் சூடாக அப்பொழுது செய்த பட்சணங்கள் போல் இருக்கும்.
ஜவ்வு மிட்டாய்

மூங்கில் களியின் உச்சியில் ஒரு பொம்மையைக்கட்டிக்கொண்டு அடியில் தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இருகரங்களிலும் இணைத்து இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி எழுப்பினாலே போதும்.வாண்டுகள் சிட்டாய் பறந்து வீதிக்கு வந்து வந்து விடுவார்கள் சில்லரைகாசுகளுடன்.பொம்மைக்கு அடியில் சுற்றப்பட்ட ஜவ்வு மிட்டாயை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர் போட்டு ஈ மொய்க்காத வண்ணம் மூடி இருக்கும் ஜவ்வு மிட்டாயை எடுத்து வளையல்,வாட்ச்,பிரேஸ்லெட்,மோதிரம்,கொசுராக நெற்றியில் ஒரு பொட்டு,கன்னத்தில் ஒருதிருஷ்டி பொட்டு ஒட்டி விடும் மிட்டாய்க்காரரின் கை லாவகத்தையே கண் சிமிட்டாமல் பார்க்கும் சிறார்கள் ஆபரணம் அணிந்து முடிந்ததும் ஜவ்வுமிட்டாயின் இனிப்புடன் சேர்த்து கை வியர்வையின் உப்புகரிப்பையும் சாப்பிடும் சுவை மறக்கவே முடியாது.

June 8, 2011

எங்க ஊரு நல்ல ஊரு


எங்க ஊரு நல்ல ஊரு
தொடர் பதிவென்று அழைத்து ரொம்ப நாள் ஆனது போல் ஒரு ஞாபகம்.தொடர்பதிவு இல்லாதததால் சுறு சுறுப்பு குறைந்தாற்போல் ஒரு தோற்றம்.பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே. இதனைத்தொடர

1.இணையம் தந்த இனிய தோழி ஆசியா,

2.ஈழத்தமிழால் அனைவரையும் தன்வசப்படுத்தும் அதிரா,

3.கரெக்டாக இருந்தாலும் இணையம் பக்கம் என் தலைகண்டு சில நாளானாலே அக்கறையுடன் போனில் விசாரிக்கும் அன்புத்தங்கை ஹுசைனம்மா,

4.சமையலில் கலக்கி வரும் தங்கை மேனகா,

5.கவிதை மழை பொழியும் தங்கை மலிக்கா

6.இணையம் தந்த மற்றுமொரு இனிய உறவான அக்கா மனோ சுவாமிநாதன்

7.கை வண்ணத்தில் கலக்கி வரும் ஆல் இன் ஆல் பாயிஜா

8.நியுஸிலாந்தைப்பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இமா

9 சமையலுடன் கைவினையும், ஏகத்துவத்தையும் எடுத்துச்சொல்லும் அஸ்மா,

10.இனிக்க இனிக்க அனுபவத்தை அள்ளித்தெளிக்கும் வானதி

11.சமையலுடன் ஏனைய வற்றையும் வழங்கி வரும் மகி,

12.சத்து மிகு பதார்த்த செய்முறைகளை அழகுர அளிக்கும் கீதாஆச்சல்

13.இணையத்தில் மட்டுமல்லாது பத்திரிகைகளிலும் எழுதி கலக்கும் அஹ்மது இர்ஷாத்

14.சவுதியில் இருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கட்டுரைகளைப்பகிரும் சிநேகிதன் அக்பர்

15.கவி மழை பொழியும் கனவு பட்டறைக்கு எஜமான் சீமான் கனி.

16.தன் எழுத்துக்களால் படிப்போரை ஆஹா போட வைக்கும் அப்துல்காதர்.

17.வித்தியாசமாக எழுதி அசத்தும் எங்களூருக்கு பக்கத்து ஊரைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் அந்நியன்.

18.கவிதைவரிகளிலும் கலக்கும் அரபுத்தமிழன்

19.கடந்தகாலத்தினை,கஷட்ங்களைப்பற்றியும் அழகுற ,தைரியமாக கட்டுரை படைத்து வியப்பூட்டிய சகோதரர் கிளியனூர் இஸ்மத்

20.எடக்கு மடக்கு என்று வலைப்பூவின் தலைப்பை வைத்துக்கொண்டு ஏகமாக செய்திகள் தரும் கோபி

21.பாங்குற பகிர்வுகளை பகிரும் ரஜின்

22நல்லதை பேசுங்க இல்லேன்னா அமைதியா இருங்க என்று அழுத்திச்சொல்லும் இளம் தூயவன்

23.புல்லாங்குழல் எனப்பெயரிட்டு ஏகத்துவத்தை எடுத்தியம்பும் நூருல் அமீன்

24.நன்றே செய்வோம் அதனை இன்றே செய்வோம் என்ற நன் மொழி இயம்பும் நாஞ்சில் மனோ

25.சோனகராய் சிந்திக்கும் அத்திப்பூத்தாற்போல் பதிவெழுதும் இவரது பார்வையிலும் கீழக்கரையைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் சோனகன்

26.எல்லாவற்றையும் ரசித்து எழுதும் ஷர்புதீன்

அனைவரையும் இத்தொடர் பதிவெழுத அன்புடன் அழைக்கின்றேன்,நட்புக்களே நீங்களும் விரும்பியவர்களை அழைக்கலாம்.

ராமனாதபுர மாவட்டத்தைச்சேர்ந்த கீழக்கரையை சுற்றிலும் கடற்பரப்பும்,அடர்ந்த தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர்.அந்த ஊரினைப்பற்றிய சில சுவாரஸ்யமான குணாதிசயங்களை இங்கு பகிர்கின்றேன்.

1.குறுகிய மிக சிறிய சந்துகள்,முட்டு சந்துகள் இங்கு ஏராளம்.சில சமயம் உள்ளூர்க்கார்களுக்கே வழி தெரியாமல் போவதும் உண்டு.

2.மாலை நேரங்களில் " வாடா ...வாடா" தெருவில் குரல் கேட்டால் யாரையோ யாரோ அழைக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு சுவையான பதார்த்தத்தைத்தான் கூவி விற்பனை செய்கின்றனர்.

3.வெளி நாடு,வெளியூர்களில் எத்தனைதான் உயர்ந்த பதவி வகித்தாலும்,ஹை டெக்காக வாழ்ந்தாலும் இந்த ஊர் ஆண்கள் ஊர் வந்தால் உள்ளூர்களில் பேண்ட் அணிவதில்லை.வெள்ளை நிற லுங்கிகளையே அணிவார்கள்.இதனை 'சாரம்'என்று அழைப்பார்கள்.பேண்ட் அணிந்து ஆண்கள் வலம் வந்தால் அவர்கள் வெளியூர் வாசிகளாகத்தான் இருப்பார்கள்.

4.தேங்காய் அதிகம் விளையும் இந்த ஊரில் கேரளத்தினரைப்போல் தேங்காய் உபயோகித்து தான் அதிகம் சமைக்கின்றனர்.அநேக சமையல்களில் தேங்காய் உபயோகம் அதிகளவில் இருக்கும்.

5.ஏனைய ஊர்களில் இருந்து வித்தியாசமாக இந்த ஊரில் மட்டும்தான் திருமணம் முடிந்தும் பெண் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருப்பாள்.

6.திருமணத்திற்கு மகன்களை வைத்து இருப்பவர்கள் பெண் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்புவதை கவுரவக்குறைச்சலாக கருதுவார்கள்.பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை கேட்டு செல்ல வேண்டும்.

7.இங்கு உள்ள ஆட்டோக்களில் மூன்று பக்கமும் திரை கட்டி அதனுள்ளேயே பெண்கள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கத்தில்; உள்ளது.

8.பெரும்பாலான குடும்பங்கள் தொழில் நிமித்தம் படிப்பு நிமித்தம் வெளியூர்,வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தாலும் வீட்டு விஷேஷங்கள் அனைத்து உள்ளூரிலேயே நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.அவ்வாறு இருந்தால் தான் ஊருக்கும் ,நமக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும் என்று கருதுகின்றனர்.

9.இவ்வாறாக அடிக்கடி வந்து செல்வதால் புலம் பெயர்ந்தவர்களின் வீடுகள் பிறருக்கு வாடகைக்கு விடப்படாமல் ஆள் வைத்து பராமரித்து வருகின்றனர்.


10. உள்ளூர்க்காரகள் அனைவருக்கும் சொந்தமாக வீடு வைத்து இருப்பார்கள்.வாடகை வீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

11.தடுக்கி விழுந்தால் நைட் டிபன் கடைகள் ஏராளம்..ஏராளம்..இரவாகி விட்டாலே முக்கிய வீதிகளில் பரோட்டா சிலோன் பரோட்டா,முட்டை பரோட்டா,வீச்சு பரோட்டா,கொத்துபரோட்டா,முர்தபா சால்னா என்று கமகமக்கும்.கொத்துபரோட்டா கொத்தும் சப்தம் சுருதி தவறாமல் காதில் ஒலிக்கும்.ஆனால் பகலில் நிறைவான மதிய சாப்பாடு என்றால் அலையத்தான் வேண்டி இருக்கும்.

12.காலையில் ஐந்தரை மணிக்கே டீக்கடைகளில் இருவித இனிப்பு பண்டம் சுடும் மணம் நாசியை துளைக்கும்.உருண்டை வடிவில் செய்யப்பட்ட ஒருவித போண்டா.இதனை இனிப்பு போண்டா என்று அழைப்பார்கள்.சுப்ஹ் தொழுது விட்டு வருபவர்கள் இந்த இனிப்பு போண்டாவை ஒரு கை பார்த்து விட்டு டீ குடிப்பது வாடிக்கை.

13.ஊரினை சுற்றிலும் கடல் பகுதி.அதனை சுற்றிலும் குட்டி குட்டி தீவுகள் ஏராளம்.மோட்டார் படகில் ஏறிச்சென்று ரிஸ்கான பிக்னிக்கை அனுபவிப்பதில் இவ்வூர் மற்றும் இவ்வூரைச்சுற்றி சுற்றி இருக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம்தான்.விபரீதங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த ரிஸ்கான பிக்னிக்கில் ஈடு படுவது குறைய வில்லை.

14.உள்ளூரிலேயே நல்ல ஹாஸ்பிடல்.கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தாலும் பக்கத்து ஊரான ராமனாதபுரம் சென்றே சிகிச்சை பெறவும்,ஷாப்பிங் செல்லவும் விரும்புவார்கள்.இதனை ஒரு பொழுதுபோக்காக இவ்வூர் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

15.ஒரு டீயின் விலை ஒரே ரூபாய்க்கு விற்கும் அதிசயமும் இவ்வூரில் உள்ளது.

16.பிக்னிக்,கேளிக்கைகளில் இவ்வூர் மக்களுக்கு அலாதி பிரியம்.திருமணமானாலும் சரி.குழந்தை பெற்றாலும் சரி,பாசானலும் சரி,வேலை கிடத்தாலும் சரி.புரமோஷன் வந்தாலும் சரி ,வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தாலும் சரி சம்பந்தப்பட்டவர்களிடம் பிக்னிக் பணம் என்று நண்பர்கள்,உறவினர்கள் வட்டாரம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள்.

17.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு பணியாரம் இந்த ஊரில் பிரபலம்.இதனை வீடுகளில் செய்து விற்பனை செய்வார்கள்.இதற்கென்றே ஒரு தெருவே உண்டு.அந்த தெருவைச்சேரந்த்வீடுகளில்தான் அனேகமாக இந்த பணியாரம் சுட்டு விற்பனை செய்வார்கள்.அந்த தெருவின் பெயர் பணியக்காரத்தெரு.


18.இன்னொரு தெருவின் பெயர் ஆடறுத்தான் தெரு.நான் கேள்விப்பட்டது உண்மையோ இல்லையோ அந்தக்காலத்தில் ஆடு அறுக்கும் கூலித்தொழிலாளிகள் நிறைந்த தெருவானதால் அதற்கு ஆடறுத்தான் தெரு என்று அழைப்பார்களாம்.இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

19.உள்ளூர்காரகள் குடும்பத்தை குறிப்பிட்ட ஒரு அடைமொழிப்பெயருடன் குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.அல்லது விலாசத்தை,செய்யும் தொழிலை குறிப்பிட்டு இன்னார் வீடு என்று கூறுவது வழக்கத்தில் உள்ளது.

20.திருமணத்திற்கு அழைக்கும் பொழுது ஆண்கள் தனியாகவும்,பெண்கள் தனியாகவும் சென்று அழைப்பதுதான் இவ்வூர் மக்களின் பழக்கம் .

21.செல்லும் திருமணங்களுக்கு எல்லாம் பரிசு,மொய் வழங்கும் பழக்கம் கிடையாது.நெருங்கிய உறவினர் நண்பர்கள் வட்டாரம் மட்டிலுமே விஷேஷங்களுக்கு பரிசு வழங்குவார்கள்.

இவ்வூரின் உணவு வகைகளைப்பற்றி நாவில் நீர் ஊற விவரித்திருப்பதை பாருங்கள்
















June 3, 2011

சும்மா தமாஷ் கற்பனைதான்

பட்டத்து ராணி பார்க்கும் பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா



அம்மாவென்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே



மறைந்திருந்து மர்மம் என்ன
ஸ்வாமி அழகர் மலை அழகா இந்த சிலை அழகா


ஒளிமயமானஎதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகின்றது





மவுனமானநேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழின் மவுனங்கள்



சோதனை மேல்சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்கை என்றால்
தாங்காது பூமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது

வெற்றி வேண்டுமா போட்டுபாரடா
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்



யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஓ ஒ ஓ ஓ




நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனைச்சுப்பார்த்தால் எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை



பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே