January 31, 2012

டெய்லர் கிச்சா

"தோ..மாமி..வீட்டுக்கு போயிண்டே இருங்கோ..பையன் கிட்டக்க பின்னாடியே கொடுத்தனுப்பிச்சுடுறேன்”

“கிச்சா..இந்த டயலாக்கை இன்னும் எத்தினி நாழிதான் சொல்லி சமாளிச்சுண்டிருப்பே..காரடையான் நோன்புக்கு உடுத்திக்க புதுசா ஜாக்கெட் கொடுத்தேன்.இந்தா அந்தான்னு ஜவ்வு மாதிரி இழுத்துண்டு தீபாவளி போய்டும் போலும்”மாமி அலுத்துக்கொண்டாள்.

“இந்த வாட்டி கண்டிப்பா தெச்சி கொடுத்துடுறேன் மாமி.அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களாத்துக்கு ஜாக்கெட் வந்துடும் .யோஜனை பண்ணாமல் போங்கோ.இதோ அனுப்பிச்சுடுறேன்.கொலு முதல் நாளே ஜம்முன்னு புதுசு கட்டி பேஷா ஜமாய்ச்சுடலாம் மாமி”

மாமி எரிச்சலுடனும் அவநம்பிக்கையுடனும் அங்கிருந்து நகன்றாள்.பித்தான் கட்டிக்கொண்டிருந்த டைலர் கிச்சாவால் பையன் என்று பாசத்துடன் அறிமுகப்படுத்தப்படும் கிச்சாவின் அஸிஸ்டெண்ட் “அண்ணே..மாமி பாவம்ண்ணே..எத்தனை நாள் அலையறா..தெச்சிக்கொடுத்துடலாம்ண்ணே”

“டேய்..உன் கழிவிரக்கத்தை ஒரு ஓரமா மூட்டை கட்டி வச்சிட்டு கடகடன்னு பித்தான் கட்டு.இந்த மாமியை சமாளிச்சுடலாம்.வக்கீலாத்தம்மா வந்தாங்கன்னா பிச்சி உதறிடுவாங்க.அவங்களை இதுக்கு மேலே சமாளிக்க முடியாது”

”ஏண்ணே..சின்ன டவுட்டு.உங்க ஹிஸ்டரியிலே சமாளிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை இருக்காண்ணே?”பையன் வாயை பொத்திகொண்டு சிரித்தான்.

“டேய்..வர வர குசும்பு ஜாஸ்தியாயிடுச்சுடா உனக்கு”கழுத்தில் கிடந்த் டேப்பை எடுத்து செல்லமாக வீசி அடித்தான்.

கிச்சா டெய்லர்ஸ் என்று துரு பிடித்த போர்டுடன் கூடிய அந்த தையலகம் அந்த ஏரியாவில் பிரபலம்.துணி மலைகளுக்கிடையே நடுவில் மெஷின் வைத்து தைத்துக்கொண்டிருப்பான்.ஓரத்தில் அஸிஸ்டெண்ட்.காதிடுக்கில் பென்ஸிலும்,கழுத்தில் இன்ச் டேப் சகிதமாக கண்ணும் கையும் காரியத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தாலும் தலைக்கு மேலே சோம்பல் பட்டுக்கொண்டு லொட லொடவென்றுஓடிக்கொண்டிருக்கும் ஒளரங்கசீப் காலத்து மின்விசிறிக்கு போட்டி போட்டுக்கொண்டு வாயால் லொடலொடத்துக்கொண்டு இருப்பது கிச்சாவின் டிரேட் மார்க்.

உதவிக்கு இன்னொரு மெஷின் வாங்கிப்போட்டு இன்னொரு ஆளை வைத்து தைப்பதற்கு மனமில்லாமல் ஏகப்பட்ட ஆர்டர்களுக்கு ஒப்புக்கொண்டு குறித்த நேரத்தில் தைத்துக்கொடுக்காமல் வாடிக்கையாளர்களை சமாளிப்பதில் வடிகட்டிய கில்லாடி.

அந்த ஏரியா இளவட்டங்களுக்கு கிச்சா கடை வாசல் போர்டு தொங்கவிடப்படாத சங்கம் பிளஸ் இளைஞர் மன்றம்.அரட்டை கச்சேரிகளில் வாயும் காதும் ஈடு பட்டு இருந்தாலும் கையும் காலும் கண்களும் காரியத்தில் மும்முரமாக ஈடு பட்டுகொண்டிருக்கும்

“எலே ..கிச்சா..இப்படி அரட்டை அடிச்சுட்டே தைத்தால் நாப்பது சைஸ் ஜாக்கெட் தைப்பதற்கு பதில் முப்பத்திரெண்டு சைஸில் தைத்து கஸ்டமர் கிட்டே வாங்கி கட்டிக்கப்போறே”
இப்படி யாராவது கேட்டால் கிச்சாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும்.

“என்னாது..கிச்சாவை என்னான்னு நெனைச்சே...பத்து வயசிலே அய்யணார் அண்ணேகிட்டே வேலைக்கு சேர்ந்தேன்.பதிமூணு வயசிலே மிஷின் முன்னாடி உக்காந்துட்டேன்.இந்த புரட்டாசி வந்தால் ஆச்சு நாப்பத்தேழு.முப்பத்தேழு வருஷ சர்வீஸில் ஒரு பழுது பார்த்திருப்பே..”

இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மளிகைக்கடை வீட்டம்மா முகமெல்லாம் சிவக்க கோபம் கொப்புளிக்க வந்தாள்.

“வாங்கக்கா வாங்க..நேற்றே உங்கள் ஜாக்கெட்டெல்லாம் தெச்சி கொடுத்தனுப்பிட்டேனே.”

“ஜாக்கெட் தச்சி இருக்கற லட்சணத்தைப்பாரு.’ப’ கழுத்து வைக்க சொன்னால் ‘யு’கழுத்து வச்சி இருக்கே.ஜாக்கெட் தந்த அளவை விட நாலு இஞ்ச் பெரிசா தச்சி இருக்கே.நல்லா தாரளமா இருக்கட்டுன்னுதானே முக்கால் மீட்டருக்கு பதில் ஒரு மீட்டரா எடுத்துக்கொடுத்தேன்.அப்பவும் உள்ளுக்குள் ஒட்டு போட்டு அசிங்கப்படுத்திட்டே..”

“யக்கா..யக்கா..நான் ஐடியாவோடத்தான் தைத்து இருக்கேன்க்கா.நீங்க வாங்கி இருக்கின்ற துணி சரி இல்லை.ஒரு வாஷ் போட்டீங்கன்னா சுருங்கிடும்.வாஷ் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க.கிச்சா எப்படி தைத்து இருக்கான்னு..”

“இதுவா மட்டமான துணி?நான் என்ன பிட் துணியா எடுத்தேன்.டவுனுக்கு போய் மீட்டர் நூறு ரூபாய்க்கு எடுத்து வந்ததாக்கும்.”
கோபம் குறையாமல் கத்தினாள்.

“பர்ஸ்டு குவாலிட்டின்னு உங்களுக்கு செகண்ட் குவாலிட்டி கொடுத்து எவனோ ஏமாத்திட்டான்க்கா.முப்பத்தேழு வருஷ சர்வீஸ்.துணிமணி பற்றிஎனக்கு தெரியாதா என்ன?”

“சரி ப கழுத்துதானே வைக்க சொன்னேன்.எதுக்கு யு கழுத்து வச்சே”

“ஹா.ஹா..யக்கா...அதான் சொல்லுறேனே மட்டமான துணி ப கழுத்து வச்சேன்னா குறுக்காலே அப்படியே கிழிஞ்சுடும்.யு கழுத்துன்னா அப்படியே இருக்கும்.நான் என்ன கூலிக்கு மாரடிக்கறவனாக்கா.ஒவ்வொரு கஸ்டமருக்கும் தைக்கும் பொழுது என் சொந்த உபயோகத்துக்கு தைக்கிற மாதிரியில்ல சிரத்தை எடுத்து தைக்கிறேன்..என்னைப்போய்..”

கிச்சாவின் அனுசரனையான பேச்சிலேயே ஓரளவு கூலாகிய மளிகைகடை வீட்டம்மா இன்னும் விட மனதில்லாமல் சற்று சுருதி குறைந்த தொணியில் “அப்ப எதுக்கு உள்ளுக்கு வேறு துணியாலே ஒட்டு போட்டு இருக்கே.பார்க்கவே அசிங்கமா இருக்கு”

“ஐயோ யக்கா...எந்த கடையிலே எடுத்தீங்க..உங்களை நல்லா ஏமாத்திட்டான்.நான் அளந்து பார்க்கும்பொழுது என்பது செண்ட் தான் இருந்தது.இனிமேல் ஜாக்கெட் பீஸ் வாங்கும் பொழுது வீட்டுக்கு வந்து அளந்து பாருங்க”

ஞாபகக்குறைவில் தவறுதலாக வெட்டிய உண்மையை ஒப்புக்கொள்ளவா முடியும்?

சட்டையை கிச்சாவிடமே கடாசி விட்டு வந்து விட வேண்டும் என்று ஆக்ரோஷத்துடன் வந்தவள் மேலே ஏதும் பேசாமல் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து தந்து விட்டு ஜாக்கெட்டை திரும்ப வாங்கிகொண்டு சென்றவளை வெற்றிகரமாக பார்த்தான் கிச்சா.

”அண்ணே..அந்தம்மாவுக்கு பித்தான் கட்டும் பொழுதே கேட்டேன்.இப்படி சொதப்பிட்டீங்களே.அந்தம்மாவிடம் வாங்கி கட்டிக்கப்போறீங்கன்னு”

“டேய்..படவா..சும்மா வாய் பேசிட்டு இருக்காமல் சட்டுன்னு பித்தானை கட்டுடா.அதுக்கு முன்னாடி நாயர் கடையிலே ஸ்ட்ராங்கா ரெண்டு டீ வாங்கிவா”

“அண்ணே..இந்நேரம் கடையிலே சூடா நண்டுக்கால் போண்டா போடுவாங்கண்ணே”

“டேய்..இன்னிக்கு அமாவாசை.நண்டுக்காலும் தின்ன மாட்டேன்.திமிங்கலக்காலும் தின்ன மாட்டேன்”

“அண்ணே திமிங்கலத்துக்கு கால் இருக்குமாண்ணே..நண்டுகால்ன்னா வெங்காயத்தை நண்டுக்கால் போல் நீள நீளமா வெட்டிப்போட்டு முறுகலா போண்டா போடுவாங்கண்ணே”

“சரி சரி..போய் சீக்கிரமா வாங்கி வந்துட்டு வேலையை ஆரம்பி”

நண்டுக்கால் போண்டா சாப்பிடும் ஆசையில் பையன் துள்ளிக்கொண்டு ஓடினான்.

பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் மெஷினை கட கடவென்று ஒட்டிக்கொண்டு இருந்த பொழுது இரைச்சலாக வந்து சேர்ந்தார் பாஷாபாய்.

“என்னய்யா கிச்சா..உன் மனசிலே என்ன நினைத்துட்டு இருக்கே.”

“வாங்க பாய்..சிங்கப்பூரில் இருந்து சவுகரியமா வந்து சேர்ந்தீகளா”

“ம்ம்..அதெல்லாம் நல்ல படியா வந்து சேர்ந்தாச்சு.இதென்னா..என்ன தைத்து இருக்கே”

துணி மூட்டையை விசிறி அடித்தார்.தோணி பாய்ந்து பந்தை பிடிப்பதுபோல் லாவகமாக கீழே விழாமல் கேட்ச் செய்த கிச்சா “பாய் சூடா இருக்கறமாதிரி இருக்கு”சிரித்தான்.

“பின்னே என்னய்யா..என்பொண்ணு அனார்கலி சுடிதார் வேணுமுன்னு ஆசை ஆசையா சிங்கப்பூரில் இருந்து துணி வாங்கியார சொன்னாள்.அனார்கலி தைக்க சொன்னால் ஆர்ட்னரி தைத்து இருக்கே..வர வர..தொழிலில் கவனமே இல்லாமல் போச்சு.சொல்லுற விதமா தைப்பதே இல்லை”

“பாய்..பாய்..என்ன பாய் இப்படி சொல்லிபுட்டீஹ..இந்த துணிக்கு அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது..”

“இந்த துணியில் தைத்தால்தான் நல்லா இருக்கும்ன்னு சொல்லி வாங்கி வரசொன்னாள் என் பொண்ணு.சும்மா இல்லை.மீட்டர் பனிரெண்டு வெள்ளிக்கு வாங்கி வந்தேன்.இப்படி சொதப்பிட்டியே”

“எனக்கு தெரியாதா பாய்.பாய் என்ன ஒரு வெள்ளிக்கு ரெண்டு மீட்டர் வாங்கற ஆளா?துணி எத்தனி உசத்தின்னு தொட்டுப்பார்த்தாலே தெரியுமே.பாருங்க..லேசுலே யாருக்கும் போட மாட்டேன்.எக்ஸ்போர்ட் குவாலிடி நூலு..சும்மா மாஞ்சா கயிறு மாதிரி இருக்கும்.பித்தானை பாருங்க.செம்புலே வாங்கி போட்டு இருக்கேன்.சாதரணமா ஸ்டீல் ஹூக்தான் போடுவேன்.உங்களுக்குன்னு ஸ்பெஷல்..துணி கிழிந்தாலும் ஹூக் அறுந்துபோகாது”

“அதெல்லாம் சரிதான்..அனார்கலிக்குபதில் ஏன்யா ஆர்ட்னரி தைத்து இருக்கே”

“அதானே சொன்னேனே பாய்..இத்தனை ஒசத்தி துணியிலே அனார்கலி மாடல் தைத்தால் நல்லா இருக்காது பாய்.பொண்ணுக்கு விருப்பமா இருந்தால் சொல்லுங்க...நான் டவுனுக்கு போறச்சே நல்ல துணியா பார்த்து நானே பொருத்தமான துணி வாங்கி வந்து அனார்கலி மாடல் தைத்து தர்ரேன்.”

“அதை எங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமாக தைத்து இருக்கணும்.அதை விட்டுட்டு உன் இஷ்டத்திற்கு தைத்து இருக்கே.”

“ஐயோ..கேட்காமல் இருப்பேனா பாய்.நம்ம துணியை வெட்டுவதற்கு முன்னாடி பையன் கிட்டே கேட்டு அனுப்பத்தான் செய்தேன்,வீடு பூட்டி இருந்ததுன்னு வந்துட்டான் பாய்.லேட்டானால் சப்தம் போடுவீங்களேன்னு நானே தைக்க ஆரம்பித்துட்டேன்.கோவிச்சுக்காதீங்க பாய்”

“என்ன எழவோ போ..என் மவளை சமாளிக்கறதுக்குள்ளே நெஞ்சுதண்ணி காஞ்சி போகுது”விசிறி அடித்த துணியை திரும்பி வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் பாஷாபாய்.

‘உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..’வெற்றிகரமாக சமாளித்துவிட்ட தெம்பில் மீண்டும் மெஷினை ஓட்ட ஆரம்பித்தான்.

பாஷா பாய்வீட்டில் இருந்து தைக்க வந்த துணியை பார்த்ததுமே கிச்சாவின் மனைவி துணியின் வழ வழப்பிலும் பள பளப்பிலும் தரத்திலும் டிஸைனிலும் நிறத்திலும் ஈர்க்கப்பட்டு கணவனிடம்”என்ன செய்வியோ ஏது செய்வியோ.நான் ஊருக்கு போவதற்கு முன்னாடி என் தங்கச்சி மகளுக்கு சின்ன கவுன் இந்த துணியில் தைத்தே கொண்டுபோய் கொடுத்தே ஆகணும்.இந்த துணியில் என் தங்கை மகளுக்கு கவுன் தைத்துப்போட்டே ஆகணும்”என்று வழக்கம் போல் கடும் கட்டளை போட்டதை மறுக்க முடியாமல் யோசித்ததின் விளைவுதான் அனார்கலி ஆர்ட்னரி ஆகி விட்டது.

“அண்ணே..நண்டுக்கால் போண்டாண்ணே..சூடா சாப்பிட்டுட்டு டீயை குடிங்கண்ணே”

பசி வயிற்றை கிள்ள ஆவலுடன் போண்டாவை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் கிச்சா.

“அண்ணே..போண்டா நல்லா இருக்காண்ணே..இன்னும் நாலு வாங்கிவரவா?நல்லா சாப்பிட்டீங்கன்னாத்தான் இனிமே வர்ர கஸ்டமரை தெம்பா சமாளிக்க முடியும்”சொல்லி விட்டு வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்த பையனை இன்ச் டேப்பால் அடிக்க கையை ஓங்கினான் கிச்சா.

















January 23, 2012

பிரபலமான உணவுப்பொருட்கள்

திருப்பதி - லட்டு
மதுரை - இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
நெல்லை - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கீழக்கரை - தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
இராஜபாளையம் - கொயயாப்பழம்
மணப்பாறை - முருக்கு
சாத்தூர் - சேவு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி
ப்ரானூர் பார்டர் - சிக்கன்
நாமக்கல் - முட்டை
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி
பொள்ளாச்சி - இளநீர்
கல்லிடைக்குறிச்சி -அப்பளம்
ராமேஸ்வரம் - கருவாடு
விருதுநகர் - புரோட்டா
மதுரை - அயிரை மீன்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி
காரைக்குடி - உப்புக்கண்டம்
சிதம்பரம் - இறால் வருவல்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி
சேலம் - மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய்
ராசிபுரம் - நெய்
பொள்ளாச்சி - இளநீர்.
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி
திருநெல்வேலி - அல்வா
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
மணப்பாறை - முறுக்கு
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
கோயம்புத்தூர் - மைசூர்பா
கும்பகோணம் - டிகிரி காபி
வால்பாறை - டீ
மாயவரம் - அப்பளம்
காரைக்கால் - குலாப் ஜாமுன்
வர்க்கி - ஊட்டி
ஆம்பூர் - மக்கன் பேடா
சேலம் - தயிர்வடை
காரைக்குடிதேன்குழல்
ராம்நாட் - கோமுட்டி வற்றல்
காரைக்குடி - மண ஓலை
காரைக்குடி - அச்சுமுறுக்கு
சர்பத் - புதுக்கோட்டை
கொல்லிமலை - தேன்
குண்டூர் - மிளகாய்
தஞ்சை - நெல்
மல்லி - குண்டக்கல்
கொல்லிமலை - அன்னாசி
சின்னமனூர் - கெண்டைமீன்
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பழனி - பஞ்சாமிர்தம்
பண்ருட்டி - பலாப்பழம்
வெள்ளியணை - அதிரசம்
லாலாப்பேட்டை, சத்தியமங்கலம் - வாழைப்பழம்
சேலம் - மாம்பழம்
பொள்ளாச்சி - தேங்காய்
ஒட்டன் சத்திரம் - கத்தரிக்காய்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கை
கூர்க் - காஃபி
தஞ்சை - நெல்


இந்தியா - சமோசா
தமிழ்நாடு - இட்லி
இத்தாலி - பிஸ்ஸா பாஸ்தா
சைனா - பிரைட் ரைஸ் நூடுல்ஸ்
ஸ்வீடன் - ஸ்வீடன்ஸ் மீட்பால்
பங்களாதேஷ் - பிரியாணி
ஆப்கானிஸ்தான் - காபூலி புலாவ்
தைவான் - பீப் நூடுல்ஸ் சூப்
ஹாங்காங் - திம்சும்
மலேசியா - நாசிகொரைங்
பாகிஸ்தான் - பிரியாணி
சவுதி - கப்சா ரைஸ்
சிங்கப்பூர் - சிக்கன் ரைஸ்
யு ஏ இ - குப்பூஸ் ,ஹரீஸ்
கொழும்பு - கிதிள் கருப்பட்டி
குவைத் - மக்பூஸ்
இந்தோனிஷியா - சாத்தே
பேங்காக் - ஸ்ரிம்ப் சூப்
சவுத் அமெரிக்கா - தக்காளி
ஈரான் - ஸ்பினாச்
சவுத் அமெரிக்கா - அவகோடா
எழுமிச்சை - பர்மா
கிரீஸ் - ஆலிவ்
பிரிட்டன் - பேரிக்கா
மொஸாம்பிக் - முந்திரி
பிரேஸில் - அன்னாசி
கேரட் - ஹாலந்த்
சவுத் .நார்த் அமெரிக்கா - பீன்ஸ்
சவுத் அமெரிக்கா - உருளை

டிஸ்கி:
தெரிந்தவர்கள் பின்னூட்டம் வாயிலாக லிஸ்ட் போடலாம்.:)


உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு,
கொல்லாம் பழம் ,
வாழைப்பழங்களில்
ஏத்தம் பழம், செவ்வாழை,
மற்றும் இதர வாழைப்பழ வகைகள்,
அன்னாசிப்பழம், சக்கப் பழம்

உசிலம்பட்டி - கேப்பை,சீரணி மிட்டாய்

ஸ்காட்லாந்து - பிஷ்&சிப்ஸ்
நன்றி அதிரா

மைசூர் - நிப்பட்டு
கிருஷ்ணகிரி - அல்போன்ஸா மாம்பழம்
ஜெர்மனி - சாசேஜ்
நன்றி - ஏஞ்சலின்

காரைக்கால் - பட்டர்கோவா, தம்ரூட் அல்வா
பாப‌நாசம் - டோப்பிடஹான்
காயல்பட்டிணம் ‍ - மஞ்சள் வாடா, தக்காளிக்கறி
பாண்டிச்சேரி - மட்டன் பிரியாணி
திட்டச்சேரி - அட‌மாங்காய்
பரங்கிப்பேட்டை - அல்வா, மட்டன் மிக்ஸர்
சங்கரன்பந்தல் - ஜிலேபி
மதுக்கூர் - பப்படம்
ஏனங்குடி - லட்டு
ஃபிரான்ஸ் - ஃபிரெஞ்ச் ஃபிரை & க்ரேக்
லண்டன் - சீக் கபாப், சீஸ் பால்ஸ்
மொராக்கோ - ஹரிரா
அல்ஜீரியா - மக்லூபா ரைஸ்
நன்றி - அஸ்மா

பரங்கிப்பேட்டை - ஹல்வா,பிரியாணி ,தாளிச்சா
நாகூர் - பால்கோவா
நன்றி - ஜெய்லானி

அரபு நாடுகள் - பேரீச்சை
ஜப்பான் - சூஷி(susi) ,கிரீன் டீ
விருதாச்சலம் - முந்திரி
மாலத்தீவு - மாசி
கேரளா -பயறு பப்படம் புட்டு,ஆப்பம், மத்தி மீன்,பழபஜ்ஜி,சக்கை
பெல்லாரி - வெங்காயம்
வால்பாறை - மிளகு
மூணாறு - டீ
கடையம் -போளி
ஆம்பூர்,வாணியம்பாடி - பிரியாணி
தஞ்சாவூர் - பொன்னி அரிசி
திருநெல்வேலி - சொதி
மேலப்பாளையம் - மருந்து சோறு,தக்கடி,சேமியா பிரியாணி
உடன்குடி -கருப்பட்டி
மங்களுர் - போண்டா
மைசூர் - மசால் தோசை
மத்தூர் - மசால்வடை
பெங்களூர் - பிசிபேலாபாத்
மும்பை - வடா பாவ்
நன்றி - ஆசியா

தஞ்சாவூர்-அசோகா அல்வா

நாகூர் - அஞ்சு வகை சோறு, வாடா
திட்டசேரி - பொட்டி பணியம், குவளைகேக்,
பக்கோடா பிஸ்கட்



January 19, 2012

அஞ்சறைப்பெட்டி -7

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் எண்ணி முன்றே மூன்று வீல் சேர் மட்டிலுமே.அதிலும் இரண்டு ரிப்பேர்.மற்றொன்று விரைவில் ரிப்பேர் ஆகும் நிலைமை.முதிய பயணிகளை லக்கேஜ் வைத்து செல்லும் டிராலியில் உட்கார வைத்து இழுத்து செல்வது பார்க்க பரிதாபமாக உள்ளது.ஆபத்தானதாகவும் உள்ளது.வீல் சேர் இல்லாததால் டிராலியில் வைத்து முதியோர்களை அழைத்துச்செல்லும் போர்ட்டர்கள் இஷ்டத்திற்கு சார்ஜ் பண்ணி பயணிகளின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுகின்றனர்.ரெயில்வே நிர்வாகம் கவனிக்குமா?


22 வருடங்கள் காணாத அளவிற்கு பனிப்பொழிவு சென்னையில்.காலையில் ஏழுமணிக்கே வெளிச்சம் சரியாக வருவதில்லை.போர்வைக்குள் சுருண்டு இருக்கும் பிள்ளைகளை தட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.எப்பொழுதடா வெயில்காலம் பிறக்கும் என்று சென்னை வாசிகள் வழி மீது விழி வைத்து காத்து இருக்கின்றனர்.ம்ம்ம்ம்...இக்கரைக்கு அக்கரை பச்சை.

பிரபலமான பிராண்ட் செருப்பு.இந்த செருப்பு வாங்குவதென்றால் சேல்ஸ் போடும் பொழுது வாங்கினால்தான் பர்ஸ் பழுக்காது.அந்த பிரபலமான மாலில் உள்ள ஷோ ரூமில் சேல்ஸ் நடைபெற்றுவருகின்றது என்று பத்திரிகை வாயிலாக அறிந்து அங்கு சென்றால் கடை வாசலிலேயே பிரமாதமாக விளம்பரம்.flat 40% off என்ற கொட்டை எழுத்துக்கள்.டிஸ்ப்ளே செய்து இருந்த செருப்புகளை செலக்ட் செய்து பில் போடும் பொழுதுதான் செருப்புகளுக்கு டிஸ்கவுண்டே போட வில்லை.கேட்டால் ஷோகேசினுள் உள்ள செருப்புகளுக்கு தள்ளுபடி கிடையாது.நடுவில் போடப்பட்டு இருக்கும் பெரிய மேஜையில் குவிந்து கிடக்கும் செருப்புகளுக்கு மட்டும்தான் தள்ளுபடி என்றார்களே பார்க்கலாம்.எனக்கு வந்த கோபத்தில் செருப்புகளை அங்கேயே கடாசிவிட்டு வந்துவிட்டேன்.

சென்றவாரம் பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன்.எதிரில் பெட்ஷீட் விரித்து கூடை பிளாஸ்க் சகிதமாக ஒரு குடும்பத்தினர்.உடன் வந்திருந்த ஒரு ஆறு ஏழு வயது குழந்தை ஒரு கேரி பேக்கை வைத்துக்கொண்டு மிஞ்சிய உணவுப்பொருட்கள்,உபயோகித்த பேப்பர் கப் ,பிளேட்,கடலை தோல் போன்றவற்றை எல்லாம் சேகரித்து அந்த கேரிப்பேக்கினுள் நிரப்பிய வண்ணம் இருந்தாள்.அவர்கள் எழுந்து செல்லும் பொழுது குப்பை கூடை எங்கே உள்ளது என்று தேடி கண்டு பிடித்துப் அதில் போட்டு விட்டு சென்றாள்.இதே போல் அனைவரும் இருந்து விட்டால் இந்திய சாலைகளும் பொது இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.
சமீபத்தில் இறந்து போன வடகொரியா 2-ஆவது கிம் ஜோங் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும்,கலந்து கொண்டும் வாய் விட்டு அழாதவர்களுக்கும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்று அந்த நாட்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.இதற்காக யார் அதிக அளவில் அழுதது?யார் அதிக அளவு துக்கத்தை வெளிப்படுத்தியது ?என்றெல்லாம் அதிகாரிகள் புள்ளி விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.சிம்பிள் மெட்டருக்கே கொல வெறி என்று நாமகரணம் சூட்டுகின்றோம்.இதை எதில் சேர்ப்பது?

January 11, 2012

வானமே எல்லை


வானம் ஏறி...!!! (1).jpg


டீச்சர் போட்ட ஸ்டார் மார்க்கை
நோபல் பரிசாய் ஏற்றெண்ணி
மனமகிழ அன்னையிடம்
காட்டி மகிழும் தனயனவன்
கூட இரண்டு மார்க்கெடுத்தால்
ஒரு சதம் எட்டி இருப்பாயே
தாயவள் தாரக மந்திரமிது

கொண்டவன் ஆசையாய் வாங்கி வந்த
காஞ்சிப்பட்டை விரித்திட்டு
விழி அகல பார்வை யிட்டு
மேலும் அகலமாய் சரிகை என்றால்
ஏற்றமாய் இன்னும் இருக்குமென
பதி பத்தினி சொன்ன வார்த்தையிது

மலடி என்று பட்டமிட்டு
மனதை வாட்டி வதைத்ததினால்
இறைவா எனக்கொரு கருவைத்தான்
உண்டாக்கித்தருவாயென தினம்தினமும்
அழுது இறையிடம் இறைஞ்சியதால்
அன்னைக்கு மகளொன்று பிறந்து விட்டாள்
மகனை பெற்றால் நன்றன்றோ
எத்தனை நன்றாய் இருந்திருக்கும்
சுற்றி இருப்போர் கருத்திட்டர்

நமக்கென வீடொன்று வேண்டுமென
நங்கையவள்தான் தலைவனிடம்
நச்சரித்து தினம் தினம் கேட்டு வைக்க
கடனை உடனை வாங்கியவன்
அழகாய் அடுக்குமாடியில் ஒன்றினையே
அமர்த்தி மனையாளை குடிபெயர்த்தான்
புத்தம் புதிய வீட்டிளவள்
பவிசாய் பதவிசாய் இருந்து கொண்டு
பவ்யமாக கேட்டு வைத்தாள்
தரையோடு வீடென்றால்
இன்னும் கெளரவம் கிடைத்திடுமே

அறுபது வயது போதுமென்று
அதற்கு மேல் வாழ்ந்தால் நன்றன்று
என்பது அவனது கருத்தன்றோ
அகவை அறுபது நெருங்கியதும்
இன்னும் இருபது வருடம் வரை
வாழ்ந்தால் இனிக்கும் வாழ்க்கை என்று
ஏக்கம் மனதினில் வந்தன்றோ