March 31, 2010

துபாய்..துபாய்..





இருப்பை எல்லாம் விட்டு விட்டு

விருப்பை மட்டும் மூட்டைக்கட்டி

மறுப்பை சொல்ல வழி இல்லாமல்

பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்
.

அன்னை மண்ணில்

வேரறு பட்டதும்

விமானம் ஏற தீர்மானம் செய்ததால்

அன்று அரும்பாய் இருக்கையிலே

ஆகாயப்பார்வையிலே

அலைபாய்ந்த ஆசையிலே

அழகாக தோன்றிய

ஆகாய ஊர்தியும்

அரங்கேறிப்போகையிலே

ஆனந்தம் இல்லாத

அனுபவமாகிப்போனது
.

அதில் அலங்காரம் செய்துதான்

ஆகாரம் வந்தது
.
ஆசைப்பட்டு தீர்த்திடாமல்

அசைபோட்டு தீர்த்துவிட்டேன்.

இறங்கும் நேரம் வந்துவிட‌

இருக்கை இருந்து பார்த்தபொழுது‍‍‍‍

இங்கு இயற்கை என்று ஒன்றும் இல்லை
.
மணல் நகரின் அனல் காட்சி


இங்கு மக்கள்

அல்ல மன்னராட்சி

அன்று நிவாரணம் தேடி வந்த நகரம்

இன்று நிரந்தரம் ஆகிப்போன நகரம்

நாள் விடிந்தாலும்,முடிந்தாலும்

ஒரே போல் இருக்குமா?

அட,அறைக்குள்ளே சிறை வைத்தால்

வேறென்ன இருக்கும்?


உறவோட உறவாட‌

கை பேசி எனக்கு

அதில் போன காசுக்கு

இங்கேது கணக்கு



இங்கே மனைவியோடு உறவாடி

பிள்ளை பெற முடியாமல்

பில்லை பெற்றோர் ஆயிரம்


இளமையும் வேலைக்கு

இரையாகிப்போச்சு

காலமும் காசுக்கு

கரியாகிப்போச்சு

காசாவது மீந்தததா

செலவாகிப்போச்சு

வருமானம் வரு முன்னர்

செலவு வந்து சேர்ந்துவிடும்

வெறுமாக ஊர் சென்றால்

உறவு வந்து ஒட்டுமா?


காசுகணக்குகள்

கவலையைத்தான் தருகிறது

கடந்த காலம் தான்

கண்ணில் தெரிகிறது


கஷ்டப்பட்டாலும்

நஷ்டப்பட்டாலும்

எந்நாடு சென்றாலும்

சொர்க்கமே தந்தாலும்


என் மனதினில்

தாய் நாடு சாகாது.


தங்கை ஜலி துபைப்பற்றி ஒரு கவுஜை பாடினார்.அந்த கவுஜைக்கு பின் கவுஜை இது.ஜலியின் கவுஜையைப்படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

டிஸ்கி:இது நம்ம சொந்த சரக்கல்ல.


March 26, 2010

விருதும்,பிடித்த பத்து பின்னூட்டங்களும்.





தங்கை மேனகா விருதாகட்டும்,தொடர்பதிவாகட்டும் இந்த ஸாதிகா அக்காவை எப்பொழுதும் மறக்காமல் தவறாமல் பகிர்ந்துகொள்ளும் அன்பை எண்ணி நெகிழ்வடைகிறேன்.தங்கை மேனகா உங்கள் விருதுக்கும்,அழைப்புக்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.மேனகா அன்புடன் அளித்த விருதை சந்தோஷத்துடன் இவ்விடுகையில் வெளியிடுகிறேன்.

மேலும் தங்கை ஜலியும்,சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களும் இந்த விருதை அன்புடன் வழங்கி இருக்கின்றனர்.இருவருக்கும் என் அன்பு நன்றி!

பிடித்த பத்து பின்னூட்டம்‍.இது தோழி ஆசியாவும் இத்தொடருக்கு அழைத்து இருந்தார்.ஆசியா நன்றி.

என் பதிவுகளுக்கு அநேக வலையுலக சகோதர,சகோதரிகள் பின்னூட்டம் இடுகிறார்கள்.அத்தனையும் முத்துக்கள்.பிடித்து இருந்ததால்தான் பப்ளிஷ் கொடுக்கிறேன்:‍)(பிடிக்காவிட்டால் பப்ளிஷ் கொடுக்கமாட்டேனே)இது பிடிக்கும்,இது பிடிக்காது என்று பிரித்தறிந்து சொல்லத்தெரியவில்லை,மனமும் வரவில்லை.

1.என்னை தட்டிக்கொடுத்தும்,குட்டிக்கொடுத்தும் வரும் பின்னூட்டங்கள்.

2.சிரிக்க வைக்கும்,சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள்.

3.நீண்ட,நச் என்ற பின்னூட்டங்கள்.

4.அன்புடனும்,மகிழ்ச்சியுடனும் வரும் பின்னூட்டங்கள்.

5.உரிமையுடனும்,பாசத்துடனும் வரும் பின்னூட்டங்கள்.

6.அதட்டியும்.மிரட்டியும்(செல்லமாகத்தான்)வரும் பின்னூட்டங்கள்.

7.தோழமையுடனும்,சகோதரபாசத்துடனும் வரும் பின்னூட்டங்கள்.

8.கிண்டலுடனும்,நக்கலுடனும் வரும் பின்னூட்டங்கள்.

9.அதிர வைக்கும் பின்னூட்டங்கள்.:‍)

10.சைலண்ட் ரீடராக இருந்து பார்த்து நேரிலேயே என்னை கலாய்க்கும் என் உடன் பிறந்தோர்கள்,உற்றோர்களின் வாய்வழிப்பின்னூட்டங்கள்.

நன்றி!நன்றி!!நன்றி!!!

March 25, 2010

சமுத்திரப்பசு




தமிழகத்தின் தென் கிழக்குப்பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து,கன்னியாகுமரி வரை உள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட‌ மன்னார்வளைகுடா கடற்பரப்பு ராட்சத அலைகளற்ற அதிக ஆழமில்லாத அமைதியான கடற்பகுதி.

கடல் வாழ் உயிரினங்கள்,கடற்தாவரங்களின் சரணாலயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.இங்கு அரிய கடல் வகை தாவரங்கள்,உயிரினங்கள் அதிகம் காணப்படுகின்றது.மீனினங்கள் மட்டும் 400 வகைகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய மீன்வளமிக்க கடற்பரப்பு பகுதி இது.தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 20% மீன்கள் இங்குதான் பிடிக்கப்படுகின்றது.

மன்னார் வளைகுடா பகுதியில் ஆராவாரமற்ற அலைகள் இருப்பதால் இந்த அப்பாவி,அப்பிராணிகள் இங்குதான் அதிகளவில் வாழ்ந்து வந்தது சமுத்திரப்பசு என்றும்,ஆவுளியா என்றும் அழைக்கப்படும் .ஆங்கிலத்தில் ( SEA கௌ,SIRENIA )அழைக்கப்படுகின்றது.

கடல் வாழ் தாவரங்களை உண்பதாலும்,மிகவும் அமைதியாக சாந்தமாக இருப்பதாலும் இதனை சமுத்திரப்பசு அல்லது கடல் பசு என்று பசுவின் பெயர் சொல்லி அழைக்கின்றனர் தென்மாவட்டத்தினர்,மற்றும் மீனவர்கள் ஆவுளியா என்றும் அழைப்பார்கள்.`

படகுகள்,பெரிய வகை மீனினங்கள் இந்த ஆவுளியாவை நோக்கி வந்தால் கடுகள்வேனும் தன் எதிர்ப்பை காட்டாமல்,சுற்றி,சுற்றி தன் எதிர்பாளர்களை வலம் வரும் ஐயோ பாவப்பட்ட பிராணி எனலாம்.

இதன் இறைச்சி அதிக சுவைஉள்ளதால் இதற்கு அதிகம் கிராக்கி உள்ளது.ஒரு கிலோ இறைச்சி சுமார் முன்னூறு வரை விற்பனைசெய்யப்படும்.அன்று ஆவுளியா பிடிபட்டுவிட்டது என்றால் அப்பொழுதெல்லாம் அமர்க்களப்படும்.

இவற்றின் பற்கள் நச்சு முறிவுகளுக்கும்,தலை தலை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும்,இறக்கைப்பகுதி மலசிக்கல் மருந்துக்கும்,தோல் தோல்பொருட்கள் செய்யவும் பயன் பட்டு வந்தது.

இந்த சாதுவான கடல்விலங்கு சுமார் முன்னூறு கிலோவில் இருந்து 450 கிலோவரை எடைகொண்ட கிட்டத்தட்ட ஒரு யானையின்பருமன் உள்ள ஒரு பிரமாண்டமான விலங்காகும்.நாற்பது ஆண்டுகாலம் வரை உயிர்வாழக்கூடியது.

கடல்குதிரை,அட்டை,சங்கு,கடல் ஆமை,சுறா போன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இப்பொழுது அழிந்து வரும் ஆபத்தில் இருப்பதால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட சில கடல் வாழ் உயிரினங்களில் இந்த கடல் பசு முதன்மை வகுகின்றது.

இவற்றைப்பற்றி துப்பு கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றும் அரசு அறிவித்துள்ளது.கடலில் இப்பொழுது இவ்வகை பிராணி மிகக்குறைந்த அள்வில் இருப்பதால் இதனை உயிர் உள்ள நிலையிலோ,உயிரற்ற நிலையிலோ வைத்து இருந்தால் சட்டப்படி குற்றமாகும்.

சில பகுதிகளில் ரகசியமாக பிடிக்கப்பட்டு,ரகசியமான முறையில் விறகப்பட்டு வரும் அவலம் நடைபெற்று வருகிறது.அரசாங்கம் எவ்வளவோ முன்னெச்சிரிக்கையா இருந்தாலும் மீனவர்களும்,பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இவ்வகை உயிரினக்கள் காக்கப்படும்.

இதை தடுக்க சட்டரீதியான வழிமுறைகள் இருந்தும் மீனவர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. கடல்பசுக்கள் இறந்து கரை ஒதுங்கும் போது தான், அவை தற்போது இருப்பதே உறுதி செய்யும் அவல நிலை உள்ளது. இதை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயர் கோள காப்பக அறக்கட்டளை முன் வர வேண்டும்.

அரிய வகை உயிரினங்கள் அழிய மனிதர்கள் காரணமாக இருக்காமல் அதன் உயிர் காத்து,கடல் வளத்தைப்பெருக்குவது நம் கடமைகளில் ஒன்றாக எண்ணி செயல்படுவோம்.


March 13, 2010

திருமணசீர்

பட்டுப்புடவைகள்.வசதிக்கேற்ப விலையிலும்,எண்ணிக்கையிலும் இருக்கும்.
அலங்கார பொருட்கள்,வாசனைத்திரவியங்கள்,தலைஅலங்காரப்பொருட்கள்.
சீர்வரிசையின் ஒரு கோணம்
நுங்கு,இளநீருடன் தென்னம்பாளை தெரிகின்றதா?
சீர் வரிசையின் மற்றொரு கோணம்.
சீர் தூக்கிச்செல்லும் பெண்கள்
வரிசையாக செல்கின்றனர்.
திருமணத்தில் பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுக்கும் சீரை (கல்யாணசீர்ப்பலகாரம்) பார்த்தோம்.இப்பொழுது திருமணம் முடிந்து ஓரிரு நாளில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் வீட்டிற்கு அனுப்பும் சீரைப்பாருங்கள்.பெண் வீட்டுசீரில் வெறும் தின்பண்டங்களே இருக்கும்.இங்கு தின்பண்டங்களுடன் மணப்பெண்ணுக்கு உரித்தான பட்டு,டிசைனர்,காட்டன் புடவைவகைகள்,சுடிதார்,நைட்டி,மற்றும் உள்ளாடைகள்,தலைக்கு தேய்க்கும் எண்ணெய் ,ஷாம்பூ ஹேர்கிளிப்ஸ்.ஹேர்பெண்ட் முதல் கால் நகத்திற்கு வைக்கும் மருதாணி வரை தட்டுக்களில் அடுக்கி வைத்து அலங்கரித்து அனுப்புவார்கள்.

குர் ஆன்,முசல்லா,பர்தா முதல் ஹேண்ட் பேக்,அலங்காரப்பொருட்கள்,வாசனைத்திரவியங்கள் இத்யாதி,இத்யாதி..பார்க்கவே கண் கொள்ளாகாட்சியாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் வரதட்சணை இன்றி அநேக திருமணங்கள் நடைபெறுகிறது.அப்படி நடக்கும் திருமணங்களில் திருமணசெலவைப்பார்க்கப்போனால் மணமகள் வீட்டை விட மணமகன் வீட்டினருக்குத்தான் செலவு அதிகமாகும்.உதாரணத்திற்கு இந்த சீரையே எடுத்துக்கொள்ளுங்கள்.மணமகள் வீட்டிலிருந்து வரும் மொத்த சீருக்கு ஆகும் செலவை விட மணமகன் வீட்டில் இருந்து வரும் ஒரே ஒரு தட்டுக்கு (பட்டுப்புடவை வைத்திருக்கும் தட்டை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்)செலவு அதிகமிருக்கும்.

அல்வா,பூந்தி,மைசூர்பாகு,ஜிலேபி,லட்டுகாராசேவு,மிக்சர்,முறுக்கு,பொரி,அவல்,கடலை வகைவகையான பழங்கள்,குடங்களில் பால் சேர்த்த சர்பத் அல்லது ஜூஸ்,இளநீர்,நுங்கு இத்யாதி..இத்யாதி..

இன்னொரு தட்டில் தென்னம்பாளை இருப்பது வியப்பைத்தருகிறது அல்லவா?மணமகன் வீட்டில் இருந்து வரும் தென்னம்பாளையை கத்தியால் பாளையின் மையத்தில் வெட்டி எடுத்தால் அழகான தென்னம்பூக்கள் கொத்தாக வெளிப்படும்.பார்க்கவே அழகாக இருக்கும்.அதனை கையால் பிரித்து விட்டு குடத்தில் சொருகி வைத்தால் அழகு மிகு பூங்கொத்துப்போல் காட்சி அளிக்கும்.இதனை அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு இரு புறமும் வைத்து இருப்பார்கள்.சுற்றி இருக்கும் வாண்டுகள் தென்னம்பூவை விரல்களால் உதிர்த்து மணமக்கள் மேல் எரிந்து மகிழ்வார்கள்.

இந்த சீர்தட்டுகளை கூலிக்கு சுமக்கும் பெண்களை அமர்த்தி அவர்கள் வரிசையாக சுமந்துகொண்டு மணமகள் வீட்டிற்கு எடுத்துசெல்வார்கள்.இந்த திருமணசீர்சுமக்கும் பெண்களுக்கு சீர்தட்டு சுமப்பதென்றால் ஏக குஷி.ஏனெனில் நாள் முழுக்க கூலி வேலை செய்தாலும் கிடைக்கக்கூடிய கூலியை விட சுமார் அரை மணிநேரத்தில் தட்டுகளை சுமந்து எடுத்துசெல்வதற்கு இரு தரப்பினர் வீடுகளில் இருந்தும் கூலி அதிகமாக கிடைக்கும். மட்டுமல்லாமல் திண்பண்டங்களும் கைநிறைய வாங்கிச்செல்லுவார்கள்.சீரை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டிற்குள் நுழையும் பொழுது இவர்கள் குலவை இட்டும் மகிழ்வார்கள்

இந்த சீரைப்பார்க்க மணமகள் வீட்டினர் தமக்கு நெருங்கியவர்களை அழைத்து வந்து காட்டிமகிழ்வர்.மணமகன் வீட்டிலிருந்து வரும் இந்த சீர் ஐட்டங்களை மணமகள் வீட்டினர் திண்பண்டங்கள்,பழங்கள்,சர்பத் ஆகிய உண்ணக்கூடிய பதார்த்தங்களை சிறிய,சிறிய பாலித்தின் பைகளில் தனித்தனியாக நிரப்பி சொந்தம்,பந்தம் அக்கம் பக்கம் அனைவரது வீட்டினருக்கும் அனுப்பி மகிழ்வார்கள்.


March 7, 2010

"பளிச்" பெண்கள்


டாக்டர்.ரஹ்மத்துன்னிஷா ரஹ்மான்
******************************************
ஈ டி ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ் அப்துர்ரஹ்மான் அவர்களின் துணைவியாரும்,கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை சேர்மனும் இன்னும் பற்பல பதவிகள் வகித்து ,சிகரங்கள் தொட்டும் பண்போடும்,அடக்கத்தோடும்,அன்போடும்,கருணையோடும்,எளிமையோடும் அனைவரிடமும் பழகும் பெண்மணி.கீழைநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்பவர்.மருத்துவத்துறையில் மட்டுமின்றி,சமூகத்திலும்,அதன் வளர்ச்சியிலும் அதீத ஈடுபாடுகாட்டி வருபவர்.என் எழுத்துக்கு ஊக்கமெனும் மருந்துதந்தவர்.அன்பு லாத்தா ரஹ்மதுன்னிஷா அவர்களைப்பற்றி இந்த மகளிர் தின இடுகையின் மூலம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

டாக்டர்.நஃபீஷா கலீம்
***********************
தலைசிறந்த இலக்கியவாதி,அந்தக்காலத்திலேயே ஒரு மீட்டர் நீளத்திற்கு பட்டங்கள் வாங்கி குவித்த அறிவுக்களஞ்சியம்,எழுத்தாளர்,பேச்சாளர்,திறமையான கல்வியாளர்,நிரவாகத்திறன் கொண்ட கம்பீரமான நிர்வாகி,கல்லூரியின் முதல்வர் இப்படி அனைத்திலும் நிகரற்று ,சகலகலா வல்லவராக விளங்கிய சாதனைப்பெண்மணி இனிய ஆண்ட்டி நஃபீஷா அவர்கள்.என் பாட்டியின் உற்ற நண்பியும்,எங்கள் குடும்ப நண்பருமான இவர் எனக்கு அறிமுகமானதே தன் நடுத்தர வயதைத்தாண்டிய பின்னர்தான்.அப்பொழுதே இவரது திறமை,அறிவு,கம்பீரம்,பேச்சாற்றல்,சிந்தனைத்திறன்,சமூக அக்கரை,பிரம்மிக்க வைக்கும் அழகு,ஆளை அசத்தும் நிறம் அனைத்தையும் கண்டு பெரு(மூச்சு)மை பட்டுஇருக்கிறேன்.கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதல்வராக,எல்லாமுமாக இருந்து ,கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.கூட்டத்தில் எங்கிருந்தாலும்,எத்தனை பிசியாக இருந்தாலும் என் தலை கண்டதும் வாஞ்சையோடு உச்சிமுகரும் அவரின் தாய்மைஉணர்வு இப்பொழுதும் நெகிழவைக்கும்.கடைசியாக ஓரிருவருடங்களுக்கு முன் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவரை சந்தித்து பேசியதுதான்.இப்பொழுது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.அன்பு ஆண்ட்டி,இப்போ நீங்க எங்கே இருக்கின்றீர்கள்?உங்கள் நலம் அறிய பேராவல்.(ஆண்ட்டியின் புகைப்படம் கிடைக்க வில்லை.ஆதலால் ரோஜாவைப்போல் அழகாகவும்,மென்மையாகவும் இருக்கும் இந்த ரோஜாபடம் பொருந்தும்தானே?)

டாக்டர்.கிரேஸ்ஜார்ஜ்
************************
தன் தந்தையால் சிறிய அளவு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி கணவரால் விரிவுபடுத்தப்பட்டு,அவரது மறைவுக்குப்பின் தட்டித்தடுமாறி நிர்வாகத்தை தானே ஏற்று ,திறன் பட கல்வி நிறுவனத்தை நடத்தி.இன்று ஆலமரமாய் ஆல்பா பொறியியல் கல்லூரி,ஆல்பா ஆர்ட்ஸ்&சைன்ஸ் கல்லூரி.பள்ளியின் கிளைகள்,டாக்டர் கிரேஸ்ஜார்ஜ் மருத்துவமனை என்று மங்காப்புகழுடன் கல்வியறிவைபுகட்டிவரும் சாதனைப்பெண்மணி.சென்னை நந்தனத்திற்கே லேண்ட் மார்க்காக திகழும் ஆல்பா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி கல்வி உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கம்.

சரீஃபா அஜீஸ்
******************

கீழை நகர் பிரமுகரும்,சிறந்த கல்வியாளரும்,ஈடிஏ குழுமத்தலைவரின் குடும்ப அங்கத்தினரும்,சென்னை நுங்கம்பாக்கம் கிரஸண்ட் பெண்கள் பள்ளியின் டைரக்டரும்,முதல்வரும்,பள்ளியின் அபார வளர்ச்சிக்கும்,சிறப்புக்கும்,மாணவிகளின்சீரிய ஒழுக்கத்திற்கும் வித்திட்டு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து அயராது,சிறப்புற பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் கண்ணியப்பெண்மணி சரீஃபா அஜீஸ் அவர்கள் என்றால் மிகைஆகாது.ஊடகங்களில் அடிக்கடி வலம் வரும் பெண்மணி ஆகையால் அனைவரும் அறிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.அறிவுப்பூர்வமான செயல்பாடுகள்,,எப்பொழுதும் கல்வியைப்பற்றிய சிந்தனை,அதற்கான பாடுபடல்,அசாத்திய ஞாபகசக்தி,கம்பீரம் அனைத்தையும் இவரிடம் கண்டு வியந்திருக்கின்றேன்.
டாக்டர்.கீதா ஹரிப்பிரியா
*******************************
மலடு என்ற சொல் அகராதியில் இல்லாதவாறு செய்வதற்கு வழிவகுத்துக்கொண்டிருப்பவர்.செயற்கைமுறை குழந்தை மருத்துவத்தில் சாதனை படைத்து சென்னையில் தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்.சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் பிரஷாந்த் மருத்துவமனையின் உரிமையாளர்.குழந்தை நாடி வெளிமாநிலங்களில் மட்டுமல்லாமல்,வெளிநாடுகளிலும் இருந்தும் வந்து தங்கி சிகிச்சை பெற்று.கை கொள்ளாமல் ஒன்று,அல்லது ஒன்றுக்குமேற்பட்ட குழந்தைகளை கைநிறைய சுமந்துகொண்டு சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக திரும்பும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் ஏராளம் ஏராளம்.காலையில் முழுக்க மருத்துவ உடையில் சுறுசுறுப்பாக வலம் வரும் இவர் இரவு பளிச் என்ற பாட்டாடை அணிந்து பரவசமாக, சிகிச்சைக்குவருபவர்களுக்கு நடுநிசிவரை தனது கன்ஸல்டிங் அறையில் இருந்து மருத்துவம் பார்க்கும் சுறுசுறுப்பு அலாதியானது.இத்தனை பிசியிலும் ஒவ்வொரு நோயாளியிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல்,அந்யோன்யம்,அன்பான பேச்சு,பொறுமையுடன் சந்தேகம்தீர்த்தல் அனைத்தும் இவரின் குணாதிசியங்கள்.இவரின் சுறுசுறுப்பும்,அயராத உழைப்பையும் பார்ப்பவர்கள் வியக்காமல் இருக்க இயலாது.24 மணி நேரத்தில் நாண்கு மணிநேரம் கூட ஓய்வு எடுப்பாரா என்பது சந்தேகமே.இந்த மங்கா உழைப்பு இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
அனுராதாரமணன்
*********************
எல்லோரும் அறிந்த பிரபல எழுத்தாளர்.இவரைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை.என் பதிம வயதில் இவரது எழுத்துக்கள்தாம் என்னுள் எழுத்தார்வத்தை,ஒரு அழகிய,சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.அன்று முதல் இன்று வரை அதே இளமையுடன் இருந்து எழுத்திலும் இளமையை தக்க வைத்து என்னை அசத்திய அபூர்வபெண்மணி.நூல்கள் படிக்கும் ஆவல் இப்போது எனக்கு குறைந்தாலும்,அனுராதாரமணனின் எழுத்துக்கள் படிப்பதில் ஆர்வம் இதுவரை குறைந்ததில்லை. ,சுண்டல் கட்டித்தரும் பேப்பரில் அவரது எழுத்துக்கள் இருந்தால் கூட விடுவதில்லை.

சுமையா தாவூத்
******************
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி ஆரம்பித்த புதிதில் ஒரு மாணவியின் தோற்றத்தில் கல்லூரியின் விரிவுரையாளராக நுழைந்ததில் இருந்து எனக்கு இவரைத்தெரியும்.இவரது திறமையாலும்,உழைப்பாலும்,பயிற்றுவிக்கும் பாங்கினாலும் ஹெச்.ஓ டி ஆக வளர்ந்து,இன்று முதல்வராக மிளிர்ந்து இப்போது கல்லூரிவளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.இவரது ஆரம்ப கட்ட வளர்ச்சியை அருகிலிருந்தே பார்த்தவள் நான்.பழகுவதற்கு இனிய ஸ்நேகிதி.

டிஸ்கி
*******
கையில் பொம்மையுடன் பொக்கைவாய் சிரிப்புடன் நிற்கும் இந்த கு(சு)ட்டிப்பொண்ணும் 'பளிச்'தான்.ஹி..ஹி..ஹி..

March 3, 2010

மொஸாம்பிக் பார்க்கறீங்களா..

மொஸாம்பிக்கை இறைச்சியோட அறிமுகப்படுத்துகிறேன்.இங்கே ஒரு கிலோ இறைச்சி விற்கும் விலையில் முழு ஆட்டினையே வாங்கலாம்.100 ரூபாய்க்கும் மீன் வாங்கி நாம் வெட்டக்கொடுக்கும் கூலி அங்கே கொடுத்தால் முழு ஆட்டையே நிமிடத்தில் துண்டு போட்டு தந்துவிடுவார்கள்.அதே போல் பக்கத்து நாடுகளான் ஜிம்பாப்வே,மளாவி,பெய்ரோ போன்ற நாடுகளுக்கு நண்பர்களைப்பார்க்கப்போனால் ஸ்வீட்,மற்றப்பொருட்கள் எடுத்துப்போவதை விட ஆட்டை எடுத்துப்போவதையே விரும்புவார்கள்.இது சூப்பர்மார்க்க்ட்டின் புரோஷன் புட் பகுதி.
வகைவகையான இறைச்சிவகைகள்.அதிசயத்தக்கவகையில் கண்களைப்பறித்து அசைவப்பிரியர்களை நாவூறச்செய்துவிடும்
பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்.மொஸாம்பிக் தலைநகரான மபுடோவில் சூப்பர் மார்க்கட்டில் ஷாப்பிங் செய்வது அலாதியானது.
ஃபிரஷ் காய்கறிகள் சூடாக விறபனை ஆகும் மார்க்கெட் பகுதி.டெட் போன்ற ஊர்களில் மார்க்கெட்டைபார்த்தால் 25 வருடங்களுக்கு முந்தைய இந்தியகாய்கறி மார்க்கெட்டை நினைவுக்கு கொண்டுவந்துவிடும்
கருப்புத்தங்கம் புதையுண்டு கிடக்கும் கந்தக பூமி.இடங்களையும்,உபகரணங்களையும் ஆராயும் இந்தியரும்,கருப்பினசகோதரரும்
இயற்கை வளம் கொளிக்கும் அழகிய சாலை.டிராஃபிக் இல்லாத அமைதியான சாலை
இங்கு முந்திரி விளைச்சல் அதிகம்.மிகவும் குறைந்த விலையில் முந்திரியை கொள்முதல் செய்யலாம்.இந்த மொட்டை மரங்கள் மறுமுறைப்பார்க்கும்பொழுது பசேல் ஆகிவிடும் .
பழங்குடியினரின் வசிப்பிடம்.அழகாக,அமைதியாக.
இயற்கைகாட்சி என்னே அழகு!!
நம்மூர் சாலையை நினவு படுத்தும் சாலை
தலை நகர் மபுடோவின் அழகை பாருங்கள்.சீதோஷ்ன நிலை நம்ம ஊர் ஊட்டி ,கொடைக்கானலை மிஞ்சிவிடும்.
மபுடோவின் வீதியின் இன்னொரு தோற்றம்
விமானத்தில் பறந்தபடி எடுத்த மபுட்டோவின் தோற்றம்