Showing posts with label லேடீஸ் ஸ்பெஷல். Show all posts
Showing posts with label லேடீஸ் ஸ்பெஷல். Show all posts

March 8, 2011

எத்தனை முகம் பெண்களுக்கு



மார்ச் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய ஆர்டிகிள்.அனைவருக்கும் இனிய பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது என்பது மாநபி மொழி.மாதவராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா,பெண்கள் நாட்டின்கண்கள் என்று பெரியோர் கூறினார்கள்.அத்தனை புகழ்களுக்கும் உரித்தான பெண்களுக்கே உரித்தான பெண்கள் தினம் அன்று பெண்ணாகிய நான் பெருமித்ததுடன் இவ்விடுகையை பதிவிடுகின்றேன்.

முதிர்ச்சியான அறிவுத்திறன்,பக்குவமான கவனிப்புத்திறன்,ஆழ்ந்து சிந்திக்கும் நுட்பத்திறன்,பொறுமையாக முடிவெடுக்கும் திறன்,கம்பீரமான நிர்வாகத்திறன் கொண்டோர்தான் பெண்கள்.இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.குடும்பத்தை,உறவுகளை,பொருளாதாரத்தை,சமையலை,விருந்தோம்பலை,நட்பை,அக்கம் பக்கத்தினரை,வேலையாட்களை இன்னும் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்துசெயல்களையும் மிகவும் அழகாக திறமையாக நிர்வாகம் செய்து பண்முக ஆளுமையில்(multi faceted personality) முதன்மையானவர்கள் என்றால் மிகை ஆகாது.

1.பினான்சியல் மேனேஜ்மெண்ட்:
கணவரின் சம்பளத்துக்கேற்ற வாறு வாழ்க்கைத்தரத்தை சிக்கனமாக அமைத்துக்கொண்டு,கூடவே ஏலச்சீட்டுகள்,நகை சீட்டு,பாத்திரச்சீட்டு என்று சேமித்து கணவர் பணகஷ்டத்தில் இருக்கும் பொழுது பொருளாதாரரீதியாக உதவுவதில் கில்லாடிகள்.

2.சிச்சுவேஷன் மேனேஜ்மெண்ட்:
குடும்பத்தினருக்கு நோய் வாய்ப்படும் பொழுது அதிர்ந்து நிற்கும் ரங்க்ஸ்களுக்கு ஊக்கவார்த்தைகளை அளித்து விட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு தகுந்த முதலுதவி செய்வதிலாகட்டும்,தர்மசங்கடமான சூழ்நிலையில் வீட்டில் விருந்தினர்கள் ஆஜர் ஆகிவிட்டால் சங்கடங்களை காட்டிக்கொள்ளாமல் வரவேற்று உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் ஆகட்டும் இப்படி எப்பேர்பட சூழ்நிலையையும் சமர்த்தாய் சமாளிப்பதில் வல்லவர்கள்.

3.மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்:
மாமியாருக்கு பிரஷருக்கேற்ற உப்பு குறைந்த உணவாகட்டும்,மாமனாருக்கு சர்க்கரை கம்மி செய்த உணவாகட்டும்,கணவருக்கு பிடித்த பொரியல் வகைகள் ஆகட்டும்,பிள்ளைகளுக்கு பிடித்த பாஸ்ட் புட் வகைகள்,பெரியவனுக்கு முகத்தில் பரு வந்தால் எண்ணெய் குறைவான சமையலும்,கணக்கில் மதிப்பெண்கள் கம்மியாக வாங்கும் மகளுக்கு தினம் வல்லாரையில் டிஷ் செய்து கொடுப்பதில் ஆகட்டும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் தேவையையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமைத்து பறிமாறி அக்கரை காட்டுவதில் புலிகள்.

4.பியூட்டி மேனேஜ்மெண்ட்:
அத்தனை வேளைகளுக்கு இடையே கடலைமாவை கரைத்துக்கொண்டு முகத்தில் அப்பிக்கொள்வதில் இருந்து,மூல்தானி மட்டியை பூசிக்கொள்வது,பொரியலுக்கு கேரட் நறுக்கும் பொழுது சிறிய துண்டும்,சாலட்டுக்கு வெள்ளரிக்காய் நறுக்கும் பொழுது ஒரு துண்டும் எடுத்து அரைத்து பூசிக்கொள்வது என்று பாய்ந்து பாய்ந்து தன்னை அலங்கரித்துக்கொள்வதில் சிறுத்தைகள்.

5.எஜுகேஷன்மேனேஜ்மெண்ட்:
எல் கே ஜி படிக்கும் சின்னமகளுக்கு ரைம்ஸ் சொல்லிக்கொடுப்பதிலாகட்டும்,பெரிய மகனுக்கு ரெகார்ட் நோட்டில்படம் வரைந்து கொடுப்பதில் ஆகட்டும்,கணவர் எழுதப்போகும் பேங்க் எக்‌ஷாம் சரியாக பண்ண வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வதிலாகட்டும்,அத்தனை வேலைகளுக்கிடையிலும் தனது இரண்டு அரியர்ஸ் பேப்பரை கிளியர் செய்யும் நிமித்தம் நின்று கொண்டும்,நடந்து கொண்டும்,சமைத்துக்கொண்டும் பாடங்களை உரு போட்டுக்கொண்டு இருப்பதில் மேதாவிகள்.

6.ஹியூமன் ரிசொஸ் மேனேஜ்மெண்ட்:
பிறந்த வீட்டினர் வந்தால் அவர்களை கவரும் விதமாகவும்,புகுந்த வீட்டினர் வந்தால் அவர்களையும் கவரும் விதமாகவும்,லீவு போடும் வேலைக்காரியை தட்டிக்கொடுத்து லீவுபோடாமல் வருவதற்கு உள்ள பேச்சுத் திறமையும்,பிஸினஸுக்கு பணம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்கும் கொழுந்தனார் முதல்,தீபாவளிக்கு வைர மோதிரம் கேட்கும் நாத்தனார்வரை சமாளித்து யாவரின் மனமும் கோணாமல் சமாளித்து வருவதில் மேதாவிகள்.

7.டெக்னிகல் மேனேஜ்மெண்ட்:
வீட்டில் குக்கர் பர்னர் பிலண்டர் போன்ற சிறு எலக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் ஆனால் முடிந்தவரை தன்கையாலே ரிப்பேர் பார்த்தல் ”ரிப்பேர்ன்னு போனால் கடங்காரன் நூறு நூறா பிடிங்கிடுறானே”என்று புலம்பியப்படி தானே ஸ்க்ரூ டிரைவரும் கையுமாக ஒரு வழியாக பொருட்களை உயிர்பித்து தேற்றி காசு மிச்சம்பிடிப்பதில் வீராங்கனைகள்.

8.டைம் மேனேஜ்மெண்ட்:
காலங்கார்த்தாலே அரக்கபறக்க எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு,டிகிரிகாப்பியை டபராக்களில் நிரப்பி ஒவ்வொருவராக கொடுத்து,டிபன் செய்து டிபன் பாக்ஸில் கட்டி,காய் நறுக்கி பகல் சமையலையும் முடித்து,அனைவருக்கும் சாப்பாடு போட்டு,பாத்திரம் ஒழித்து தானும் வேலைக்கு செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். குளித்து விட்டு அள்ளி முடிந்த கூந்தலை திருத்தி,டிரஸ் செய்து இத்தனை வேலைகளுக்கும் இடையே “விஜி,நேற்று ஆஃபீஸில் இருந்து சிகப்புக்கலர் பென்டிரைவை கொண்டு வந்தேனே பார்த்தியா”என்று கூவும் கணவருக்கும் தேடி கொடுத்து,”என்னோட மேத்ஸ் நோட்ஸைக்காணோம்”என்று அலறும் பெண்ணின் அலறலை நிறுத்தி சரியான நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி விட்டு தானும் கிளம்புவதில் சூரர்கள்.

9.கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்:
பெரிய தொகையை ஏலச்சீட்டு போட்டு முடியும் தருவாயில் சீட்டுகம்பெனியே எஸ்கேப் ஆகிவிட தலையில் கைவைத்து இடிந்து போய் நிற்கும் கணவரை தேற்றுவதில் ஆகட்டும்.திடுமென வந்த நெஞ்சுவலியால் மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து பைபாஸ் செய்ய மருத்துவர் பரிந்துரை செய்யும் பொழுது கணவர் கைகளை பிசைந்து கொண்டு இருக்கும் பொழுது யோசிக்காமல் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்து ஆபத்பாந்தவனாக நிற்பதில் சிங்கங்கள்.

10.பிளாகிங் மேனேஜ் மெண்ட்:
அத்தனை வேலைகள்,பொறுப்புகளுக்கிடையிலும் பிளாக் எழுதி,வெறுமனே எழுதாமல் சமையலாகட்டும்,மற்ற படைப்புகளாகட்டும் பொறுமையாக கேமராவால் படம் எடுத்து அப்லோட் செய்து அழகாக போஸ்ட் செய்வது மட்டுமின்றி,வலையுலகம் தன் வலைப்பூவை மறந்து போய்விடக்கூடாது என்று வாரத்திற்கு குறைந்தது இரண்டு பதிவுகளாவது போஸ்ட் செய்து,வரும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக பதில் சொல்வது மட்டுமின்றி,மற்ற வலைப்பூக்களுக்கும் சென்று அவர்களை ஊக்கம் கொடுக்கும் வகையில் பின்னூட்டம் கொடுத்து மறவாமல் ஒட்டும் போடுவதில் சாதனை சிகரங்கள்.

தோழி தேனம்மை,லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் மேமுக்கும் நன்றி.

March 6, 2011

லேடீஸ் ஸ்பெஷலில் நான்



இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் நான்

ஒவ்வொரு மாதமும் வலைப்பூவில் தேனெடுத்து சுவையூட்டும் ஒவ்வொரு பெண்பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் பணி மகத்தானது.இம்மாத வலைப்பூதாரர் அறிமுகத்தில் என்னை அறிமுகப்படுத்திய லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் ஆசிரியை கிரிஜா ராகவன் மேமுக்கும் ,காரணகர்த்தவான அருமை தோழி தேனம்மை லெக்ஷ்மணனுக்கும் அன்பின் நன்றிகள் உரித்தாகட்டும்.

எண்ணம் போல் வாழ்வு

மனதின் எண்ணத்தைப்போல் வாழ்வு அமைவது என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லிச்சென்றார்கள்?எதனைப்பற்றி அடிக்கடி நினைக்கின்றோமோ அதுவே வாழ்க்கையில் நிஜமும் ஆகிப்போகின்றது என்பது பலர் அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை.

நம்மால் முடியும் என்ற தன்நம்பிக்கை,தன்னைப்பற்றிய அசாத்திய சுய நம்பிக்கை மனதில் நிறைந்து நின்றால் உண்மையில் நம்மால் எல்லாம் முடியும்.

நாம் கவனக்குறைவாக,அசுவாரஸ்யமாக இருக்கும் பொழுது,மனதில் உள்ள தன்னம்பிக்கை குறையும்.உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் செயல் பட்டால் நாடிய விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.நமக்கு செல்வம் வேண்டுமா?உடல் ஆரோக்கியம் வேண்டுமா?நல்ல கல்வி வேண்டுமா?மகபேறு வேண்டுமா?சந்தோஷம் வேண்டுமா?பத்திரிகையில் எழுத வேண்டுமா?எது தேவையோ அதனை முதலில் நினைவு முழுக்க கொண்டு வாருங்கள்.முயற்சித்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை மனதின் ஆழத்தில் இறுத்திக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக அது நடக்கும்.

சந்தோஷம் தேவை என்றால் அது கிட்ட என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டால் பலனளிக்கும் என்று சில நிமிடங்கள் செலவு செய்து ஆராயுங்கள்.சரி என்று பட்டதை செயல் படுத்துங்கள்.சின்ன விஷயத்தினையும் சந்தோஷமாக நினைக்கப்பழகுங்கள்.நிச்சயமாக நீங்கள் விரும்பும் சந்தோஷத்தை வெகு சீக்கிரமாகவே எட்டுவீர்கள்.


மணம் புரிந்து சில வருடங்கள் கழிந்தும் மகபேறு கிடைக்காத ஒரு பெண்இவ்வளவு மருத்துவம் செய்தும் கிட்டவில்லையே?இனி எங்கு நமக்கு அந்தப்பேறு கிட்டப்போகின்றது?” என்று அலுத்துக்கொண்டால் மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் வலிமை குன்றுவாள்.மகபேறு மருத்துவர்இந்த நம்பிக்கையின்மையே உனக்கு முதல் எதிரி.இந்த மனநிலை தொடர்ந்தால் எந்த மருத்துவமும் பலிப்பது கடினம்என்கின்றார்.விஞ்ஞான உண்மையும் இதுதான்.


பரிட்சைக்கு தயார் செய்து மகனையோ மகளையோ அனுப்பும் பொழுது நம்பிக்கை மிளிறும் வார்த்தைகளின்றிடேய்..ஒன் வேர்ட் ஆன்சரை கோட்டை விட்டுடாதேடா?எஸ்ஸே கரெக்டா எழுது.சின்ன தப்புன்னா மிஸ் மார்க்கை குறைத்துடுவாங்க.சூஸ் எழுதறச்சே குழப்பிக்காதேஇந்த ரீதியில் பள்ளி கிளம்பும் மகனை நெகடிவ் அப்ரோச்சால் குழப்பம் செய்து குழந்தையை டென்ஷன் செய்து நாமும் டென்ஷன் ஆவதை விடகண்ணா,நீ நல்லா பிரிப்பேர் பண்ணி இருக்கேடா.குழம்பாமல் எக்ஸாம் எழுது.நல்ல படியா எழுதுவே.கண்டிப்பா இந்த முறை கிளாஸ் பர்ஸ்டா வருவே.”என்று பாஸிடிவ் அப்ரோச்சில் குழந்தைகளை பரிட்சை எழுதி அனுப்பினால் குழந்தைகளுக்கும் இறுக்கம் தீரும்.நாமும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.


வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளுடன் நிறைவாக வாழவேண்டும் என்று மனதில் நினைத்தால் மட்டும் போதாது.அந்த நிலை கிட்ட என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அதனை நடைமுறை படுத்துவது மட்டு மின்றி,இப்படி எல்லாம் செயல் பட்டால் நிச்சயம் நாம் எண்ணிய இலக்கை அடைவோம் என்று மனதில் நிறைந்த நம்பிக்கையுடன் செயல் பட்டால் சிகரத்தை அடைவது சுலபம்.அதனை விட்டுஹ்ம்ம்ம்..என்ன செய்து என்ன செய்ய?சாண் ஏறினால் முழம் சறுக்குகின்றதுஎன்ற அலுப்பும்,சலிப்பும் மனதில் ஏற்பட்டால் இலக்குக்குறிய பாதை எப்படி கண்களுக்கு புலப்படும்?

தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இருக்க ஆசைத்தான்.அந்த எண்ணம் மனசு முழுக்க உள்ளதுதான்.என்ன இருந்து என்ன செய்வது?வாழ்க்கையில் சருக்கல்கள் மனவலிமையை,தன்னம்பிக்கையை தின்று விடுகின்றதேஎன்று சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.ஆனால் தன்னம்பிக்கையை,விடாமுயற்சியை,பாஸிடிவ் அப்ரோச்சை விடாப்பிடியாக மனதில் இறுத்திக்கொள்ளுங்கள்.உறுதியாக இருக்க மனதினை பழக்கிக்கொள்ளுங்கள்.எதிர்நீச்சல் போடுவதற்கும் தயக்கம் கொள்ளாதீர்கள்.சோர்வினை அகற்றி,சுறுசுறுப்பாக்கிகொள்ளுங்கள்.எதனை எண்ணினோமோ அதனை கண்டிப்பாக அடையமுடியும்,நல் விதை விதைத்து நல்லறுவடை செய்வோம்.