February 11, 2014

charisma 14


தேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்
charisma 14 திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு நெருங்கிய நட்பு ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.



குவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது

 டீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள்  துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.



ஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழ‌த்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி  வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள்  என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி  அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.




வீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.


ஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.


க்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது  அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க‌  என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது ந‌மது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன்  ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான  க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.

இதுவும் க்வில்லிங் அணிகலன்கள்தான்.


 இதுதான் நமது நெருங்கிய தோஸ்துவின் ஸ்டால்.precious கற்கள்கோர்த்து அழகாக ரிச் ஆக தனது அதீத கற்பனை திற‌னை வைத்து வித விதமான நகைகள்.பர்சுக்கள்,மொபைல் பவுச்,சுவர் ஓவியங்கள்.செருப்பு கைவினைப்பொருட்கள்  செயற்கை மலர்கள் என்று செய்வதில் கில்லாடி



மாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.


இவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.



 சாதரண செப்பலில் அவரது கைத்திறன் மிளிகின்றது.


 அழகான பற‌வைகளும் அது இடாத முட்டைகளும்.இவைகள் எல்லாம் என் நண்பியின் ஸ்டாலில் கிடைக்கின்றது.நாளைதான் கடைசி நாள்.



கடைசியாக திரும்பும் பொழுது இந்த பாப்பா என் கண்களை விட்டு அகல மறுத்து விட்டது.அழகாக ஸ்கார்ஃப் போட்டு பவ்யமாக சிரித்துக்கொண்டு இருந்த பாங்கு எல்லோரையும் கொள்ளை கொண்டு விட்டது.கடைகளை பார்க்காமல் சிலர் இந்த குழந்தையின் சுட்டியை ரசித்துக்கொண்டு இருந்தனர்,அதன் தாயிடம் அனுமதி பெற்று க்ளிக் செய்தேன்.

15 comments:

Thenammai Lakshmanan said...

நாங்களே சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது ஸாதிகா.. அருமை.. :)

திண்டுக்கல் தனபாலன் said...

க்வில்லிங் வேலைப்பாடுகள் பார்க்கும் போது அதே நினைவுகள் வந்தன... குழந்தை அழகு...

படங்கள் மூலம் நாங்களும் சுற்றிப் பார்த்து விட்டோம்... நன்றி...

ஸ்ரீராம். said...

சுற்றிப் பார்க்கவும், வாங்கவும், சுவைக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும் போல இருக்கே...

Asiya Omar said...

Charisma -14 படங்கள் பகிர்வு நேரில் பார்த்த திருப்தியை தந்தது.

அம்பாளடியாள் said...

அருமை அருமை அருமையான க்வில்லிங் வேலைப்பாடுகள் இதனைத்
திறம்படச் செய்த படைப்பாளிகளுக்கு என் இனிய வாழ்த்துக்களும்
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் தோழி .

Radha rani said...

அனைத்து கை வினைகளும் பார்க்க கொள்ளை அழகு..

MANO நாஞ்சில் மனோ said...

ஏழாவது போட்டோவில் இருக்கும் மாலைகளை என் மொரோக்கோ தோழிகளுக்கு மிகவும் பிடிக்கும் !

அந்த குழந்தை அழகோ அழகு !

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான புகைப்படங்களும்
விளக்கங்களும் நேரடியாகப் பார்ப்பது போன்ற
உணர்வைத் தந்தன
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான புகைப்படங்களும்
விளக்கங்களும் நேரடியாகப் பார்ப்பது போன்ற
உணர்வைத் தந்தன
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கார்த்திக் சரவணன் said...

அழகான படங்களுடன் நேரில் சுற்றிக்காட்டிவிட்டீர்கள்.... குழந்தை அழகு....

பால கணேஷ் said...

அழகான தெளிவான போட்டோக்களுடன் உங்க கூடவே வந்து சுத்திப் பார்த்த உணர்வை ஏற்படுத்திட்டீங்க! படங்கள்ல நான் பார்த்த வரை எல்லாமே மகளிர் மயமாத்தான் தெரியுது. ஒருவேளை ஆண்களுக்கு அனுமதி இல்லாத ஏரியாவோ...? அப்படின்னா, அழகான இந்த பகிர்வு நேர்ல பாக்காத குறையைப் போக்கிடுச்சுங்கறதுதான் உண்மை!

Jaleela Kamal said...

மிக அருமை, நான் ஊருக்கு வந்திருந்த போது இதே போல் பள்ளியில் போட்டு இருந்தார்கள், நானும், என் தங்கையும் சேர்ந்து அங்கு ஸ்டால் போட்டோம்.
ஆனால் இங்கு தான் எப்படி யாரை அனுகுவது என்று தெரியாததால் முடியவில்லை. ஆனால் எங்களிடம் புர்காவாங்கும் பெண் அங்கு ஸ்டால் போட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்.

நல்ல வேலை படம் பிடித்துபோட்டீர்கள் அடுத்தவருடம் ஸ்டால் போட ஒரு ஐடியா கிடைத்தது. மிக்க நன்றி ஸாதிகா அக்கா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

மனோ சாமிநாதன் said...

சென்னையில் இருந்தால் இது ஒரு வசதி, நிறைய பொருட்காட்சிகளுக்கு செல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன, இல்லையா ஸாதிகா? புகைப்படங்கள் எல்லாமே அழகு, முக்கியமாக அந்த குட்டி பாப்பா!

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்