“சார்,கரண்ட் இல்லை சார்.”
“பார்த்துடலாம்.எந்த ஏரியா”
“என்னையா நினைச்சிக்கொண்டு இருக்கீங்க.இது என்ன சிட்டியா?இல்லை பட்டிதொட்டியா .இப்படி மணிக்கணக்கிலே கரண்ட் கட் இருக்கு?”
“கொஞ்சம் பொறுங்க சார் இன்னும் ஒரு மணி நேரத்திலே வந்துடும்”
“எப்போதான் சார் கரண்ட் வரும்”
“இதோ ஆஃப் அன் அவரில் வந்துடும்”
“சார் நான் மினிஸ்டர்........ செகரட்ரி பேசறேன் .ரெண்டு மணிநேரமா கரண்ட் இல்லை.”
“மினிஸ்டர் வீட்டிலேயே கரண்ட் இல்லை சார்.வந்துடும்.”
“சார்..இப்படி லோ வோல்டேஜ் கொடுத்து அவஸ்தை படுத்துவதற்கு மொத்தமா ஆஃப் பண்ணி போட்டுடுங்க”
“சரிபண்ணிடலாம்ங்க”
மின்சாரவாரியத்துக்கு வரும் போன் கால்களும்,அதற்கு அவர்கள் கொடுக்கும் பதில்களும்தாம் மேற்கண்டவை.
700 சதுர அடி வீட்டிற்கு 3 டன்னில் ஏசி வைத்தால் என்னவாகும் என்று மக்களை கேள்விகேட்கின்றனர்.
அடிக்கடி நாளிதழ்களில் அவரவர்கள் ஏரியாக்களில் மின் தடை பற்றியும்,லோ வோல்டேஜினால் உள்ள பிரச்சினைகளையும் வாசகர்கள் கடிதத்தில் எழுதி வருவது பிரசித்தம்.இப்பொழுது எங்கள் ஏரியாவிலும்.
தலைக்கு மேல் சுழலும் ஆமை வேகம்,நத்தை வேகத்தில் சுழலும் மின் விசிறி திடுமென ராட்சச வேகத்தில் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..என்று சப்தமாக சுழலும் பொழுது மின் விசிறி கழன்று தலையில் விழுந்து விடுமோ என்ற கிலி வருகின்றது.
பவர் பிளக்சுவேசனால் அணைந்து அணைந்து எரியும் ஏஸிக்களால் நாளிதழகளில் வந்த ஏஸி விபத்துக்கள் மனக்கண்ணில் வந்து தூக்கத்தை தொலைக்கும் நாட்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
டியூப் லைட் மின் மினிப்பூச்சி போல் மின்னிக்கொண்டுள்ளதே தவிர முழுதாக எரிந்து வெளிச்சம் தர ஸ்ட்ரைக் பண்ணுகின்றது.
ஓடிக்கொண்டு இருக்கும் பம்ப் செட் லோ வோல்டேஜினால் காயில் ,புகைந்து,எரிந்து புதிய பம்ப்செட் வாங்கி பொருத்தும் நிலை அனைவருக்கும் வந்து கொண்டுள்ளது.மின்சார வாரியம் புண்ணியத்தில் பம்ப்செட் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்டெபிலைசர் இருப்பதால் சில பல பொருட்கள் தப்பி வந்தாலும் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள பொருட்கள் கெட்டுப்போய் குப்பையில் கொட்டும் இல்லத்தரசிகள் வயிறெரிந்து போகின்றனர்.
ஒரு சிறிய கூட்டத்தை திரட்டிக்கொண்டு நேரிலேயே மின்சார வாரியத்திற்கு சென்றாலோ அலட்சியமான பதில்.
மக்கள் அதிகளவில் டாச்சர் கொடுத்தால் பெயருக்கு மின்சாரவாரியத்தில் இருந்து ஒரிரண்டு பேர் வந்து பார்த்து விட்டு ”சரியாகி விடும்”என்ற வார்த்தைகளில் பொய்தான் மிச்சம்.
இன்று சரியாகி விடும் நாளை சரியாகி விடும் என்று எதிர்பார்த்து ஏமாந்து மக்கள்தான் கேணையர்களாகிக்கொண்டுள்ளனர்.
மாநிலத்தலை நகருக்கே இந்த கதி என்றால் கடை நிலை கிராமங்களின் கதி....?
சென்ற ஆட்சி மீண்டும் வராததற்கு மின் தடையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் விழித்துக்கொள்ள வில்லையே?
வசதி உள்ளவர்கள் வீடுகளில் யூ பி எஸ் வைத்து மின்சாரம் இல்லாத சமயங்களில் உபயோகித்துக்கொள்ளவும்,ஸ்டெபிலைசர் வைத்து லோ வோல்டேஜை சமாளிக்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.யூ பி எஸ்,ஸ்டெபிலைசர்கள் எல்லா நேரத்திற்கும் அனைத்து மின்சாதனப்பொருட்களுக்கும் பொருந்தி வருமா என்று சொல்ல இயலாது.
இது ஒரு புறம் நடக்க மின்சார சேமிப்பு பேர்வழி என்று சில சாலைகள்,தெருக்களில் தெருவிளக்கைகூட அணைத்து விடுவதால் சமூகவிரோதிகளுக்கு கொண்டாட்டமாகிப்போய் விட்டது.
போகின்ற போக்கைப்பார்த்தால் இனி தாத்தா பாட்டி காலத்தில் இருந்ததைப்போன்று சாயங்காலம் ஆனால் ஹரிக்கோன் லைட்டை பளிச் என்று துடைத்து,கெரஸின் நிரப்பி தீப்பெட்டியுடன் தயாராகவேண்டும்.அது போல் பனை ஓலை விசிறிகளும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் போலும்.
ஜெய்ப்பூரை பின்க் சிட்டி என்ற அடைமொழியுடன் அழைப்பதைபோல் வெகு விரைவில் சென்னைக்கு டார்க் சிட்டி என்ற அடை மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெளிநாடுகளில் நொடிப்பொழுதேனும் மின் தடை இன்றி நிம்மதியாக வாழும் ஜீவன்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.
Tweet |