August 18, 2010

வலி


கருவறையில் நிறைந்திருக்கும்

சுமை குறைய

கலங்கி தவித்து அழுது அலறி

கத்தி கதறி மயங்கி துவண்டு

வயிற்றில் சுமந்ததற்காக

உடம்பின் அத்தனை அணுக்களிலும்

வலி சுமந்து

ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்

அத்தனை வேதனைகளையும்

ஒரு சேர அனுபவித்து

உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்

சில கணம் இழந்து

உயிர் போய் உயிர் வந்து

நாடி நரம்பு நெக்குருகி

குருதி எல்லாம் கொதித்துப்போய்

கண்கள் இரண்டும் கழன்று போய்

கருவிழிகள் நிலைத்துப்போய்

மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்

புனர் ஜென்மம் எடுத்தது போல்

புதிய உயிரை பிரசவித்தேன்

வருவோர்க்கெல்லாம் உவகையுடன்

அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி

இன்முகத்துடன் கூறி மகிழ்கின்றாள்

என் அன்னை "இது சுகபிரசவம்"என்று.