October 18, 2009

வெளி நாட்டு அலப்பரை


வெளிநாட்டு அலப்பரை

என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். யாரை வைச்சுடா.. இதையெல்லாம் கண்டுபுடிச்சேன்னு நீங்க கேட்டா.. "துபாயில் இருந்து குசும்பன்", "அமெரிக்காவில் இருந்து டேனியல்", "சிங்கபூரில் இருந்து பித்தன்" ன்னு இவங்களை வச்சிதான் கண்டுபுடிச்சேன்னு சொல்ல மாட்டனனனனே!!

இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

8

கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

8 குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

8 கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

8 சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

8 எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

8 "செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

8 சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

8 சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

8 வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

8 கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

நன்றி தமிழ்குடும்பம்.காம்

15 comments:

Unknown said...

ஹா..ஹா..ஹா..அலப்பரையை படித்து சிரித்து வயிறு வலித்து விட்டது

ஸாதிகா said...

வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் சரிதானே?

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நல்லவே சிரிச்சாச்சு,

Menaga Sathia said...

வெளிநாட்டு அலப்ப்ரை பதிவு போட்டு ரொம்ப சிரிக்க வெச்சுட்டீங்க சாதிகாக்கா!!

ஸாதிகா said...

'நன்றாக சிரிச்சாச்சு, என்ற வரிகள் எனக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டது.பின்னூட்டத்திற்கு நன்றி ஜலி.

ஸாதிகா said...

மேனகா,நலமா?மகள் எப்படி இருக்கின்றார்?என் வலைப்பூவை நுகர்ந்ததற்கு மிகவும் நன்றி.தொடர்ந்து பங்களியுங்கள்.

அன்புடன் மலிக்கா said...

நீங்க டி கே பக்கம் வருவதுண்டா

[டி கேன்னா தமிழ்குடும்பம்]

ஸாதிகா said...

ஓ..டி கே பக்கம் அவ்வப்பொழுது வந்து செல்வதுண்டு.உங்கள் பதிவுகளையும் தவறாமல் படித்து ரசிப்பதுண்டு மலிக்கா

ஸாதிகா said...
This comment has been removed by the author.
GEETHA ACHAL said...

நல்ல பதிவு

ஸாதிகா said...

முதல் வருகைக்கும்,முதல் பதிவிற்கும் மிக்க நன்றி கீதா ஆச்சல்

புகழன் said...

முதல் முதலாக உங்க ப்ளாக் படிக்கிறேன்.

ரெம்ப சுவாரஸ்யமாக உள்ளது.

உங்களுக்கு நல்லா எழுத (சாரி டைப்பிங்) வருது.

தொடர்ந்து எழுதுங்க

ஸாதிகா said...

புகழன் ,நன்றி !தொடர்ந்து எழுதுகிறேன்.நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரித்தேன் மனம்விட்டு.. நல்லாருக்கு ஸாதிகா

ஸாதிகா said...

சிரித்தீர்களா?கண்டிப்பாக இந்த அனுபவம் உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.:-)