November 19, 2010

அஞ்சறைப்பெட்டி - 4



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.

November 14, 2010

கலெக்டர் மாப்பிள்ளை

மினி சிறுகதை

"மாப்பிள்ளை உயரமும்,உயரத்துக்கேற்ற பருமனும் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கார்."

"உத்தியோகத்துக்கேற்ற உருவமும் பிளஸ்பாயிண்ட்தானே?"

"பார்க்கின்ற கலெக்டர் உத்தியோகத்தில் சின்ஸியாரிடீன்னா அவ்வளவு சின்ஸியாரிட்டீ."

"அடடா..பதவி இருக்கற இடத்திலே பண்பும் இருந்ததுன்னா இன்னும் சந்தோஷம்தான்"

"ரொம்பவெல்லாம் ஆசைப்படலே.ஒரு அம்பதாயிரம் கேஷா கொடுத்தால் போதும்"

"அதுக்கென்ன?பேஸா கொடுத்துடலாம்"

"ஸ்கூட்டி பெப் ஒன்று போதும்"

"என்னங்க இது..ஆக்சுவலா காரே கேட்கனும் நீங்க.ஆனால் ரொம்ப ஆசைப்படாதவரா இருக்கீங்க.நான் ஒரு அப்பாச்சியையே வாங்கித்தரச் சொல்லுறேன்."

"அது உங்கள் தாராள மனசை காட்டுது.அரைச்சவரனில் ஒரு மோதிரம் போதும்"

"சுண்டுவிரல் பருமனுக்கு செய்ன் தரலாம் என்றிருக்கிறார்.மூத்த மாப்பிள்ளைக்கும் அப்படித்தான் செய்தார்.இருந்தாலும் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சார்"

"சீர்வரிசை தட்டெல்லாம் அதிகமா தந்து தடபுடல் படுத்த வேண்டாம்"

"நீங்க வேற..இதெல்லாம் தடபுடல் படுத்தினால் தான் சுற்றத்தார் அவரை மதிப்பார்ன்னு சொல்லிட்டு இருக்கார்"

"கல்யாணம் எல்லாம் ரொம்ப கிராண்டா நடத்தனும்ன்னு இல்லை..ராத்திரி ரிஷப்ஷன்,காலையிலே முகூர்த்தம்..சின்னதா கல்யாணமண்டபம் பிடிச்சால் போதும்"

"என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..பொண்ணோட தோப்பனார் மேயர் ராமனாதன் மண்டபத்தில் வைத்துத்தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டு இருக்காரே.அவருக்கும் எக்கசக்க ஆட்கள்.உங்கள் பையன் உத்தியோகத்திற்குத்தகுந்த மாதிரி உங்கள் பக்கம் இருந்தும் ஆட்கள் நிறைய வருவார்கள்.."

"அப்படீங்கறீங்க"

"பையன் எந்த மாவட்டதுலே கலெக்டரா இருக்காருங்க"

"செல் போன் கம்பெனியிலே காஞ்சிபுரமாவட்டதிலே பில் கலெக்டரா இருக்காரு"



November 8, 2010

என் தந்தை

இங்கே கிளிக் செய்து பாருங்கள்



சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்

விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா?

எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்

November 4, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!




November 1, 2010

சென்னை மால்கள்

கடந்த நூற்றாண்டில் சிறிய அளவு உருவாக்கப்பட்ட சென்னை நகரின் மத்தியில் அமையப்பட்ட ஸ்பென்சர் பிளாசா விருட்சமாக வளர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக கொடி கட்டி பறந்தது.

அதனைத்தொடர்ந்து பிரின்ஸி பிளாஸா,அல்சாமால் ,சிசன் காம்ப்ளக்ஸ் போன்றவை எக்மோரில் அடுத்தடுத்து உதயமாகியது.1990 களில் இளசுகளின் சரணாலயமாக அல்சா மால் விளங்கியது என்றால் மிகை அல்ல.நாகரீகமே அங்கிருந்துதான்ஆரம்பம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.அல்சா மால் செல்லாத காலேஜ் கெய்ஸ் இல்லவே இல்லை எனும் அளவுக்கு இளம் பருவத்தினர் ஒரு காலம் இம்மாலில் ஆட்சி புரிந்தனர்.அதே பகுதியில் பவுண்டன் பிளாசா தோன்றியது.அன்றைய நாகரீக யுகத்தின் ஆடை,அணிகலண்கள்,அழகை மெருகேற்றும் அலங்காரச்சாமான்கள்,வாசனைத்திரவியங்கள் என்று கொட்டி கிடப்பதை கண்டு இளசுகள் மட்டுமல்லாமல்,பெரியவர்களும் படை எடுத்து சென்றனர்.

இதே போல் மவுண்ட் ரோடில் பார்ஸன் காம்ப்ளக்ஸ்,நுங்கம்பாக்கத்தில் இஸ்பஹானி செண்டர்,சேத்துப்பட்டில் ஷாப்பர் ஸ்டாப்,புரசைவாக்கம் அபிராமி மால்,வட சென்னையில் பத்னி பிளாசா,தி.நகர் -- பாண்டிபஜாரில் சிறிதும் பெரிதுமாக மாயா பிளாசா,பாத்திமா பிளாசா,செல்லாமால் ,காசி ஆர்கேட்,ஜி என் செட்டி ரோடில் அங்கூர் பிளாஷா ,வடபழனியில் ராஹத் பிளாஸா போன்றவை ஆங்காங்கே உதயமாகியது.


இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மைலாப்பூரில் உதயமான சிட்டி செண்டர் சென்னைக்கு ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.இளையவர்கள் மட்டு மின்றி பெரியவர்கள்,முதியவர்கள் கூட வீல் சேரில் வந்து ஆவலுடன் சுற்றி ,ஷாப்பிங் செய்து அந்த ஷாப்பிங் மாலையே கலகலப்பாகி விட்டனர்.ஹைடெக் திரை அரங்குகள்,சர்வதேச தரத்தில் உணவகங்கள்,சூப்பர்மார்க்கெட்டுகள்,பிராண்டட் ஷாப்கள் என களைகட்டியது.

அதனைத்தொடர்ந்து அமிஞ்சிகரையில் அம்பா ஸ்கை வாக் உதயமாகி அந்த சாலையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
சமீபமாக ராயப்பேட்டையில் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிருமண்டமான அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உதயமாகி சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.

புதிய புதிய மால்கள் உதிக்க ,உதிக்க பழைய மால்கள் களை இழந்து வருவது வருந்ததக்க உண்மை.நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு மாலில் மற்றுமொரு புதிய மால் உருவான காரணத்தினால் வெறும் 20000 - 30000 நபர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுத்தி விட்டது.

வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க என்னென்ன திட்டங்கள்,சலுகைகள்,குலுக்கல்கள்,பரிசுகள் வழங்க முடியுமோ அத்தனையும் வழங்கி பிரயத்தனப்பட்டு வருகின்றதுதான் இன்றைய மால்களின் நிலை

பல வணிகவளாகங்களில் சூப்பர்மார்க்கெட்டுகள் களை இழந்து போய்க்கொண்டுள்ளது.வெளி நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்,இங்குள்ளதை விட அதிகளவு எண்ணிக்கையில் மால்கள் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தாலும் அங்கு எப்பொழுதும் ஈ மொய்ப்பதைப் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை காணலாம்.ஆனால் மக்கள் தொகை பன்மடங்கு அதிகளவு உள்ள சென்னையில் ஏன் இப்படி என்று மனம் ஒப்பிட்டு,அலசிப்பார்க்கும் பொழுது புரிகின்றது ஒரு நிஜம்.
100 கிராம் சர்க்கரையும்,25 கிராம் தேயிலையும் அன்றாடம் வாங்கி டீ போட்டு காலையில் குடிப்பவர்கள் அதிகம்.பாக்கெட் ஷாம்பூ வாங்கி குளித்து விட்டு காலை உணவுக்கு 1/4 கிலோ ரவையையும் மதிய உணவுக்கு 1/2 கிலோ அரிசியும் 100 கிராம் பருப்பும்,50 மில்லி சமையல் எண்ணெயும் வாங்கி செல்பவர்கள் அதிகம்.கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இங்கே இவர்கள் 100 கிராம் சர்க்கரையும் ,50 கிராம் தேயிலையும் சூப்பர் மார்க்கெட் சென்றா வாங்க முடியும்?அண்ணாச்சி கடைகளை நாடித்தான் செல்லுவார்கள்.

அதே சமயம் இதே அண்ணாச்சி கடைகளுக்கும்,சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விலையில் நிறைய வித்தியாசம் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட பெரிய மால்களில் சென்று ஷாப்பிங் செய்யப்பயப்படுகின்றனர் என்பது என்னவோ உண்மை.

இந்த ரீதியில் சென்றால் ,பிருமாண்டமாக பெரிய பெரிய மெகா மால்கள் உருவெடுத்துக்கொண்டிருந்தால் பழைய மால்கள் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.
வரவிருக்கும் பெரிய மால்கள் பற்றி அறிய இங்கே பாருங்கள்