October 3, 2009

பனி விழும் மலர் வனம்


பனி விழும் மலர் வனம்
**********************************
என் பையன் பிளஸ் டூ படிக்கும் பொழுதே ஜாயிண்ட் எண்டரன்ஸ் எக்ஸாம்,ஏ ஐ ஈ ஈ ஈ.பிட்ஸ்பிலானி,வி ஐ டி இன்னும் தனியார் பல்கலைக்கழங்களில் எல்லாம் எண்டரண்ஸ் எக்ஸாம் எழுத தயாராகி விட்டார்.பொது தேர்வு முடிந்ததும் வரிசையாக அத்தனைஎண்ட்ரண்ஸ் எக்ஸாம்கள் அனைத்தையும் எழுதினார். பொதுதேர்வு முடிவு வெளியாகியது.

தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கு இணையத்தில் பார்த்து விட்டு 11 மணிக்கெல்லாம் பிரபலமான ஒரு கல்லூரி வளாகத்தில் நின்றிருந்தேன்.அதில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களும் வேறு பணியில் எதுவும் நாட்டமில்லாமல் சிட்டியில் உள்ள அநேக கல்லூரிகளின் நீள,அகலத்தையும் அளப்பதுதான் தலையாய பணி என்பது போல் அப்பணியை செவ்வனே செய்தேன்.

கல்லூரிகளின் தரம்,எத்தனாவது இடத்தில் உள்ளது,கேம்பஸ் எப்படி,லேப் வசதி எப்படி.,மெஸ் வசதி,பஸ் வசதி,டீச்சிங் எப்படி இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து இறுதியில் இந்த மலர் வனத்தை தேர்ந்தெடுத்தேன்.

இந்த கல்லூரியில் சேர்த்துள்ளேன் மகனை என்று தெரிந்து ஒருவர் "ஐயோ அந்த காலேஜா?ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே"என்றுபயமுறுத்தினார்.இன்னொருவரோ "என் நாத்தனார் பையன் பாதியிலேயே ஓடி வந்து விட்டான்"என்று அதிர்ச்சியைக்கொடுத்தார்.கலக்கத்தோடு பொழுதை ஓட்டினேன்.என் மகனோ "பயப்படாதீர்கள்மா.நான் சமாளித்துக் கொள்வேன்.அங்கு படித்து எத்தனை ஆயிரம் பேர் வெளியே வந்து இருக்கின்றார்கள்"என்று எனக்கு தைரியம் ஊட்டினார்.

கல்லூரி திறக்கும் நாளும் வந்தது.என் மகன் என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தார்.நான் தான் இரவு முழுதும் தூங்கவே இல்லை.பெற்றோர்களும் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்பதால ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து குளித்து தொழுது,பிரார்த்தித்து,டென்ஷன் ஆகி..ஒரு வழியாக கல்லூரி சென்று விட்டோம்.அதிகாலை காற்று சில்லென முகத்தில் வீச தலையை கார் ஜன்னலில் வைத்தபடி,"லாயிலாஹ இல்லல்லாஹ் சுப்ஹானக்க இன்னி குந்தும் மினல் ழாலிமீன்" என்று ஓதியவளாக கல்லூரியினுள் நுழைந்தோம்.

கல்லூரியின் சேர்மன் அழகான தன் உரையை கம்பீரமாக ஆரம்பித்தார்.எங்களை நம்பி வந்த உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நாங்கள் கண்டிப்பாக செயல் படுவோம்.என்று பேச ஆரம்பிக்கையில் உண்ர்ச்சி பூர்வமாக பல தாய் மார்களின் கண்களும் கலங்கியதை என்னால் உணர முடிந்தது.மாணவர்களின் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் விதமாக அவரின் நேரிய அறிவுறைகள் அனைவரையும் நெகிழ வைத்து.

ஒரு மாணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும்,என்று பணிவையும் பண்பையும் அழகாகான் முறையில் தெளிவாக்கினார்.

நெகிழ்வான நெஞ்சங்களுடன் அந்த ஹாலை விட்டு அனைத்து பெற்றோர்களும் வெளியேறியபொழுது அத்தனை நெஞ்சங்களின் வெளிப்பாடும் புன்னகை என்ற பூவால் மலர்ந்திருந்தது.சரியான ஒரு கலாசாலையை தேர்ந்தெடுத்து மகனை அனுப்பி விட்டோம் என்ற நிறைவு அனைத்து பெற்றோர் முகத்திலும் தெரிந்தது.கலங்கிய மனதுடன் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த நாங்கள்,நிறைந்த மனதுடன் திரும்பி வந்தோம்.

ஜீன்ஸ் கூடாது,லெதர் சூ தவிர எதுவும் அணியக்கூடாது,சர்ட்டை தவிர வேற் எதும் அணியக்கூடாது.அதிலும் பிளேக்&பிளேக் உடைகளுக்கு தடா,செல் போன்,ஐபாட்,கேமரா, சிடி,இரண்டு பாக்கட் வைத்த சட்டைகளுக்கு தடா, சுத்தமாக சவரம் செய்த முகத்துடன் வர வேண்டும்,என்று ஒவ்வொன்றுக்கும் நுணுக்கமான கட்டுப்பாடுகள்.

கேண்டீன் கலாட்டாக்கள்,கும்பல்,கும்பலாக நின்று காலாய்ப்பதுகல்லூரியின் முகப்பில் கூட்டம் ,கூட்டமாக நின்று கும்மாளமிடுவது,ராக்கிங்,கேலி இப்படி எதனையுமே நினைத்துப்பார்க்கவே முடியாது.இந்த கட்டுக்கோப்பல் ஒவ்வொரு மாணவ,மாணவியரும் செவ்வன புடம் போடப்படுகின்றனர்.கல்லூரி நிர்வாகத்தினரால் செம்மையாக பின்பற்றப்படும் இந்த கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் அனைத்து மாணவ மாணவியர்களையும் வைரமாக ஜொலிக்க செய்யும்.இங்கு பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களும் நிம்மதியாக,பிள்ளையை நேரிய வழியில் செல்லும் பாதையை காட்டி விட்டோம் என்ற மன நிறைவு பெறுவது திண்ணம்

அதிகாலை காலேஜ் சென்றாலும் பிள்ளை பட்டினியாக செல்கின்றானே என்று கவலைப்படத்தேவை இல்லை.காலை டிபனுடன் காஃபி,உச்சி வேளையில் ஸ்னாக்ஸுடன் காஃபி,மதியம் பலமான லஞ்ச்,வீடு திரும்பும் பொழுது சூடான காஃபி இப்படி நிதமும் விருந்தோம்பல்..மாணவர்களை படிப்பதற்கு மிகவுமே உற்சாகப்படுத்துகின்றது.

வகுப்பறையின் வெளியில் நின்று பார்த்தீர்களானால் மணவர்களின் சப்தம் என்பதையே கேட்க முடியாது.இது வகுப்பறையா,தியானக்கூடமா என்று ஆச்சர்யம் ஏற்ப்டுகின்றது.கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தாலே பசுமையும்,சுத்தமும்,அமைதியும் அங்கே இருந்து அக்ல யாருக்குமே மனம் வராது.

படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு வகுப்பு முடிந்தது ஸ்பெஷல் கிளாஸ்,அவர்களுக்கு தனியாக பஸ் வசதி,ஒரு மாணவன் அவன் இறங்கும் நிறுத்தத்தை விட்டு முந்திய நிறுத்தத்தில் இறங்கினாலே பஸ் ஓட்டுனார் அனுமதிப்பதில்லை.அந்தளவு பஸ் ஓட்டுனர்களுக்கு டிரைனிங் கொடுத்துள்ளார்கள்.ஆறு மணிக்கு நிறுதததுக்கு வரும் பஸ் என்றால் சரியாக ஆறு மணிக்கு வந்து விடுகின்றது.இந்த பங்க்சுவாலிட்டிக்கு சிட்டி டிராஃபிக்கும் ஒத்துழைப்பு கொடுக்கின்றதா?என வியக்கதோன்றுகின்றது.

ஒரு மாணவன் அன்று கல்லூரி வரவில்லையானால் எவரெல்லாம் வரவில்லையோ அத்தனை மாணவர்களின் வீடுகளுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து விட்டுத்தான் டீச்சர் வீடு திரும்ப வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

கட்டுப்பாடுகளும் ,கட்டுக்கோப்புகளும் எத்தனை இனிமையானவை என்று புரிந்து கொண்ட பொழுது மனமெலாம் மகிழ்ச்சியாக உள்ளது.ஒரு ஞாயிறு வந்தால் கூட எப்போதடா திங்கள் பிறக்கும் காலேஜ் போகலாம் என்று துடிக்கும் நிலைக்கு என் மகன் ஆட்படுத்தப்பட்டு விட்டார்.

நேற்று ஒருவர் போன் பேசும் பொழுது மகனை எந்த கல்லூரியில் சேர்த்து இருக்கின்றீர்கள் என்றார்.பெயரை சொன்னதுமே "சபாஷ்,புடம் போட்டு திருப்பிக்கொடுத்து விடுவார்கள்.பட்டைத்தீட்டிய வைரமாக உங்கள் மகன் வருவார்"
என்று கூறியது என் மன ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

இதே போல் ஸ்கூல் அமைந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.இதோ இன்னும் இரண்டு வருடத்தில் கல்லூரி செல்லப்பொகும் என் இரண்டாவது மகனையும் இதே கல்லூரிதான் என்று தீர்மானம் பண்ணி விட்டேன் மட்டுமல்லாம,ங்கா,ங்கா என்று கூறும் என் மகள் வயிற்றுப்பேரனைக்கூட இந்த கல்லூரியில்தான் சேர்க்கவேண்டும் என்ற நோக்கமு ம் ஏற்பட்டு விட்டது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்

அந்த நாள் விரைவில் வரும்,எனக்கு மட்டுமல்ல இந்த கலாசாலையில் பயிலும் எல்லா மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கும் என்றால் அது மிகை ஆகாது.


5 comments:

Jaleela Kamal said...

அருமை அன்று நடந்ததை அழகாக எழுதி இருக்கீங்க இந்த விஷியத்தில் நாம் இருவரும் ஒரே படகில் போய் கொண்டு இருக்கிறோம்,

நான் அந்த நாளை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

ஸ்வீட் said...

உண்மைதான் ஜலீலா.விரைவில் அந்த நாள் உங்களுக்கு வரும்.
ஸாதிகா

suvaiyaana suvai said...

hai akka athu entha collegennu sollungka engkaLukkum pinnaal uthaviyaa irukkum
http://susricreations.blogspot.com

ஸாதிகா said...

சுஸ்ரீ தங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.தலைப்பைப்பார்த்தாலே தெரியவில்லையா?பிரபல பொறியியல் கல்லூரி,அழகான மலர் வனம்.உங்கள் பிளாக்கையும் பார்த்தேன்.செமத்தியாக புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள்.வர்ரேன் அப்புறமா.

ஸாதிகா said...

சுஸ்ரீ தங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி.தலைப்பைப்பார்த்தாலே தெரியவில்லையா?பிரபல பொறியியல் கல்லூரி,அழகான மலர் வனம்.உங்கள் பிளாக்கையும் பார்த்தேன்.செமத்தியாக புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள்.வர்ரேன் அப்புறமா.