November 4, 2011

பெயர் புராணம்



1.செங்கல்சூளை அதிபர் - செங்கல்வராயன்.

2.பட்டுத்தறிகாரரின் மனைவி - பட்டம்மாள்

3.ராப்பிச்சைக்காரன் - ஆண்டியப்பன்

4.ஆண்கள் பியூட்டிபார்லர் முதலாளி - அழகேசன்

5.பக்கத்து வீட்டில் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுபவர் - வீரலக்‌ஷ்மி

6.முதிர்கன்னி - கண்ணியம்மாள்

7.வக்கீல் - சட்டநாதன்

8.கண்மருத்துவர் - கண்ணதாசன்

9.கேஷியர் - மணிவண்ணன்

10பால்கறப்பவர்- பாலுசாமி

11.பொதுமருத்துவர் - வைத்தியநாதன்

12.பீடியாட்ரிஷியன் - குழந்தைசாமி

13.கார்டியாலஜி - இருதயராஜ்

14.பிஸ்கட் கடை முதலாளி - மேரி

15.பாலிகிளினிக் கம்பவுண்டர் - கபாலி

16.நகை ஆச்சாரி - தங்கமணி

17.சலூன்கடைக்காரர் - பொன்முடி

18.திருமணதகவல் மையம் நடத்துபவர் - பொண்ணுசாமி

19.பழக்கடைக்காரர் - கனிவர்மன்

20.ஸ்வீட்கடைக்காரர் - பாதுஷா

21.டெண்டிஸ்ட் - பல்ராம்

22.மலை ஏறுபவர் - அண்ணாமலை

23.அனாதை இல்லம் நடத்துபவர் - அடைக்கலநாதன்

24.தமிழாசியர் - இலக்கியன்

25.ஓவியன் - கலைவாணன்

26.முடிதிருத்துபவர் - சிங்காரவேலன்

27.பொக்கே விற்பவர் - மலர்வண்ணன்

28.வாட்ச்கடைக்காரர் - மணியன்

29.வானிலை அறிவிப்பாளர் - மேகநாதன்

30.சைக்கியாரிஸ்ட் - அறிவரசன்

31.பாகன் - ஆனைமுத்து

32.சந்தேகப்படுபவர் - ஐயம்பெருமாள்

33.கார் மெக்கானிக் - கார்மேகம்

34.பிட் அடித்து பாஸ்பண்ணியவர் - தொல்காப்பியன்

35.லாயர் - சட்டநாதன்

36.டாஸ்மாக் கடைக்காரர் - மதுசூதன்

37.பெயிண்டர் - பஞ்சவர்ணம்

38.பூக்காரி - தங்கபுஷ்பம்

39.லாண்ட்ரிக்கடைக்காரர் - வெள்ளைச்சாமி

40.டான்ஸ்மாஸ்டர் - ஆடலரசு

41.பாட்டுவாத்தியார் - சிங்காரம்

42.டிரைவர் - மயில்வாகனம்

43.போஸ்ட்மேன் - அஞ்சல் நாதன்

44.நிதியமைச்சர் - மணிவண்ணன்

45.எலக்ட்ரீஷியன் - ஞான ஒளி

46.டெண்டிஸ்ட் - பல்ராம்

47.மீன்வியாபாரி - அமீன்

48.ஸ்வீட் தயாரிப்பாளர்- இன்பநாதன்

49.பால்வியாபாரி - கோபால்சாமி

50.டெய்லர் - தையல்நாயகி

51.பாம்பாட்டி ‍‍‍- நாகமணி

52.சந்தனமரம் கடத்தல்காரர் ‍ - சந்தானம்

53.ஒல்லியான ஆசாமி ‍ - பிச்சுமணி

54.ஆசிரியர் ‍ ‍ - குருசாமி




டிஸ்கி:இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல.வெறும் தமாஷ் மட்டிலுமே.குறிப்பிட்டு இருக்கும் பெயர் உங்களுடையதாக இருப்பின் மன்னிக்க வேண்டுகின்றேன்!

பின்னூட்டுபவர்கள் தங்களுக்கு தெரிந்த நாமகாரணங்களை பின்னூட்டினால் அவரவர்களது நாமத்துடன் இணைத்துக்கொள்கின்றேன்:-)

நிறைய பெயர்கள் அறிந்தவர்கள் இதனை தொடர்பதிவாகவும் எழுதி அசத்துங்கள்!

அழகான பெண் - எழிலரசி

பணக்காரப் பெண் - செல்வநாயகி

கருப்பான பெண் - கருத்தம்மா

தொப்பை உள்ள ஆண் - கணேஷ்

உபயம் - சகோ கணேஷ்


முத்து வியாபாரி - முத்தரசு

கோயிலில் வேலைசெய்பவர் -கோயில் பிள்ளை

திருமணதகவல் மையம் நடத்துபவர் -கல்யாண சுந்தரம்

லைப்ரரியன் -களஞ்சியம்

உபயம் -ஏஞ்சலின்


குண்டாயிருப்பவர் - நோஞ்சாம்பிள்ளை

நோயாளி- ஆரோக்கியசாமி

கண் தெரியாதவர் - கண்ணப்பன்

உபயம் - விச்சு


பூ விற்ப‌வ‌ர் - தாமரை

நாட்டியமாடுபவர் - நடன சபாபதி

உபயம் - மனோ அக்கா



தேனரசு - தேன் விற்பவர்

நடராஜன் - நடனமாடுபவர்

தர்மராஜ் - தானதர்மம் செய்பவர்

நாகராஜ் - பாம்பாட்டி

சீனிவாசன் - சீனி வியாபாரி

பூபதி - பூக்கடைக்காரர்

பசுபதி - பால்காரர்

ஸ்ரீகாந்த் - காந்தவியாபாரி

சங்கீதா - பாடகி

வைரமுத்து -வைரவியாபாரி

செங்கலவராயன் - செங்கல் வியாபாரி

மைக்கேல் - சவுண்ட் பார்ட்டி

ஆகாயராஜ் - விமானி

கரீம் பாய் - கறிக்கடைகாரர்

சுரங்கன் - சுரங்க தொழிலாளி

வெள்ளையம்மாள் - சலவைத் தொழிலாளி

வெள்ளைச்சாமி - வெள்ளை அடிப்பவர்

பேச்சியம்மாள் - வாயாடி

உபயம்:தோழி - ஆசியாஉமர்

70 comments:

K.s.s.Rajh said...

அட இது நல்லாயிருக்கே

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் நிறைய இருக்குங்க..

அப்படியோ தொடர் பதிவா மாத்திடுங்க..

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..

ஸாதிகா said...

வாங்க புதுகைத்தென்றல்.ஸ்மைலிக்கு நன்றி

ஸாதிகா said...

அட இது நல்லாயிருக்கே//ராஜ்,ரொம்ப மகிழ்ச்சி.நன்றி!

ஸாதிகா said...

அப்படியோ தொடர் பதிவா மாத்திடுங்க..
//மாத்திட்டேன் கவிதை வீதி... // சௌந்தர் .உங்களை இப்பின்னூட்டம் வழியாக தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.கண்டிப்பாக எழுதுங்கள்.சுவாரஸ்யமாக படிக்க காத்திருக்கின்றோம்.கருத்துக்கு நன்றி!

முற்றும் அறிந்த அதிரா said...

karrrrrrrrrrrrrrrrrrrrr:)))) vadai pooch......:)))

பால கணேஷ் said...

அழகான பெண் - எழிலரசி, பணக்காரப் பெண் - செல்வநாயகி, கருப்பான பெண் - கருத்தம்மா, தொப்பை உள்ள ஆண் - கணேஷ், சாதிக்க விரும்புபவள் - சாதிகா... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அழகாக ஒரு தொடர்பதிவுக்கு வித்திட்ட தங்கைக்கு பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

கணேஷ்ண்ணா...நீங்கள் கொடுத்த பெயர்களை இணைத்து விட்டேன்.

சாதிக்க விரும்புபவள் - சாதிகா.////அடடா..இவ்வரிகளே பெரிய கூஜா நிறைய பூஸ்ட் குடித்த தெம்பு வருகின்றதே.இன்னும் நான் எழுதுவதற்கு இப்படி பட்ட பின்னூட்டங்கள் எனக்கு என்றும் பக்கபலமாக இருக்கும்.மிக்க சந்தோஷம்,நன்றி!

ஸாதிகா said...

என்ன அதீஸ் பற்களை கடித்துக்கொண்டு போனவர் வரவே இல்லை?இன்னும் கோபம் தீரலியா?

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை..

:))

எனக்குத் தெரிந்த ஒருவரின் பெயர் தன்மானம்
இன்னொருவர் பெயர் சமத்துவம்

ஸாதிகா said...

எனக்குத் தெரிந்த ஒருவரின் பெயர் தன்மானம்
இன்னொருவர் பெயர் சமத்துவம்//பெயரே வித்தியாசமாக உள்ளது.காரணியுடன் சொல்லுங்கள் முனைவர் அவர்களே!கருத்துக்கு மிக்க நன்றி!

Asiya Omar said...

வெரி இண்ட்ரெஸ்டிங்.நானும் யோசித்து விட்டு வருகிறேன்,
வெள்ளிக்கிழமையாதலால் பிஸி தோழி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெயர்கள் யாவும் பொருத்தமாகவே உள்ளன.

இதுபோல தமாஷாகப் பதிவிட்டு

ஸாதிப்பதாலேயே ”ஸாதிகா” வோ?

அன்புடன் vgk

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா...அப்போ பூஸ் விரும்பி பூஸம்மாவோ?:))... ஒவ்வொன்றும் சிரிக்க வைக்குது நல்ல முயற்சி.

அப்போ படிக்க நேரமிருக்கவிலை, அதனால் கர்ர்ர்ர்ர்ர் மட்டும் சொல்லிட்டு ஓடிட்டேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

29.வானிலை அறிவிப்பாளர் - கார்மேகம்



33.கார் மெக்கானிக் - கார்மேகம்

இரு பெயர் திரும்ப வந்திட்டுது, ஒன்றை மாத்துங்க:))

முற்றும் அறிந்த அதிரா said...

என் கிட்னிக்கு இப்படி எதுவுமே வருகுதில்லை, இப்போதான் இவையெல்லாம் அறிகிறேன்... ரொம்பவும் இன்ரஸ்ரா இருக்க்கு படிக்க:).

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமாக யோசித்து அருமையான பதிவைத் தந்தமைக்கு
வாழ்த்துக்கள்

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வித்தியாசமான பகிர்வு.நானும் யோசிச்சு சொல்றேன்.


//சாதிக்க விரும்புபவள் - சாதிகா.////
அடடா..இவ்வரிகளே பெரிய கூஜா நிறைய பூஸ்ட் குடித்த தெம்பு வருகின்றதே.//

பூஸ்ட் ஓவரா ஆயிடாமே

Angel said...

என் மூளைக்கு எதுவுமே இந்த மாதிரி உதிக்கல .வாழ்த்துக்கள் .ரசித்தேன் சிரித்தேன் .
முத்து வியாபாரி - முத்தரசு
கோயிலில் வேலைசெய்பவர் -கோயில் பிள்ளை
திருமணதகவல் மையம் நடத்துபவர் -கல்யாண சுந்தரம்
லைப்ரரியன் -களஞ்சியம்

MANO நாஞ்சில் மனோ said...

நான் எங்கயாவது ஒரு மலைக்கு ஓடிப்போயி கீழே குதிக்கப்போறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி இதுதான் புதிய சிந்தனை என்பது ஹே ஹே ஹே ஹே என்னாமா ரோசிச்சிருக்காங்க அவ்வ்வ்வ்வ்...

VANJOOR said...

அம்மா ஸாதிகா ,

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்)

எத்தனையோ புராணங்களை படித்த எனக்கு இந்த புராணம் அரிதிலும் அரிது.

வாஞ்ஜூர் ‍ - ??.

****

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

ஆமினா said...

அட!

விச்சு said...

குண்டாயிருப்பவர் பெயர் நோஞ்சாம்பிள்ளை, நோயாளியா இருப்பவர் பெயர் ஆரோக்கியசாமி, கண் தெரியாதவர் கண்ணப்பன் - இப்படியும் பெயர் அமைவதுண்டு. நல்லாயிருக்கு உங்க கலெக்சன்.

Menaga Sathia said...

அட!! எப்படிக்கா இப்படிலாம் யோசிக்கீறீங்க,அசத்துங்க...

MyKitchen Flavors-BonAppetit!. said...

Oruvarin peyaril ivlo arthama?.Thanks for sharing this unique post Shadiqah Akka.Luvly.

ஸாதிகா said...

மிக்க நன்றி தோழி ஆசியா!யோசித்து நீங்களும் பெயர் புராணம் பாடுங்க

ஸாதிகா said...

அட..இன்னிக்கு ஒரே பாராட்டுமழையிலேயே நனைகிறேனே!கருத்துக்கும்,ஊக்கவரிகளுக்கும் நன்றி வி கே ஜி சார்

ஸாதிகா said...

நல்ல சிரித்தீங்களா பூஸம்மா?ரொம்ப மகிழ்ச்சி

ஸாதிகா said...

athira said...
29.வானிலை அறிவிப்பாளர் - கார்மேகம்



33.கார் மெக்கானிக் - கார்மேகம்

இரு பெயர் திரும்ப வந்திட்டுது, ஒன்றை மாத்துங்க:))////மாத்திட்டேன் அதீஸ்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.நன்றாக சிரித்தீர்களா?வெரி குட்!

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி!//பூஸ்ட் ஓவரா ஆயிடாமே//அதில் எல்லாம் கணக்கா இருப்போம்ல....

ஸாதிகா said...

//என் மூளைக்கு எதுவுமே இந்த மாதிரி உதிக்கல //அப்படீன்னு சொல்லிவிட்டு நீங்களும் புராணம் பாடிவிட்டீர்கள் ஏஞ்சலின்!கருத்துக்கு நன்றி.இணைத்துவிட்டேன்.

ஸாதிகா said...

நான் எங்கயாவது ஒரு மலைக்கு ஓடிப்போயி கீழே குதிக்கப்போறேன்.///

ஏன் மனோ ஏன்??//

ஹே ஹே என்னாமா ரோசிச்சிருக்காங்க அவ்வ்வ்வ்வ்.//

ஆமாங்க..நிறையவே யோசித்தேன்.கருத்துக்கு நன்டறி!/

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் சகோ வாஞ்சூர் அவர்களே!தங்கள் முதல் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

ஸாதிகா said...

நன்றி ஆமினா

ஸாதிகா said...

உங்கள் கலெக்ஷனும் நன்றாக உள்ளது விச்சு.என் பதிவில் உங்கள் கலெக்க்ஷனை இணைத்து விட்டேன்.நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி மேனகா

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppetit!. மிக்க நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அட அட... ரொம்ப வித்தியாசமா இருக்கு. நைஸ் ஸாதிகாக்கா.

குறையொன்றுமில்லை. said...

எப்படில்லாம் யோசிக்கரீங்கப்பா ஆமா தங்கமணி வ ந்துட்டாங்க, ரங்கமணி எங்க போனாங்க?

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான பதிவு ஸாதிகா! பின்னூட்டம் இடுபவர்களையெல்லாம் சிறிது யோசிக்க வைத்து விட்டீர்கள்!

என் யோசனையில் தோன்றியவை:

பூ விற்ப‌வ‌ர்: தாமரை
நாட்டியமாடுபவர்: நடன சபாபதி

ஸாதிகா said...

நைஸ் ஸாதிகாக்கா.//எங்கள் வீட்டு வாண்டு அவனுக்கு பிடித்துப்போன காரியம்,பொருள் எதுவாகினும் முகமெல்லாம் சிரிப்பாய் ,கட்டைவிரல் நடுவிரல் நுனி இரண்டினையும் சேர்த்து வைத்து மற்ற மூன்று கைவிரல்களையும் உயரே தூக்கி “நைஸ்..நைஸ்..”என்பான்.இப்பொழுது நீங்கள் நைஸ் எனறதும் எனக்கு வாண்டுவின் குறும்பு ஞாபகத்திற்கு வந்து விட்டது.கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

எப்படில்லாம் யோசிக்கரீங்கப்பா ஆமா தங்கமணி வ ந்துட்டாங்க, ரங்கமணி எங்க போனாங்க?//வாங்க லக்‌ஷ்மிம்மா,ரங்கமணிக்கு நீங்கதான் ஒரு ஏற்பாட்டை பண்ணுங்களேன்:-)

கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி மனோ அக்கா!

பின்னூட்டம் இடுபவர்களையெல்லாம் சிறிது யோசிக்க வைத்து விட்டீர்கள்!//இதுதான் வேணும்..மிக்க மகிழ்ச்சியக்கா!உங்களுடையதையும் இணைத்து விட்டேன்.

Asiya Omar said...

தேனரசு - தேன் விற்பவர்
நடராஜன் - நடனமாடுபவர்
தர்மராஜ் - தானதர்மம் செய்பவர்
நாகராஜ் - பாம்பாட்டி
சீனிவாசன் - சீனி வியாபாரி
பூபதி - பூக்கடைக்காரர்
பசுபதி - பால்காரர்
ஸ்ரீகாந்த் - காந்தவியாபாரி
சங்கீதா - பாடகி
வைரமுத்து -வைரவியாபாரி
செங்கலவராயன் - செங்கல் வியாபாரி

மீண்டும் வருவேன்..

ஸாதிகா said...

ஆர்வத்திற்கு மிக்க நன்றி தோழி

Jaleela Kamal said...

எப்படிதான் இப்படி எல்லாம் யோசனை வருதோ.
பதிவுக்கு பதிவு வித்தியாசம் அதான் ஸாதிகா அக்கா

அன்புடன் மலிக்கா said...

யக்கோவ் பெயர் புராணம் சூப்பர்.
புதுசு புதுசா புரளிகெளப்புறாங்கப்பா..

Asiya Omar said...

மைக்கேல் - சவுண்ட் பார்ட்டி
ஆகாயராஜ் - விமானி
கரீம் பாய் - கறிக்கடைகாரர்
சுரங்கன் - சுரங்க தொழிலாளி
வெள்ளையம்மாள் - சலவைத் தொழிலாளி
வெள்ளைச்சாமி - வெள்ளை அடிப்பவர்
பேச்சியம்மாள் - வாயாடி

இவங்களையும் சேர்த்துக்கோங்க..

Reva said...

Arumai, arumai, arumai..:)

Mahi said...

நல்ல பதிவு ஸாதிகாக்கா! நல்லா யோசிச்சிருக்கீங்க!:)

ஈத் முபாரக்!

Angel said...

Dearest Shadiga akka ,
EID MUBARAK to You and your family with all best wishes.

மாதேவி said...

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் ஸாதிகா.

Anonymous said...

அட சூப்பர்.... வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கு ஸாதிகா அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

ராமலக்ஷ்மி said...

தங்கள் மற்றும் நண்பர்களின் பகிர்வு யாவும் அருமை:)!

இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!

ஸாதிகா said...

நன்றி ரேவதி கருத்திட்டமைக்கு!

ஸாதிகா said...

மாய உலகம் ராஜேஷ் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

நன்றி மலிக்கா.ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க?புரளிகெளப்புறாங்கப்பா..//எதற்கு பயப்படுறீங்கப்பா?

ஸாதிகா said...

நன்றி மகி

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி மாதேவி!

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி மாய உலகம் ராஜேஷ்

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஜலி.வாழ்த்துக்கு நன்றிப்பா!

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி பாயிஜா!

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி !