November 9, 2009

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?




1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில்
உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.நீங்கள்எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து
சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோமுக்கியமானவிஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் எனநினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் ஹலோவுக்குபதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்றுசொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்சநேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோதிறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்கமுடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில்
பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார்
பேசுவார்கள்?

இது எனக்கு மெயிலில் வந்தது.எனக்கு உபயோகமில்லை.உங்களுக்கு வேண்டுமானால் தாராளமாக உபயோகித்துக்கொள்ளுங்கள்.வர்க் அவுட் ஆகிவிட்டால் மறக்காமல் பின்னூட்டம் போட்டு விடுங்கள்.நான் எஸ்கேப்.

முக்கிய அறிவிப்பு:
----------------------
இந்த பதிவுக்கும்,படத்தில் இருப்பவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை

22 comments:

ஹுஸைனம்மா said...

அக்கா,
மீ த ஃபர்ஸ்ட் (இதுதான் என் பதிவுலக வாழ்க்கையில் முதன்முறை ஃபர்ஸ்ட் வருவது!!)

அக்கா, இது கூட இன்னொரு டிப்ஸ்: டேபிள் பூரா, பேப்பர்கள் நிறைஞ்சி கிடக்கிறா மாதிரி பாத்துக்கணும். டேபிள் நீட்டாவே இருக்கக் கூடாது.

இந்த டிப்ஸ் எனக்கு எங்க வீட்டுக்காரர் சொல்லிக்கொடுத்தது!!

Asiya Omar said...

ஹாய் ஸாதிகா,
இந்த பதிவை படித்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது இதுதான். எங்க ஊர் பேங்க் எப்பவும் கூட்டம் நிரம்பி காணப்ப்படும்.அதனால் நான் அவ்டரில் உள்ள அதே கிளையில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு போய் வருவது வழக்கம்,ஆனால் அங்கே ஊழியர்கள் வேலை இருப்பது போலவும்,ரொம்ப பிஸியாக இருப்பது போலவும் காட்டிக்கொள்வார்கள்,நீங்கள் எழுதியதைப்போல் தான்.நான் கூட ஏன் இப்படி என்று யோசித்து இருக்கிறேன்,ஏதாவது கேட்டால் இன்னும் பத்து நிமிடம் ஆக்கிவிடுவார்கள்.Very Interesting.

suvaiyaana suvai said...

already padiththu irukken nallaa iruu!!!!

Malar Gandhi said...

Hi Sathika,

First time here, you have a lovely space...nice to discover your blog.

Ha ha thats a good read, I guess lot of my co-workers already do that, he he.

Unknown said...

சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்டு அசத்தி விட்டீங்க.

Unknown said...

சூப்பர் ஐடியா!போதாதற்கு பொருத்தமான படத்தையும் போட்டு அசத்தி விட்டீங்க.

ஸாதிகா said...

ஹுசைனம்மா,
உங்கள் வீட்டுக்காரர் சொல்லிகொடுத்த டிப்ஸும் நன்றாகத்தான் உள்ள்து.சோ..ஆஃபீஸ் லைஃபை ஜாலியா என் ஜாய் பண்ணுகின்றீர்கள்?என் ஜாய்!!!

ஸாதிகா said...

ஆசியா,பதிவுக்கு நன்றி,உண்மைதான்.பேங்க் மட்டுமல்ல,தனியார் ஹாஸ்பிடல்,ஏனைய அலுவலகங்கள்,ஸ்கூல் எல்லாவற்றிலும் இதே பிரச்சினைதான்.நாம் சுவையாக அறுசுவை பட்டி மன்றத்தில் கூட இது பற்றி விவாதித்தோம் இல்லையா?

ஸாதிகா said...

நன்றி சுஸ்ரீ!!

ஸாதிகா said...

மலர் காந்தி,வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

நன்றி செய்யத்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஹா ஹா செம்ம ஜோக்கு, அப்ப இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் நாம் பிஸியா இருக்கோமுன்னனு எல்லாம் நினைப்பார்களா?

படங்களுடன் பதிவு ம்ம் சூப்பர்.

ஸாதிகா said...

நன்றி ஜலி பின்னூட்டத்திற்கு.நீங்கள் கூட இந்த டிப்ஸை தாரளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்

அன்புடன் மலிக்கா said...

அய்யோடா இதபாருக்கப்பா, இப்படியெல்லாம் வேற நடக்கிறதா?

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

/நமக்கு இதிலே அனுபவமில்லிங்கோ../

ஸாதிகா said...

இப்பொழுதான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்காக ஃபீல் பண்ணுகின்றேன் மலிக்கா.:-(
பின்னூட்டத்திற்கு நன்றி

ஸாதிகா said...

நன்றி செய்யத்

தாஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல காமெடியான ஐடியா

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி தாஜ்.பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆன்மீக மணம் வீசும் said...

கண்டு பிடிச்சுட்டோமில்லா
உங்க ப்ளாக்கை இன்னிக்குதான் கண்டு பிடிச்சேன்.
ஆஹா, இந்த மாதிரி நல்ல ஐடியாக்கள் குடுங்க சாதிகா. தேவையானபோது உபயோகிச்சுக்கறேன்.
ஜேமாமி

ஸாதிகா said...

மாமி,வந்துட்டேளா?எப்படியோ தேடிப்பிடிச்சுண்டு வந்து சேர்ந்துடுறேளே.ரொம்ப சந்தோஷம்.தொடர்ந்து வாங்கோ.என் ஐடியாக்களை ரொம்ப உபயோகபடுத்திடாதேள்.பாஸ் பாவம்.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

குறையொன்றுமில்லை. said...

நமக்கெல்லாம் இந்த அனுபவமே இல்லீங்கோ.