January 23, 2014

வீடு வாடகைக்கு....



வீட்டு உரிமயாளர்கள் என்பது இங்கு சென்னையைப்பொருத்தவரை வாடகைதாரர்களுக்கு ஹிட்லர்கள் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில பல வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது.

வீட்டு வாடகைக்கு என்று போனால் எங்கே வேலை பார்க்கறீங்க?வயசானவர்கள் இருக்காங்களா?சின்ன குழந்தைகள் இருக்கா?எத்தனை பேர் இருக்கீங்க?கவுச்சி சாப்பிடுவீர்களா?அடிக்கடி சொந்தக்காரங்க வந்து தங்குவார்களா?ராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களா?அம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதா?வாடகைக்கு ரசீது கேட்பீர்களா?உங்கள் பொருட்கள் எல்லாம் ஒரு டெம்போவில் அடங்கி விடுமா? மலை அளவு பொறுமை சாலிகளையே புரட்டிப்போடும் அளவுக்கு தேவை அற்ற எரிச்சலூட்டும் கேள்விகளை எல்லாம் சமாளித்து எதிர் பாராத அளவு வாடகையையும்,அட்வான்சையும் கேட்டு வாய் பிளந்து வேறு வழி இல்லாமல் கெஞ்சி கூத்தாடி குறைத்து வாடகைக்கு குடி வந்தால் அதற்கப்புறமாவது நிம்மதி இருக்குமா?

“யாரைக்கேட்டுட்டு டிரில் போடுறீங்க..முதல்லே அதை நிறுத்துங்க..”

“கவுச்சி சாப்பிடுவீங்கன்னு சொன்னீங்கதான்.நானும் ஒத்துக்கொண்டேன்தான்.அதுக்காக நாள் கிழமை கூட பார்க்காமல் சமைக்கிறதா?”

“உங்க சொந்தக்காரங்க வந்து ரெண்டு நாளைக்கும் மேலாகுது இன்னும் போகலியா?ரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதே?”

“என்னது... டமால்ன்னு சப்தம்? எவர்சில்வர் பாத்திரம் கீழே விழுந்து விட்டதா?மண்டைக்குள் வந்து எதோ விழுந்த மாதிரி ..இனியாவது ஜாக்கிரதையாக இருங்க”

“பாப்பா நொய் நொய்ன்னு அழுதுட்டே இருந்ததே.ராத்திரி பூரா தூக்கமே இல்லை.கொஞ்சம் அழாமல் பார்த்துக்கக்கூடாது”

இப்படி எக்குதப்பான கேள்விகளை எல்லம் சகித்து,பொறுமையாக பதில் சொல்லியாக வேண்டும் என்பது வாடகை தாரர்களின் தலைவிதி.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்படும் தரகர்கள் எக்கசக்க வாடகையை உயர்த்தி விடுகின்றனர்.சென்ற வருடம் ஒரு குடித்தனக்காரரை வாடகைக்கு அமர்த்தித்தந்த தரகர் மறு வருடம் வீட்டு உரிமையாளரிடம் சென்று அவர்களை காலி செய்யுங்கள்.நான் அதைவிட அதிக வாடகையில் இன்னொருவரை அழைத்து வருகிறேன் என்று கமிஷனுக்கு ஆசைப்பட,வாடகை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய முனைகிறார்..இனி என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சாமான் சட்டிகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்துக்கு மாறும் அவலத்துக்கு உள்ளாகின்றனர்.

20 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்கும் வாடகைதாரகள் படும் அவலத்தை விட குறைந்த அளவு வாடகையில் பட்ஜெட் வீடுகளில் இருப்பவர்கள் படும் அவலம் இன்னும் அதிகமே.

வீட்டு வாடகை 4000 என்று எடுத்துக்கொண்டால் மின்சாரக்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.முறைவாசல்,தண்ணீர்,கோலப்பொடி,துடைப்பம்,பினாயில்,பிளீச்சிங் பவுடர் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு போட்டு காசு பறிக்கின்றனர்.

இரவு பத்து மணி ஆகிவிட்டால் வீட்டு உரிமையாளர்களால் கேட் பூட்டப்பட்டு விடுகிறது.அதன் பிறகு வருபவர்கள் கெஞ்சி,கூத்தாடி வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டுதான் உள்ளே அனுமதிக்கப்படுன்றனர்.

பல இடங்களில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்தும் வாடகையாளர்களின் கார்களை காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . கார் விட தனியாக வாடகை கேட்கின்றனர்.அல்லது குடித்தனம் இல்லாத ஒருவரின் காரை உள்ளே விட அனுமதித்து அதற்கு தனி வாடகை பெற்று வருகின்றனர்.

காசோலையை வாடகைக்கு வாங்கிக்கொள்ளாதவர்களும்,வாடகைக்கு ரசீது கேட்டால் கூட 1000 தந்தால் ரசீது தருவேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.

மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக காணப்பட்டாலும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடும் பெரிய மனதுக்கார வீட்டு உரிமையாளர்கள் எண்ணிலடாங்காது.

தேவைக்கு ஆணி அடித்தால் ஆப்பு வைக்கும் உரிமையாளர்,பக்கத்திலேயே வீட்டு உரிமையாளர் குடி இருந்து விட்டால் பல்லை காட்டியே பல் சுளுக்கிக்கொள்ளும் வாடகை தாரர், உரிமையாளர்களின் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து அடங்கிப்போகும் வாடகையாளர்களின் குழந்தைகள்,அவ்வப்பொழுது உரிமையாளர்கள் ஏவும் வேலைகளையும் செய்வது.குழந்தைகளைப்பார்த்து ”டிவி வால்யூமை கம்மி பண்ணுடா.வீட்டு ஓனர் சப்தம் போடப்போகிறார்” என்று குழந்தைகளை அதட்டுவது இதெல்லாம் சகஜமாக நிகழும் நிகழ்வுகள்.

காலி செய்யும் பொழுது அட்வான்சை முழுதாக கொடுப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது.வீட்டை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து விட்டு ஒவ்வொரு குறைகளையும் கண்டு பிடித்து அதற்கெல்லாம் பணத்தைப்பிடித்துக்கொண்டு ஒரு சிறிய தொகையை தருவார்கள்.

இன்னும் சிலர் நாங்கள் தரும் பொழுது பெயிண்ட் அடித்து தந்தோம் அதே போல் திருப்பித்தரவேண்டும் என்ற் அடாவடி செய்பவர்களும் உண்டு.

அவை அனைத்திலும் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் ஆனதும் பலர் பெண்ணுக்கு கல்யாணம் மகனுக்கு கல்யாணம் தம்பி குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று கூசாமல் பொய் சொல்லி காலி செய்து அதிக வாடகைக்கு வேறொரு குடும்பத்தினரை அமர்த்துவது.

வாடகைதாரர்கள் வாழ்வில்  இத்தனை கஷ்டங்களும் வருடத்திற்கு ஒரு முறை நடக்குமென்றால்..யோசித்துப்பாருங்கள்...!

அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா?

இதனை இன்னுமொரு  ஒரு பதிவினில் அலசுவோம்.



27 comments:

Anonymous said...

''..அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா?..''
அப்படித் தானே தெரிகிறது. நாய்ப் பிழைப்போ!
இதே போல குடியிருப்பவர்களும் இது வாடகை வீடு தானே என்று பல அடாவடித்தனமும் கூட.
மனிதநேயம் தான் இங்கு முக்கியம். நல்ல சிந்தனைப்பதிவு.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...


மிகவும் கஷ்டம்தான். நல்ல குணமுள்ள வீட்டு உரிமையாளர்கள் என்பவர்கள் அளவில் மிகவும் கொஞ்சம்தான்! அல்லது அவர்கள் வெளியூரில் இருக்கவேண்டும்.

கோவை நேரம் said...

நல்ல அலசல்...

திண்டுக்கல் தனபாலன் said...

"வீட்டுக்காரர்" அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!

கார்த்திக் சரவணன் said...

உஸ் அபா..... பழைய நினைவுகளைக் கிளறிட்டீங்க... நானும் ஒரு பதிவு போடுறேன்...

cookbookjaleela said...

இரண்டு பேருமே ஒத்துபோகிறவர்களாக இருந்தால் தான் நல்லது..
இதே பிரச்சனையால் ஊரில் எனக்கு தெரிந்த ஒருவர் இது வரை 30 க்கும் மேல் வீடு மாறிவிட்டார்கள்

Menaga Sathia said...

நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருக்கும் போது அம்மாவும் அப்பாவும் வாடகை வீடு கேட்டு அலைந்து பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது...இந்த பதிவு படிக்கும் போது சிறிய வயது நினைவுகள் வருகிறது.நல்ல்தொரு பகிர்வுக்கா!!

Seeni said...

Enna kodumai Sako....

கரந்தை ஜெயக்குமார் said...

மனித நேயமுள்ள குடியிருப்பவர்களும் தேவை, வீட்டுக் காரர்களும் தேவை

கோமதி அரசு said...

நாங்கள் இருக்கும் குடியிருப்பில் கார் நிறுத்தும் இடத்திற்கு தனியாக 500 கொடுக்கிறோம்.



Unknown said...

எங்கள் ஹவுஸ் owner வாடகையை கூட நெப்ட் transfer முலம் பெற்று கொள்கிறார், வீட்டுப்பக்கம் வருவதே இல்லை. பராமரிப்பு வேலைகளை எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்

Unknown said...

எங்கள் ஹவுஸ் owner வாடகையை கூட நெப்ட் transfer முலம் பெற்று கொள்கிறார், வீட்டுப்பக்கம் வருவதே இல்லை. பராமரிப்பு வேலைகளை எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்

Asiya Omar said...

நல்ல அலசல், சொந்த வீடு இருக்கணும் ஒண்டிக்க ஓட்டு வீடு இருந்தால் கூட போதும்னு எங்க பக்கம் சொல்வாங்க, அது எவ்வளவு உண்மை.வாடகையும் கொடுத்து நிம்மதியையும் கூட அவங்க கிட்ட கொடுத்திடனும் போல.ப்ப்பா !நினைக்கவே சங்கடமாக இருக்கு.

ஸாதிகா said...

வாங்க வேதாம்மா.முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா// இதைப்பற்ரி இன்னொரு பதிவில் அலசலாம்.நன்றி.

ஸாதிகா said...

வாங்க ஸ்ரீராம் சார்.//அல்லது அவர்கள் வெளியூரில் இருக்கவேண்டும்.// ஆஹா..எப்வ்வள பாஸிடிவ் திங்கிங் உங்களுக்கு.நன்றி சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கோவை நேரம்.

ஸாதிகா said...

வீட்டுக்காரர்" அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!//அதானே..மனைவி மட்டுமா?வீட்டு உரிமையாளர்களும்தான்.கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

ஸாதிகா said...

நானும் ஒரு பதிவு போடுறேன்...//சீக்கிரம் போடுங்க ஸ்கூல் பையன்.வாசிக்க காத்திருக்கிறேன்.நன்றி.

ஸாதிகா said...

30 க்கும் மேல் வீடு மாறிவிட்டார்கள்//யம்மாடி இவ்வளவு எண்ணிக்கைக்கூட இருக்கா?கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா,

ஸாதிகா said...

உங்கள் பெற்றோர் கூட கஷ்டப்பட்டு இருக்காங்களா?இன்னும் மாறவில்லை வீட்டு உரிமையாளர்கள் பாருங்கள்:( நன்றி வரவுக்கு மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்ரி சகோ சீனி.

ஸாதிகா said...

வீட்டுக் காரர்களும் தேவை//இது பற்றியும் அலச வேண்டும் கரந்தை ஜெயகுமார் சார்

ஸாதிகா said...

இதே சென்ன்னையானால் இன்னும் அதிகமாக கேட்பார்கள் கோமதிம்மா நன்றி

ஸாதிகா said...

நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் ராஜு தினகரன்.இப்படியும் ஒரு சிலர் உண்டுதான்.கருத்துக்கு மிக்க நன்றி.

priyasaki said...

இங்கும் பிரச்சனைகள் இருக்கு. ஆனால் வித்தியாசமாக.கூடுதலா வீட்டு உரிமையாளர்கள் வருவதில்லை.இங்கு எல்லாமே சட்டத்தின் மூலமே மேற்கொள்வார்கள்.அயலவர்கள்தான் நல்லவர்களாக அமையவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். நாட்டுக்கு நாடு வாசற்படி.

Vijiskitchencreations said...

Nice pathivu. Both owner & tenants be careful!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :

அன்பின் பூ - இரண்டாம் நாள்