tag:blogger.com,1999:blog-54709405796115333982024-02-19T12:16:22.303+05:30எல்லாப்புகழும் இறைவனுக்கேஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comBlogger236125tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-90971270030852770932014-07-10T12:51:00.000+05:302014-07-10T13:25:31.055+05:30நோன்பு நினைவலைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்த்து சஹர் உணவை (அதிகாலை சாப்பாடு) முடிப்பதும் அதே போல் கடிகாரத்தை பார்த்து இஃப்தாரை (நோன்பை முடித்துக்கொள்ளும் தருணம்) ஆரம்பிப்பதும் வழக்கமாகி வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த ஊரில் இருந்து கொண்டு நோன்பு கடமையை நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் தருணத்தில் எங்கள் ஊரின் நோன்புகால மகிழ்ச்சி தருணங்களை ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைக்கின்றது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
நோன்புகாலம் என்றாலே மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்.முதல் நோன்பன்று பிறை கண்டுவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் அமைத்து இருக்கும் சைரன் ஒலி வந்து விடும்.வீதி தோறும் உற்சாகம்.புத்தாடை தரித்து உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்து பெண்களும் சிறுமிகளும் ஆண்களும் சிறுவர்களும் அவரவர்களுக்குறிய பள்ளிகளில் சென்று இரவுத்தொழுகையை நிறைவேற்றுவார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இரவுத்தொழுகை முடிந்த பின் அங்கே விநியோகம் செய்யும் பேரீச்சம்பழம் சர்பத் பிஸ்கட் பொட்டலம் இவற்றை பெறுவதற்கு சிறார்கள் கூட்டம் அலை மோதும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
வீதிக்கு வீதி தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்து இருக்கும் சஹர் நேர அறிவிப்பு ஸ்பீக்கர் வாயிலாக உறங்கும் ஒவ்வொரு இல்லத்து உறுப்பினர்களையும் தட்டி எழுப்பி விடும்.குர் ஆன் வசனங்கள்,இஸ்லாமியப்பாடல்கள் போன்றவற்றை ஒலிபரப்பி இடைக்கிடையே சஹர் முடிய இன்னும் இவ்வளவு நேரம் இருக்கின்றது என்ற அறிவிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.அந்த அறிவிப்பை செவிமடுத்த படி பெற்றோர்கள் பிள்ளைகளை “நேரமாச்சு சீக்கிரம் எழுந்து சஹர் செய்” என்று எழுப்பி விட படாதபாடு பட்டுக்கொண்டு இருப்பார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
தவிர பள்ளிவாசல்களிலும்,தனியார் தொண்டு நிறுவனங்களும் சஹர் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். பள்ளிவாசல்கள் தவிர வீதிக்கு வீதி இலவசமாக சாப்பாடு பறிமாறப்படும்.இதனை செய்து இறை அருளைப்பெற ஓவ்வொருவரும் போட்டிபோடுவார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
மாலை நேரத்தொழுகைக்கு பின்னர் மசூதிகள் தனியார் தொண்டு நிறுவனங்களில் மிகப் பிரம்மாண்டமான களரி சட்டிகளில் <a href="https://www.facebook.com/1419630638256494/photos/pb.1419630638256494.-2207520000.1404822161./1486508088235415/?type=3&theater">நோன்பு கஞ்சி </a>காய்ச்சப்பட்டு நோன்புக்கஞ்சி மத வேறுபாடின்றி விநியோகம் நடைபெறும்.தமிழ்நாடு முழுதும் அரிசி பருப்பு காய்கறிகளால் செய்யப்பட்ட நோன்புக்கஞ்சி ஒரு முழு உணவாக சத்துநிறைந்ததாக தயாரிக்கப்பட்ட நோன்புக்கஞ்சியை சாப்பிட்டே பெரும்பாலோர் நோன்பு திறப்பார்கள்.நோன்பினால் ஏற்பட்ட உடல் சூட்டை குறைக்கும் வகையில் பூண்டு வெந்தயம் போனறவற்றால் சமைக்கப்படும் இந்தக்கஞ்சி நோன்பை முடித்து அருந்தும் பொழுது தெம்பும் சக்தியும் அளித்து விடும்.தமிழக நோன்பாளிகள் பிற நாடுகளில் வாழ்ந்தாலும் வீட்டிலேயே இதனை தயாரித்து அருந்துவார்கள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின், செய்முறையும் சுவையும் வேறுபட்டாலும் கீழக்கரைப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் ஒரே விதமான அபார சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
கீழக்கரையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடி இருக்கும் . அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு வீதிகளிலும் முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே, களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது. </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை,போண்டா வகைகள் பஜ்ஜி வகைகள் போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
நோன்பு 30 நாட்களும் கஞ்சி வழங்குதல், நோன்பாளிகள் பள்ளியில் நோன்பு திறக்க இப்தார் விருந்து ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு இலவச சஹர் உணவினை வீடு தேடி சென்று கொடுத்து உதவுதல் போன்ற சிறப்பான சேவைகள் கண்ணியமான முறையில் தொண்டு நிறுவனங்கள் ஊர்வாசிகளின் ஒத்துழைப்போடு செய்துவருவது பாராட்டத்தக்கது.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
இப்படியாக முப்பது நாட்களும் பசித்திருந்து நோன்பு வைத்து பெருநாள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தாலும் நோன்பு முடியப்போகும் கடைசிநாளன்று அனைத்து நோன்பாளிகளின் மனங்களும் இவ்வருடத்திற்கான இத்தனை சிறப்பான மாதம் இன்றுடன் முடியப்போகின்றதே என்ற ஏக்கம் மனதின் ஒரு மூலையில் நிறைந்து இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும் பெரும் களரி சட்டிகளில் நோன்புகஞ்சி காய்ச்சப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjF2aS0-gCW09_u_4LealrYpr2TwO8CJBxgkUKp7p4vSc_TxI34VRFkIAnHI9qb_7Ic_imhbuCMCvhG7RWv_exPS3hFoB9Ur9xsAxrAJTCt0bf7sFj4GaiX9JC_UQzy2GQocAqZYZDrIM/s1600/kanji+1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjF2aS0-gCW09_u_4LealrYpr2TwO8CJBxgkUKp7p4vSc_TxI34VRFkIAnHI9qb_7Ic_imhbuCMCvhG7RWv_exPS3hFoB9Ur9xsAxrAJTCt0bf7sFj4GaiX9JC_UQzy2GQocAqZYZDrIM/s1600/kanji+1.JPG" height="240" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
நோன்புக்கஞ்சி விநியோகத்திற்காக காத்திருக்கும் சிறார் கூட்டம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Yt5Gp3PM6Zw80R_EXWXV_dMUTfmw7T5SinapGf5VBwKMSS0EJhMW3h-jP5cJvu17pjYY0gh9yH4uYLurA4kOdQY_G5H43nQWLpdfIJKZx0RLvG6-5n7S_qlKYozuDFO0m46N0-3UqyI/s1600/kanji2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Yt5Gp3PM6Zw80R_EXWXV_dMUTfmw7T5SinapGf5VBwKMSS0EJhMW3h-jP5cJvu17pjYY0gh9yH4uYLurA4kOdQY_G5H43nQWLpdfIJKZx0RLvG6-5n7S_qlKYozuDFO0m46N0-3UqyI/s1600/kanji2.JPG" height="269" width="320" /></a><u style="color: #0000ee;"></u></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div>
தினந்தோறும் நோன்பாளிகளுக்கு நடை பெற்று வரும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUs8v816AJobTe9KzQdkh6QvzLuqvMoTu8ieR6TKUoyVjQumNNPrITdXiSrI_vlI0iRpMHLAQ5U6oCjjvmPw7mxZGow2LMLUWJX2xmuXOfSUPI6QkprYspSTrDVv8SIih_QyIuQPXDLgg/s1600/iftar+1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUs8v816AJobTe9KzQdkh6QvzLuqvMoTu8ieR6TKUoyVjQumNNPrITdXiSrI_vlI0iRpMHLAQ5U6oCjjvmPw7mxZGow2LMLUWJX2xmuXOfSUPI6QkprYspSTrDVv8SIih_QyIuQPXDLgg/s1600/iftar+1.JPG" height="240" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
ஒவ்வொரு பகுதிகளிலும் மசூதிகள் தொண்டு நிறுவங்கள நடத்தும் இஃப்தார் விருந்தில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர். </div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWbvsHxJUuivpr9F8jcoYbwHrla9lwGsr0ofh48HSp761gqQyuqDwsFRizp7jatHnYQa-H9UaorOMW_dN-TYXVI4SsUpf5x85mJMHkz6MHaAOX915TIWQSIvqr2bQ6tWxyuTOUPlY8C8M/s1600/iftar+2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWbvsHxJUuivpr9F8jcoYbwHrla9lwGsr0ofh48HSp761gqQyuqDwsFRizp7jatHnYQa-H9UaorOMW_dN-TYXVI4SsUpf5x85mJMHkz6MHaAOX915TIWQSIvqr2bQ6tWxyuTOUPlY8C8M/s1600/iftar+2.JPG" height="240" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
சிறுவர்கள் ஆர்வமுடன் இப்தாரில் கலந்து கொள்ளும் காட்சி.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOGQc5oNpBuSIj7GrQJPT-_AVdOKxixIVMAP3L2hrjGG34KFE1KVJIANXZVCtp_E4DNnz5LlBPxofXfqVKknjWufl7OPWD0aimy5iWjZ-LohyCVXCcNe9F_sXZpoy7Ae5sCnR0OnaETuc/s1600/iftar+4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOGQc5oNpBuSIj7GrQJPT-_AVdOKxixIVMAP3L2hrjGG34KFE1KVJIANXZVCtp_E4DNnz5LlBPxofXfqVKknjWufl7OPWD0aimy5iWjZ-LohyCVXCcNe9F_sXZpoy7Ae5sCnR0OnaETuc/s1600/iftar+4.JPG" height="240" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi320Lp8QbDORTS1RjhxTpHqIKXtz5S_dYnJL_0uPytEkAly-VkexRuNJK4XigfvQR1SVXh-o7POg-VV0Lxtcvt9-I6zMMcjjFzULfYAP5_BVJwRI8MzFj3AvyPF1SLbIyhiBqG7FoDAnE/s1600/Masjith+3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi320Lp8QbDORTS1RjhxTpHqIKXtz5S_dYnJL_0uPytEkAly-VkexRuNJK4XigfvQR1SVXh-o7POg-VV0Lxtcvt9-I6zMMcjjFzULfYAP5_BVJwRI8MzFj3AvyPF1SLbIyhiBqG7FoDAnE/s1600/Masjith+3.JPG" height="240" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
எளியோர்கள் வீடு தேடிசென்று சஹர் சாப்பாட்டை விநியோகம் செய்வதற்காக சாப்பாடு பார்சல் கட்டும் வேலை மும்முரமாக நடை பெற்று வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ZiUZIKefxs6PiGplw7M7kEFY9kZuGl27Ypm13P8msrtx2zEc6OLmu604Z34KWqYc9ySJF2rwtuIdRZY7wfbG1uTHU-hp-e-B6YP1Q-S4XNOPmekxyNG2XQSYXqtZiluYmN6I-n1U7zA/s1600/parcel.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3ZiUZIKefxs6PiGplw7M7kEFY9kZuGl27Ypm13P8msrtx2zEc6OLmu604Z34KWqYc9ySJF2rwtuIdRZY7wfbG1uTHU-hp-e-B6YP1Q-S4XNOPmekxyNG2XQSYXqtZiluYmN6I-n1U7zA/s1600/parcel.jpg" height="240" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
தொண்டு நிறுவனங்கள் அதிகாலையில் சஹர் விருந்தை ஏற்பாடு செய்து இருக்கும் காட்சிகள்</div>
</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhffu6cw6ohgASFzGBDkhxaha_jzbtIiwid9phb2AcPh0zIqsJOJi8_HK7cED-IvotK7vObn1jwlB8Vw7HGvabp7wTc7yPuYW0RX4GRdJThBpN_KnI7HkcEKk_j_rdWPlmZvThq0rGIyVs/s1600/East+Street+Sahar+3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhffu6cw6ohgASFzGBDkhxaha_jzbtIiwid9phb2AcPh0zIqsJOJi8_HK7cED-IvotK7vObn1jwlB8Vw7HGvabp7wTc7yPuYW0RX4GRdJThBpN_KnI7HkcEKk_j_rdWPlmZvThq0rGIyVs/s1600/East+Street+Sahar+3.JPG" height="246" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkb4tllWVd5KLCRx0ozTaXPFS9K5sKWIx7hta17O8c0BIhIzoE7f18nSU9I9Tet4KxsNZgNPiQf0d1KHrz79hRDClpp_xHrO29fI_bbvfIq87s1zkzIeQsx1v0EUjlLpzkLWwXlKJ_isw/s1600/East+Street+Sahar+6+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkb4tllWVd5KLCRx0ozTaXPFS9K5sKWIx7hta17O8c0BIhIzoE7f18nSU9I9Tet4KxsNZgNPiQf0d1KHrz79hRDClpp_xHrO29fI_bbvfIq87s1zkzIeQsx1v0EUjlLpzkLWwXlKJ_isw/s1600/East+Street+Sahar+6+(1).JPG" height="240" width="320" /></a></div>
<div>
<div>
<br /></div>
<div>
மாலை வேளைகளில் வடை கடைகளில் வடை மும்முரமாக விற்பனைஆகும் காட்சி.</div>
</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxpKWKgxIPRpIYDMbReIlXc8m82Ok7eFQ7sy0ceSwQ1W5-hHMYNNySzF9ZE2-lv8_ROg_7g-7lfre9ge0iSLSwch_Hg4hGrqqU8PGPrsZWBNcmxsokWnaW0WIK1sMfTNpRH50wp6JyIlQ/s1600/vadai1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxpKWKgxIPRpIYDMbReIlXc8m82Ok7eFQ7sy0ceSwQ1W5-hHMYNNySzF9ZE2-lv8_ROg_7g-7lfre9ge0iSLSwch_Hg4hGrqqU8PGPrsZWBNcmxsokWnaW0WIK1sMfTNpRH50wp6JyIlQ/s1600/vadai1.JPG" height="244" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
மத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதற்காக இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் பங்கேற்ற நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIFLoZnsu4DH-EPR0QxVR_WLSYeybIUea22xzWJbsIsOvaLIm81_GPJ7i1MgB17EOiRRH5KCvu0djbThaVTo3bwFV1aUM3OC3P7x8wBy9ixG8G8RbSU4IyhcjCDqzcbmQuVowBxIxDJ0M/s1600/h+m+c.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIFLoZnsu4DH-EPR0QxVR_WLSYeybIUea22xzWJbsIsOvaLIm81_GPJ7i1MgB17EOiRRH5KCvu0djbThaVTo3bwFV1aUM3OC3P7x8wBy9ixG8G8RbSU4IyhcjCDqzcbmQuVowBxIxDJ0M/s1600/h+m+c.JPG" height="221" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
படங்கள் உதவி கீழை இளையவன்</div>
<div>
<br /></div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-6939910492780623812014-05-07T10:07:00.001+05:302014-05-07T10:07:39.211+05:30அறிவீர்களா இவரை - 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7qp2UsLjE7_wfsp6DlQyEHTy5ebP_l2V7FJnYF2lYcPS2vbL7V9UB_YwOHS9lXeIeOsBfxJqV9aL8t-dYlUA3cZeR4_0wJ09aqvpdeVNg4TnnC5c_hAhm4D01XczwgbECbXMfYcOwjBg/s1600/vallimmaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7qp2UsLjE7_wfsp6DlQyEHTy5ebP_l2V7FJnYF2lYcPS2vbL7V9UB_YwOHS9lXeIeOsBfxJqV9aL8t-dYlUA3cZeR4_0wJ09aqvpdeVNg4TnnC5c_hAhm4D01XczwgbECbXMfYcOwjBg/s1600/vallimmaa.jpg" height="426" width="640" /></a></div>
<span style="color: red; font-size: large;"><br /></span>
<span style="color: red; font-size: large;">வல்லிம்மா</span><br />
<br />
<br />
வல்லிம்மாவை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது.சாந்தமான முகம் போலவே அவரது எழுத்துக்களும் மெல்லிய இறகால் மேனியை வறுடுவது போல் மனதை வறுடும்.பதிவின் இறுதியில் ”எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்”என்ற அவரது வாழ்த்தை வாசிக்கும் பொழுது மனம் உண்மையில் பரவசப்பட்டுத்தான் போகும்.<br />
<br />
2006 ல் இருந்து <a href="http://naachiyaar.blogspot.in/">நாச்சியார் </a> , <a href="http://pukaippadapayanangal.blogspot.in/">புகைப்படப்பயணங்கள்</a> என்ற வலைப்பூக்களில் எழுதி வருகின்றார்.அவரது வலைப்பூக்கள் அவருக்கு ஒரு டைரி.வாழ்வின் இனியதருணங்களையும் சோக தருணங்களையும் பரிமாறி வாசிப்பவர்களை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக்கி விடுவது வல்லிம்மாவுக்கு கை வந்த கலை.இனிய அனுபவங்களை பகிரும் பொழுது ஒரு எழுத்து விடாமல் படிக்கத்தோன்றுமளவுக்கு சுவாரஸ்யமும் படிப்பினையும் கொட்டிக்கிடக்கும்.<br />
<br />
இவருடனான முதல் சந்திப்பு 2012 ஆகஸ்ட் மாதம் சென்னை மேற்கு மாம்பலம் புண்ணியகோடி திருமணமண்டபத்தில் நடைபெற்ற பதிவர் மாநாட்டில் நிகழ்ந்தது.<br />
<br />
பளிச்சென்ற கம்பீரத்தோற்றம், இவருக்கு கன்னம் வலிக்காதா என்று தோன்றுமளவுக்கு எப்பொழுதும் புன்னகை ததும்பும் மிகவும் சாந்தமான முகம்,அனைவரையும் கைகளைப்பிடித்துக்கொண்டு மிக வாஞ்சையுடன் பேசும் பாங்கு,..இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஈர்ப்பு என்னை திரும்பிப்பார்க்க வைத்தாலும் நானாக போய் பேச தயக்கம் காட்டிக்கொண்டு இருந்த பொழுது பெரியவராக இருந்தாலும் அவராகவே தன்னை என்னிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்த பொழுது அவரது உயரிய பண்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது.என்னிடம் மட்டுமல்ல வயது வித்தியாசமின்றி அனைத்துப்பதிவர்களிடமும் நெடு நாள் பழகியது போல் நட்புகொள்ள ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது.தொலை பேசியில் உரையாடும் பொழுது கூட இதே பாணிதான்.வார்த்தைகள் மயிலிறகால் வருடுவதைப்போல் என்பார்களே அதனை இவரிடம் தான் கண்டேன்.<br />
<br />
ஒரு பை நிறைய மல்லிகைப்பூவை கொண்டு வந்து பெண் பதிவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்தது அனைவரையும் புன்னகைக்க வைத்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0H_mI75wFMdnEwmLl_6E75TqIOcDXEedWh94oyi4wayUgSiTc9oqqgtJRrBtmbE1d768fHF4bVKtKivZIErKIPR6XoKmovEEJtQpjlYK9at2D8jq3-gf67kT0hBgbD_E1BC7_PP3MzdU/s1600/vallimmaa+1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0H_mI75wFMdnEwmLl_6E75TqIOcDXEedWh94oyi4wayUgSiTc9oqqgtJRrBtmbE1d768fHF4bVKtKivZIErKIPR6XoKmovEEJtQpjlYK9at2D8jq3-gf67kT0hBgbD_E1BC7_PP3MzdU/s1600/vallimmaa+1.JPG" height="426" width="640" /></a></div>
<br />
<br />
வல்லிமாவின் எண்ணங்களை பத்து கேள்விகளில் அடக்க முடியாவிட்டாலும் அனுபவசாலியின் இந்த பதில்கள் நல்லதொரு அறிவுரைகளாக இருக்கும். என் கேள்விகளுக்கு வல்லிம்மா அளித்த பதில்கள் இதோ...<br />
<br />
1.பெண்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன?<br />
<br />
முதலில் பொறுமை. அதிக அளவில் கோபம் வரும்போது பொறுமை இல்லாவிடில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் குறையும். சினம் மட்டும் எஞ்சி இருக்கும். சினம் எப்போது வருகிறது. வேறு யாராவது நம் அபிப்பிராயத்துக்கு எதிராகப் பேசும்போது. அதனால் அந்த வேளையில் அமைதியாக இருந்துவிட்டால் போதும். வாக்குவாதங்கள் குறையும். எதிராளியும் நம் பேச்சைக் கேட்க தயாராக இருப்பார். இது என் அபிப்பிராயம்<br />
<br />
2.உங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை எது?<br />
<br />
ம்ம்ம் அவர்கள் பெரியவர்கள் ஆகி ரொம்பநாட்கள் ஆகிறது. இருந்தாலும் என் அம்மா எனக்குச் சொன்னதை அவர்களிடம் சொல்வேன். வாழ்க்கையில் பாதிக் குழப்பங்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் போவதுதான். நீங்கள் அவர்கள் நிலைமையில் இருந்து யோசிக்கணும். அப்போழுது உங்களுடைய ரீஆக்ஷன் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் புரியும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு விஷயத்தையும் செய்யக் கூடாது. இதை அவர்கள் நன்றாகவே கடைப்பிடிக்கிறார்கள்.என்னைவிட நல்ல மனிதர்களாகவே இருக்கிறார்கள்.<br />
<br />
3.அப்பா - மகன் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?<br />
<br />
இரண்டு பக்கமும் பாசமும் அதைத் தொடர்ந்து புரிதலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் குழந்தைகளின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை . அவர்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார்கள். அதற்கு வேண்டும் என்கிற உதவியை நாங்கள் செய்தோம். மணமாகும் வயது வந்தபோதும் அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்களையே மணம் முடித்து வைத்தோம். அவர்களும் கட்டுப்பாடு மீறாமலயே எங்கள் கலாச்சாரப்படித் திருமணம் செய்து கொண்டார்கள்.....இறைவன் காக்க வேண்டும். தந்தை மகன் உறவுக்கு எடுத்துக்காட்டு என் கணவரும் பிள்ளைகளும்.<br />
<br />
4.வாழ்வில் சோகமயமான சூழ்நிலை ஏற்படும் பொழுது நம்பிக்கை கொள்ளச்செய்யும் செயல்கள் எது என்று நினைக்கின்றீர்கள்.<br />
<br />
சோகம் தாக்கும் போது முதலில் பிரமிப்பு.அதிர்ச்சி.பிறகு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்ற முடிவு. இந்த மாதிரி சூழ்நிலைகள் நான்கு தடவை வந்துவிட்டன. எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனையே பிடித்துக் கொண்டேன். அவன் நாமம்தான் உதவியது. உதவி செய்யும் உறவினர்கள், அரவணைக்கும் மகளும் மகன்களும். இதை இறைவன் கொடுத்தார். அதையும் மீறி இழப்பு என்னைப் பாதிக்கும் நேரம் மனம் கொண்ட மட்டும் அழுதுதீர்த்துவிடுவேன். தெளிவு கிடைத்ததும் கடிதங்களாக எழுதுவேன். இப்போது பதிவுலகில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது. இந்த நட்புகளையும் கொடுத்தவன் இறைவனே. <br />
<br />
5.உங்கள் கணவரை குறிப்பிடும் பொழுது சிங்கமென்ற கம்பீரமான பெயரை உபயோகின்றீர்கள் அதன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?<br />
<br />
பதிவுகள் ஆரம்பித்த போது பெயரைச் சொல்வதில் தயக்கம். பிறகு தெளிவு. அவர் பெயரிலேயே சிங்கம் இருப்பதால் ,அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது வீட்டு எஜமானர் என்றோ சிங்கம் என்றோஓ குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. இப்போது எல்லோருக்கும் சிங்கமாகி விட்டார். என்னைப் பொறுத்தவரையில் அவருடைய குணநலன்களுக்கு அந்தப் பெயர்தான் சரி. சிங்கமாகவே இருந்தார்.சிங்கமாகவே மறைந்தார். <br />
<br />
6.கலாச்சாரம் என்பது என்ன?<br />
<br />
என்னைப் பொறுத்தவரை அன்புதான் கலாச்சாரம். கலாச்சாரப் போர்வையில் மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான மற்றவர்களைத் துன்புறுத்துவது சரியான கொள்கை இல்லை. வாழு வாழவிடு என்று இருக்க வேண்டும். எல்லோரும் இதை மதித்தால் போதும். கலாச்சாரம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.<br />
<br />
7.பல நாடுகள் சென்று வந்து இருக்கின்றீர்கள்.உங்களுக்கு பிடித்த நாடு ஒன்றினை குறிப்பிடுங்களேன்.காரணம் என்ன?<br />
<br />
நம்நாடுதான் முதல். இங்கே இருக்கிற சுதந்திரம் வேறெங்கும் கிடைக்காது. அதைவிட்டால் அரபு நாடுகளில் துபாய். . கைகள் நிறையப் பணமும் மற்றவர்களிடம் மரியாதையும் இருந்தால் எந்த நாட்டிலும் சுகமாக இருக்கலாம்.நட்பு மனம் வேண்டும். <br />
<br />
8.உங்களின் முக்க்ய பொழுது போக்கு?<br />
<br />
இசை. படிப்பு, இணையம்.வாழ்க்கை குழந்தைகளோடு...... <br />
<br />
9.இணையத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்றீர்கள்.எப்போதாவது சலிப்பு ஏற்பட்டுள்ளதா?<br />
<br />
இல்லை. சலிப்பு என்பதே இல்லை. என் எழுத்து இல்லாவிடில் எப்போதோ முடங்கி இருப்பேன். பிரமாதமான எழுத்துக்குச் சொந்தம் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய மறுபாகமாக எழுத்து இருந்து வருகிறது. சலிப்பும் வராது.அருமை நட்புகளின் பதிவுகள் கூட வருகையில் நேரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருக்கிறேன். <br />
<br />
10.இறுதியாக உங்கள் சிங்கம் பற்றிக்கூறுங்களேன்.<br />
<br />
என்னவென்று சொல்வது. 47 வருட தாம்பத்தியம். எத்தனையோ மேடுகள் பள்ளங்கள். அவர் ஒருவர் இருந்ததால் தாண்டி வந்தேன். என் காவலர், கணவர்,அன்பர். எந்த நிலைமையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். யாருக்கும் பயந்ததில்லை. யாரையும் துன்புறுத்தியதில்லை.. நிறைய சொல்லலாம். மீண்டும் இழப்பு என்னை உறுத்த ஆரம்பிக்கும்.<br />
<br />
அன்பு ஸாதிகா எனக்குப் பேச ஒரு ஆரம்பம் கொடுத்தீர்கள். உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவுலக அன்பு நட்புகளுக்கும் என் நன்றி. இனி வெளியுலக வாழ்க்கையில் என் தூண்கள் அவர்கள் தான்.<br />
<br />
மிக்க அன்புடன்,வாழ்த்துகளுடன்,<br />
வல்லிம்மா என்கிற ரேவதி நரசிம்ஹன் </div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-30760832804744383102014-05-05T20:24:00.003+05:302014-05-05T21:05:11.509+05:30அறிவீர்களா இவரை - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqymrcHdJKFqd5ZwVAJDjUb-vbCl04lRbXUNUALgaRI8gqUvR1s65OirvksaJ8SuRuZ1pubcvcNzxeg7sMMKHKNxkkF5-fGc0QPL_uWv9smbUjL9RN77YHvIIrLGI26FvFsPkHbZwBLwU/s1600/tulsi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqymrcHdJKFqd5ZwVAJDjUb-vbCl04lRbXUNUALgaRI8gqUvR1s65OirvksaJ8SuRuZ1pubcvcNzxeg7sMMKHKNxkkF5-fGc0QPL_uWv9smbUjL9RN77YHvIIrLGI26FvFsPkHbZwBLwU/s1600/tulsi.jpg" height="478" width="640" /></a></div>
<br />
<span style="color: blue; font-size: large;">துளசி கோபால்</span><br />
<br />
நான் துளசிம்மாவை அறிமுகப்படுத்துவது பூக்கடைக்கு விளம்பரம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.(இனி நிறைய பூக்கடைகளுக்கு விளம்பரம் கொடுக்கவுள்ளேன்.)<br />
<br />
பதிவுலகில் துளசி கோபாலை அறியாதவர்கள் இருக்க முடியாது.சுமார் 10 ஆண்டுகளாக 2004-இல் இருந்து <a href="http://thulasidhalam.blogspot.co.nz/">துளசிதளத்தில்</a> ஆயிரக்கணக்கான பதிவுகளை எழுதிவருபவர்.இவரது ஸ்பெஷாலிட்டி நாட்டுக்கு நாடு சென்று அதனை அழகாக படமாக்கி பதிவாக எழுதி படிப்பவர்களை அந்த இடத்துக்கே அழைத்து செல்லக்கூடிய திறமை இவரது எழுத்துக்கும்,இவரது கேமராவுக்கும் உண்டு என்றால் மிகை ஆகாது.நியூஸிலாந்தில் வசித்தாலும் சென்னையின் மீதுள்ள அதீத காதல் என்னை வியக்க வைக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglY3IlJuXBiv-xc8_1LxMRKudSQoumuCYCRf1aEShmyT-bzt6sZ83mUgKAj-Kzcs8Ucmse8Crh715yi0PqvsJ7Tfl04fBbBsXidDw6TzqxsD4WlIDHvbw_ewiO5QSVuXD6fa1wNbOhjFo/s1600/ini.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglY3IlJuXBiv-xc8_1LxMRKudSQoumuCYCRf1aEShmyT-bzt6sZ83mUgKAj-Kzcs8Ucmse8Crh715yi0PqvsJ7Tfl04fBbBsXidDw6TzqxsD4WlIDHvbw_ewiO5QSVuXD6fa1wNbOhjFo/s1600/ini.jpg" height="504" width="640" /></a></div>
<br />
<br />
பதிவுகளில் பின்னூட்டங்களில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு பின்னூட்டம் வழியே என் மின்னஞ்சல் கேட்டு இருந்தார்.<br />
கணவருக்கு மணிவிழா சென்னையில் வந்து நடத்துவதால் அவசியம் கலந்து கொள்ளும் படி ஒரு வித்தியாசமான அழைப்பையும் இணைத்து இருந்தார்.அவர் அன்புடன் அழைத்த விதம் மிகவும் பிடித்துப்போனதால் அந்த நிமிடமே விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.<br />
<br />
விழா நாளன்று அங்கு சென்று இருந்தேன்.என்னை பார்த்த மாத்திரத்தில் அத்தனை கூட்டத்திலும் என்னை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்ற உபசரிப்பை என்னால் மறக்க முடியாது.எதிர்பாராத அளவு பதிவர்களின் வருகை,இனிமையான கொண்டாட்டம் மனம் நிறைந்த உபசரிப்பு,புதிய அறிமுகங்கள்,மகிழ்ச்சியான இன்முகங்கள்.நாவிற்கினிய விருந்து என்று அந்த நாள் மகிழ்ச்சிகரமாக இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKXY_CQ2T-1bfbCx-Ll2vjspTjbNiPbsrIb9So5oimITYgpGNG1UL9YXtJxqvQs2Cr9iy0BOI_eIzF8oJnwaCTQTlDSShiYXJl_D87U7hynI8dGJv0YQieo4srpDwydULPLJ825SF_fxI/s1600/th.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKXY_CQ2T-1bfbCx-Ll2vjspTjbNiPbsrIb9So5oimITYgpGNG1UL9YXtJxqvQs2Cr9iy0BOI_eIzF8oJnwaCTQTlDSShiYXJl_D87U7hynI8dGJv0YQieo4srpDwydULPLJ825SF_fxI/s1600/th.JPG" height="426" width="640" /></a></div>
<br />
<br />
அன்றிலிருந்து துளசிம்மாவும் நானும் ஒரு ஈடுப்பாட்டுடனான நட்பு கொள்ள ஆரம்பித்தோம்.அறிவீர்களா இவரை என்ற பதிவுக்கு பல மாதங்களுக்கு முன்னர் கேள்விகள் அனுப்பி இருந்தேன்.அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பதில் எழுத மறந்து இருந்தார்.இன்று ஞாபகம் ஊட்டி நான் மெயில் போட்ட சில மணி நேரங்களுக்குள் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் பதில் அளித்து இருப்பது இதோ....<br />
<br />
1.உங்களின் மகத்தான சாதனை எது என்று நினைக்கின்றீர்கள்.<br />
<br />
பசங்களை வேணாம் வேணாமுன்னு வாய் சொன்னாலும், அவன்கள்(!) வந்தவுடன் செல்லம் கொஞ்சி மடிமீது எடுத்து வச்சுக்கும்படி கோபாலைப் பழக்குனதுதான் என் வாழ்வில் மகத்தான சாதனை.<br />
<br />
2.சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?<br />
<br />
பூஜை அறைக்கு ஓடிப்போய், வீட்டுலே இருக்கும் எம்பெருமானுக்கு நன்றி சொல்வேன். அடுத்து....?<br />
வேறென்ன உல்லாசமா பதிவு எழுத ஆரம்பிப்பதுதான்:-)<br />
<br />
3.சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?<br />
<br />
இல்லாமல் என்ன? இந்தியா என்றால் ஏன் நம்ம மக்கள்ஸ்க்கு சுத்தமா இருக்கணும். சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சுக்கணும் என்ற அடிப்படை சுகாதாரம் தெரியலைன்னு மனம் நொந்து கொள்வேன்.<br />
அதேபோல அரசியல் வியாதிகளின் நடவடிக்கையும் மனம் வெறுத்துப்போகும் சமாச்சாரம்.<br />
<br />
4.மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?<br />
<br />
மனித வாழ்க்கையே பலசமயம் சுமை போல இருக்கும். ஆனால்.... கண்களால் கண்டு மகிழ எத்தனை கோடி இயற்கை அழகை வைத்தாய் இறைவா என்று போற்றி ரசிக்கத் தோணும்.<br />
<br />
5.விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?<br />
<br />
எழுத்தைப் பற்றிய நியாயமான விமரிசனம் என்றால், குட்டு வாங்கிக்க என் தலை ரெடி. ஆனால் விமரிசனம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல், அருவருப்பான சொற்களில் வசவு எல்லாம் மனவேதனையைத் தரும்:(<br />
<br />
6.முதன் முதல் வலைப்பூவுக்கு எப்படி வந்தீர்கள்.வலைப்பூ எப்படி எப்போது அறிமுகமானது?<br />
<br />
முறுக்கைத் தேடிப்போய் எழுத்தில் வீழ்ந்தவள் நான்! ஒரு சமயம்.... ( அப்போதுதான் இணையத்தில் தமிழ் இருப்பதைக் கண்டுபிடித்து(!!) அதில் திளைத்துக் கொண்டுஇருந்த நேரம்) முறுக்கு என்ற சிறுகதையை சிலாகித்து ஒரு அன்பர் எழுதி இருந்தார். இது மரத்தடி குழுமத்து சமாச்சாரம். முறுக்கு கிடைக்கலையேன்னு புலம்பிக்கிட்டே இருந்தவள், இதற்காகவே யாஹூ ஐடி எடுத்து, அங்கே மரத்தாண்டை போய் விசாரிச்சேன். பிரபு ராஜதுரை என்பவர் முறுக்கை அனுப்பி வைத்தார். புது உலகம் என் முன் விரிந்தது! மரத்தடி குழுமத்தில் அங்கமாகி வெறும் கருத்துப் பரிமாற்றங்களோடு என் பொழுதுகள் போயின.<br />
<br />
சாம்பாரைப் பற்றிய ஒரு மடலில் என்னுடைய சாம்பார் விஸ்தரிப்பை ( ஐயோ...சுருக்கமா எழுத எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறேனோ?) எழுதப்போக, அப்போ மரத்தடி ஓனரா இருந்த மதி .கந்தசாமி அவர்களால் , மரத்தடி .காம் என்ற தொகுப்பில் அது வெளிவந்ததும் எனக்குத் தலைகால் புரியலை. இதுலே குழும நண்பர்கள் எல்லோரும் எனக்கு எழுத வருதுன்னு சொல்லிட்டாங்க!!!!<br />
<br />
ஆஹா.... சும்மா ஆடுன குரங்குக்குக் காலில் சலங்கை கட்டிவிட்டது போல் ஆச்சு. ஊக்குவித்த நண்பர்களைக் கதறடிச்சிட்டேனாக்கும், என் தொடர் எழுத்தால்:-) இது நடந்தது 2004 மார்ச் மாதம் தொடங்கி! எழுத்துரு எல்லாம் திஸ்கியில். நம்ம முத்து நெடுமாறன் அவர்கள் முரசு அஞ்சல் என்ற எழுத்துருவை அளித்து உதவினார்.<br />
<br />
அப்போதான் சிலமாதங்கள் கழிச்சு, நம்ம காசி ஆறுமுகம், தமிழ்மணம் தொடங்கினார். ஓடிப்போய்ப் பார்த்தேன்:-) கூட்டுக்குடும்பமான மரத்தடியில் இருந்து தனிக்குடித்தனமா ஆரம்பிச்சதுதான் துளசிதளம். 2004 செப்டம்பர். அப்போ என் எழுத்துக்கு வயசு அரை! காசி ஆறுமுகம் அவர்களின் உயிரை வாங்கி கலப்பையைப் பிடிக்கக் கற்றது முதல் புதுப் பிறவியானேன்:-)<br />
<br />
7.இதுவரை எந்த ஒரு பிளாக்கரும் செல்லாத அளவுக்கு நாடுகள் பல கண்டு விரிவாக கட்டுரைகளும் படங்களுடன் வலைப்பூவில் பகிர்ந்து விட்டீர்கள். சென்ற நாடுகளில் பிடித்த நாடு.செல்வதற்கு ஆசைப்படும் நாடு?<br />
<br />
கண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்பதே உண்மை. அதிலும் இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில் காணாதது இமயமலை அளவு! விடுமுறை, பயணம் என்று நினைத்தவுடன், சென்னைதான் மனசில் முதலில் வந்து வரிசையில் நிற்கிறது. சென்னைக்கும் எனக்கும் ஒரு லவ் அண்ட் ஹேட் ரிலேஷன்ஷிப் எப்போதும் உண்டு:-)<br />
<br />
செல்வதற்கு ஆசைப்படும் நாடு.......... இந்தியாதான். முணங்கிக்கொண்டே சுற்றிப் பார்ப்பேன்:-) இந்தியாவைப் பொறுத்தவரை, எத்தனை மாநிலங்களோ.... அத்தனை நாடுகள் என்ற கணக்குதான். வெறும் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் மக்களுடைய உணவுப்பழக்கம், உடை, மொழி, கோவில்களின் அமைப்புகள், நடனம் நாட்டியம் என்ற கலைசம்பந்தப்பட்டவைகள் எல்லாம் அடியோடு வேறாக அல்லவா இருக்கிறது!!!!<br />
<br />
8.வலைப்பூவில் உங்கள் எழுத்துக்களை கணவர் படித்து விமர்சனம் செய்வாரா?<br />
<br />
ஆரம்பகாலத்தில் என்னவோ கிறுக்குகிறாள் (கிறுக்கி) என்றுதான் இருந்தார். தலை நீட்டுவதில்லை. எனக்கும் நல்லதாப்போச்சு. நான் உண்டு என் எழுத்து உண்டுன்னு இருந்தேன். 2006 ஆறாம் ஆண்டு சென்னையில் உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் (இப்போது அது செம்மொழிப் பூங்கா!) பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். கணவர் கோபாலும் உடன் வந்தார். அப்போது அங்குவந்த பதிவுலக நண்பர்கள், துளசிதளம் வாசிப்பீர்களா என்று கேட்டதும் இவர் 'ஙே' !!!<br />
<br />
அதன்பின் நியூஸி திரும்பி வந்தபின் சில பதிவுகளை வாசித்தவர், தனக்கு பதிவு வெளியிடுமுன் ப்ரீவ்யூ வேணும் என்று ஆசைப்பட்டார். ஆஹா.... நம் எழுத்தின் சுவை ஆளை இழுக்குதேன்னு மகிழ்ந்து போய் வெளியிடுமுன் வாசிக்கக் கொடுத்தேன். ஆனால்...... இது ஏனிப்படி? அது ஏன் இப்படின்னு ஆரம்பிச்சவுடன், முழிச்சுக்கிட்டேன். இது வேலைக்காகாது. இனிமேல்பதிவு வெளியிட்டவுடன், மற்ற வாசகர்களில் நீங்களும் ஒருவராக இருந்து 'கொல்லுங்கள்' என்றேன்:-)<br />
<br />
இப்போதும் பதிவுகளை வாசிக்கிறார். ஆனால்............ காலையில் வாசிச்சது,மாலையில் நினைவு இருக்காது:(<br />
<br />
<br />
இன்னும் ஏதாவது உங்களை பற்றி..<br />
<br />
சொல்லிக்கொள்ள ஒன்றும் பெருசா இல்லை. இதுவரை மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நாலாவது அநேகமா இந்த புத்தக விழா சமயம் வரலாம். எழுத்து இல்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற உணர்வே எப்போதும் இருக்கிறது. காலை எழுந்தவுடன் கணினி என்றுதான் விடியல்.<br />
எழுதவந்தபின் நான் பெற்ற இன்பங்களைப் பட்டியல் இட்டால்...முதலில் வருவது சகபதிவாளர்களாகிய நண்பர்கள். அடுத்தும் அவர்களே . அதற்கடுத்தும் அவர்களே. நட்பு வட்டம் நாளொரு பொழுதும் விரிந்து வருவது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது என்பதே உண்மை!<br />
<br />
எனக்கு உங்களையெல்லாம் விட்டா...யாரிருக்கா? நேக்கு யாரைத் தெரியும்?<br />
<br />
வாய்ப்பு அளித்ததோழி ஸாதிகாவுக்கு என் அன்பும் நன்றியும்.<br />
<br />
வணக்கம்.<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-9939681690581072622014-05-04T12:24:00.001+05:302014-05-04T12:24:22.093+05:30கத்திரி வெயில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinfb2ZxzLYJRWO8BAdmls5ge-PXlt2IiAyP2SBWX55CPHLDcC6J4blWKupUPvX40YWGn5oTIVDl_JJ-yVBRVU2iWL_bCCNbow5ewN5YJIWabTRQPmemVf_aFOhGJqcaeZA7Rkf5Gx6oRs/s1600/sun.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinfb2ZxzLYJRWO8BAdmls5ge-PXlt2IiAyP2SBWX55CPHLDcC6J4blWKupUPvX40YWGn5oTIVDl_JJ-yVBRVU2iWL_bCCNbow5ewN5YJIWabTRQPmemVf_aFOhGJqcaeZA7Rkf5Gx6oRs/s1600/sun.jpg" height="477" width="640" /></a></div>
<br />
<br />
<br />
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டது.கோடை ஆரம்பித்த உடனே கத்திரி வெயிலை நினைத்து மக்கள் பயம் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.<br />
<br />
சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<br />
<br />
ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21-ந்தேதி முதல் வைகாசி மாதம் 14-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரிவெயில் காலம்.இன்றிலிருந்து வரும் 28 ஆம் தேதி வரை தொடங்கி முடிந்தாலும் பருவ நிலை மாறுதலால்,சில ஆண்டுகளாகவே கத்திரி வெயில் சீஸன் ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்த சீஸனில் வெயில் 114 டிகிரி வரை இருக்கும் என்று கருதுகின்றார்கள்.<br />
<br />
தமிழ்நாட்டில் அதிகளவு வெப்பம் பதிவு செய்யப்படும் இடம் வேலூர் என்று கூறுகின்றனர்.சென்னை நகரில் காலை 10 மணிக்கு மேல் வெளியில் சென்றால் அனல் காற்று சுட்டெரிக்கின்றது.கட்டித்தொழிலாளிகள் நடைபாதை கடை உரிமையாளர்கள்,போக்கு வரத்து காவலர்கள் இரண்டுசக்கரவாகனப்பயணிகள் நிலை கொடூரமானது.<br />
<br />
இந்தக்காலகட்டங்களில் நடுத்தரவர்கத்துக்கும் கீழுள்ளவர்கள் வீடுகளில் குளிர்சாதனவசதி செய்ய முடியாதவர்கள் மொட்டை மாடியையே படுக்கைஅறையாக மாற்றிகொள்வது வழக்கம்.புழுக்கத்தின் காரணமாக வீட்டினுள் உறங்கமுடியாத நிலை.<br />
<br />
வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தென் தமிழ்நாட்டில் லேசான மழையும்,சென்னையில் மேகமூட்டத்துடன் வெப்பம் தணிந்தும் உள்ளது இன்றைய நிலை மக்களுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியது.<br />
<br />
தொலைக்காட்சியில் ரமணன் தோன்றி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் 48 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து இருப்பது நிஜமாக வேண்டும் என்பதே சென்னை மக்களின் இன்றைய பிரார்த்தனை.<br />
<br />
வீதி தோறும் தர்பூசணிபழங்களும் இளநீரும் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.கரும்புச்சாறு மிஷின் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கும்.ஆங்காங்கே ஜூஸ்கடைகள் வண்டிகளில் முளைத்து இருக்கும்.அதுமட்டுமல்லாது தீபாவளி சீஸனில் பட்டாசு கடை முளைப்பது போல் மசாலா மோர் , ராகிக்கூழ் விற்பனைகளும் முளைத்து இருக்கும்.கிர்ணிப்பழங்களும்,வெள்ளரிக்காயும்.பனை நுங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.ஜுஸ் விற்பனை செய்யப்படும் வண்டிக்கடைகளிலும் சிறிய கடை வாயில்களிலும் டூவீலர்கள் கும்மி அடித்துக்கொண்டு இருந்தால் ஹாஜிஅலி ,ஃபுரூட் ஷாப் போன்ற கடைவாசல்களில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.பீச்சில் வண்டி பார்க் செய்ய இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறிகொண்டு இருப்பார்கள்.தூரத்தில் இருந்து பார்த்தால் கடலை விட மனித தலைகள்தான் அதிகளவில் காணப்படும்.இவை எல்லாம் கோடையின் அத்தாட்சிகள்.<br />
<br />
குளிபானங்களை தவிர்த்து கனிச்சாறுகளை,அருந்தி,சுத்தமான நீரை அதிகளவு பருகி,நார்சத்து ,நீர்ச்சத்து மிக்க காய்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அதிகளவு நீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.இதனால் ஈரப்பதம் உடலில் இருந்து ஆவியாக வெளியாவதை தவிர்த்துக்கொள்ளலாம்.<br />
<br />
காலரா,சின்னம்மை,மஞ்சள்காமாலை,பற்பல தொற்று நோய்கள் அணுகாதிருக்க ஆரோக்கியமாக குளிர்ச்சியாக உடலைபேணி ,ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு,வெயிலில் அதிகம் அலையாமல் அலையும் நேரத்துக்கு லேப்டாப் முன் அமர்ந்து நாலு பதிவை தேத்த ,கோடையை ஆரோக்கியமாக கழிக்க பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.<br />
<br />
டிஸ்கி: கிட்டதட்ட மூன்று மாதகாலம் என் வலைப்பக்கம் வராமல் கோடைகாலத்தில் ஜூஸ் கடை எட்டிப்பார்ப்பது போல் நானும் வலைப்பக்கம் எட்டி பார்த்து இருக்கிறேன்.<br />
<br />
ஹாட்டான நேரத்தில் ஒரு கூலான டவுட்: டிவி லேப்டாப்,ஸ்டவ்,மிக்ஸி,கிரைண்டர்,ஃபேன்,பொங்கல் பொருட்கள்,வேட்டி இவைகளை எல்லாம் இலவசமாக விநியோகம் செய்தது போல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் இலவச ஏசி விநியோகம் செய்யப்படுமா???<br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-68294596520577144752014-02-11T17:50:00.000+05:302014-02-11T19:34:59.211+05:30charisma 14<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkLDSE3hpbdW0PCl_N1h4KaNj0EdFukG9b98uq9HMfMNOaLh6mns1NU1-RjlOcNO0OcvQDuADT-qYiKFYT-NSQHgaG5cENcrOlxl0UZP6xWnWqMk8TZmn19FWjHwDl4dsmTXAkJd-xiQ/s1600/1+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgkLDSE3hpbdW0PCl_N1h4KaNj0EdFukG9b98uq9HMfMNOaLh6mns1NU1-RjlOcNO0OcvQDuADT-qYiKFYT-NSQHgaG5cENcrOlxl0UZP6xWnWqMk8TZmn19FWjHwDl4dsmTXAkJd-xiQ/s1600/1+(1).JPG" height="360" width="640" /></a></div>
<br />
தேனாம் பேட்டை எஸ் ஐ ஈ டி மகளிர் கல்லூரியில் இன்றும் நாளையும்<br />
<span style="font-family: Latha, TheneeUniTx, Verdana, Geneva, Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 16px; text-align: -webkit-center;">- </span><a href="http://shadiqah.blogspot.com/2014/02/charisma-14.html" style="font-family: Latha, TheneeUniTx, Verdana, Geneva, Arial, Helvetica, sans-serif; line-height: 16px; text-align: -webkit-center;" target="_blank"><span style="color: red; font-size: x-large;">charisma 14</span></a> திருவிழா நடை பெற்றுக்கொண்டுள்ளது.அங்கு ஒரு <a href="https://www.facebook.com/NishaHandmadeCollection">நெருங்கிய நட்பு </a>ஸ்டால் அமைத்து இருப்பதால் காலையிலே ஆஜராகி விட்டேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKF9UXPXADcXLyjfoNeCe76w2YtNu8Eja5Yo1AKoapwTN6R5aRcR57ok43VKeqGbUZ8mN7xFp0IDkahtPYa0goVERZoARFQAj6dq64Nu143W_sBnmQFmE1TSmzPgSMVkrAGBnlNP4dnMY/s1600/2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKF9UXPXADcXLyjfoNeCe76w2YtNu8Eja5Yo1AKoapwTN6R5aRcR57ok43VKeqGbUZ8mN7xFp0IDkahtPYa0goVERZoARFQAj6dq64Nu143W_sBnmQFmE1TSmzPgSMVkrAGBnlNP4dnMY/s1600/2.JPG" height="358" width="640" /></a></div>
<br />
<br />
குவிந்து இருந்த கூட்டத்தையும் இளசுகளின் உற்சாக ஆராவாரத்தையும் பார்க்கும் பொழுது அது நமக்கும் தொற்றிக்கொண்டு விட்டது<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhABjPyaR8LSyE5Md74D5zw5BkqxcESl83i9UF_1wpp68XyYEiNBjPUW4kZt9WtJGXNZozBSYdEsHRAyeCIWnBSMl_U4nWj0xH9bCnr6ahQ-7ufbvdsSU6N8U_B9clWj342L_OnNw6HzJ4/s1600/3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhABjPyaR8LSyE5Md74D5zw5BkqxcESl83i9UF_1wpp68XyYEiNBjPUW4kZt9WtJGXNZozBSYdEsHRAyeCIWnBSMl_U4nWj0xH9bCnr6ahQ-7ufbvdsSU6N8U_B9clWj342L_OnNw6HzJ4/s1600/3.JPG" height="358" width="640" /></a></div>
டீன்ஸ்கள் முதல் ஆண்ட்டிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஆடை அலங்கார அணிகலன்கள் வகை வகையாக டிஸ்ப்ளே செய்யப்பட்டு கண்களையும் மனதையும் கவர்ந்து பர்ஸை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.சேலைகள் சுடிதார்கள் குர்தீஸ் லெகின்ஸ் பர்தா ஷால்கள் துப்பட்டாக்கள் என வித விதமாக கண்காட்சியில் இருந்து கண்களை கவர்ந்திழுத்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE7TfnmOkfbMviclk_PF8_bUfsqABZCKUkRFCJ-MSnLPjmPs8KwUNHgDP_FuhhZanuYedBMR-HvaMlsT-vkkasbLTb1QwN2RJ_bjFlRU3UXUCCeUbZATVl2eujaqRutw3c6clzSpW9d2c/s1600/4.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhE7TfnmOkfbMviclk_PF8_bUfsqABZCKUkRFCJ-MSnLPjmPs8KwUNHgDP_FuhhZanuYedBMR-HvaMlsT-vkkasbLTb1QwN2RJ_bjFlRU3UXUCCeUbZATVl2eujaqRutw3c6clzSpW9d2c/s1600/4.JPG" height="358" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஆடிட்டோரியத்தில் பலவித கலை நிகழ்ச்சிகள் களைகட்டிக்கொண்டிருந்தன.அங்கிருந்து எழுந்து செல்ல மனதில்லாமல் தோழியின் அழைப்பை ஏற்று ஸ்டால்கள் அமைந்திருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1HN_zB-pQmv7nIQvY75ENbPTdJbqMqHqUWPhtvWlFV9Cd7MfMChCxzxla-Otr9Rl9dsHTpDVtURZ4YkcdReSLa4el9c7fba2uQNcNSULBwA2ZiOXCwhe4M9D_inV8y5hYJRN7SCW5xck/s1600/5.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1HN_zB-pQmv7nIQvY75ENbPTdJbqMqHqUWPhtvWlFV9Cd7MfMChCxzxla-Otr9Rl9dsHTpDVtURZ4YkcdReSLa4el9c7fba2uQNcNSULBwA2ZiOXCwhe4M9D_inV8y5hYJRN7SCW5xck/s1600/5.JPG" height="360" width="640" /></a></div>
<br />
எதிர் புறமாக அத்தனையும் சாப்பாட்டுக்கடைகள்.வழக்கம் போல் பலாபழத்தில் ஈ மொய்த்தது போல் மொய்த்துக்கொண்டிருந்தனர்.சிக்கன் வகைகள் கபாப் வகைகள் ரைஸ் ஐட்டங்கள் சாட் ஐட்டங்கள் ஐஸ் க்ரீம் கூல் டிரிங்ஸ் டீ காஃபி வடை கட்லட் சமோசா ரோல் சைனீஸ் ஐட்டங்கள் என்று மக்கள் கஞ்சத்தனம் பார்க்காமல் வக்கணையாக வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்ததைப்பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு நாமும் ஒரு சாப்பாட்டு ஸ்டாலை போட்டு சல்லிசா சல்லி அள்ளலாமே என்ற ஆர்வம் தலை தூக்கியதை மறுப்பதுக்கில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimW8vhevkZXnYt7hj3KObzHy-PyDyZdfgMAaV2Xh19vrM75vYlBbrAede06aUcfFC-V0UvOE_Wtbr5TLj8MoJngxk8QMHQMn9AfPSdci5bVYzsYCjQHBnv05aF0b34zyCivEnZ_YUAZfw/s1600/6+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimW8vhevkZXnYt7hj3KObzHy-PyDyZdfgMAaV2Xh19vrM75vYlBbrAede06aUcfFC-V0UvOE_Wtbr5TLj8MoJngxk8QMHQMn9AfPSdci5bVYzsYCjQHBnv05aF0b34zyCivEnZ_YUAZfw/s1600/6+(1).JPG" height="360" width="640" /></a></div>
<br />
<br />
வீட்டுபயோகப்பொருட்கள்,கைவிணைப்பொருட்கள்,அலங்காரப்பொருட்கள் என்று விதம் விதமாக அடுக்கி வைப்பட்டு இருந்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvn0b1jGDrZch65CDYnp_K-G1ml46QoLAeoecNOw3vScpJ3Z8zlI7yKEA2sd7imv0OczPxNyWrk9oKNgEiVyRNBC3z_Z_ZiPUbKb12ZKOx7Y-9ScoADNO1scLRYTJ2SwzBWplbvCBgrM/s1600/7.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvn0b1jGDrZch65CDYnp_K-G1ml46QoLAeoecNOw3vScpJ3Z8zlI7yKEA2sd7imv0OczPxNyWrk9oKNgEiVyRNBC3z_Z_ZiPUbKb12ZKOx7Y-9ScoADNO1scLRYTJ2SwzBWplbvCBgrM/s1600/7.JPG" height="360" width="640" /></a></div>
<br />
ஒரு இளம் தாய் தன் குழந்தையை அருகில் படுக்க வைத்துக்கொண்டு மிஷின் போல் நிமிடத்தில் பாசி மாலைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.கைகள் மணிமாலைகளை கோர்த்துக்கொண்டும் வியாபாரமும் நடத்திக்கொண்டும் இருந்த பொழுது கிளிக் செய்தேன்.புகைப்படம் எடுக்கட்டுமா என்று கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன் ஓப்புக்கொண்டார்.அத்தனையும் அவரது சொந்த தயாரிப்புக்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjKUQ8o4OatIvBBDClHB4KEDF9PbAvG7Zow8qrrBmBircI80EGPy3VQaz0PWZNmW03YedjVDq7XAWXE8m1RVCfPo38ZLgx4G3nj5ffSutC98xizryjpOC5WdDmqS84NRuYbUprD-YWv8I/s1600/8+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjKUQ8o4OatIvBBDClHB4KEDF9PbAvG7Zow8qrrBmBircI80EGPy3VQaz0PWZNmW03YedjVDq7XAWXE8m1RVCfPo38ZLgx4G3nj5ffSutC98xizryjpOC5WdDmqS84NRuYbUprD-YWv8I/s1600/8+(1).JPG" height="358" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
க்வில்லிங்கில் அணிகலன்கள்.பார்க்கவே அழகாக இருந்தன.இரு தோழியர் சேர்ந்து கடையை நடத்துகின்றனர் போலும்.முதலாமவர் மட்டும் பொழுது இருந்த பொழுது அவரது அனுமதி பெற்று இரண்டு படங்களை க்ளிக் செய்து விட்டேன்.மூன்றாவதாக க்ளிக் செய்த பொழுது இன்னொரு நண்பி வந்து தடுத்து விட்டார்.எங்களைப்பார்த்து காப்பி அடித்து விறபனைக்கு வைத்துவிடுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.தயவு செய்து படம் எடுக்காதீங்க என்று ரொம்ப தாராள மனதுடன் கூறும் பொழுது நமது வலை உலகத்தோழி க்வில்லிங் குயீன் ஏஞ்சலின் கை வண்ணத்தில் மலர்ந்து வலைப்பூவில் மணக்கும் வகை வகையான க்வில்லிங் வேலைப்பாடுகள் நினைவுக்கு வந்தன.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0OgbMbRbOwTBILiOxDzgkX50tOHSNQaXbTmRsT4TYZfKsJ_5DjCIK19mf3D8hlTLgHxcrENB0xbZw1FnXkhMmC4XGuWRouzY4c8AqVkoL6F6sJrKPo1ZRsdhNkhx_tl-5Ftz3JxVTa_I/s1600/9+(2).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0OgbMbRbOwTBILiOxDzgkX50tOHSNQaXbTmRsT4TYZfKsJ_5DjCIK19mf3D8hlTLgHxcrENB0xbZw1FnXkhMmC4XGuWRouzY4c8AqVkoL6F6sJrKPo1ZRsdhNkhx_tl-5Ftz3JxVTa_I/s1600/9+(2).JPG" height="358" width="640" /></a></div>
<br />
இதுவும் க்வில்லிங் அணிகலன்கள்தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBSaduCT2OEg0hw6cr1nT7mFU7jBsUw6svX5yHPPWTv83ztYqhyphenhyphenTuJK_Q3H-7DcQIPE112nxyGR6Je10zal3AXLDPl8TvX0gkded61OsX7APLLpLh_idCjCFJ_VjZXk9qfh0BMHGgYN58/s1600/10.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBSaduCT2OEg0hw6cr1nT7mFU7jBsUw6svX5yHPPWTv83ztYqhyphenhyphenTuJK_Q3H-7DcQIPE112nxyGR6Je10zal3AXLDPl8TvX0gkded61OsX7APLLpLh_idCjCFJ_VjZXk9qfh0BMHGgYN58/s1600/10.JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
இதுதான் நமது நெருங்கிய தோஸ்துவின் ஸ்டால்.precious கற்கள்கோர்த்து அழகாக ரிச் ஆக தனது அதீத கற்பனை திறனை வைத்து வித விதமான நகைகள்.பர்சுக்கள்,மொபைல் பவுச்,சுவர் ஓவியங்கள்.செருப்பு கைவினைப்பொருட்கள் செயற்கை மலர்கள் என்று செய்வதில் கில்லாடி<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_1Bx6NG03iYSvQLYguyGSgKvtUoq0euH7gydeJcGI0xHbTU_zJlFtXcnj1oIsTZuWfjHJjNoC8_XNVND1Z1vyyypfoDczn9_AmRijvHkyMacwx0SUygwFjw958U2TJztGmkojRE0prS4/s1600/11+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_1Bx6NG03iYSvQLYguyGSgKvtUoq0euH7gydeJcGI0xHbTU_zJlFtXcnj1oIsTZuWfjHJjNoC8_XNVND1Z1vyyypfoDczn9_AmRijvHkyMacwx0SUygwFjw958U2TJztGmkojRE0prS4/s1600/11+(1).JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மாலைகள் மோதிரங்கள் என்று பலவும் டிஸ்ப்ளேயில் வைத்து இருந்தார்.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhINufw822MjBBbbM2lIggea5JzkFmYvlIbczoEp5TN7Ex6rPAmMc87NUJejCEUU0Oj1OCjt2-LTB0xnEngsGgTqOEqkBY5A7n3tkEnraj3VE8ocJekahNxRo6-Z5leEmJxjwGWsPXzRYU/s1600/12.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhINufw822MjBBbbM2lIggea5JzkFmYvlIbczoEp5TN7Ex6rPAmMc87NUJejCEUU0Oj1OCjt2-LTB0xnEngsGgTqOEqkBY5A7n3tkEnraj3VE8ocJekahNxRo6-Z5leEmJxjwGWsPXzRYU/s1600/12.JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இவைகளும் அவரது தயாரிப்பில் உருவானவை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi97gJIyOzXsB_Ipy18rhBvXaIrj9t48MeF8eiaqIsCaHOSIsdcIB8dDChCZhL8csxf1Pie25mWdi7nSYWAUIb-w8QYUwnDsirhHBuVBXeEr-ZPKXdxf_4EvWljBg3503nX07A6guTexHo/s1600/13.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi97gJIyOzXsB_Ipy18rhBvXaIrj9t48MeF8eiaqIsCaHOSIsdcIB8dDChCZhL8csxf1Pie25mWdi7nSYWAUIb-w8QYUwnDsirhHBuVBXeEr-ZPKXdxf_4EvWljBg3503nX07A6guTexHo/s1600/13.JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
சாதரண செப்பலில் அவரது கைத்திறன் மிளிகின்றது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG3DYc-0gksj-XmdApuaAp1NMXotYzcBMpY7sTka7_1QnmKeZ3WTnKoTvQAEbIzJTES_DoKPY5TcFnAB7keVO1pykdG9HV3zvyU7QJg45-TFsZAgkoYmfowhHMYOSQkdpn1ujzfUq_KJU/s1600/14.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG3DYc-0gksj-XmdApuaAp1NMXotYzcBMpY7sTka7_1QnmKeZ3WTnKoTvQAEbIzJTES_DoKPY5TcFnAB7keVO1pykdG9HV3zvyU7QJg45-TFsZAgkoYmfowhHMYOSQkdpn1ujzfUq_KJU/s1600/14.JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
அழகான பறவைகளும் அது இடாத முட்டைகளும்.இவைகள் எல்லாம் என் நண்பியின் ஸ்டாலில் கிடைக்கின்றது.நாளைதான் கடைசி நாள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp-tJ7HNVe-HRxOwwJYVPErPwRd4GE_eGKeLABwQpqINwcriv4YPoQPge3cAWxxOhSpldUB2lj6iJanYfXnA9x5BbdfH7REXAXqudnZwEucXWXH8lBOiJurz2ZnbSs2-ylbeDYL7f0vQw/s1600/15.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp-tJ7HNVe-HRxOwwJYVPErPwRd4GE_eGKeLABwQpqINwcriv4YPoQPge3cAWxxOhSpldUB2lj6iJanYfXnA9x5BbdfH7REXAXqudnZwEucXWXH8lBOiJurz2ZnbSs2-ylbeDYL7f0vQw/s1600/15.JPG" height="360" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
கடைசியாக திரும்பும் பொழுது இந்த பாப்பா என் கண்களை விட்டு அகல மறுத்து விட்டது.அழகாக ஸ்கார்ஃப் போட்டு பவ்யமாக சிரித்துக்கொண்டு இருந்த பாங்கு எல்லோரையும் கொள்ளை கொண்டு விட்டது.கடைகளை பார்க்காமல் சிலர் இந்த குழந்தையின் சுட்டியை ரசித்துக்கொண்டு இருந்தனர்,அதன் தாயிடம் அனுமதி பெற்று க்ளிக் செய்தேன்.</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-24349745168811964252014-01-23T14:38:00.003+05:302014-01-23T14:38:58.138+05:30வீடு வாடகைக்கு....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf8KRo4ZVcVuGh-nBqCuIipc-b-6_8jG88VlVNlwTSHjKvs-0mTUhf8ntrh3B8_DoEc40w-Aa2IUVFZ4ZXJXXJjDE_PzTHlluXHSRdHeJ3nHf0Zxbn9gV6r9bvtAXWs0k1NexVu93sKcw/s1600/home.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf8KRo4ZVcVuGh-nBqCuIipc-b-6_8jG88VlVNlwTSHjKvs-0mTUhf8ntrh3B8_DoEc40w-Aa2IUVFZ4ZXJXXJjDE_PzTHlluXHSRdHeJ3nHf0Zxbn9gV6r9bvtAXWs0k1NexVu93sKcw/s1600/home.jpg" height="324" width="640" /></a></div>
<br />
<br />
<span style="color: blue;">வீட்டு உரிமயாளர்கள் என்பது இங்கு சென்னையைப்பொருத்தவரை வாடகைதாரர்களுக்கு ஹிட்லர்கள் என்ற நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில பல வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">வீட்டு வாடகைக்கு என்று போனால் எங்கே வேலை பார்க்கறீங்க?வயசானவர்கள் இருக்காங்களா?சின்ன குழந்தைகள் இருக்கா?எத்தனை பேர் இருக்கீங்க?கவுச்சி சாப்பிடுவீர்களா?அடிக்கடி சொந்தக்காரங்க வந்து தங்குவார்களா?ராத்திரி 10 மணிக்குள் வந்து விடுவீர்களா?அம்மிக்கல் போன்ற சாமான்கள் உள்ளதா?வாடகைக்கு ரசீது கேட்பீர்களா?உங்கள் பொருட்கள் எல்லாம் ஒரு டெம்போவில் அடங்கி விடுமா? மலை அளவு பொறுமை சாலிகளையே புரட்டிப்போடும் அளவுக்கு தேவை அற்ற எரிச்சலூட்டும் கேள்விகளை எல்லாம் சமாளித்து எதிர் பாராத அளவு வாடகையையும்,அட்வான்சையும் கேட்டு வாய் பிளந்து வேறு வழி இல்லாமல் கெஞ்சி கூத்தாடி குறைத்து வாடகைக்கு குடி வந்தால் அதற்கப்புறமாவது நிம்மதி இருக்குமா?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“யாரைக்கேட்டுட்டு டிரில் போடுறீங்க..முதல்லே அதை நிறுத்துங்க..”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“கவுச்சி சாப்பிடுவீங்கன்னு சொன்னீங்கதான்.நானும் ஒத்துக்கொண்டேன்தான்.அதுக்காக நாள் கிழமை கூட பார்க்காமல் சமைக்கிறதா?”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“உங்க சொந்தக்காரங்க வந்து ரெண்டு நாளைக்கும் மேலாகுது இன்னும் போகலியா?ரெண்டு தடவை மோட்டார் போடுவது இப்ப மூன்று வேலையாகி விட்டதே?”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“என்னது... டமால்ன்னு சப்தம்? எவர்சில்வர் பாத்திரம் கீழே விழுந்து விட்டதா?மண்டைக்குள் வந்து எதோ விழுந்த மாதிரி ..இனியாவது ஜாக்கிரதையாக இருங்க”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">“பாப்பா நொய் நொய்ன்னு அழுதுட்டே இருந்ததே.ராத்திரி பூரா தூக்கமே இல்லை.கொஞ்சம் அழாமல் பார்த்துக்கக்கூடாது”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இப்படி எக்குதப்பான கேள்விகளை எல்லம் சகித்து,பொறுமையாக பதில் சொல்லியாக வேண்டும் என்பது வாடகை தாரர்களின் தலைவிதி.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்படும் தரகர்கள் எக்கசக்க வாடகையை உயர்த்தி விடுகின்றனர்.சென்ற வருடம் ஒரு குடித்தனக்காரரை வாடகைக்கு அமர்த்தித்தந்த தரகர் மறு வருடம் வீட்டு உரிமையாளரிடம் சென்று அவர்களை காலி செய்யுங்கள்.நான் அதைவிட அதிக வாடகையில் இன்னொருவரை அழைத்து வருகிறேன் என்று கமிஷனுக்கு ஆசைப்பட,வாடகை அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய முனைகிறார்..இனி என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சாமான் சட்டிகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்துக்கு மாறும் அவலத்துக்கு உள்ளாகின்றனர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">20 ஆயிரத்துக்கு மேல் வாடகை கொடுக்கும் வாடகைதாரகள் படும் அவலத்தை விட குறைந்த அளவு வாடகையில் பட்ஜெட் வீடுகளில் இருப்பவர்கள் படும் அவலம் இன்னும் அதிகமே.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">வீட்டு வாடகை 4000 என்று எடுத்துக்கொண்டால் மின்சாரக்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர்.முறைவாசல்,தண்ணீர்,கோலப்பொடி,துடைப்பம்,பினாயில்,பிளீச்சிங் பவுடர் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு போட்டு காசு பறிக்கின்றனர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இரவு பத்து மணி ஆகிவிட்டால் வீட்டு உரிமையாளர்களால் கேட் பூட்டப்பட்டு விடுகிறது.அதன் பிறகு வருபவர்கள் கெஞ்சி,கூத்தாடி வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டுதான் உள்ளே அனுமதிக்கப்படுன்றனர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">பல இடங்களில் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த இடம் இருந்தும் வாடகையாளர்களின் கார்களை காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . கார் விட தனியாக வாடகை கேட்கின்றனர்.அல்லது குடித்தனம் இல்லாத ஒருவரின் காரை உள்ளே விட அனுமதித்து அதற்கு தனி வாடகை பெற்று வருகின்றனர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">காசோலையை வாடகைக்கு வாங்கிக்கொள்ளாதவர்களும்,வாடகைக்கு ரசீது கேட்டால் கூட 1000 தந்தால் ரசீது தருவேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக காணப்பட்டாலும் காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடும் பெரிய மனதுக்கார வீட்டு உரிமையாளர்கள் எண்ணிலடாங்காது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தேவைக்கு ஆணி அடித்தால் ஆப்பு வைக்கும் உரிமையாளர்,பக்கத்திலேயே வீட்டு உரிமையாளர் குடி இருந்து விட்டால் பல்லை காட்டியே பல் சுளுக்கிக்கொள்ளும் வாடகை தாரர், உரிமையாளர்களின் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து அடங்கிப்போகும் வாடகையாளர்களின் குழந்தைகள்,அவ்வப்பொழுது உரிமையாளர்கள் ஏவும் வேலைகளையும் செய்வது.குழந்தைகளைப்பார்த்து ”டிவி வால்யூமை கம்மி பண்ணுடா.வீட்டு ஓனர் சப்தம் போடப்போகிறார்” என்று குழந்தைகளை அதட்டுவது இதெல்லாம் சகஜமாக நிகழும் நிகழ்வுகள்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">காலி செய்யும் பொழுது அட்வான்சை முழுதாக கொடுப்பார்கள் என்றால் அதுவும் கிடையாது.வீட்டை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து விட்டு ஒவ்வொரு குறைகளையும் கண்டு பிடித்து அதற்கெல்லாம் பணத்தைப்பிடித்துக்கொண்டு ஒரு சிறிய தொகையை தருவார்கள்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இன்னும் சிலர் நாங்கள் தரும் பொழுது பெயிண்ட் அடித்து தந்தோம் அதே போல் திருப்பித்தரவேண்டும் என்ற் அடாவடி செய்பவர்களும் உண்டு.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அவை அனைத்திலும் கொடுமை என்னவென்றால் ஒரு வருடம் ஆனதும் பலர் பெண்ணுக்கு கல்யாணம் மகனுக்கு கல்யாணம் தம்பி குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று கூசாமல் பொய் சொல்லி காலி செய்து அதிக வாடகைக்கு வேறொரு குடும்பத்தினரை அமர்த்துவது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">வாடகைதாரர்கள் வாழ்வில் இத்தனை கஷ்டங்களும் வருடத்திற்கு ஒரு முறை நடக்குமென்றால்..யோசித்துப்பாருங்கள்...!</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்படி என்றால் வீட்டு உரிமையாளர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களா?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இதனை இன்னுமொரு ஒரு பதிவினில் அலசுவோம்.</span><br />
<br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-8620448337073233722014-01-16T14:46:00.000+05:302014-01-16T20:08:22.850+05:30இமாவின் ஃபீஜோவா ரெலிஷ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCpbDNrwNerzELR76P8Mp290mkUaaOSD_M32BXRuOF3523jxz-TiOnTi5jVUfhSTKcxmgmB9Off9cUpbvn0f9xU6UdlZIwjIeHk15Ok7RelhjyiEGdsCky_P34v7nr0-nWfspAaabxmTk/s1600/DSC05581.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCpbDNrwNerzELR76P8Mp290mkUaaOSD_M32BXRuOF3523jxz-TiOnTi5jVUfhSTKcxmgmB9Off9cUpbvn0f9xU6UdlZIwjIeHk15Ok7RelhjyiEGdsCky_P34v7nr0-nWfspAaabxmTk/s1600/DSC05581.JPG" height="179" width="320" /></a></div>
<br />
<br />
சென்னை இண்டர்நேஷனல் ஏர்போர்டில் டிராலியைத்தள்ளிக்கொண்டே வந்த இமா - க்றிஸ் தம்பதிகள் நான் ”ஹலோ இமா”என்று சப்தமாக அழைத்ததை சற்றும் எதிர் பார்க்கவில்லை.எங்கேயோ பார்த்துக்கொண்டு,யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தவர்கள் அங்கே என்னைப்பார்த்ததில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி.தான் ஊர் வரப்போவதைப்பற்றி எனக்கு அறிவிக்காமலேயே நான் ஏர்போர்ட் சென்று அழைக்க வந்திருக்கும் பொழுது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லைதானே?<br />
<br />
இமாவின் உறவினர்கள் இவ்வாண்டு விடுமுறைக்காக இமா தம்பதிகளை கனடா அழைத்தும்,கனடா செல்லாமல் இந்தியா வந்தது நட்புக்களைக்கண்டு மகிழ்வதற்காக மட்டுமே என்ற காரணத்துக்காகத்தான் என்பதைப்பார்க்கும் பொழுது நட்புக்கு எத்தனை முக்கியத்துவம் தருகின்றார் என்பதை அறிய முடிகிறது.<br />
<br />
பக்கத்து நாட்டில்(கொழும்பு) இருந்து கொண்டே அருகே இருக்கும் இந்தியாவுக்கு வராமல்,மிக தூர தேசத்துக்கு (நியுஸிலாந்த்)சென்று குடி அமர்ந்த பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முறையாக இந்தியா வந்து சென்றார்.இந்திய நட்புக்களின் அன்பும்,நேசமும் மிக சீக்கிரமாக இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.இந்தியாவில் தான் பெற்ற இனிமையான அனுபவங்கள்,சந்தோஷமான தருணங்கள் தாம் இமாவை மீண்டும் இங்கே அழைத்து வந்து விட்டது எனலாம்.<br />
<br />
பொதுவாக சமையல் குறிப்புக்கள் கொடுக்கும் நட்புக்களுக்கு பின்னூட்டம் கொடுப்பவர்கள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ் என்று விளையாட்டாக பின்னூட்டம் கொடுப்பார்கள்.அப்படியே நானும் அவரது <a href="http://imaasworld.blogspot.co.nz/2013/07/blog-post.html">ஃபீஜோவா ரோல் அப்</a> சமையல் குறிப்புக்கு //ஃபீஜோவா ரோல் அப் பார்த்ததுமே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.உங்கள் ஊர் பனம்பழம் பினாட்டு ஞாபகம் வருது.சிப்ஸும் சூப்பர்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது ஒரு பார்சல் பிளீஸ்.:) //இப்படி விளையாட்டாக பின்னூட்டினேன்.இதனை என்றோ மறந்தும் விட்டேன்.<br />
<br />
ஆனால் இமா ஃபீஜோவா தயாரிப்பான <a href="http://www.arusuvai.com/tamil/node/26103">ஃபீஜோவா ரெலிஷ்</a> பாட்டில் ஒன்றினை என்னிடம் கொடுத்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அவரது மென் சிரிப்பில்தான் எனக்கு மெள்ளமாக புரிந்தது.<br />
<br />
ஃபீஜோவா ரெலிஷ் தயாரிக்கும் பொழுது சர்க்கரை, மிளகாய் ,உப்பு ,கருவா மட்டும் சேர்த்து சமைக்க வில்லை.அவரது அன்பையும் பாசத்தையும் கள்ளமில்லா நட்பையும் சேர்த்து சமைத்து பாதுகாத்து பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுத்த தருணத்தை எண்ணி நெகிழ்கிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_GSnfCHLgjpW8thQ0H59qcJN9jHM83d4Omr2Lm9XVF4BzOAIUEZG96vYc-czluasmEM3QqhCci_VaNRMx1HeE7QSeHBc0mR11kUYfdBVkv18BJ257xLFcOIUI_BzVF4wNT-bUa0duo50/s1600/DSC05578.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_GSnfCHLgjpW8thQ0H59qcJN9jHM83d4Omr2Lm9XVF4BzOAIUEZG96vYc-czluasmEM3QqhCci_VaNRMx1HeE7QSeHBc0mR11kUYfdBVkv18BJ257xLFcOIUI_BzVF4wNT-bUa0duo50/s1600/DSC05578.JPG" height="179" width="320" /></a></div>
<h1 style="background-color: white; font-family: verdana, arial, sans-serif; font-size: 1.6em; margin: 0px; padding: 0px;">
<br /></h1>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4k7vy9YTRXe13kAl7suV2yCuQ9mmr6gfum6x1LDrD8AzVslREfrvWllxRBTNXbj-ojwnSGQn-bLm5EayCIUpT86BVHN2cpI_pngwTdYoCaQ0_w_hj3iEo2dR2uBy3CY5fZppCzVV9ESg/s1600/DSC05579.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4k7vy9YTRXe13kAl7suV2yCuQ9mmr6gfum6x1LDrD8AzVslREfrvWllxRBTNXbj-ojwnSGQn-bLm5EayCIUpT86BVHN2cpI_pngwTdYoCaQ0_w_hj3iEo2dR2uBy3CY5fZppCzVV9ESg/s1600/DSC05579.JPG" height="179" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrohMY-KG9v58Ns8E9HOUl6Th0QuostviNJh-zZPl3dUlQdwKsiskosjvGKLdHrCniTvClaR0ckhZ489xSqNfgeT_Pu8Fct7ZtfOAMk59dCyIrBfPuTk3kAlWXqhZzZ9lKwYokE92P6no/s1600/DSC05582.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrohMY-KG9v58Ns8E9HOUl6Th0QuostviNJh-zZPl3dUlQdwKsiskosjvGKLdHrCniTvClaR0ckhZ489xSqNfgeT_Pu8Fct7ZtfOAMk59dCyIrBfPuTk3kAlWXqhZzZ9lKwYokE92P6no/s1600/DSC05582.JPG" height="179" width="320" /></a></div>
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-2992053630016730232013-12-09T09:54:00.004+05:302013-12-09T10:49:11.111+05:30அஞ்சறைப்பெட்டி - 9<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj44QEgG1r5JrjTH7d0sgTOx_95kJxvwpV8Z5g4u_5PdUpmjuL4KT0ns42ul-qEhkCsaNjjD3yxkXgV-sEfBN2-8PYMfZOst0d42tn30T-4j33opBa4Cb28YYG3YPNDITdQHhEvMMj1iBo/s1600/11111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj44QEgG1r5JrjTH7d0sgTOx_95kJxvwpV8Z5g4u_5PdUpmjuL4KT0ns42ul-qEhkCsaNjjD3yxkXgV-sEfBN2-8PYMfZOst0d42tn30T-4j33opBa4Cb28YYG3YPNDITdQHhEvMMj1iBo/s640/11111.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<div style="background-color: white;">
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;">1.என் சொந்த ஊரில் நடைபெறும் அநேக திருமணங்கள் மணமகள் வீட்டில்தான் நடை பெறும்.வீட்டு வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் சேர்களில் ஆண்களும்,வீட்டுனுள் பெண்களும் அமர்ந்து இருப்பார்கள்.பெண்கள் அனைவரும் தத்தம் செருப்புகளை வாசலிலேயே விட்டு விட்டு வருவது வழக்கம்.அந்நேரங்களில் பலர் செருப்புக்களை தொலைத்ததுண்டு.எனக்கும் நிறைய அனுபவம் உண்டு.ஒரு முறை ஒரு திருமணத்திற்கு சென்ற பொழுது செருப்பு கழற்றும் இடத்தில் ஒரு கேமரா மாட்டப்பட்டு இருந்தது.அட..நல்ல ஐடியாகவா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.செருப்புத்திருடர்கள் இனி பயப்படுவார்கள்தானே?</span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;">2.சமீபத்தில் பிரபல ஷோரூம் ஒன்றில் எலெக்ட்ரானிக் பொருள் ஒன்று வாங்கினேன்.பில்லிலேயே டிரான்ஸ்போர்ட்டுக்கு 150 ரூபாய் என்று குறிப்பிட்டு இதனை வண்டிக்காரரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறினர்.பொருள் வீட்டுக்கு வந்ததும் 150 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தால் ”எனக்கு ஏதாவது சேர்த்துக்கொடு என்றார்.”வண்டிக்காரர்.”உனக்குதானேப்பா இந்த கூலி”என்று கேட்டால் வெறுமையான சிரிப்புதான் வருகிறது.தொடர்ந்து வேலை தரும் காரணத்தினால் கடைக்கு 100 ரூபாயும்,கூலிக்காரருக்கு 50 ரூபாயுமாக பிரித்துக்கொள்கின்றனராம்.பிச்சை எடுத்ததாம் பெருமாள்.அதை பிடுங்கி தின்னுச்சாம் அனுமார்.</span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;">3.இரு சக்கரவாகனத்தில் பெட்ரோல் காலியாகும் நிலை.100 ரூபாய் கொடுத்து பெட்ரொல் போடச்சொல்லி விட்டு கைபேசியில் சுவாரஸ்யமாக பேசியதில் பெட்ரோல் நிரப்புவதை கவனிக்க தவறி விட்டார் என் பையன்.சில அடி தூரம் கூட வண்டியில் சென்று இருந்திருக்க மாட்டார் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.உடனே பைக்கை தள்ளிக்கொண்டே மீண்டும் பெட்ரோல் பங்க் வந்து சப்தம் போட்ட பொழுது உள்ளே இருந்த மேனேஜர் வந்து விசாரித்து இருகின்றார்.பெட்ரோல் போட்ட ஆள் திரு திரு வென விழிக்க ,மிகவும் கடினமாக பெட்ரோல் போடுபவரை கண்டித்து வேலையை விட்டு நிறுத்துவதாகவும் சப்தம் போட்டு விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி அனுப்பி இருக்கின்றார்கள்.100 ரூபாய்தானே இதைக்கேட்டுக்கொண்டெல்லாம் திரும்ப வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியம்தான் போலும்.அதன் பின்னர் இரண்டு முறை மூன்று முறை அந்த பெட்ரோல் பங்க் சென்றபோதேல்லாம் ஏற்கனவே பெட்ரொல் போடுவதில் தகிடுதத்தம் செய்த ஊழியரை காணவில்லை.</span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;">4.ஆஸ்திரேலியாவில் ஒரு நகைக்கடைக்கு சென்ற திருடன் சுமார் முப்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர மோதிரங்களை திருடும் பொழுது பிடிப்பட்ட தருணத்தில் மோதிரங்களை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.கடை ஊழியர்கள் துரத்தி சென்று திருடனை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனராம்.இப்பொழுது திருடனின் வயிற்றுக்குள் இருக்கும் மோதிரங்களை எடுக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றர்.இந்த திருடனுக்கு வயிற்றுக்குள் லாக்கர் இருக்கிறது போலும்!</span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;">5.சென்னையில் 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.அயல் நாட்டுக்கு ஈடாக அனைத்து வசதிகளும் அமையப்பெற்று சென்னைவாசிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் பயன்பாட்டுக்கு வர துரிதமாக பணி நடந்துவருகிறது.ரெயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெற்றிலை எச்சில்கள்,குப்பைகூளங்கள்,உணவுக்கழிவுகள் என்று அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று இப்பொழுதே மனம் சஞ்சலப்படுகிறது.</span></div>
<div>
<span style="color: blue; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<br /></div>
</div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-40970466426836065512013-12-04T16:53:00.001+05:302013-12-04T17:04:59.692+05:30இரவல் புத்தகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrJH0ec5m_lceqPeGw_J0EqOqGVFJzSM7-cDMnU2BMqIQ_LUeWTKn-dOX5PWT-beBzcwWRYUXVr-Ma-LchInvvyFLxVMI2TI_aT2JrbG522An6ocExAug9N742PGLH0YTt4j5NXRfW5vU/s1600/book.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrJH0ec5m_lceqPeGw_J0EqOqGVFJzSM7-cDMnU2BMqIQ_LUeWTKn-dOX5PWT-beBzcwWRYUXVr-Ma-LchInvvyFLxVMI2TI_aT2JrbG522An6ocExAug9N742PGLH0YTt4j5NXRfW5vU/s320/book.JPG" width="305" /></a></div>
<br />
<br />
சென்ட்ரல் ஸ்டேஷன்..<br />
<br />
வழக்கம் போல் அதே ஆர்ப்பாட்டத்துடன்,ஜனத்திரளாக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.தூரத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் போர்டை டஜன் கணக்கு தலைகள் மறைக்க எம்பி எம்பி பார்த்து பெங்களூர் செல்லும் சதாப்தி நான்காவது பிளாட் பாரத்தில் நிற்பதை அறிந்து கொண்டுஅவசரமாக தோளில் மாட்டி இருந்த பேகை சுமந்து கொண்டு ,டிராலியை இழுத்துக்கொண்டு எதிர் பட்ட கடையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் பொழுதை போக்க வேண்டுமே என்பதற்காக வாராந்திரபத்திரிகை ஒன்றினையும் வாங்கிக்கொண்டேன்.பத்திரிகையுடன் இலவசமாக ஒரு பவுச் மூட்டு வலித்தைலத்தையும் மறக்காமல் வாங்கிக்கொண்டு ரயில் ஏறினேன்.<br />
<br />
வண்டி கிளம்புவதற்கு தயாராக இருந்தது.ஏஸி சில்லிப்புடன் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.எனக்குறிய இருக்கை எண்ணை கண்டு பிடித்து அருகே சென்ற பொழுது ஜன்னலோர சீட்டில் என் வயதை ஒத்த ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.<br />
<br />
கைப்பையையும்,டிராலி பேக்கையும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்து விட்டு இருக்கை மீது வைத்து விட்டுப்போன வார இதழை பிரித்தேன்.<br />
<br />
பிரித்ததுதான் தாமதம் அருகில் இருந்தவர் என் தோளுடன் ஒட்டி உரசிக்கொண்டு என் கையில் இருந்த பத்திரிகையை பார்வையால் மேய ஆரம்பித்தார்.<br />
<br />
எனக்கு யாரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஒட்டி உரசிக்கொண்டு இருப்பது பிடிக்காத விஷயம்.மிகவும் நெருங்கிய நண்பர்களாயினும் அரை அடி தள்ளியே அமருவேன்.நண்பர் பட்டாளம் என்னை சூனா மானா என்று நக்கலாக பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாகப்பட்டது சுத்த மகாராஜா.அப்படி பட்ட எனக்கு முன் பின் தெரியாத ஒரு நபர் இப்படி நெருக்கமாக அமர்ந்து கொண்டு இம்சை கொடுத்தால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்?<br />
<br />
என் தோளில் இப்படி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருப்பவரை இப்படி படுத்துகிறோமே என்ற கூச்ச நாச்சமின்றி ஓசிப்பத்திரிகையை வாசிக்கும் பக்கத்துசீட்டுக்காரரை பார்த்த நொடி மனம் பூராகவும் எரிச்சல் மேலோங்கியது.<br />
<br />
வில்ஸ் டீ ஷர்ட்டும் லிவிஸ் ஜீனும் போட்டுக்கொண்டு கையில் பிளாக்பெரியுடன் இருப்பவனுக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு பத்திரிகை வாங்கிப்படிக்க துப்பில்லையே தூ..”மனதிற்குள் வெறுப்பு மண்டியது.<br />
<br />
தொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.<br />
<br />
நீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.<br />
<br />
“சார்..அடுத்த பக்கத்தைப்புரட்டுங்க சார்”<br />
<br />
கோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.<br />
<br />
பக்கத்து சீட் மகா மனுஷன் அசருவதாக இல்லை.விளம்பரங்களைப்படித்தாலும்,துணுக்குகளை படித்தாலும் கூடவே என்னை ஒட்டிக்கொண்டு அமர்ந்து எனக்கு எரிச்சலை அதிகமாக்கினார்.<br />
<br />
ஒரு கட்டத்தில் சற்று முணு முணுப்பாகவே வாசிக்கும் பொழுது எரிச்சலின் உச்சகட்டத்துக்கே போய் விட்டேன்.<br />
<br />
“சார்..பக்கத்தில் இருப்பவரும் புத்தகத்தை படிக்கிறார் என்பது ஞாபகம் இருக்கு இல்லை..:<br />
<br />
“சாரி சார்”<br />
<br />
மீண்டும் கண்ணால் மேய ஆரம்பித்தார்.இந்த ஆள் விடவே மாட்டான் போலும்.வந்த ஆத்திரத்தில் புத்தகத்தை மடித்து பையில் வைப்பதற்காக எழுந்தேன்.<br />
<br />
“என்ன சார் புத்தகத்தை போய் பையில் வைக்கப்போறீங்க”<br />
<br />
“யோவ் ..பையில் வைக்காமல் உங்க கையிலா கொடுப்பாங்க”<br />
<br />
“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்?”<br />
<br />
“உங்க புக்கா”<br />
<br />
“பின்னே..நானும் நாகரீகம் கருதி என் புக்கை கொடுங்கன்னு கேட்காமல் உங்க கூடவே சேர்ந்து புக்கை படித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவஸ்தையை சகித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன் சார்.”<br />
<br />
நான் அவசர அவசரமாக பையை எடுத்து பார்த்த பொழுது நான் வாங்கிய வார இதழ் இலவச இணைப்புடன் என்னைப்பார்த்து சிரித்தது.<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-48121438716821023772013-12-03T11:48:00.004+05:302013-12-03T12:11:17.053+05:30மின்சாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg353XIbS4PLwBQomeShhYXLZmmQeGFKnA7DDdPrODU5a2gOrgtw8St2s-hIPkxtY5V2dMH1GKwQYVtV6ItLXoGKdXzOZvtGODBY6_X0b6hOIYprQuC1RWJYvw8rIPQrs1g1l90WQ4y5jo/s1600/elect.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg353XIbS4PLwBQomeShhYXLZmmQeGFKnA7DDdPrODU5a2gOrgtw8St2s-hIPkxtY5V2dMH1GKwQYVtV6ItLXoGKdXzOZvtGODBY6_X0b6hOIYprQuC1RWJYvw8rIPQrs1g1l90WQ4y5jo/s320/elect.jpg" width="252" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">தீபாவளிக்கு ரயில் பட்டாசு விட </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">கயிறு தேவை இல்லை</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">களைக்கூத்தாடிகள் ஏறி நடந்து</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">வித்தை காட்ட கம்பி கட்ட தேவை இல்லை</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">தோரணம் கட்ட கட்சிக்காரர்களுக்கு</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">சணல் செலவு ரொம்பவே மிச்சம்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">சிறார்கள் மரத்தை தேடுவதில்லை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">ஊஞ்சல் கட்டி விளையாட</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">நேற்றுவரை காகங்களும் சிட்டுகளும் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">ஏறி விளையாடிய மின் கம்பிகள்</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">இன்று மின்சாரம் இல்லாமல் தோரணமாக </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">வசதியாக</span><span style="color: blue;"> </span><span style="color: blue;">தொங்குகிறதே வீதிகளில்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span></div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-41611700527222280842013-11-27T19:48:00.000+05:302013-11-27T20:04:06.134+05:30காலத்தின் கோலம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZfq7zDbmDVJrovGsNYJ4ZGYHDwzhGfa9aol156qTRnl7uCZwWeVwTeXe-wX8ibLA-vRH9-cOHLTDn4ZZs0BBo2mVEtCpvQ_VbyQljLfxUrYL831OWDMMCx7D9w8W2J-XytLxo82jFwcE/s1600/111111111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZfq7zDbmDVJrovGsNYJ4ZGYHDwzhGfa9aol156qTRnl7uCZwWeVwTeXe-wX8ibLA-vRH9-cOHLTDn4ZZs0BBo2mVEtCpvQ_VbyQljLfxUrYL831OWDMMCx7D9w8W2J-XytLxo82jFwcE/s320/111111111.jpg" width="314" /></a></div>
<br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் சமீபத்தில் <a href="http://engalblog.blogspot.in/2013/11/blog-post_26.html">எழுதிய </a>இடுகையின் முதல் வரியை படித்த இன்ஸ்பிரேஷன் தான் இந்த பதிவெழுதக்காரணம்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1967</span><br />
<span style="color: blue;">மகன்:ப்பா..பா....பா</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:என்னடா செல்லம் வேண்டும்?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:பா..பா..பா</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:அட..என் தங்கத்துக்கு பலூனா வேண்டும்?ஐயோ..பாக்கெட்டில் சில்லரை இல்லையே..இந்தப்பா பலூன்காரா.சித்த நேரம் பொறு..நாலே எட்டில் வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அம்மா:ஏங்க,வீட்டை பூட்டிட்டு கோயிலுக்கு கிளம்பியாச்சு.இப்ப எதுக்கு பலூன்?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:குழந்தை ஆசைப்படுறாண்டி..அவனுக்கு இல்லாததா?கோவில் எங்கே ஓடிப்போகப்போறது.இதோ..ரெண்டே நிமிஷத்திலே வீட்டை திறந்து சில்லரை எடுத்துட்டு வந்துடுறேன்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1974</span><br />
<span style="color: blue;">மகன்:எப்ப பாரு தயிர் சாதமும் ஊறுகாயும்தானா?சந்துரு,கோவிந்தன் எல்லோரும் வகை வகையாக சாப்பாடு எடுத்துட்டு வர்ராங்க..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:அடியே..வழக்கம் போல் நமக்கு தயிர்சாதம் இருக்கட்டும்..பையனுக்கு பிரிஞ்சி சாதம்,தேங்காய் சாதம் சப்பாத்தி இப்படி இனி நீ வித விதமாக செய்து கொடுத்தாகணும்.வளருகிறபிள்ளை நல்லா சாப்பிடட்டும்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1982</span><br />
<span style="color: blue;">அம்மா:என்னங்க,அவனவன் ஸ்கூலுக்கு சைக்கிளில் போகிறான்.நம்ம பிள்ளை புஸ்தக மூட்டையை சுமந்துகொண்டு மூச்சிரைக்க நடந்து போவதை பார்க்க மனசு ஆறலே.ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்துடுங்க.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:இப்ப சைக்கிள் வாங்குறதுக்கு பணம் ஏது?பொங்கல் வேற வருது?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அம்மா:பொங்கலுக்கு பசங்களுக்கு மட்டும் புதுசு எடுத்துடுவோம்.தீபாவளிக்கு கட்டியதை இஸ்த்ரி பண்ணி நாம கட்டிக்கலாம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:இதுவும் நல்ல ஐடியாகவாகத்தான் இருக்கு.நமக்கு என்னத்தை புது துணி வாங்கறது?பிள்ளைங்க சந்தோஷம்தான் நமக்கு சந்தோஷம்.அதுக மனசு நிறைய சிரித்தால் நமக்கு புதுசு கட்டிய மாதிரித்தான்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1986</span><br />
<span style="color: blue;">மகன்:அப்பா,காலேஜுக்கு போக வர ஒரு பைக் வேண்டும்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:இப்ப தானே கடனை உடனை வாங்கி பற்றும் பற்றாததுக்கு உங்க அம்மாவுடைய செயினை விற்று காலேஜ் சீட் வாங்கினோம்.இப்ப எப்படிப்பா?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:லோன் வாங்கிக்கலாம் அப்பா.மாசா மாசம் உங்கள் சம்பளத்தில் கட்டிக்கலாம்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அம்மா:யோசிக்காதீங்க..இந்த மாசத்தோட நாம போடும் சீட்டு முடியுது.மறு சீட்டு போடாமல் அதை லோனாக கட்டிடலாம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:முதல்லே 20 % கட்டியாகணுமே?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அம்மா:கவலையே வேண்டாம்தீபாவளி சமயத்திலே நாம போட்ட எப் டி மெச்சூரிட்டி ஆகுது இல்லே.அந்த பைசாவை எடுத்துக்கலாம்.நமக்கு எதுக்கு இப்ப சேமிப்பு?நம்ம பிள்ளை பெரிய ஆளாக போய் நமக்கு தராமல் யாருக்கு தரப்போறான்..இல்லடா செல்லம்..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1990</span><br />
<span style="color: blue;">மகன்:அப்பா,நான் பர்ஸ்டு கிளாஸில் பாஸ் செய்துட்டேன்.பி.ஜி பண்ண வேண்டும்?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:இப்பவே கடன் மூச்சை முட்டுதுப்பா..இதுக்கு வேற எப்படி..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:ஏம்ப்பா..நான் மேலே மேலே படித்தால் சம்பளமும் ஜாஸ்தியாகுமேப்பா.நான் சம்பாதிக்கும் வரை கொஞ்சம் பல்லை கடித்துட்டு சிரமம் பார்க்காமல் செலவு பண்ணிட்டோம்ன்னா என் காலில் நான் நின்னதுக்கப்புறம் பிரச்சினை இல்லைப்பா.நிம்மதியா காலத்தை ஓட்டலாம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:எனக்கு ஒரு ஐடியாகவும் தோன்ற மாட்டேன்கிறதே..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:யோசிக்காதீங்கப்பா..நேற்று கூட நீங்களும் அம்மாவும் நம்ம கிராமத்திலே உள்ள நாலு செண்ட் நிலத்தை பற்றி பேசிட்டு இருந்தீங்களே.பேசாமல் அதை விற்றோம்ன்னா இருக்கற கடனை அடைக்கவும் ஆச்சு என் படிப்பு செலவுக்கும் ஆச்சு.அம்மாவின் மொட்டை கழுத்துக்கு மெல்லிசா ரெண்டு சவரனில் செயின் கூட வாங்கிக்கலாம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:......</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன் :யோசிக்கறதுக்கு என்னப்பா இருக்கு?நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டால் இதே போல் எத்தனை இடம் வாங்கப்போறோனோ.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1994</span><br />
<span style="color: blue;">மகன்:அப்பா,நான் கார் வாங்கலாம்ன்னு இருக்கேன்.அதனாலே கொஞ்ச நாளைக்கு என்னிடம் இருந்து என் சம்பளத்தை எதிர் பார்க்காதீங்க..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அப்பா:........</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:ஏம்ப்பா..மவுனமாகிட்டீங்க.நாளைக்கு நான் கார் வாங்கினால் உங்களுக்கு கவுரவம் இல்லையா?என் கூட முன் சீட்டில் ஏஸியை போட்டுட்டு ஜம் என்று உட்கார்ந்துட்டு ஊரையே சுற்றிப்பார்க்கலாம்.அம்மா உனக்கு பின் சீட் தான் ஒகேவா..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1998:</span><br />
<span style="color: blue;">அம்மா:தம்பி அப்பாவுக்கு ரெண்டு நாளா ஜுரம்.சித்த காரில் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயேன்..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:சாரிம்மா..ஆட்டோ பிடித்து போய்க்குங்க...நானும் மீனாவும் சேர்ந்து அவங்கம்மா வீட்டுக்கு போகப்போறோம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">2000</span><br />
<span style="color: blue;">அப்பா:....தம்பி..உன் அக்கா புருஷனுக்கு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணி இருக்கு. உன்னால்தான் போக முடியலே.நாங்களாவது போய் பார்த்துட்டு வந்துடுறோம்.போகாவிட்டால் குறையாகப்போய்டும்அனுப்பி வையப்பா..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:அச்சச்சோ..அம்மா உனக்குத்தான் தெரியுமே நானும் மீனாவும் குழந்தையும் பங்களூர் மைசூர் டூர் போக பிளான் போட்டு இருக்கோம்.இந்நேரம் பார்த்து அக்காவை பார்க்கணும் ,அத்திம் பேரை பார்க்கணுன்னா எப்படி?போன் போட்டு பேசிட்டே இல்லே.அது போதும்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">2002</span><br />
<span style="color: blue;">அம்மா:ரெண்டு நாளா இருமல் வாட்டி எடுக்குது.உங்கப்பாவை தூங்கவே விடலே.ஆஃபீஸ் விட்டு வர்ரச்சே இருமல் டானிக் வாங்கிட்டு வாப்பா.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:அம்மா..மாசக்கடைசி.அப்பாவை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச்சொல்லு.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மருமகள்:ரெண்டு துண்டு சுக்கைத்தட்டிப்போட்டு வெந்நீரை குடித்தால் இருமல் தானா போய்டப்போறது.இதுக்கு போய் எதுக்கு சிரப்புக்கு தண்டமா செலவு செய்யணும்?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மகன்:அதுவும் சரிதான்.</span><br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-11290416718401041552013-11-26T14:05:00.000+05:302013-12-05T09:50:36.683+05:30மருத்துவர் மகாத்மியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioGGLc9AR5NqqvriPczqd7JwhUqVisadNoNtD6SDaJrTj71Y83Exmgnx261p1HWt1W2J8hNEUokK3hntq9Hy-XO_bTVZ6E6_vjiB2DaH4OPw1XkSio-kJorwB_WumXyEB2MKQrSUX0M4I/s1600/111111111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioGGLc9AR5NqqvriPczqd7JwhUqVisadNoNtD6SDaJrTj71Y83Exmgnx261p1HWt1W2J8hNEUokK3hntq9Hy-XO_bTVZ6E6_vjiB2DaH4OPw1XkSio-kJorwB_WumXyEB2MKQrSUX0M4I/s1600/111111111.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">வெளி நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும் ஒரு உறவினர் வழக்கம் போல் ரெகுலர் செக் அப் சென்றுள்ளார்.பிரஷர் சுகர் கொலஸ்ட்ரால் என்று எதுவும் இல்லாதவர்.ஸ்டெத்தை வைத்து மட்டும் பரிசோதித்து விட்டு ஆஞ்சியோ கிராம் உடனே பண்ணி ஆக வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார்.குழந்தைகளுக்கு பேய்,பூச்சாண்டி என்று பயம் காட்டுவது போல் வாய்க்குள் நுழைய முடியாத பெயர்களைகூறி கதிகலங்க வைத்து விட்டார்.வழமையான செக் அப் சென்றவருக்கோ அதிர்ச்சி.எந்த பிரச்சினையும் இல்லாமல் எந்த வித பரிசோதனையும் முறைப்படி செய்யாமல் எடுத்த எடுப்பில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றால் அதிர்ச்சி வராமல் என்ன செய்யும்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இருதயத்தில் உள்ள தசைகளின் பாதிப்பைப் பொருத்து, மீண்டும் நெஞ்சுவலி வந்தாலும், பாதிக்கப்பட்டவரின் வயதைப்பொருத்தும் ,உடல் நிலையைப்பொருத்தும் ஆஞ்சியோகிராம் செய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்வார்கள். இ சி ஜி ,டிரட்மில் ,எக்கோ என்று பல்வேறு பரிசோதனைகளுக்கே பின்னரே ஆஞ்சியோ செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மருத்துவரிடம் இதனை கேட்டபொழுது “நீங்கள் பாரினுக்கு செல்கின்றீர்கள்.இதெல்லாம் தற்காப்புக்குத்தான்.மற்ற ஹாஸ்பிடலை விட 30%குறைவாகவே கட்டணம் பெறுகிறோம்.இந்த சலுகை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே.ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவோம்.நாளையே அட்மிட் ஆகி விடுங்கள்.” என்று வார்த்தை ஜாலம் செய்துள்ளார்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">எடுத்த எடுப்பிலேயே ஆஞ்சியோ என்பவர் அடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty),பைபாஸ் (CABG) லெவலுக்கு இழுத்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ”வீட்டில் கன்சல்ட் பண்ணி விட்டு வருகிறேன்”என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று என்று ஓடி வந்து விட்டார்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அதன் பிறகு எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல இயலும்.வேறொரு மருத்துவரை பார்த்து முறையாக பரிசோதனை செய்து பார்த்த பொழுது அந்த மருத்துவர் முதலாம் மருத்துவர் ஆஞ்சியோ பண்ண சொன்னதை கூறி சிரித்தாராம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">பிறகுதான் கேள்விப்படுகிறோம்.முதலாம் மருத்துவர் சமீபத்தில்தான் புதிதாக நவீன வசதிகளுடன் ஒரு மருத்துவ மனை எகப்பட்ட லோனை வாங்கி கட்டி முடித்து இருக்கிறார் என்று.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இப்படி பட்ட மருத்துவர்கள் எண்ணற்றவர்கள் உண்டு என்பதுதான் உண்மை.வருத்தமூட்டும் இப்படி நிகழ்வுகளுக்குகிடையில் இப்படியும் ஒரு மருத்துவர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் காய்ச்சல் ஏதும் இல்லாமலேயே குளிர் திடுமென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.குளிர் என்றால் தாங்க இயலாத குளிர்.உடனே ஒரு மருத்துவரிடம் சென்றோம்.பிரஷர் பார்த்த பொழுது 80/120 இருக்க வேண்டியது 160/250 காண்பித்தது.மருத்துவர் அதிர்ந்து போய் விட்டார்.நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் பிரஷர் செக் செய்து பார்த்தவருக்கு முகமே மாறி விட்டது.உடனே இ சி ஜி எடுத்துப்பார்த்ததில் அது நார்மலாகவே இருந்தது.உடனடியாக ஒரு இஞ்செக்ஷன் போட்டு ஒரு அரைமணி நேரம் தூங்க வைத்து மீண்டும் பிரசர் செக் செய்த பொழுது சற்றே குறைந்து இருந்தது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">வீட்டில் போய் நன்கு ரெஸ்ட் எடுக்கும் படி கூறி விட்டு என் கணவரை தனியாக அழைத்து இரவு முழுதும் சற்று கண்காணியுங்கள்.ஏதாவது சிறு மாற்றம் ஏற்பட்டாலும் உடனே இசபெல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று விடுங்கள் என்றிருக்கிறாராம்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மறுநாள் காலையில் மீண்டும் பிரஷர் செக் செய்ததில் நார்மல்.இதனையே ஒரு உறவினரான இன்னொரு மருத்துவரிடன் பிரிதொரு நாள் சொல்லிக்காட்டிய பொழுது “இதையே வேறொரு டாக்டரிடம் சென்றிருந்தால் அந்நேரம் உன்னை ஐ சி யூ வில் படுக்க வைத்து ஆயிரத்தெட்டு பரிசோதனை செய்து ஒப்பன் ஹார்ட் சர்ஜரி வரை போய் இழுத்து விட்டு இருந்திருப்பார்கள் என்று கூறி சிரிக்கின்றார்.</span></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18215645842757633902013-11-23T13:15:00.002+05:302013-11-26T10:18:21.691+05:30பேப்பூர்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh111iBgH4q_21O8Glu729o6AqITqfzv4-8IGp6kPl9mVwphYEGLcNBhkNuFo3vrTJbLfvDLHDD24jNEGO-le9TsKeyac3rPI5-2YoJwCsiDLwpNNRbpswo6EG34xjBw9HRuMMzQ7kWQTY/s1600/DSC05395.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh111iBgH4q_21O8Glu729o6AqITqfzv4-8IGp6kPl9mVwphYEGLcNBhkNuFo3vrTJbLfvDLHDD24jNEGO-le9TsKeyac3rPI5-2YoJwCsiDLwpNNRbpswo6EG34xjBw9HRuMMzQ7kWQTY/s640/DSC05395.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;">கோழிக்கோடில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பேப்பூர் (BEYPORE) என்ற அருமையான சுற்றுலா தளம் உள்ளது.அழகிய கடற்கரை,அதனை ஒட்டி பேப்பூர் துறைமுகம்,அருகிலேயே கப்பல் கட்டும் தளம் ,கடலுக்குள் பயணிக்கும் கல் பாலம், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்று செல்ல வேண்டிய இடங்கள் எராளமாக உள்ளன.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மாபெரும் இலக்கிய மேதை ,சுதந்திர போராட்ட வீரர் </span><a href="http://en.wikipedia.org/wiki/Vaikom_Muhammad_Basheer">வைக்கம் முஹம்மது பஷீர்</a><span style="color: blue;"> வாழ்ந்து மறைந்த ஊர் என்ற பெருமையும் இந்த பேப்பூர் நகருக்கு உணடு.</span><br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg13juujStCQlQNJ5LJ4dJ8FdyHF7lgfHA9K8y03GOxPxDaUu_eKRJuAr93WeJ1j3yqYDno40SlyPyEUoO5gVsc1Z9AXfb8bcZjessvliryNMkphxhXLzSe2OI-ZfFTvJGiqHcMMP-qz54/s1600/DSC05402.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg13juujStCQlQNJ5LJ4dJ8FdyHF7lgfHA9K8y03GOxPxDaUu_eKRJuAr93WeJ1j3yqYDno40SlyPyEUoO5gVsc1Z9AXfb8bcZjessvliryNMkphxhXLzSe2OI-ZfFTvJGiqHcMMP-qz54/s640/DSC05402.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">பேப்பூர் பீச் மிக அழகாக காட்சி அளிக்கிறது.நாங்கள் சென்றது வீக் எண்ட் தினத்தில்.ஆகையால் கூட்டம் மெரினா பீச்சை நினைவூட்டியது.கடல்காற்று வாங்கிய படி குடும்பத்துடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக பீச் நெடுக கிரானைட் தளம் போட்ட உட்காரும் மேடை பீச் ஓரம் நீளமாக போடப்பட்டுள்ளது.பீச்சுக்கு செல்லும் பொழுது பெட்ஷீட்டோ,ஜமக்காளமோ சுமந்து செல்லும் வேலை மிச்சம்.வழி நெடுகிலும் அழகான விளக்கலரங்காரக்கம்பங்கள் கலை நயத்துடன் கண்களை கவர்ந்தாலும் பாராமரிப்பின்றி இருந்ததுதான் சோகம்.</span><br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikg4S-dlAjhyphenhypheno4b7QWXtaw0AWXa9EGlurHT5s3jw82t6CRsEi2fl0S1XJOt548oQg1Gshr0xpj6s-WZTmUMUJm3iDYOnYj5Xdf4scl0bhIoKLFboOvRFnjIZhST8s0VeEDulNIQCJnigU/s1600/DSC05411.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikg4S-dlAjhyphenhypheno4b7QWXtaw0AWXa9EGlurHT5s3jw82t6CRsEi2fl0S1XJOt548oQg1Gshr0xpj6s-WZTmUMUJm3iDYOnYj5Xdf4scl0bhIoKLFboOvRFnjIZhST8s0VeEDulNIQCJnigU/s640/DSC05411.JPG" width="640" /></a></div>
<br />
<span style="color: blue;">கட்டணம் செலுத்தி துறைமுகத்துக்குள் நுழைந்தால் ஆங்காங்கே பெரிய பெரிய படகுகள் காணப்பட்டன.பல அடி ஆழமுள்ள கடலுக்கு அருகிலேயே தரைத்தளம் எந்த வித கைப்பிடி சுவரும் இல்லாமல் இருந்தது கிலியை கொடுத்தது.எங்கள் வீட்டு குட்டியின் கையை இறுக பற்றிக்கொண்டேன்..அருகில் போய் கடலை குனிந்து பார்த்தால் பயத்தில் விழி பிதுங்கிப்போனது.கொச்சிக்கு அடுத்த பெரிய துறை முகம் என்ற பெயரை பேப்பூர் துறைமுகம் பெற்றுள்ளது.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOQPIH_UTrK5yO-Xxm14on5RlTqyGKuw9yRszkAbpBMZ0jEddVZLPkAMjBFFAR_NqGpDyJm1Rzw6GIPQxJ6trf2iABqNHWkRkXJ07ZoOVAszSUncBPXwHjqqWSNFZ0VjEZB9d33dXvUqI/s1600/DSC05425.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOQPIH_UTrK5yO-Xxm14on5RlTqyGKuw9yRszkAbpBMZ0jEddVZLPkAMjBFFAR_NqGpDyJm1Rzw6GIPQxJ6trf2iABqNHWkRkXJ07ZoOVAszSUncBPXwHjqqWSNFZ0VjEZB9d33dXvUqI/s640/DSC05425.JPG" width="640" /></a></div>
<br />
<br />
<span style="color: blue;">பேப்பூர் கப்பல் கட்டுமானத்தொழிலுக்கு புகழ் பெற்ற ஒரு கட்டுத்தளமாகும்.பண்டைய காலத்தில் உருசு என்ற மரக்கலன்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக இத்தளத்தை குறிப்பிடுகின்றனர்.சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே அனுபவம் நிறைந்த தொழிலாளர்கள் தொழில் நுணுக்கத்துடன் கப்பல் கட்டும் பணியில் ஈடு பட்டு இருந்தனராம்</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHg2MHc5OI8CBR3NwAbhcUDyEaX8qL2VRt6sXWZgRxPhA_RDoVtEMXfP0pj4vq4ORcIvN1HGNo8FfQNLKH3gQpD2WFiXaDPBeOChgZKsyIR7qe_ce-Uh6Ifs8xde2buJ56vlDN_zzKS0g/s1600/DSC05427.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHg2MHc5OI8CBR3NwAbhcUDyEaX8qL2VRt6sXWZgRxPhA_RDoVtEMXfP0pj4vq4ORcIvN1HGNo8FfQNLKH3gQpD2WFiXaDPBeOChgZKsyIR7qe_ce-Uh6Ifs8xde2buJ56vlDN_zzKS0g/s640/DSC05427.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;">வெயில் மழை படாமல் நேர்த்தியாக மறைக்கப்பாட்ட பின்னர்தான் கப்பல் தயாராகின்றன.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNVeVcGJuDxfPJXloYsulmFBdWZkgAJtNO11bYbtpm-yCV6GSelUNFz1q-Q8XVrMFiwlnfH4zlz2LumUTPTWB4V5baiPYnD5VsG_Jdtos5RxVMa9GCL6CEvhuSdC6nM0ReEdx5uT6ZzFQ/s1600/DSC05433.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNVeVcGJuDxfPJXloYsulmFBdWZkgAJtNO11bYbtpm-yCV6GSelUNFz1q-Q8XVrMFiwlnfH4zlz2LumUTPTWB4V5baiPYnD5VsG_Jdtos5RxVMa9GCL6CEvhuSdC6nM0ReEdx5uT6ZzFQ/s640/DSC05433.JPG" width="640" /></a></div>
<br />
<span style="color: blue;">உருவாகிக்கொண்டு இருக்கும் கப்பல்.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe_9w5nGtSfVyQExxzlf8xCET8fVujrvrwaIRSVZqHwsgdZRa8gWmxOx2GZLL0IcwMJPKnPwaNo5nW9YTbrd6MIG8HgpM-V5uRPcDBzndk34wnd8vo8UjrUfEF99wScb28dlC5Jit3uTI/s1600/DSC05438.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe_9w5nGtSfVyQExxzlf8xCET8fVujrvrwaIRSVZqHwsgdZRa8gWmxOx2GZLL0IcwMJPKnPwaNo5nW9YTbrd6MIG8HgpM-V5uRPcDBzndk34wnd8vo8UjrUfEF99wScb28dlC5Jit3uTI/s640/DSC05438.JPG" width="640" /></a></div>
<br />
<span style="color: blue;">கப்பலின் அடிப்பாகம்.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNZJPPp3cp28DRr0QKLoe83adGmp4c64dhnubLezxQh6PmQbxqP4b5dTOzLeYyP_qMx0GyNTlJWcek2UluZWD8HjLj03rUBE7RtuccWbxaoCWNagClMC-eWVi3AqHu8cZkb_uqGAcWW-w/s1600/DSC05439.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNZJPPp3cp28DRr0QKLoe83adGmp4c64dhnubLezxQh6PmQbxqP4b5dTOzLeYyP_qMx0GyNTlJWcek2UluZWD8HjLj03rUBE7RtuccWbxaoCWNagClMC-eWVi3AqHu8cZkb_uqGAcWW-w/s640/DSC05439.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">கத்தார் மன்னருக்காக தயாராகிக்கொண்டுள்ள சொகுசுக்கப்பல்.இது அங்கிருந்த காவலாளி சொன்ன தகவல்</span>.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBg2NM3QoVRqZ0nD3rNV4bJtIm8oj2AC_bfQCkycbTT2O8gMgYsfOnaUvu-OPwVTcQGZvfA6K7-iTIGfgUwe9Y4_pQtBMisP-ewNVP866tWDLfuBypIlq6vnxRPeVbGcyKU-bSSPhbrJs/s1600/DSC05442.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBg2NM3QoVRqZ0nD3rNV4bJtIm8oj2AC_bfQCkycbTT2O8gMgYsfOnaUvu-OPwVTcQGZvfA6K7-iTIGfgUwe9Y4_pQtBMisP-ewNVP866tWDLfuBypIlq6vnxRPeVbGcyKU-bSSPhbrJs/s640/DSC05442.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">கப்பலின் பக்கவாட்டுப்பகுதி..கப்பல் நிர்மாணிக்கப்பட்டு மலேஷியாவுக்கு எடுத்துச்சென்று எஞ்சினும் ஏனைய அலங்காரமும் மேற்கொள்ளப்படுமாம்.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLJ_cWW3mB63ssQ67jQTWqLfPwMlsmtF688eBAOPfSl62LlHQXbt8aaUE52K9efJKKgkN06dMmKzK7gRFSjqecSQkfiTeWGkv3sgFxLVN6b5hKqVCmG7avplFo-dDBskV7ok3TPgjHoqs/s1600/DSC05446.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLJ_cWW3mB63ssQ67jQTWqLfPwMlsmtF688eBAOPfSl62LlHQXbt8aaUE52K9efJKKgkN06dMmKzK7gRFSjqecSQkfiTeWGkv3sgFxLVN6b5hKqVCmG7avplFo-dDBskV7ok3TPgjHoqs/s640/DSC05446.JPG" width="640" /></a></div>
<br />
<span style="color: blue;">கப்பலின் உயரத்தைப்பார்த்து அங்கிருந்த மர ஏணியில் ஏற நான் தயங்கினாலும் என்னவரும் எங்கள் வீட்டு குட்டி ஆமிரும் சரசர வென்று அங்கிருந்த மர ஏணியில் ஏறி கப்பலின் உச்சிக்கு சென்று எடுத்து வந்த படங்கள்.</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2hrlq9z6wTE1aggROsEE90zxJAtgiXlc7FYVcZhu8bEoofHzrSlMteUu0Iuu9sDyNdIZryhMxQghJQiipIGZpYyCZ63zSzFlGtT6CawUopFPzy-aeTolV9tiSzEvMRn3OLZmNqoUrHy0/s1600/DSC05448.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2hrlq9z6wTE1aggROsEE90zxJAtgiXlc7FYVcZhu8bEoofHzrSlMteUu0Iuu9sDyNdIZryhMxQghJQiipIGZpYyCZ63zSzFlGtT6CawUopFPzy-aeTolV9tiSzEvMRn3OLZmNqoUrHy0/s640/DSC05448.JPG" width="640" /></a></div>
<span style="color: blue;">கப்பலின் உள் அலங்காரம்.சொகுசுக்கப்பல் ஆகையால் கப்பலினுள் ஒவ்வொரு மில்லி மீட்டரும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.</span></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-55273305631606293592013-11-15T18:53:00.001+05:302013-11-15T23:57:25.248+05:30மூடாத பொக்கிஷம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDK91DTzaStEfhhCtvu_p02uXDw_RuM0sI1DjAmRz8AFTMjvBIwn3hpqQJmDLwFsr4iX75xhM6WMwYC3kvmiz4AbWBkCRJpGjpFBzU-itYb9MwDeOD2CJCsx0Se69SXKNgd1S9ff3e070/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="315" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDK91DTzaStEfhhCtvu_p02uXDw_RuM0sI1DjAmRz8AFTMjvBIwn3hpqQJmDLwFsr4iX75xhM6WMwYC3kvmiz4AbWBkCRJpGjpFBzU-itYb9MwDeOD2CJCsx0Se69SXKNgd1S9ff3e070/s400/images.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
“வாப்பா..இந்த சம்மை எப்படிப்போடணும்” சமீரின் 10 வயது மகள் திரும்பத்திரும்ப கேட்டும் சமீரின் காதில் வார்த்தைகள் விழுந்தாலும் மூளையில் பதியாமல் போனது.<br />
<br />
“வாப்ப்ப்ப்ப்பா”மகள் அழுத்தி சப்தமாக கேட்டதும் சுதாரித்துக்கொண்டான்.<br />
<br />
மகளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.காலையில் வங்கியில் போட்ட செக் பவுன்ஸ் ஆனதில் இருந்து சமீரின் மனது நிலை கொள்ளாமல் துடித்தது.கடந்த ஆறு மாதம் முன்பு வரை நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரம் எதிரே பிருமாண்டமான ரெடிமேட் ஷாப் திறந்ததும் சமீரின் கடையில் நடக்கும் வியாபாரம் படிப்படியாக குறைந்து போனது.வியாபாரம் ஓஹோ என்றுஇருந்தவனுக்கு இப்போது கஷ்டமான சூழ்நிலை.நன்றாக இருந்த சூழ்நிலையில் வருடா வருடம் முப்பது நாள் நோன்பில் ஒரு நாள் சஹருக்கு பள்ளிவாசலில் இவனது செலவில் சாப்பாடு நடக்கும்.வரும் வெள்ளியன்று சமீரின் செலவில் சாப்பாடு.<br />
<br />
சாப்பாட்டுக்குழுவினர் நோன்பு ஆரம்பத்திலேயே “இந்த வருடமும் வழக்கம் போல் ஒருநாள் உங்கள் செலவில் சஹர் உணவு உண்டுதானே லிஸ்டில் சேர்த்துக்கொள்ளட்டுமா உங்கள் பெயரை?”என்று கேட்டபோது மனதார பெயர் கொடுத்து விட்டான்.இப்போது போய் முடியாது என்று எப்படி சொல்ல இயலும் .யா அல்லாஹ் நான் என்ன செய்வேன்?”மனம் கலங்கிப்போனது.<br />
<br />
200 பொட்டலம் சாப்பாடு ஆர்டர் செய்வதாக இருந்தால் குறைந்தது 10000 தேவைப்படும்.அந்த பத்தாயிரத்தை புரட்டத்தான் இரண்டு நாட்களாக அலைச்சல்.கஸ்டமர் கொடுத்த செக்கை நம்பி இருந்தவனுக்கு செக் பவுன்ஸ் ஆனதில் திகைத்துப்போய் விட்டான்.கைமாற்று வாங்கலாம் என்று பார்த்தால் உதவுபவர் யாரும் இல்லை.<br />
<br />
“தப்பா நினைச்சுக்காதீங்க பாய்.பெருநாள் நெருங்குது பாருங்க நமக்கு கொஞ்சம் டைட்”<br />
<br />
“அல்லாஹ்வே..நேற்றே கேட்டு இருக்கக்கூடாது.”<br />
<br />
“மன்னிச்சுக்குங்க பாய்.என்னாலே உதவ முடியாததற்கு”<br />
<br />
இப்படியான பதில்களில் நொந்து போனான் சமீர்.<br />
<br />
உணவக உரிமையாளர் மதார் போன் செய்துவிட்டார்,”சமீம் பாய்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தானே நான் பொருட்கள் வாங்க முடியும்,இன்னும் ஒரே நாள்தானே உள்ளது?”<br />
<br />
இஃப்தாருக்கு தயார் செய்து கொண்டிருந்த சமீரின் மனைவி நிஷா கணவரின் சோகமுகம் கண்டு ”ஏங்க..ஹபீப் காக்காவிடம் கேட்கலாம் என்று போனீர்களே என்ன ஆச்சு “என்றாள்.<br />
<br />
“அவர் ஊருக்கு போய்விட்டார்.அவர் இருந்தால் இத்தனை திண்டாட்டம் இல்லை.தாத்தா,வாப்பா காலத்தில் இருந்து வருடாவருடம் தொடர்ந்து செய்து வந்த காரியம்.இந்த வருடம் முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது”<br />
<br />
”கவலைப்படாதீங்க.அல்லாஹ் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டான்.இஃப்தாருக்கு நேரம் ஆகுது.கைகால் அலம்பிட்டு வாங்க”<br />
<br />
“மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளதும்மா.என்ன பண்ணுறது என்று புரியவே இல்லை”புலம்பியபடி எழுந்தான்.<br />
<br />
மறுநாள்...<br />
<br />
வழக்கம் போல் கடையை திறந்து விட்டு கல்லாவில் அமர்ந்த மறு நிமிடமே கேட்டரிங் மதாரிடம் இருந்து போன்.<br />
<br />
“பாய்..என்ன சப்தத்தையே காணோம்.நீங்கள் ஆர்டர் கொடுத்தால்தான் நான் சாமான்கள் எல்லாம் வாங்க முடியும்.”<br />
<br />
“பாய்..நான் மதியம் போன் செய்கிறேன்.கொஞ்சம் பொறுங்க”இப்படி சொல்லி விட்டானே தவிர மதியம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி சமீரை சுற்றி வளைத்தது.<br />
<br />
மதியமும் போய் மாலையும் வந்தது.எந்நேரமும் மீண்டும் கேட்டரிங் மதாரிடம் இருந்து போன் வந்து விடுமோ என்ற நினைவு சமீரை சங்கடப்படுத்தியது.<br />
<br />
“நிஷா...பேசாமல் மதார் பாயிடம் இந்த வருடம் பண்ணவில்லை என்று சொல்லி விட்டு பள்ளிவாசல் ஆட்களிடமும் சொல்லி விடலாமா?”<br />
<br />
“எப்படிங்க..கடைசி நேரத்தில் சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள்”<br />
<br />
“யா அல்லாஹ் இப்ப நான் என்ன செய்யப்போகிறேன்”அவர் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே காலிங் பெல் சப்தம்.<br />
<br />
“நிசா,யாரென்று போய் பாரு”<br />
<br />
வாசலில் காதர் பாய்.”அஸ்ஸலாமு அலைக்கும்”<br />
<br />
“வ அலைக்கும்சலாம் .உள்ளே வாங்கண்ணா”<br />
<br />
“சமீர் பாய் இல்லையா”கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே சமீர் வந்து விட்டார்.”வாங்கண்ணா..என்ன அதிசயமாக வீட்டு பக்கம்..”<br />
<br />
“உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”<br />
<br />
”சொல்லுங்கண்ணா”<br />
<br />
“வழக்கம் போல் எங்கள் வீட்டில் நண்பர்கள்,உறவினர்கள்,தொழில் நட்புக்கள், என்று 200 பேருக்கு சஹர் சாப்பாடு போடுவோம்.நாளைக்கு ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கும் பொழுது ஊரில் இருக்கும் என் பாட்டிக்கு சீரியஸ் என்று போன் வந்தது.நாங்கள் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறோம்.ஏற்பாடெல்லாம் நடந்து விட்டது.நீங்கள்தான் பள்ளி வாசலில் நாளைய சஹருக்கு அரேஞ்ச் பண்ணுவீர்களே.இதனை நீங்கள் எடுத்து செய்யுங்கள் பணவிபரம் எல்லாவற்றையும் மெதுவா செட்டில் பண்ணிக்கலாம்.நான் அவசரமாக கிளம்பணும்.வரட்டுமா”<br />
<br />
சமீர் திகைத்துப்போய் நின்று இருந்தான்.வீட்டில் எங்கேயோ “பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”என்ற பாடல் வரிகள் காற்றில் மெதுவே தவழ்ந்து செவியில் விழுந்து இதயத்தை நிறைத்தது.<br />
<div>
<br /></div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-26589436025054575862013-09-24T15:01:00.001+05:302013-09-24T18:41:13.104+05:30அல்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இது ரொம்ப அல்பதனம்”</span><br />
<span style="color: blue;">“புத்தி ஏன் இப்படி அல்பதனமா போகிறது”</span><br />
<span style="color: blue;">“சரியான அல்பம்”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சிறுமையாக,சின்னத்தனமாக நடப்பவர்களை இவ்வாறு விளிப்பார்கள்.வடிகட்டின கஞ்சதனத்தைக்கூட இவ்வாறு அழைக்கப்படுகிறது.அல்பம் இழிவு, அற்பம்,சிறுமை,சின்னத்தனம்.கஞ்சத்தனம் அனைத்துக்கு இந்த அல்பம் நாமகரணம் சூட்டப்படுகிறது.ஆங்கிலத்தில் அல்பத்திற்ககான சொற்கள் insignificant, trifle, silly எனப்படும்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சரி எதை எல்லாம் அல்பம் என்று வசைப்பாடுகின்றனர் என்று சிலஅல்பவகைகளை லிஸ்ட் போடுவோம் .</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1.நொறுக்ஸை கொறித்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு நட்பு உள்ளே நுழையும் போது நொறுக்ஸ் டப்பாவை மறைத்து வைப்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">2.கணவரின் பாக்கெட்டில் இருந்து நூறு இருநூறை எடுத்து விட்டு அதை சொல்லாமல் இருப்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">3.டிபன் பாக்சில் லஞ்சை கட்டிக்கொடுத்துவிட்டு பிள்ளையிடம்”டேய்..உனக்காக நிறைய நெய் விட்டு பிரியாணி பண்ணி இருக்கேன்.யாருக்கும் கொடுத்து உன் வயிற்றை காயப்போடாதே,சமர்த்தா நீயே அத்தனையும் சாப்பிட்டுடணும்”பையனுக்கு அட்வைஸ் பண்ணுவது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">4.கெட்டுப்போன உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டாமல் வாசலுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">5.காய்ச்சலில் படுத்து மூன்று நாள் லீவு போட்டு விட்டு வரும் வேலைக்காரியிடம் “இந்த மூன்று நாள் சம்பளத்தையும் பிடித்துக்கொண்டுதான் தருவேன்”என்று மல்லுக்கு நிற்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">6.வீட்டுக்கு வரும் விருந்தினரை வாயற வாங்க வாங்க என்று அழைத்து விட்டு மனதார “இதுக எதுக்கு வந்து தொலைக்கணும்”என்று நினைப்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">7.உறவினர்,நட்பு வீடுகளுக்கு சென்று விட்டு “இவளா..சரியான வடிகட்டின கஞ்சம்.கழுநீர் ரேஞ்சில் ஒரு ஆறிப்போன காபியைத்தர்ரா.தராதரம் தெரியாதவள்”என்று புலம்புவது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">8.மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய மனதில்லாமல் பிறருக்கு மிஸ்டு கால் கொடுப்பது.அல்லது ஒரு ரிங் அடிக்கக்கூட அவகாசம் கொடுக்காது கட் செய்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து இருந்து கால் வரும் வரை காத்திருந்து “காலையில் போன் செய்தேனே.எடுக்கவே இல்லை”என்று புழுகுவது அல்லது கால் செய்து அழைத்துவிட்டு “போனில் பைசா முடியும் தருவாயில் உள்ளது.நீ கால் பண்ணு”என்று உடான்ஸ் விடுவது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">9.வீட்டுக்காரரிடம்”என்னது இந்த சண்டே உங்க பிரண்ட் குருமூர்த்தி வீட்டுக்கு நீங்களும் உங்கள் பிரண்ட்ஸும் டின்னருக்கு போகப்போறீங்களா.பேஷா போய்ட்டு வாங்க.கூடவே நம்ம குட்டி கிரீஷையும் கூட்டிட்டு போய்டுங்க.ஆனால் அதுக்கு அடுத்த வாரம் எல்லாப்படைகளையும் இங்கே அழைசுட்டுப் வந்துடாதீங்க.ஆழாக்கு அரிசி சமைக்கறத்துக்குள் எனக்கு டங்குவார் அறுந்து போறது.அத்தனைக்கும் விருந்து பண்ண நம்மால் முடியாதுப்பா.”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">10.மற்றவர்களுக்கு வரும் மெயில்,கடிதம் ,போன்றவற்றை பார்ப்பது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">11.”யாரு..மாலதியா..எப்படிப்பா இருக்கே.என்னது..வீட்டுக்கு வர்ரயா..பிள்ளக்களையும் அழைச்சுட்டு வர்ரியா.வேண்டாம் வேண்டாம்...நானும் பக்கத்துவீட்டு அம்மாவும் ஷாப்பிங் போகணும்ன்னு ஏற்கனவே பிளான் போட்டாச்சு.எதுக்கு நீ கஷ்டப்படணும்.அடுத்த வாரம் நானே வர்ரேன் சரியா”என்று போனில் சொல்வது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">12.”காய்க்காரம்மா..ரெகுலராக உன் கிட்டேதான் காய் வாங்கறேன்.என்ன விலை விற்றாலும் இந்த கருவேப்பிலையும் கொத்துமல்லியும் கொசுறா கொடுத்துத்தான் ஆகணும்.இதுகளை நான் பைசா தந்து வாங்கவே மாட்டேன்.ஆமா சொல்லிட்டேன்.”</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இப்படி சின்னத்தனமான காரியங்கள் அல்பத்தனம் என்று கூறப்பட்டால் குட்டியூண்டு சந்தோஷம்,கப்பில் இருந்து ஒரு விள்ளல் ஐஸ் க்ரீமை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டால் சிலீரென்று தோன்றும் ஒரு இதமான உணர்வைப்போல் குட்டியூண்டான சந்தோஷத்தை அல்ப சந்தோஷம் என்கிறோம்.அல்ப சந்தோஷங்களை கொஞ்சம் அலசலாமா?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">1.அரைக்கிலோ ஹார்லிக்ஸ் வாங்கும் போது கூடவே ஃபிரீயாக ஒரு கண்டய்னரை கடைக்காரர் தூக்கித்தரும் போது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">2.தோசை மாவு தீர்ந்து போச்சு.கோதுமை மாவு டப்பாவை கழுகி காயவைத்து ஆச்சு இரண்டுநாள்.வீட்டில் ரவை,நூடுல்ஸ் கூட இல்லையே .இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணலாம். என்று மூளையை கசக்கிக்கொண்டிருக்கும் போது வாக்கிங் போய் திரும்பிய கணவரது கையில் தெரு முனை மெஸ்ஸில் இருந்து வாங்கி வரும் டிபன் பார்சலை பார்க்கும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">3.முன் பதிவு செய்த பொழுது அப்பர் பெர்த் கிடைத்து பயணம் செய்யும் பொழுது லோவர் பர்த் பயணி தனது சீட்டை தாரளாமாக நீங்க இங்கே இருங்கள் “என்று தாரள மனதுடன் தரும் போது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">4.ஏழு வயது மகனுக்கு டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதனை செய்பவர் வரும் பொழுது ”ஆறு வயதுதான் சார்” என்று கூறி டிக்கெட் பரிசோதனை செய்பவரும் சரி என்று போய்விடும் போது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">5.ஆஃபீஸில் இன்னிக்கு பவுண்டர்டே செலிப்ரேஷன் பண்ணினார்கள்.எல்லாம் ஸ்டாஃபுக்கும் கிஃப்ட் கொடுத்தாங்க என்று கணவர் குட்டியாக கிஃப்ட் பார்சல் ஒன்றை நீட்டும் போழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">6.”என்னது இந்த முறை அபிலாஷை ரேஸ் பண்ணிட்டியா?வெரிகுட் “என்று குட்டி மகனிடம் சொல்லும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">7.நுங்கம் பாக்கம் டு எக்மோர் சென்ற தடவை 100 ரூபாய் சார்ஜ் பண்ணிய ஆட்டோ இந்த முறை 80 ரூபாயை சார்ஜாக கேட்டபோது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">8.ஜஸ்ட் இப்ப தான் நாம் செல்லும் வழித்தட பஸ் போனது.இனி பத்து நிமிடம் கழித்துதான் அடுத்த பஸ் வரும் என்று நினைத்து காத்திருக்கும் மறு நிமிடமே செல்லப்பொகும் வழித்தட பஸ் வந்துவிடும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">9.நகைக்கடை,துணிக்கடையில் இலவசமாக கொடுக்கும் பை காலண்டர் இன்னும் தரமானதாகவும் பெரியதாகவும் இருந்துவிட்டால்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">10.மேட்சிங் பிளவுஸ்பிட் வாங்கும் பொழுது “இது கடைசி பீஸ்.மீட்டருக்கு பத்து ரூபாய் குறைத்து பில் போடுறேன்”என்று கடைக்காரர் கூறும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">11.என்னது நான் ஒரு ஜாம் பாட்டில்தானே வாங்கினேன்.எதற்கு ரெண்டு ஜாம் பாட்டில் என்று பில்லை ஆராய முற்படும்பொழுது கடைக்காரர் “இன்னொன்றுக்கு பில் போடலே..ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் “என்று கடைக்காரர் கூறும் வார்த்தைகளில்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">12.”கல்யாணிம்மா..இன்னிக்கு சண்டே தானே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.லேட்டாகவே நான் காஃபி சாப்பிடுக்கறேன்”என்ற கணவரின் இன்சொல்லில்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">13.பால்காரர் போட்டு விட்டு சென்ற பால்கவரைகாணோமே என்று லேட்டாக எழுந்து விட்டு வாசலில் தொங்கும் பையில் பால் கவரை காணாது விழித்துக்கொண்டிருக்கும் பொழுது எதிர் பிளாட் அம்மணி”நீங்க பால் எடுக்க லேட் ஆயிடுச்சு.கெட்டு போய்டுமேன்னு நான் தான் எங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து இருந்தேன்:என்று பால் கவரை நீட்டும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">14.என்னது உங்கள் வீட்டுக்கு ஈ பி பில் இந்த மாசம் 2100 தானா?எங்கள் வீட்டுக்கு 2500 வந்துவிட்டதே”பக்கத்து பிளாட் மாமி புலம்பும் பொழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">15.”அக்கா.பக்கத்து வீட்டில் முருங்கை மரம் ஒடிந்து விழுந்து விட்டது.ஆளாளுக்கு பறித்துக்கொண்டு போனார்கள்.உங்களுக்குத்தான் முருங்கைக்கீரைன்னா பிடிக்குமே.கொளுந்து கீரையா பறிச்சிட்டு வந்தேன்”வேலைக்காரப்பெண்மணி கீரையை கொடுக்கும் போழுது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">16.விளையாடும் பொழுது குழந்தை தட்டிவிட்டு சென்ற கண்ணாடிப்பொருள் அதிர்ஷடவசமாக உடையாமல் தப்பும் தருணத்தில்...</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">17.பீரோவை சுத்தம் செய்யும் பொழுது பீரோவில் விரித்து இருக்கும் பேப்பருக்கு அடியில் எப்போதோ வைத்த நூறு ரூபாய்த்தாள் கிடைக்கும் பொழுது..</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இதற்கு மேல் லிஸ்ட் போட்டால் யாரவது கொம்பை தூக்கிகொண்டு வந்து விடுவார்களோ என்று எனக்குள் அல்பத்தனமாக பயம் வந்து விட்டது.அதனால் இத்தோடு முடிச்சுக்கறேன்.உங்களுக்கு உதித்த அல்பங்களையும்,அல்பசந்தோஷங்களையும் பின்னூட்டத்தில் நீங்களும்கொஞ்சம் அலசி துவைத்து காயப்போடுங்களேன்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com48tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-84053211506059539312013-09-20T18:15:00.000+05:302013-09-20T18:48:36.449+05:30சரவணபவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigywr8yhYQLmg4x7uzHruIVL5eiQb8RO7matTF3YJ6u1E1A2y-36qLmVTz5v5CKWcwS6nMqVr__u7O7lox3SGZxlibvr_lHGqIaUG6MTq8g7fUSl9kybzGiejgjEF7PCCCxV8tGnHdhUA/s1600/DSC05316.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigywr8yhYQLmg4x7uzHruIVL5eiQb8RO7matTF3YJ6u1E1A2y-36qLmVTz5v5CKWcwS6nMqVr__u7O7lox3SGZxlibvr_lHGqIaUG6MTq8g7fUSl9kybzGiejgjEF7PCCCxV8tGnHdhUA/s1600/DSC05316.JPG" /></a></div>
<br />
வெங்கட் நாராயணா சாலை பக்கம் சென்ற பொழுது சரவணபவன் வாசலில் குலைவாழைகள் தலை சாய்த்து,தோரணங்கள் காற்றில் ஆட அந்த பக்கம் செல்பவர்களை எல்லாம் வாங்க வாங்க என்று அழைத்துக்கொண்டிருந்தன.உட்பகுதியில் போர்வீலர்களும்,வெளிப்பகுதியில் டூவிலர்களும் ஏதோ விழாவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. சரவணபவனில் மூன்று நாட்களுக்கு புரட்டாசி மாதம் தலைவாழை இலைவிருந்து அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.சாதரணமாக சரவணபவன் கிளைகளில் அன் லிமிடெட் மீல்ஸ் விற்கும் விலைக்கே அன்று தடபுடல் விருந்து.<br />
<br />
விருந்து சாப்பிட்டு வெகு நாளாகிறதே.பணம் கொடுத்தாவது விருந்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளே புகுந்தோம்.வாகனநெரிச்சல்களை பார்க்கும் போது கூட்டம் கும்மி அடிக்குமே.சரி பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மூன்று மாடிகள் கொண்ட உணவகத்துக்குள் நுழையும் போதே வாசலில் உள்ள காவலாளி இரண்டாவது தளம் போங்க என்று கூறினார்.<br />
<br />
அடடா..முதல் தளம் முழுக்க நிரம்பி விட்டது காத்திருந்துதான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி லிப்டினுள் நுழைந்தோம்.மாடியில் இருந்த கூட்டத்தைப்பார்த்து ஓரமாக இருந்த ஷோபாவில் அமர்ந்த மறு நொடியே உள்ளே வருமாறு அழைத்து விட்டனர்.மிகுதியான குளிர்ச்சியும் அழகான டெகரெஷனும்,பளிரென்ற விளக்கு அலங்காரமுமாக .சுத்தமும் கண்களை கவர்ந்தது.அதைவிட உபசரிப்பு வழக்கதைவிட அதிகம் தூக்கல்.தலை வாழை இலை விருந்து என்று தலைப்பிட்டதாலோ என்னவோ உணவக நிர்வாகம் கஸ்டமர்களை ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி விட்டதோ என்னவோ?உண்மையில் விருந்து உபசாரம்தான்.<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGie3NK5anynxSs-z03y6ykJPxK2Ov0HZQNqyxdiuNvUhqwGWBQdJnWLF4_wz20l_HHyJPZZIfX39PuNezL_inVVafVha9WhGSHh0f3AMNqW7p2ROOvpjsFr_TqRpKZBqznZFU9nDw6tU/s1600/DSC05304.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGie3NK5anynxSs-z03y6ykJPxK2Ov0HZQNqyxdiuNvUhqwGWBQdJnWLF4_wz20l_HHyJPZZIfX39PuNezL_inVVafVha9WhGSHh0f3AMNqW7p2ROOvpjsFr_TqRpKZBqznZFU9nDw6tU/s1600/DSC05304.JPG" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
திக்காக சுவையாக ஜில்லென்று கிர்ணிப்பழ ஜூஸ் குடிக்க இதமாக இருந்தது.கூடவே டிரை ஜாமூன்.அதன் பின் மேஜைக்கு வந்த ஐட்டங்களை பார்க்கும் போது</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
120 ரூபாய்க்கு காய்கறி விற்கிற விலையில் இத்தனை ஐட்டங்களா என்று ஆச்சரியமாக இருந்தது.வெள்ளை நிற பவுலில் இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவில் பளீரென்ற சாதம்.”இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் இத்தனை பளிச் என்று சாதம் வருது .?” என்று பக்கத்தில் இருந்த நட்பிடம் கேட்டபொழுது “சுண்ணாம்பை கலப்பார்கள் போலும் ”என்றாள்.இதனை செவி மடுத்த சர்வர் ”இல்லேம்மா இது நயம் பச்சரிசி”சாப்பாட்டோடு சேர்த்து இலவச இணைப்பாக பல்பு கொடுத்தார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpVvFJgumkAQHlGir2w4fgmKmKDvFthpTow-dYMA6s7MXEXsZsYLEiLRZEPWH-xyn_CQgDbjD-G14IE3nrE44qvSU06r_CubvhBiLoeZZjay0QE-3yWKNme3Tn95S9L8DeeOmwlXUmBLo/s1600/DSC05306.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpVvFJgumkAQHlGir2w4fgmKmKDvFthpTow-dYMA6s7MXEXsZsYLEiLRZEPWH-xyn_CQgDbjD-G14IE3nrE44qvSU06r_CubvhBiLoeZZjay0QE-3yWKNme3Tn95S9L8DeeOmwlXUmBLo/s1600/DSC05306.JPG" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
கிழே லிஸ்டை நன்றாக மூச்சு விட்டுக்கொண்டு படிங்க..மூக்கு பிடிக்க சாப்பிடத்தான் முடியாது..சாதம்,சாம்பார் கூட்டு பொரியல் குழம்பு எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.ஆனால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடத்தான் முடியாது.லிஸ்டில் இருந்ததைவிட இன்னும் அதிகளவில் ஐட்டங்கள் இருந்தன.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கிர்ணிப்பழஜூஸ்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
டிரைஜாமூன்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சேமியா பால்பாயசம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சாதம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புதினா சாதம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பருப்புவடை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பைனாப்பிள் ஸ்வீட் பச்சடி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கேரட் கோஸ் சாலட்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பீன்ஸ்காரக்கறி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கத்தரி கொண்டைக்கடலை கூட்டு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
முருங்கைக்காய் சாம்பார்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பருப்பு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நெய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தக்காளி ரசம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கருணைகிழங்கு வற்றக்குழம்பு</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தயிர்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மோர்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பருப்புத்துவையல்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வடகம் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அப்பளம் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நெல்லிக்காய் ஊறுகாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
மோர்மிளகாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வாழைப்பழம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பீடா</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
சிக்கூ ஐஸ் க்ரீம்</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCFB4mU9Xhyo_X8emAYl8raq9gvnfRRpepCvqxhcZSLtsBcOYJdXJKKlne3q1PLhA2n5FGcF6r3wSu6sepucMdULKGlN1u2f5AUl-yQiLdwZpjmLHdLWsiyllIglDodn-c5c2KXENlWBY/s1600/DSC05308.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCFB4mU9Xhyo_X8emAYl8raq9gvnfRRpepCvqxhcZSLtsBcOYJdXJKKlne3q1PLhA2n5FGcF6r3wSu6sepucMdULKGlN1u2f5AUl-yQiLdwZpjmLHdLWsiyllIglDodn-c5c2KXENlWBY/s1600/DSC05308.JPG" /></a></div>
<br />
மல்லிகைப்பூ சாதத்தின் மீது கட்டிப்பருப்பு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBI-yNbKzgtbink9TJd-psFCIw2Y1DedHzYTxQnPr31N-PSIZvIqvXvKsKYMKoYAdxqimBBiFMkU9woa4RukG4p0HlHtjT5AkTpoPVxshsQuXG2rxftXc1ZuB1a5swr9G235zUN47pI6c/s1600/DSC05307.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBI-yNbKzgtbink9TJd-psFCIw2Y1DedHzYTxQnPr31N-PSIZvIqvXvKsKYMKoYAdxqimBBiFMkU9woa4RukG4p0HlHtjT5AkTpoPVxshsQuXG2rxftXc1ZuB1a5swr9G235zUN47pI6c/s1600/DSC05307.JPG" /></a></div>
<br />
கட்டிப்பருப்பின் மீது மணக்க மணக்க உருக்கு நெய்.<br />
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHLYgOIn00DwKNFua2AK300jajMb4ALRnGmJ8m5UbWyemJE-2CAiqFm1q9t_losgRArtctSSVKeHgfAozo0MhyN6BsqYWB7N9XXNdB4vB6s6AUjFLVVtXbBXUQiOs1NEKGLrY3vh3VdTQ/s1600/DSC05311.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHLYgOIn00DwKNFua2AK300jajMb4ALRnGmJ8m5UbWyemJE-2CAiqFm1q9t_losgRArtctSSVKeHgfAozo0MhyN6BsqYWB7N9XXNdB4vB6s6AUjFLVVtXbBXUQiOs1NEKGLrY3vh3VdTQ/s1600/DSC05311.JPG" /></a></div>
வடை,மோர்மிளகாய் வடகம் ஊறுகாய் துகையல் வகையறாக்கள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtD7xzl6JEelceo5Xr-B4x0T3ba0nZLJb03tKQwS5m46XfmGqmV2tN5hsvLEaLfdxAA_X5vPoyd9ks6JcvwQYT5ocSBW7-4oolFp6WCKrntA-GIEwGFGvPCoqDqDZNgyo1lydeK0OkPYI/s1600/DSC05312.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtD7xzl6JEelceo5Xr-B4x0T3ba0nZLJb03tKQwS5m46XfmGqmV2tN5hsvLEaLfdxAA_X5vPoyd9ks6JcvwQYT5ocSBW7-4oolFp6WCKrntA-GIEwGFGvPCoqDqDZNgyo1lydeK0OkPYI/s1600/DSC05312.JPG" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
கடைசியாக பழம் பீடா ஐஸ்கிரீம்</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaJw_AivZAzvfXKCYFep0jRBCCyoSdQiR8W2pb2nlDsdljdDvlLZm5upUFSB8WyBue34bRf5lT8EszueR6hHbg4PstVfpMxIwGK15Qjg2wBUiMIFcIVgIhR3WsRoX84mBAlIPzgS3F7Og/s1600/DSC05315.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaJw_AivZAzvfXKCYFep0jRBCCyoSdQiR8W2pb2nlDsdljdDvlLZm5upUFSB8WyBue34bRf5lT8EszueR6hHbg4PstVfpMxIwGK15Qjg2wBUiMIFcIVgIhR3WsRoX84mBAlIPzgS3F7Og/s1600/DSC05315.JPG" /></a></div>
<br />
லிஸ்டை பாருங்கள்.இன்னும் இரண்டு நாளைக்கு இந்த ஆஃபர் உள்ளது<br />
<br />
உடன் வந்த வாண்டு எனக்கு மீல்ஸ் வேண்டாம் டிபன் தான் வேண்டும் என்றது ஒரு பனீர் தோசை ஆர்டர் செய்தோம்.இரண்டுவித சட்னிசாம்பாருடன் இருந்த பனீர் தோசையின் விலை 140 அடேங்கப்பா சொல்லவைத்தது.<br />
<br />
சரி கடைசியாக ஒரு டம்ளர் டிகிரி காஃபி சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்து காஃபியை சுவைத்து பில்லை பார்த்தால் லைட்டாக மயக்கமே வந்து விட்டது..100 ml காஃபி ஒவ்வொன்றும் தலா 40 ரூபாய்..chennai guys...போய் 120 ரூபாய் கட்டி டோக்கன் வாங்கி சமர்த்தாக மீல்ஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வாங்க.காஃபிக்கு ஆசைப்பட்டுடாதீங்க.டிப்ஸ் மற்றும் வேலட் பார்க்கிங் தனி.இன்னும் சிம்பிளாக 95 ரூபாயில் இதே தலை வாழை விருந்து சிக்கனமாக சாப்பிடவேண்டுமென்றால் குளிரூட்டப்படாத கிளைகளுக்கு போகலாம்.<br />
<div>
<br /></div>
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com48tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51133093654269073272013-09-14T19:49:00.001+05:302013-09-15T08:47:58.182+05:30தும்பி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAotwIFKBE4lFXrVnp0HqvQxmPlZez2_m4ShrtjNnIQkf8WzKUETvgB-R8P6fjxftskBte9C-6ytCkSEZbcETMxB7jRWLu3g3Ga9tMUndSNam7n8qGhqq9CU9fgjC564jVmWu-j_HdMN8/s1600/220px-Dragon_fly_trapped_in_web.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: blue;"><img border="0" height="349" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAotwIFKBE4lFXrVnp0HqvQxmPlZez2_m4ShrtjNnIQkf8WzKUETvgB-R8P6fjxftskBte9C-6ytCkSEZbcETMxB7jRWLu3g3Ga9tMUndSNam7n8qGhqq9CU9fgjC564jVmWu-j_HdMN8/s400/220px-Dragon_fly_trapped_in_web.jpg" width="400" /></span></a></div>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அந்த நாளில் மழைகாலம் வந்துவிட்டாலே முட்டைக்காளான்,பொன்னிக்குருவி,வண்ணத்துப்பூச்சி,தும்பி என்று கூத்தடித்த காலம் நினைவுக்கு வருகிறது.மழைகாலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே தும்பிகள் பறந்து விளையாடுவது மிகவும் ரசனைக்குறியது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">செடிகொடிகள்.மதிற்சுவர்கள் போன்றவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தும்பியை பிடித்து விளையாடி,இம்சை படுத்தி ரசிப்பது சிறார்களுக்கு வேடிக்கையான வாடிக்கை.தும்பிகளில் பல அளவுகள் பல ரகங்கள் உள்ளன.உலகில் 6000 வகை தும்பிகள் உள்ளனவாம்.முட்டைகண்களுடன்,பலவண்ணங்களை பிரதிபலிக்கும் பெரிய தும்பிகள்,மிகவும் மெலிதாக இருக்கும் ஊசித்தும்பிகள்...இதில் ஊருக்கு இளைத்தவன் இந்த ஊசித்தும்பிகள்தான்.உண்மையில் ஊசித்தும்பிகள் ஐயோ பாவம் போல் இருக்கும்.மிக சுலபமாக பிடித்து விடமுடியும்.முட்டைக்கண்களுடன் கூடிய பெரிய தும்பியை சாமான்யமாக பிடிக்க இயலாது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தும்பிகளின் வாலில் நூலால் கட்டி அதனை பறக்கவிட்டு மகிழ்ந்து கூக்குரல் இட்டு கும்மாளம் போடுவது அந்நாளைய சிறார்களுக்கு வாடிக்கை.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தும்பி ஒரு பூச்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான உயிரினம். தட்டாரப்பூச்சி.தட்டான்,ஊசித்தட்டான்,,தும்பி இப்படி பல நாமகரணங்களால் அழைக்கின்றனர்.ஆங்கிலத்தில் Dragonfly எனப்படும்.மிகச்சிறிய ஜந்துவாயினும் இதன் பார்வைத்திறன் அளப்பறியது.வெகுதூரத்தில் இருக்கும் எதனையும் மிகவும் இலகுவாகவும் கூர்மையாகவும் இனம் கண்டுக்கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்தது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் தி்றன் கொண்ட தும்பிகள் உணவுத்தேடலின் போது அதன் வேகம் அபாரமாக அதிகரிக்கின்றது.இந்த தும்பியை சில நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் உட்கொள்ளுகிறனர்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மழை வருவதற்கு முன்னர் தும்பிகள நிறைய பறக்ககண்டால் மழைவருவதற்காண அறிகுறி என்றும் கிராமத்து வாழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அழகழகு வண்ணங்களில் பட்டுப்போன்ற உடல் அமைப்புக்கொண்ட சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் மயக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு அடுத்ததாக மனம் கவரும் ஒரு அபூர்வ உயிரினம் இந்த தும்பிகள்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மதிற்சுவரிலும் செடிகொடிகளிலும் பதுங்கி நிற்கும் தும்பிகளின் பின்னாலேயே போய் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் இறுக்கமாக இணைத்துக்கொண்டு பம்மி பம்மி அருகில் போய் </span><br />
<span style="color: blue;"><br /></span>
<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;">காத்தட்டான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">தும்பித்தட்டான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">தம்பி வர்ரான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">நின்னுக்கோ</span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<span style="color: blue;"> என்று பாடியபடி தும்பி பிடித்து மகிழும் சிறுவர்கள் இதனையே தன் விளையாட்டு சகா தும்பியை பிடிக்கப்போகும் சமயத்தில் </span><br />
<span style="color: blue;"><br /></span>
<br />
<div style="text-align: center;">
<span style="color: blue;">காத்தட்டான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">கள்ளத்தட்டான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">கள்ளன் வர்ரான் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">ஓடிப்போ </span></div>
<div style="text-align: center;">
<span style="color: blue;"><br /></span></div>
<span style="color: blue;">என்று ராகம் போட்டு பாடி கூக்குரல் இடுவார்கள்.அக்காலத்தில் தும்பி பிடித்து விளையாடி மகிழ்ந்த அழகிய சுகமான அனுபவத்தை இக்கால சிறார்கள் இழந்து விட்டார்கள் என்பது நிஜம்.</span></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51682679623458689782013-09-10T22:56:00.001+05:302013-09-10T23:14:24.962+05:30முதல் பதிவின் சந்தோஷம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiibsykItiErsaNJ6wPAxW4x9jz4sqhyphenhyphendK8zAN7aONh-GvUdG-5sMZ17Ssa10xzEab3Kl4DR54DD6S3lBHR9I9DutSMJDJqXXU3qBsfkMToz2lB9C7rGy4tzqOpJpYmnMdkgxq44tUPew0/s1600/lady-on-computer-cartoon.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiibsykItiErsaNJ6wPAxW4x9jz4sqhyphenhyphendK8zAN7aONh-GvUdG-5sMZ17Ssa10xzEab3Kl4DR54DD6S3lBHR9I9DutSMJDJqXXU3qBsfkMToz2lB9C7rGy4tzqOpJpYmnMdkgxq44tUPew0/s1600/lady-on-computer-cartoon.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
எல்லோரும் எழுதி ஓய்ந்த ஒரு தலைப்பை இப்போதுதான் கையில் எடுக்கிறேன்.முதல் காரணம் மற்றும் ஒரே காரணம் ஞாபகமறதிதான்.<br />
<br />
பின்னூட்டபுயல்,அன்பின் தோழி <span style="color: red;">மஞ்சுபாஷினி</span> மற்றும் கவிதாயினி <span style="color: red;">வேதா இலங்காதிலகம்</span> இருவரின் அழைப்புக்கும் என் அன்பின் நன்றிகள்.<br />
<br />
தங்கை ஜலீலா சாட் பண்ணும் நேரமெல்லாம் தன் பிளாக்கை பற்றித்தான் பேசுவார்.தன் பிளாக் லின்க் தந்து பார்க்கச்செய்தார்.எப்படி பின்னூட்டுவது மற்ற வலைப்பூக்களை எப்படி பார்ப்பது என்பதை சொல்லித்தந்த உடனே நானும் என் மகன் உதவியுடன் ஒரு பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.<br />
<br />
எல்லாம் வல்ல அல்லாஹ்வைப்புகழ்ந்து தலைப்பு வைத்ததும் முதலில் என் மனதில் தோன்றியது என் பெற்றோர்தான்.உடனே இரண்டு அழகிய அர்த்த முள்ள திருகுர்ஆன் வசனத்தை <a href="http://shadiqah.blogspot.in/2009/09/blog-post.html">பதிவாக </a>இட்டு மகிழ்ந்தேன்.<br />
<br />
இந்த குர்ஆனில் வரும் குறிப்பிட்ட வசனத்தை எழுத இன்னும் ஒரு காரணம்.அன்றைய தினசரி ஒன்றில் ஒரு மகன் தன் தாயாரை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள விரும்பாமல் மெரீனா பீச்சில் விட்டு விட்டு ஓடி விட்ட செய்தி என் மனதினை மிகவும் பாதித்தது.எவ்வளவு கோர மனதுள்ள மகன் அவன் என்று அந்த முகம் தெரியாத மனிதனை நினைத்து வெறுப்பாக இருந்தது.எனவேதான் அந்த அழகிய அர்த்தமுள்ள இரு இறைவேத வசனங்களையும் பதிவிட்டு மகிழ்ந்தேன்.<br />
<br />
டைப் செய்து பதிவை பப்லிஷ் செய்த உடனே வாசித்து மகிழ்ந்த என் மகனே முதல் பின்னூட்டம் போட்டு அவரே அதை பப்லிஷ் செய்த அந்த தருணத்தின் சந்தோஷம் இன்னும் என் உள்ளம் முழுக்க நிரம்பி வழிகிறது.<br />
<br />
இந்த தொடர் பதிவினை எழுத நான் அழைக்கும் இருவர்<br />
<span style="color: red;">தோழி ஆசியா </span><br />
<span style="color: red;">தங்கை மேனகா</span><br />
<br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-32065847154097455202013-08-30T09:14:00.003+05:302013-08-30T10:42:40.204+05:30ஆட்டோவும் பரோட்டாவும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YNDkx8P-Fm6tSBE5_i_E7ncoT6xoYgbNDW84Ugb4p4CvfCTMz_6gT6AhGRHprRGVcDeUJBcYLm-eqSUpagFt-TzlR5Lv1vPYRPoXEyw4G4wID-xckne5xT1Vq_AJyWYQlECZzCm4t4Q/s1600/auto.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3YNDkx8P-Fm6tSBE5_i_E7ncoT6xoYgbNDW84Ugb4p4CvfCTMz_6gT6AhGRHprRGVcDeUJBcYLm-eqSUpagFt-TzlR5Lv1vPYRPoXEyw4G4wID-xckne5xT1Vq_AJyWYQlECZzCm4t4Q/s1600/auto.jpg" /></a></div>
மேகத்துகள்களுக்கிடையே ஆங்காங்கே கீற்றாக ஊடுறுவும் கதிரவகீற்றுக்களின் இதமான கதகதப்பு.காலை நேரத்திலும் இதம் தரும் சில்லென்ற உணர்வு.ஆராவாரம் அதிகம் இல்லாத கோழிக்கோடு சாலையில் நான் சென்ற ஆம்னி பஸ்ஸை ஓரம் கட்டி விட்டு “இதுதான் லாஸ்ட்.எல்லோரும் இறக்கிக்குங்க” என்று தமிழும் மலையாளமும் கலந்து ஓட்டுனர் கூறவும் பஸ்ஸில் சொற்பமாக இருந்த ஒரு சிலருடன் 'பஸ்ஸில் இப்படி லோல் படும் நிலைமை ஆகிவிட்டதே. டிரைனுக்கு டிக்கெட் கிடைத்து இருந்தால் இத்தனை அவஸ்தை வேண்டியதில்லையே”என்று பயணம் முழுக்க புலம்பி 14 மணி நேரப்பயணத்தையும் வெற்றி கரமாக முடித்த அலுப்பில் நாங்களும் பஸ்ஸை விட்டு இறங்கினோம்.<br />
<br />
பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த போதே தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ எங்களை நோக்கி வந்தது.”ஐ ஜி ரோட் காலிகட் டவர் போகணும்”இது நான்.<br />
<br />
“பிஃப்டீன் ருபீஸ்”<br />
<br />
’பிஃப்டியா பரவாஇல்லையே.மூட்டை முடிச்சை எல்லாம் பார்த்து ஊருக்கு புதுசு என்று அதிகம் கேட்காமல் நியாமாக கேட்கிறாரே இந்த ஆட்டோ மேன்”என்று நினைத்தேன்.இருந்தாலும் மெட்றாஸ் புத்தி .வழக்கமாக சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும் அந்த ஆட்டோ மேன் பலமாக சிரிக்கிறார்.”தாரளமாக கொடுங்க.வாங்கிக்கறேன்”<br />
<br />
அருகில் இருந்த என் மகன் பற்களை கடித்த சப்தம் அந்த ஏரியாவிலே இடி விழுந்த சப்தத்திற்கு ஈடாகி இருக்கும்.<br />
<br />
“ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ..அவர் பிஃப்டீன்ன்ன்ன்ன் ருபீஸ் கேட்கிறார்”அடிக்குரலில் இப்படி சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் சீட்டில் பயணித்தது ,ஓயாமல் பஸ் டிரைவர் ஹார்ன் அடித்த விளைவோ என்னவோ என் காது அடைத்து விட்டது போலும்.ஒரு வழியாக பிரமிப்பு மாறாமலே மூட்டை முடிச்சுகளுடன் ஆட்டோவில் ஏறினோம்.<br />
<br />
இந்த ஆட்டோவில் மட்டுமல்ல அங்கு ஓடிக்கொண்டு இருக்கும் எல்லா ஆட்டோக்களும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது.ஆட்டோவில் பயணர் இருக்கைக்கும்,ஓட்டுனர் இருக்கைக்கும் இடையில் ஸ்டீலால் அலங்கரித்து அழகு படுத்தியதுமில்லாமல் முகப்பில்,சீலிங்கில் ,பக்கவாட்டில் என்று எல்லா இடங்களிலும் அலங்கரித்து இருக்கின்றனர்.சீலிங்கில் பொருத்தபட்டு இருக்கும் அலங்கார விளக்கு உயரமான ஆட்கள் அமர்ந்தால் தலையை பதம் பார்க்கும்.உள் அலங்காரத்தின் காரணத்தால் சென்னையைப்போல் மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் பயணிப்பது மிகுந்த சிரமம்.<br />
<br />
சென்னையில் ஆட்டோக்கள் பெரிய ஹோட்டலினுள் அனுமதிக்கபடுவதில்லை.அந்த பந்தா ஏதும் இல்லாமல் ஹோட்டலுக்குள்ளேயே சென்று நிறுத்தி பெட்டிகளை ரிஸப்ஷன் கவுண்டர் அருகே வைத்து வைத்து விட்டு பதினைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு சென்ற ஆட்டோ டிரைவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.வெறும் பதினைந்தே ரூபாய்க்கு எத்தனை உழைப்பு!<br />
<br />
சென்னையில் ரெண்டே கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்தாலும் 100 ரூபாயை கூசாமல் வாங்கிசெல்லும்,மெட்றாஸ் பாஷையால் பயணிகளை அர்ச்சிக்கும் ஆட்டோமேன்களுக்கு இடையே இப்படியும் ஒரு ஆட்டோ மேன்.இந்த ஆட்டோ மேன் மட்டுமல்ல நான் அங்கிருந்த நான்கு நாட்களும் பயணித்த ஆட்டோக்கள் அனைத்துமே இந்த ரீதியில்தான் இருந்தது.தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 25 - 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த என் ஐ டி கேம்பஸுக்கு சென்று காத்திருந்து திரும்ப,வழியில் ஆங்காங்கே நிறுத்தி குட்டி குட்டி ஷாப்பிங் செய்து வர மொத்தமாக 500 ரூபாய்தான் இண்டிகோ காரின் வாடகை எனக்கு ஆச்சரியமூட்டியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR8m9zj7yMGz91RA-XeESf1_Wco5qg6X1wwWuXDmRrgMY6syFU8LGzOzJir4I7DfvP8JwKIlUZCToe206QGjAm25jBviHhuIzkgWX1rUeCx73MK7gg_eA4KD8tNL7vcSLsHCz73l7pROE/s1600/paroottaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR8m9zj7yMGz91RA-XeESf1_Wco5qg6X1wwWuXDmRrgMY6syFU8LGzOzJir4I7DfvP8JwKIlUZCToe206QGjAm25jBviHhuIzkgWX1rUeCx73MK7gg_eA4KD8tNL7vcSLsHCz73l7pROE/s1600/paroottaa.jpg" /></a></div>
<br />
ஹோட்டலில் உள்ள சாதம் பிரியாணி அனைத்திலும் அரிசி மெகா சைஸில் இருந்ததில் சாப்பிட பிடிக்காமல் பக்கத்தில் இருந்த மால்களுக்கு சென்று சிக்கனும் பர்கருமாக பொழுது கழிந்தது.சில உணவகத்தினுள் நுழைந்து பிடிக்காமல் திரும்பியதும் உண்டு.தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு ஹோட்டல் மனதிற்கு பிடித்தமாதிரி இருந்தது.உள்ளே நுழைந்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேர் தட்டுகளிலும் பரோட்டாதான்.ஒரு க்ரூப் சைட் டிஷ் இல்லாமல் வெறும் பரோட்டாவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.இங்கு பரோட்டா மட்டும்தான் கிடைக்குமாக இருக்கும் என்று நினைத்து மெனுகார்டு வாங்கி பார்த்தால் ஏகப்பட்ட மெனுக்கள் இருந்தன.<br />
<br />
சரி நாமும் பரோட்டாவே ஆர்டர் பண்ணலாம் என்று ஆர்டர் செய்தோம். இலைக்கு வந்த பரோட்டா அப்படியே பரவசப்படுத்தி விட்டது.அத்தனை சாஃப்ட்.லேயர் லேயாராக சுவையாக சூடாக..ஆஹா இதுதான் மலபார் பரோட்டாவா!வெறும் ஏழே ரூபாயில் மெகா சைஸ் பரோட்டா.பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.ஊருக்கு திரும்பும் போது கூடவே பெரிய பரோட்டா பார்சல் கூடவே வந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-46527048129774005462013-07-21T11:56:00.005+05:302013-07-21T13:13:19.065+05:30மாடித்தோட்டம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both;">
மொட்டை மாடியில் எத்தனையோ வித தோட்டங்களைப்பார்த்து இருக்கிறோம்.ராயபுரம் பாயிஜா சிராஜின் வீட்டு தோட்டமோ முற்றிலும் வித்தியாசமானது.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
மூவாயிரம் சதுர அடி மொட்டை மாடியில் முன்னூறுக்கும் மேற்பட்ட மண்ஜாடிகளில் விதவிதமான செடிகள்,மற்றும் ஐநூறுக்கும் மேலான அலங்கார பொருட்களினால் அலங்கரித்து வித்தியாசம் காட்டி அசத்துகின்றார் பாயிஜா சிராஜ்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
இவர் வெளி நாடுகளுக்கோ,வெளியூர்களுக்கோ சென்றால் தனக்கென்று வாங்கும் பொருட்கள் ஏதுவுமே இருக்காது,தன் தோட்டத்திற்கான பொருட்களை வாங்கி தோட்டத்தை இன்னும் விரிவு,அழகுபடுத்தவே விரும்புவார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
எண்ணிக்கைக்கு அடங்காத வித விதமான அலங்காரபொருட்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடத்தில் வைத்து இருக்கிறோம் என்பது இவருக்கு அத்துப்படி.யாராவது மாற்றி வைத்து விட்டால் உடனே கண்டு பிடித்து விடுவார்.தினமும் காலையிலும் மாலையிலும் தோட்டத்தைப்பராமாரிக்க நேரத்தை செலவிடுவாராம்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
கலைரசனையில் அசாத்திய ஆவல் கொண்டு இருக்கும் பாயிஜாவுக்கு சவால் மழை.அதைவிட பெரும்சவால் புயல்.மழை,புயல் காரணமாக எத்தனையோ பொருட்கள் சேதமாகி இருக்கின்றனவாம்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
மழை பொழிந்து ஓய்ந்ததும் இவருக்கு வேலை அதிகமாகவே இருக்கும்.நாள் முழுக்க தோட்டத்தில் அமர்ந்து சீர் படுத்துவாராம்.உடைந்து போன பொருட்களை அப்புறப்படுத்தி,சாய்ந்து போன,மழைத்தண்ணீரில் இழுத்துக்கொண்டு போன பொருட்களை ஒழுங்கு படுத்துவதுதான் இவருக்கு முதல் வேலை.மழை பெய்ய ஆரம்பித்ததும் எனக்கு அடிவயிறு கலங்கி விடும்.இந்த முறை அதிக சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுவிடுவேன் என்கிறார்.பொழிவிழந்த ஜாடிகளுக்கு சாயம் பூசுவது,பழசாகிப்போன பொருட்களை அப்புறப்படுதுவது என்று தோட்டவேலை கனக்கச்சிதமாக செய்கின்றார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
தோட்டத்தில் உதிரும் ஒரு இலையைக்கூட வீணடிப்பதில்லை.அத்தனையும் சேகரித்து உரமாக்கி விடுவேன் என்கிறார்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
பாயிஜா சிராஜின் ரசனை மிக்க மொட்டைமாடி தோட்டத்தின் காட்சிகளைப்பாருங்கள்.</div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #0000ee;"><u><br /></u></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixJxGtGR85MAcwZ0nIB5-JvFYohgQyE8FkS7ALNPI2hAzSX_g-8xxV3MZRqggR1Jf6KrCeMPAZvxbp21B3QFwq8z3ht3YvNDgjCODJpnkbVtmiNMy9zaZgTg4o3dtfzyAUdVtLPTXVWxE/s1600/DSC04853.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixJxGtGR85MAcwZ0nIB5-JvFYohgQyE8FkS7ALNPI2hAzSX_g-8xxV3MZRqggR1Jf6KrCeMPAZvxbp21B3QFwq8z3ht3YvNDgjCODJpnkbVtmiNMy9zaZgTg4o3dtfzyAUdVtLPTXVWxE/s320/DSC04853.JPG" width="320" /></a></div>
பளிங்கு கற்களுக்குள் லைட்டிங் அமைத்து ஒரு மூலையில் வைத்து அலங்கரித்து இருப்பது கண்களை பறிக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOg20l1wZYSvSBHZI-auoz01OlBO-QiU9L51JubWaYStKaOFT76bPatL9ja3hALyJ8TVNdnoz4ZNbdJPEeeMsujMmqA-tiWQcUq2T68v-iaDraoVbj75ML_Ck2cE8_vfZxcuqiBYBGiuQ/s1600/DSC04855.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOg20l1wZYSvSBHZI-auoz01OlBO-QiU9L51JubWaYStKaOFT76bPatL9ja3hALyJ8TVNdnoz4ZNbdJPEeeMsujMmqA-tiWQcUq2T68v-iaDraoVbj75ML_Ck2cE8_vfZxcuqiBYBGiuQ/s320/DSC04855.JPG" width="320" /></a></div>
தோட்டத்தின் ஒருகோணம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0m6tK6b5u8ETbKV2pqaGivXnxrPmcC3EkahIu9dNgT7CWN7U1gxlVTivD0gSCOw6GPtVCzUY8EzOotrotOHTvIylRHV-w4zLn1gcZWGcIsXSFzPleH0z-ewWYAC1BgTpTefaBw9eHQfA/s1600/DSC04915.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0m6tK6b5u8ETbKV2pqaGivXnxrPmcC3EkahIu9dNgT7CWN7U1gxlVTivD0gSCOw6GPtVCzUY8EzOotrotOHTvIylRHV-w4zLn1gcZWGcIsXSFzPleH0z-ewWYAC1BgTpTefaBw9eHQfA/s320/DSC04915.JPG" width="320" /></a></div>
சுவரையும் விட்டு வைக்கவில்லை.மண்,களிமண்,பிளாஸ்டிக் சைனா கிளே போன்ற வற்றில் தயாரித்த அலங்காரபொருட்கள் மனதை கொள்ளை கொள்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW8IVS7vPoo82U0HN4Yd7g7BTuuPfbm_EvRcSunuPqRcCFTJpFOsl09ycupYfJ_fWowDKBrZ1dGlz2QhqY2ckyAoUxVpyVvANgnLMMOH5_azkjupgN14DMuwhBUoeg8uNbJBSTHIH3ofU/s1600/DSC04918.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW8IVS7vPoo82U0HN4Yd7g7BTuuPfbm_EvRcSunuPqRcCFTJpFOsl09ycupYfJ_fWowDKBrZ1dGlz2QhqY2ckyAoUxVpyVvANgnLMMOH5_azkjupgN14DMuwhBUoeg8uNbJBSTHIH3ofU/s320/DSC04918.JPG" width="320" /></a></div>
சுற்றிலும் ஜாடிகளில் பூச்செடிகளும்,விதவிதமான க்ரோட்டன்ஸ்களும் இருக்க நடுவே இருக்கும் இடங்கள் முழுக்க இப்படி அலங்கார பொருட்களும்,சிறிய பூச்சாடிகளுமாக பிரமிக்க வைக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT4b4tH1tLqFXHWCYqxu1bnynaV4Gw6eeNlcwDUfhPUX5TujfRhoTOA1_P7FkEBh0Dz-G72t198rCcu3PmhN11y16y00uE8nLZDR8P8QMFaWn3NwaD547e2AietN0l9CELrl1BC6i6SrY/s1600/DSC04922.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT4b4tH1tLqFXHWCYqxu1bnynaV4Gw6eeNlcwDUfhPUX5TujfRhoTOA1_P7FkEBh0Dz-G72t198rCcu3PmhN11y16y00uE8nLZDR8P8QMFaWn3NwaD547e2AietN0l9CELrl1BC6i6SrY/s320/DSC04922.JPG" width="320" /></a></div>
வேறொன்றுமில்லை.தூரத்தில் இருந்து பார்த்தால் பறவைகள் வந்து இந்த சட்டியில் முட்டை இட்டு நிரப்பி விட்டு சென்று விட்டனவோ என்று நினைக்கத்தோன்றும் ஒரு தோற்றம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSBkF1zk4wummgl8z095cWEAFfWy1FZukfs_sRHCBO8yiIX37BNdf_nvoauMoQSJXkltZQBmZ4BWX62Ae7m4Auhhn1IK6U_wneyh2QGDgeW2ZK9H7-eOVqtvTiXhaqLXIiSBVxjy2JWEU/s1600/DSC04926.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSBkF1zk4wummgl8z095cWEAFfWy1FZukfs_sRHCBO8yiIX37BNdf_nvoauMoQSJXkltZQBmZ4BWX62Ae7m4Auhhn1IK6U_wneyh2QGDgeW2ZK9H7-eOVqtvTiXhaqLXIiSBVxjy2JWEU/s320/DSC04926.JPG" width="320" /></a></div>
தோட்டத்தின் இன்னொரு தோற்றம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKoeG8mm39eglhi5NoznA5W9NRkzkMrzS9ZXs2YH9eyn5CSxxOTVHsls9O5HtC6B7QTSW_XBQVpHPd4hHQb2CM_vg43LFXEZmfpPhtISIX4ZLRC25tW2KH50jztcYtfUc5SW17WNT7UEk/s1600/DSC04928.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKoeG8mm39eglhi5NoznA5W9NRkzkMrzS9ZXs2YH9eyn5CSxxOTVHsls9O5HtC6B7QTSW_XBQVpHPd4hHQb2CM_vg43LFXEZmfpPhtISIX4ZLRC25tW2KH50jztcYtfUc5SW17WNT7UEk/s320/DSC04928.JPG" width="320" /></a></div>
வெள்ளை மற்றும் ரோஸ் வண்ணத்தில் போகன் வில்லா.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQHOo80fJy-poHLugaT6lbEd39cuUvze0QySSAkbAAmoF2mOBNf9LOnGYQGyp41q1At7z2hOhf5J4TDTlD0vhrfNgyjDxqZELsGYTiyligF_2DPOBNfKCZ-AygrDdnfmGhDuc2zXe37s/s1600/DSC04930.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvQHOo80fJy-poHLugaT6lbEd39cuUvze0QySSAkbAAmoF2mOBNf9LOnGYQGyp41q1At7z2hOhf5J4TDTlD0vhrfNgyjDxqZELsGYTiyligF_2DPOBNfKCZ-AygrDdnfmGhDuc2zXe37s/s320/DSC04930.JPG" width="320" /></a></div>
சேரும் குப்பைகளை சேகரிக்க முயல் குட்டி.மக்கும் குப்பைகளை சேமிக்க மண்ணால் ஆன அலங்காரக்கூஜா.இது ஆங்காங்கே உள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMcwE8Tr32CjOFBLQf-hBcFQ7A4InYEkr3IiKKoNesewERsynJGvpraN9BMBKYIqslxfKkb5EaSNBsUAD1BtqnUwvAnijrnKSCwgiAA5B43Wpg45D0G2eVNVfvvpNvtnSGMAPVUvlXTyU/s1600/DSC04934.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMcwE8Tr32CjOFBLQf-hBcFQ7A4InYEkr3IiKKoNesewERsynJGvpraN9BMBKYIqslxfKkb5EaSNBsUAD1BtqnUwvAnijrnKSCwgiAA5B43Wpg45D0G2eVNVfvvpNvtnSGMAPVUvlXTyU/s320/DSC04934.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvZtCVIMbdVw_pYDwLSNuAibv_alaoJuwZKEDbxCu_wmwBeFf_GRsi508HUpXDDReNB62JVE3ug9pXupLe9NSniygbY2auqdOhhR-19rfIEfIpBg5E1ccezJ_2WdzstEadqXwPbReCgp0/s1600/DSC04935.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvZtCVIMbdVw_pYDwLSNuAibv_alaoJuwZKEDbxCu_wmwBeFf_GRsi508HUpXDDReNB62JVE3ug9pXupLe9NSniygbY2auqdOhhR-19rfIEfIpBg5E1ccezJ_2WdzstEadqXwPbReCgp0/s320/DSC04935.JPG" width="320" /></a></div>
தவளை இருக்கு.ஆனால் தவளை சப்தத்தைத்தான் காணோம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNQANGnFkQGBUhWfzUne61YY8Hc25YzcVvBHmO_bEohTMb1WUkb-cEC78lSg_s5QtA6PJ5yMQiXzqp363Ccn6WYyBMvK6KQrFwidaOKhEA7VCBEdmISCNy67mNSKCwdFh7ZWCQhCzKHmI/s1600/DSC04942.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNQANGnFkQGBUhWfzUne61YY8Hc25YzcVvBHmO_bEohTMb1WUkb-cEC78lSg_s5QtA6PJ5yMQiXzqp363Ccn6WYyBMvK6KQrFwidaOKhEA7VCBEdmISCNy67mNSKCwdFh7ZWCQhCzKHmI/s320/DSC04942.JPG" width="320" /></a></div>
இது ஒரு வித்தியாசமான அலங்காரம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWIwzAIYrE-Hh3hVX5d38rJuYSMwk8V0m33UeFcL_2zPoSvaz9vtx1ocmOlNZCMFFUrxi2GFR2RO3GabLWoc_iXua5QS7xV1YQB1cKwB8Kssggk9HZMaqELt-vZHyhdx7AQJ1e-ASNH0Y/s1600/DSC04947.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWIwzAIYrE-Hh3hVX5d38rJuYSMwk8V0m33UeFcL_2zPoSvaz9vtx1ocmOlNZCMFFUrxi2GFR2RO3GabLWoc_iXua5QS7xV1YQB1cKwB8Kssggk9HZMaqELt-vZHyhdx7AQJ1e-ASNH0Y/s320/DSC04947.JPG" width="320" /></a></div>
இன்னொரு மூலையின் அலங்காரத்தோற்றம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYLbCmMTbiIOMPJFTEVhDT51faltE892FZUsE91oi3cgFAofz3iMFM1dOGLg8LwyzcnA-kwWqYsaPEnEV3A5hxqQaEteeM7w8nbMQJ0cKIQUunRIOVRA2ElT8dJQvFoozioXYATo5-hWk/s1600/DSC04948.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYLbCmMTbiIOMPJFTEVhDT51faltE892FZUsE91oi3cgFAofz3iMFM1dOGLg8LwyzcnA-kwWqYsaPEnEV3A5hxqQaEteeM7w8nbMQJ0cKIQUunRIOVRA2ElT8dJQvFoozioXYATo5-hWk/s320/DSC04948.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இந்த வித்தியாசமான பூஜாடி இவர் வெளிநாட்டுக்கு சென்ற போது வாங்கி வந்தவை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9-LbsMJCH4GzupM9yth_YaKeH98MsSY1FEb4g58-qIfNdbCXJHN7vIP8nhN3alPjjHWGeJxPGBTUUvPJdKAmKLBh_PvnWJg3at36NewiCaHQtzg6U5u2AZDzq4EwcCBfh5Cf9Jcow5Rc/s1600/DSC04950.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9-LbsMJCH4GzupM9yth_YaKeH98MsSY1FEb4g58-qIfNdbCXJHN7vIP8nhN3alPjjHWGeJxPGBTUUvPJdKAmKLBh_PvnWJg3at36NewiCaHQtzg6U5u2AZDzq4EwcCBfh5Cf9Jcow5Rc/s320/DSC04950.JPG" width="320" /></a></div>
மண்ணால் ஆனால் மோடா.கடல் காற்றை சுகமாக அனுபவித்து உட்கார்ந்து தோட்டத்தை ரசிக்க ஆங்காங்கே இப்படி மண்ணால் ஆன மோடா அமைக்கப்பட்டுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFBr38kyR1k5kqsTBENIDfLR1TIQXsMePAiQUe01m9XhlXtrQiHNLKhD8dIY3gOg6mX_94PeYYUNWDeDtn2-gbkSLfK-hGkNs3fXncw3D7-aOqzcmxgeXAz8Ky-cvzTJWGn1X-XFUHCzw/s1600/DSC04951.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFBr38kyR1k5kqsTBENIDfLR1TIQXsMePAiQUe01m9XhlXtrQiHNLKhD8dIY3gOg6mX_94PeYYUNWDeDtn2-gbkSLfK-hGkNs3fXncw3D7-aOqzcmxgeXAz8Ky-cvzTJWGn1X-XFUHCzw/s320/DSC04951.JPG" width="320" /></a></div>
மண்ணால் ஆன குட்டி மீன் தொட்டி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhygPL4TyHbEEctyugRvT3N9KQ2rfRwYpLT_2XyQG1j01P0mn2lTz-xkZfNpGjHPHXguUUuUN99iqb9n26jbSK1SEUC_CvXRItx-c6t8gs3W613u4HrpPOakP2yzV7W7wIV5Hp32MBOKEM/s1600/DSC04952.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhygPL4TyHbEEctyugRvT3N9KQ2rfRwYpLT_2XyQG1j01P0mn2lTz-xkZfNpGjHPHXguUUuUN99iqb9n26jbSK1SEUC_CvXRItx-c6t8gs3W613u4HrpPOakP2yzV7W7wIV5Hp32MBOKEM/s320/DSC04952.JPG" width="320" /></a></div>
<br />
இவ்வளவு இருந்தும் சிப்பியும்,முத்தும் இல்லாமலா?</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-51470141675268810282013-07-14T21:45:00.001+05:302013-07-14T22:00:16.839+05:30அது இதுதான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white;">
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">நான் சுவாரஸ்யமாக அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தேன்.எங்கள் வீட்டு குட்டி ஆமிர் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தார்.கையில் நீளமாக பிலிம் ரோல்,ரிப்பன் போன்ற வஸ்து.எங்காவது இருந்து எடுத்து வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து நாளிதழில் மும்முரமாகிவிட்டேன்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">அந்த வஸ்துவை வாயில் வைத்ததும் “தம்பி வாயில் எல்லாம் வைக்கக்கூடாது”என்று சப்தமாக சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.அதனை கடித்து மெல்லவே ஆரம்பித்துவிட்டதும் பதறிப்போய் பிடிக்க ஓடினால் என் கையில் மாட்டவே இல்லை.டேபிளை சுற்றி ஓடவும்,மாடிப்படி வழியே ஓடவும்..நானும் விடவில்லை.பின்னாலேயே மூச்சிரைக்க ஓடினேன்.வாயெல்லாம் சிரிப்பாக அந்த பிலிம் ரோலை சுவைத்துக்கொண்டே என் கையில் மாட்டாமல் ஆட்டம் காண்பித்து எனக்கு வெறுப்பு ஏற்றியதுதான் மிச்சம்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">எதிரே வந்த என்பையன் என்னம்மா சின்னப்பிள்ளை போல் இவனுடன் ஓடிப்பிடித்து விளையாடுறீங்க”என்று கேட்டார்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">”இவன் பிலிம் ரோலை சாப்பிடுகிறான்ப்பா ”</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">”பிலிம் ரோலா”பதறிய படி ஆமிரை தாவிப்பிடித்து கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்கு..</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">“ஐய்யையோ..அவனவன் செங்கலை சாப்பிடுகிறனர்,பல்பை சாப்பிடுகிறானர்,பேப்பரை சாப்பிடுகிறானர் என்று தொலைக்காட்சியிலும்,நாளிதழ்களில் அறிந்து இருக்கிறோமே.அந்த ரேஞ்சில் இவர் பிலிம் ரோலை சாப்பிடுகிறாரா என்று ஒரு நொடி யோசித்து அதிர்ந்து விட்டேன்.”</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">கையில் இருந்ததை வலுக்கட்டாயமாக வாங்கி பார்த்தது விட்டு”மா..நாளைக்கு நியூஸ் பேப்பரில் பிலிம் ரோலை உணவாக சாப்பிடும் ஆறுவயது சிறுவன் என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வரும்,சன் நியூஸுக்கு பேட்டி கொடுக்க ரெடியாக இருங்க”என்று கூறி சிரித்தார் என் மகன்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">அன்றைக்கு செம்ம்ம்ம்மையாக பல்பு வாங்கி விட்டேன்.சும்மா இல்லை.தவுசண்ட்வாட்ஸ் பல்பு.அது வேறு ஒன்றும் இல்லை.சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மிட்டாய்.சிறுவர்களுக்கு மட்டுமல்ல.எனக்கும்தான் மிகவும் பிடித்த ஜெல்லி மிட்டாய்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">அப்பப்பா..இந்த மிட்டாய் கம்பெனி ஆட்கள் எப்படி எல்லாம் யோசிக்கங்கப்பா!!</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">இதனை,தங்கை <a href="http://vanathys.blogspot.in/">வானதி</a>யும்,தோழி <a href="http://imaasworld.blogspot.in/">இமா</a>வும் கண்டு பிடித்து விட்டனர்.இது வானதி ஊரில் விற்கும் கேண்டி என்பதால் வான்ஸ் மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டார்.அவர் போட்ட பின்னூட்டத்தை கை தவறி பப்லிஷ் செய்து விட்டேன்.அறிந்த மறு நிமிடமே டெலிட்டும் செய்து விட்டேன்.ஆனால் மயிரிழைக்கேப்பில் இமா அதனை பார்த்து விட்டார்.அன்றிலிருந்து இமா தோழி எப்ப விடை சொல்லப்போறீங்க”என்று கேட்டு கேட்டு இதோ விடையும் சொல்ல வைத்துவிட்டார்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif;">நோன்புநேரம்,தவிர என் கேமராவுக்குள் ஆமிரை சிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது:)</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJUjxqaF-CFNBiJw7pjkYJcSK6szAhEoHrl-HaHFJgs4HqBwydojh_HI9u9nu3DBlsEEhnJE6D0lh8TTp5FV30BQpFPJfNoPaYCq3nPrAkk9D-yLtwDrqyR9PTbzRjNdeKef3NIk4-WfY/s1600/DSC05096.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJUjxqaF-CFNBiJw7pjkYJcSK6szAhEoHrl-HaHFJgs4HqBwydojh_HI9u9nu3DBlsEEhnJE6D0lh8TTp5FV30BQpFPJfNoPaYCq3nPrAkk9D-yLtwDrqyR9PTbzRjNdeKef3NIk4-WfY/s640/DSC05096.JPG" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6HvHE9zf3-89xrlQ9W5TtWvgoMttJLF3kxO7LVwBl3pLKcC4RNWvNv-ADRozQW7-Ce0JpMDYfD72nJTLVsCmindgy9ZO4Ml6uUfgfzRSaenhE6fhWhywTDjutf4z1XhyH1v9Uve6ngQE/s1600/DSC05110.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6HvHE9zf3-89xrlQ9W5TtWvgoMttJLF3kxO7LVwBl3pLKcC4RNWvNv-ADRozQW7-Ce0JpMDYfD72nJTLVsCmindgy9ZO4Ml6uUfgfzRSaenhE6fhWhywTDjutf4z1XhyH1v9Uve6ngQE/s640/DSC05110.JPG" width="640" /></a></div>
<div>
<span style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
</div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-53054032618455005102013-07-06T14:52:00.002+05:302013-07-06T15:09:37.218+05:30கண்டுபிடியுங்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<div>
<span style="color: blue; font-size: large;">கண்டுபிடியுங்கள்...</span></div>
<div>
<span style="color: blue; font-size: large;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-size: large;">ஹி..ஹி..வேறு ஒன்றுமில்லேங்க,பிளாக் எழுதி</span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;">நாளாச்சு.மக்கள்ஸ் நம்மை மறந்து விடுவார்களோ</span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;">என்று அவசரகதியில் இந்த பகிர்வு.</span><br />
<br /></div>
<div>
<span style="color: blue; font-size: large;">படத்தில் இருப்பது என்ன?கண்டு பிடித்து</span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;"> சொல்லுங்களேன்.முதலில் சொல்பவருக்கு</span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;"> முதலாம் பரிசு,இரண்டாவது கண்டு பிடித்து</span><br />
<br />
<span style="color: blue; font-size: large;">சொல்பவருக்கு இரண்டாம் பரிசு என்றெல்லாம்</span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;"> சொல்லி உங்களை எல்லாம் இம்சை படுத்த </span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;">மாட்டேன்...</span></div>
<div>
<span style="color: blue; font-size: large;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-size: large;">எங்கே கண்டுபிடியுங்கள்....</span></div>
<div>
<span style="color: blue; font-size: large;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-size: large;">சரியான விடை படங்களுடன் அடுத்த பதிவில்...</span></div>
<div>
<span style="color: blue; font-size: large;"><br /></span></div>
<div>
<span style="color: blue; font-size: large;">ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்பா..எப்படிஎல்லாம் </span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;">பதிவை தேத்துறாங்க என்ற முனங்கல்ஸ் </span><br />
<span style="color: blue; font-size: large;"><br /></span>
<span style="color: blue; font-size: large;">கேட்கத்தான் செய்கிறது...:)</span></div>
</div>
</div>
<div>
<span style="color: blue; font-size: large;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxnfFjd5oiB5BZpLBoU2h9n_Qdf7sEpkY-wEqNduPfWtJwDA771oQ5HQrCzTwmvptttz8aGbZ-mwUuANZRNz3-gQd_U9DLV91BzizEwF49PfrOiSEOuduDSu8q6qxfSYPjgS2VkaqYfg0/s1600/DSC05097.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxnfFjd5oiB5BZpLBoU2h9n_Qdf7sEpkY-wEqNduPfWtJwDA771oQ5HQrCzTwmvptttz8aGbZ-mwUuANZRNz3-gQd_U9DLV91BzizEwF49PfrOiSEOuduDSu8q6qxfSYPjgS2VkaqYfg0/s400/DSC05097.JPG" width="400" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVaNq0VnzhMs-joA7xBSAYkhSNvI6dfhcLML9wC_d6EJdrNqVEny8l5ffWtzyeGNh8n918Ktw2TaFO4e_BrFzy9RVymXBtgvgJq9dZGnPhiSjqxtDsc5m-SqZYxfnbHaWEkXP4GdMqQ5w/s1600/DSC05098.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVaNq0VnzhMs-joA7xBSAYkhSNvI6dfhcLML9wC_d6EJdrNqVEny8l5ffWtzyeGNh8n918Ktw2TaFO4e_BrFzy9RVymXBtgvgJq9dZGnPhiSjqxtDsc5m-SqZYxfnbHaWEkXP4GdMqQ5w/s400/DSC05098.JPG" width="400" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBMr2xAtp4PiN3iH-QwYWsheGzNdBvp_RiBKnOqq4DX9HlWFZ3EPf3_fyx4NSHPvQv_Jw_vXYn05rjNqjtOcVyEx4frkZz_w2bdx6zAs2X9uGgCuIOv5w_NzBhy_A-avPegRHZkesz1wA/s1600/DSC05099.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBMr2xAtp4PiN3iH-QwYWsheGzNdBvp_RiBKnOqq4DX9HlWFZ3EPf3_fyx4NSHPvQv_Jw_vXYn05rjNqjtOcVyEx4frkZz_w2bdx6zAs2X9uGgCuIOv5w_NzBhy_A-avPegRHZkesz1wA/s400/DSC05099.JPG" width="400" /></a></div>
<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com56tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-18774826284894650802013-06-12T13:23:00.000+05:302013-06-26T12:02:55.234+05:30அப்பாடக்கர் அய்யாசாமி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQbvO8l1qCQYbtCMOOUamlm2H1w4enFVmdU8CxVKD2ZrG0DK3br0NAqZ4GUo9R12DV5hcIEIR9xnA6SsJJ-tqHJPurpKkNTLsWhNVW_HYzl4Ktl0qxh3VP4cL1kAKKO4yPuUW_8z1KZj0/s1600/appatakkar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQbvO8l1qCQYbtCMOOUamlm2H1w4enFVmdU8CxVKD2ZrG0DK3br0NAqZ4GUo9R12DV5hcIEIR9xnA6SsJJ-tqHJPurpKkNTLsWhNVW_HYzl4Ktl0qxh3VP4cL1kAKKO4yPuUW_8z1KZj0/s320/appatakkar.jpg" width="256" /></a></div>
<br />
<br />
<br />
<br />
ஒரு சித்திரை வெயில் மண்டையை பிளக்கும் உச்சி நேரத்தில் தனது சொந்த கிராமத்து புழுதிவீதியில் சொட்டை மண்டையில் இருந்து கணுக்கால் வரை வியர்வை வெள்ளத்தில் நனைந்த படி வாக் போய்க்கொண்டிருந்த அய்யாசாமியை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சில வாண்டுகள் ”மாமா மாமா என்று அழைத்த படி தொடர்ந்தனர்.<br />
<br />
”என்னங்கடா செல்லங்களா?”இது அய்யாசாமி<br />
<br />
கையில் கருப்பாக எதோ வஸ்துவை வைத்துக்கொண்டு ”இது என்ன தெரியுமா மாமா உங்களுக்கு”என்று கோரஸாக கேட்டனர்.<br />
<br />
அந்த வஸ்துவை கையில் வாங்கி அரை நிமிட ஆராய்ச்சிக்குப்பிறகு அது ஏதோ ஒரு கொட்டை என்று புரிந்து கொண்டு முடியே இல்லாத தலையை இன்னொரு அரைநிமிஷம் செலவு செய்து பிராண்டியபடி ”இதுவா கொளந்தேங்களா...இதுக்கு பேரு கோணக்கா மாணக்கா கொட்டையாக்கும்”என்ற படி திருப்பிக்கொடுத்தார்.<br />
<br />
அந்த கோணக்கா மாணாக்காவில் திருப்தியுறாத குட்டீஸ் வேறு யார் யாரிடமோ கேட்டு அது எப்பாவோ யாராலோ சாப்பிட்டுவிட்டு தூர எறிந்த பனங்கொட்டை சித்திரை வெயிலில் சிதைந்து சிதிலமாகிப் போய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அன்றில் இருந்து கிராமத்து சிறுவர் பட்டாளம் அய்யாசாமியை கோணக்காமாணாக்கா மாமாவாக்கி விட்டனர்.<br />
<br />
அதாகப்பட்ட இந்த கோணக்காமாணக்கா பட்டம் ஏதோ சர் பட்டம் கிடைத்த மாதிரி நம்ம அய்யாசாமிக்கு ஒரு பெருமிதம் தரும் பட்டம்.மாங்கு மாங்கு என்று பதினொரு வருசம் ஸ்கூல் படிப்பு படித்து,அப்புறம் பியுசி ஒரு ஒருவருசம், பட்டப்படிப்பு ஒரு மூன்று வருசம் ஆகமொத்தம் பதினைந்து வருடங்கள் மாடாக உழைத்து ஒடாக தேய்ந்து பெற்ற பி.ஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சியை இந்த கோணக்கா மாணாக்கா மட்டுமல்ல,பெரிசுகளால் அழைக்கப்படும் அப்பாடக்கர் பட்டத்தையும் மனநிறைவோடு ஏற்றுக்கொண்டாரென்றால் அதுதான் அப்பாடக்கர் அய்யாசாமி.<br />
<br />
தெருவில் செல்பவர் யாரையோ அழைத்து எதுக்கோ வழிகேட்டால் இவருக்கு மூக்கில் வேர்த்துவிடும்.விடு விடு வென்று அவரிடம் சென்று அவர் கேட்கும் தெருவுக்கு வழியை விளக்கி சின்னதாக டிராயிங்கே போட்டுக்காட்டிவிடுவார்.<br />
<br />
“என்னது..பட்டாளம் ராமசாமி வீடுங்களா?நேரே போனீங்கன்னா,பெரிய ஆலமரம் வரும்.அதற்கு தெற்காலே சின்னூண்டா பிள்ளையார் கோவில்...”இப்படி நீட்டி முழங்கி அந்த பட்டாளம் ராமசாமியின் வசிப்பிடத்தை விவரமாக சொல்வதுடன்”ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு வரை இவர் பட்டாளத்தில் இருந்தவராக்கும்.இவரோட தோப்பனார் நஞ்சையில் நூறு ஏக்கராவும்,புஞ்சையில் நூறு ஏக்கராவும் வைத்து விவசாயம் பண்ணிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்..”ராமசாமியின் சரித்திரத்தை புட்டு புட்டு வைக்காவிட்டால் சற்றுமுன் சாப்பிட்ட சாம்பார் சாதமும்,கத்தரிக்காய் பொரியலும் இவருக்கு செரிமானம் ஆகாது.<br />
<br />
இப்படி பட்டாளம் ராமசாமியின் வரலாறும்,அச்சுபிச்சு அந்துமணியின் சரிதையும் மட்டும் பேசிக்கொண்டு திரிபவர் இந்த அப்பாடக்கர் அய்யாசாமி என்று நீங்கள் கணித்தால் அது ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு.<br />
<br />
“என்னது,குழம்பில் உப்பு ஜாஸ்தியாயிடுச்சா.ரெண்டு துண்டு உருளைக்கிழங்கை வெட்டிப்போடு,உப்பை இந்த உருளைக்கிழங்கு இழுத்துக்கும்”மனைவிக்கு டிப்ஸ் கொடுப்பதிலாகட்டும்,<br />
<br />
“என்னது,டாக்டர் ஆபரேஷன் செய்யணும்ங்றார்னா சொல்லுறீங்க .அட..நீங்க வேற அவர் சொல்லுவாராம்,இவர் உடனே ஆபரேஷன் மேசை மேலே போய் நீட்டி நிமிர்ந்து படுத்துக்குவாராம்.அடப்போங்கங்காணும்..முதல்லே போய் டவுனில் இன்னொரு டாக்டரிடம் செகண்ட் ஒப்பீனியன் போங்க..என்னது பெஸ்ட் டாக்டரா?மெட்ராஸ்லே பெஸ்ட் கார்டியாலஜி வடபழனியில் இருக்கற இந்த ஹஸ்பிடலில் இருக்கார்.அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்குங்க.செலவைப்பார்க்காமல் நேரே அங்கே போங்க சொல்லுறேன்.”<br />
<br />
“என்ன இந்த லீவுக்கு உங்க பையன் இருக்கற துபாய்க்கு போறீங்களா?ஆகட்டும்..எமிரேட்ஸ் அது இதுன்னு டிக்கெட் போட்டு தண்டமா செலவு பண்ணாதீங்க.பேசாமல் ஏர் அரேபியாவில் புக் பண்ணுங்க.சீப்பா முடியும்.மிச்சம் பிடிக்கிற பைசாவில் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்தால் சந்தோஷப்படுவாங்க.”<br />
<br />
“என்னது..மூன்றாவதும் பொண்ணா பொறந்துடுச்சுன்னு இந்த பாலுபயல் முகத்தை தூக்கி வச்சிட்டு பொண்டாட்டி பிள்ளையை போய் பார்க்காமலேயே இருந்துட்டானா?அட பன்னாடைபயலே.படிச்ச மூதிதானே நீயி.அவனவன் ராப்பகலா அன்னம்தண்ணி தூக்கம் இல்லாமல் ஆராய்ச்சி செய்து ஆண் பெண் குழந்தைகள் உருவாகக்காரணம் ஆணுடைய ஜீனில்தான் உள்ளது என்று சொல்லுறாங்க.இவன் முகத்தை தூக்கி வச்சிட்டு திரியறானா?செருப்பாலே அடிக்கணும்.அவன் வீட்டுக்காரியை முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க சொல்லு”இந்த ரீதியில் இவர் பேச்சு இருக்கும்.<br />
<br />
அசந்து மறந்து அந்த பாலுவை பார்க்க நேரிட்டாரானால் அவ்வளவுதான் X ஜீனுடன் XX ஜீன் சேர்ந்தால் பெண்குழந்தையாகவும்,X ஜீனுடன் XY ஜீன் சேர்ந்தால் ஆண் குழந்தையாகவும் பிறக்கிறது.இதற்கு காரணகர்த்தா ஆண்தான் என்ற தத்துவத்தை விலாவாரியாக ஒன்னரை மணி நேரம் லெகசர் அடித்தாரானால் அந்த பாலு தலையை பிய்த்துக்கொண்டு மனைவியையும் குழந்தையையும் பார்க்க நேரே ஹாஸ்பிடலில் போய் நிற்பான்.<br />
<br />
தலையில் பதநீர் பானையுடன் பதநீர் விற்கும் பெண்மணிடம் பைசாவை கொடுத்தோமா பதநீரை குடித்து விட்டு நடையை கட்டினோமா என்றிராமல் ,அக்கம் பக்கம் நின்று பதநீர் குடிப்பவர்களிடம் கால்லிட்டர் பதநீரில் உள்ள சத்துக்களை பட்டியலிட்டு,மலசிக்கலை நீக்கும்,இதயத்தை வலுப்படுத்தும்,எழும்புகளை எழுச்சியூட்டும்,தாதுபலத்தை அதிகரிக்கும் என்று அவர் டயலாக் விட்டால் அதில் கொஞ்சம் கேட்டுக்கொள்ளத்தக்க அட்வைஸ் இருக்கும் என்பதையும் மறுப்பதுக்கில்லை.<br />
<br />
கோகுல் சாண்டல் பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு ஹைதரலியின் சித்தப்பாகாலத்து கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு கக்கத்தில் மான்மார்க் குடையுடன் டவுன் பஸ்ஸை பிடிக்க கிளம்பிரானால் அது தாசில்தாரையோ,எம் எல் ஏவையோ,கலெக்டரையோபார்க்கத்தானாக இருக்கும்.”சத்துணவு கூட்டத்தில் ஏகப்பட்ட தில்லு முல்லு நடக்குது.நானும் எத்தனையோ போராடிப்பார்த்துவிட்டேன்.முடியலே கலெக்டரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.கரெக்டா 10.30க்கு கலெக்டர் ஆஃபீஸில் இருக்கணும்.அதுதான் கிளம்பிட்டேன்”முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ஓடும் பஸ்ஸில் தாவி எறுவார்தான்.ஆனால் அவர் கலெக்டரைப்பார்த்தாரா இல்லையா என்பது அந்த மேலே இருப்பவனுக்குத்தான் வெளிச்சம்.<br />
<br />
அன்று ஒரு சுபயோகசுப தினத்தில் சின்ன சூட்கேஸுடன் சென்னைக்கு போகும் ரயிலைப்பிடிக்க நின்று கொண்டிருந்தவரை பக்கத்தில் நின்றவர்”என்ன அய்யாசாமியண்ணே.வெளியூருக்கு கிளம்பிட்டீங்களா?என்று கேட்டார்.<br />
<br />
“ஆமாங்க.சென்னைக்குத்தான்.வேறு ஒன்றும் இல்லை.இந்த ரூபாய்க்கு ஒரு இட்லி அம்மா கடை சென்னையில் சக்கை போடு போடுதே.அதே அம்மாகடையை நம்மூருக்கும் கொண்டுவந்தே ஆகணும் என்பதற்காக நம்ம ஊரு எம் எல் ஏ மூலமாக அம்மாவை சந்தித்து பேச அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வச்சிருக்கேன்.அதான் கிளம்பிட்டேன்.ஹி..ஹி..”<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-39000284170041079762013-05-25T13:08:00.001+05:302013-05-25T14:04:32.951+05:30கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தென்மாவட்டத்தில் இருக்கும் கீழக்கரையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகவும் புகழ்பெற்றவை.இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அநேகப்பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலானாலும் கெடாது.இந்த தின்பண்டத்தின் பெயரை சொல்லி கடை கடையாக ஏறி இறங்கினாலும் பல ஐட்டங்கள் கிடைக்கவும் செய்யாது.குடிசைத்தொழில் போல் பல குடும்பங்கள் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.<br />
<br />
முன்பெல்லாம் பாத்திரத்தை எடுத்து சென்று பதார்த்தங்கள் தயாரிக்கும் வீட்டிற்கு சென்று வாங்கி வந்தது போக இப்பொழுது பாலிதின் கவரில் போடப்பட்டு வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்து விட்டது.இப்பொழுது பாலிதின் கவரின் உபயோகத்தால் ஏற்படும் சுகாதரகேட்டின் விழிப்புணர்வால் அது அலுமினியம் ஃபாயில் பாக்கெட்டுகளுக்கு மாறிக்கொண்டு வருகின்றது.<br />
<br />
சுவையும்,தரமும் மிக்க இந்த பதார்த்தங்கள் உலகில் பலபாகங்களில் வாழும் கீழை வாசிகள் மட்டுமல்ல அவர்களுக்கு பழக்கமான மற்ற ஊர்,மற்ற தேச நட்புக்களுக்கும் மிகவும் பிடித்தமான தின்பண்டமாகி விட்டது என்றால் மிகை ஆகாது.<br />
<br />
கீழக்கரையை சுற்றி பெரும்பான்மையான தென்னந்தோப்புகள்,அவற்றில் லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன.முக்கியவிவசாயமாக தென்னை சாகுபடி அங்கு அந்தக்காலம் தொட்டே இருந்து வருகின்றது.கீழக்கரை மக்களின் உணவுகளில் அநேகமாக தேங்காய் கலந்தே இருக்கும்.இங்கு கீழே குறிப்பிடப்போகும் இனிப்புகள் அநேகமாக தேங்காய் சேர்ந்தவைகளே ஆகும்.<br />
<br />
<div style="text-align: center;">
1.தொதல்</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPT_TU9LiNV_LMABfbbqKLmVb4NniXY2gqOJBKgaWd2afZvRM3yN32zTSN8OWwDB6BbvXVL-P031AV0WOlcZeE9u00YvpmDx2G5hTLP8bXeyILF1p5z0ruAResUtVoYeIOqkVs6x8Tn0g/s1600/DSC05037.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPT_TU9LiNV_LMABfbbqKLmVb4NniXY2gqOJBKgaWd2afZvRM3yN32zTSN8OWwDB6BbvXVL-P031AV0WOlcZeE9u00YvpmDx2G5hTLP8bXeyILF1p5z0ruAResUtVoYeIOqkVs6x8Tn0g/s320/DSC05037.JPG" width="320" /></a></div>
<br />
இதனை சிலர் லொதல் என்றும் கூறுகின்றனர்.எது சரியான பதம் என்று தெரியவில்லை.குழந்தைகள் கருப்பு அல்வா என்றும் செல்லமாக அழைப்பர்.இந்த தொதலில் வரலாறு கொழும்பில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது.ஆம்.தொதலின் பூர்வீகம் கொழும்புதான்.அங்கிருந்து செல்லக்கனி என்பவர் செய்முறை ரகசியத்தை அறிந்து இங்கு வந்து வியாபாரமாக்கியவர்.இப்பொழுது 40 - 50 குடும்பத்தினர் குடிசைதொழிலாக தயாரித்து வருகின்றனர்.கெட்டியான தேங்காய்ப்பால்,பனங்கருப்பட்டி சேர்த்து அல்வா பதத்திற்கு கிண்டி,வாசனைக்கு ஏலப்பொடியும்,அழகுக்கும்,சுவைக்கும் முந்திரி,உடைத்த பாசி பருப்பும் சேர்த்து சுவையை அள்ளும் ஒரு பதார்த்தம்.வலைப்பூவில் அசத்தும் அம்மணிகள் ஆர்வக்கோளாரால் தொதல் செய்முறைக்கு இறங்கி,அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல:)ஏனெனில் என் சிறு வயதில் என் அம்மா இந்த தொதல் தயாரிப்பில் இறங்கி தேங்காய் துருவி பால் எடுத்து அதனை பெரிய வாணலியில் இட்டு காலையில் கிண்ட ஆரம்பித்தால் சட்டியை கீழே இறக்க மாலை ஆகி விட்டது.இதனை பார்த்து எங்கள் வீட்டில் எல்லோருக்கும் சிறிது நாட்கள் தொதல் என்ற பெயரைக்கேட்டாலே அலர்ஜி ஆகிவிடும்.கீழக்கரை பேமஸ் தொதலை பற்றி <a href="http://www.youtube.com/watch?v=wQu-1RieJQ8">அம்மா தொலைக்காட்சியி</a>ல் வந்த செய்தியாக வந்த ஒலி ஒளி காட்சியை காணுங்கள்.<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div style="text-align: center;">
2.கலகலா</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDmoaRz4mbRAvsA0ZSzwyYEz3ZzBKec3Ulkt0UcJkOhcdcijJZxEIGFzd8IJ2plSn9xBeh7rDGknWep5Rl44vZvGern6nbdTKNU_dZ4nPriRlB3B5ai37r1aUdwJW6ofvefAxJaaLoVJc/s1600/DSC05035.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDmoaRz4mbRAvsA0ZSzwyYEz3ZzBKec3Ulkt0UcJkOhcdcijJZxEIGFzd8IJ2plSn9xBeh7rDGknWep5Rl44vZvGern6nbdTKNU_dZ4nPriRlB3B5ai37r1aUdwJW6ofvefAxJaaLoVJc/s320/DSC05035.JPG" width="320" /></a></div>
<br />
<div>
<div>
பெயரைப்பார்த்ததும் ஏதோ வடநாட்டு பதார்த்தம் என்று எண்ணி விடாதீர்கள்.பக்கா தமிழக பதர்த்தம்தான்.இந்த இனிப்பை சுட்டெடுத்து பாத்திரத்தில் கொட்டினால் கலகல என்று ஒலி வரும் அதான் இப்பெயர் வந்ததோ என்னவோ?மைதா தேங்காய்ப்பால்,முட்டை,ஏலப்பொடி ,சர்க்கரை சேர்த்து செய்யப்படும் சுவையான இனிப்பு இது.சதுரம்,செவ்வகம்,டைமண்ட் நீள்சதுரம் என்று பல ஷேப்புகளில் கிடைக்கும்.இந்த முறை வாங்கி வந்த கலகலாவின் ஷேப் கன்னாபின்னா என்று இருந்தது போலவே சுவையும் கன்னாபின்னா என்று அடி தூள் கிளப்பி விட்டது.வாங்கி வந்து கொடுத்த உறவினரிடம் யார் வீட்டில் வாங்கினீர்கள் என்று கேட்டு வைத்துக்கொண்டேன்.ஊருக்கு சென்றால் உதவுமே:)இதிலே இனிப்பு சேராமல் காரப்பொடி சேர்த்து செய்வது காரக்கலகலா</div>
</div>
<div>
<br /></div>
<div style="text-align: center;">
3.பணியம்</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG1n_rdZkCUU3o4RtiKxmy7YCsQTQMgZchoG7BK6wIv29F37jx_MBQz1HB3SR-oTmeekQnRwK1slnkTFR3jHYNa8eA26bw3RsoH0BppZZJ7hhr_6plaiNkFmbBacfZy2qroln5s-c8Ei0/s1600/DSC05036.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG1n_rdZkCUU3o4RtiKxmy7YCsQTQMgZchoG7BK6wIv29F37jx_MBQz1HB3SR-oTmeekQnRwK1slnkTFR3jHYNa8eA26bw3RsoH0BppZZJ7hhr_6plaiNkFmbBacfZy2qroln5s-c8Ei0/s320/DSC05036.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
<br /></div>
<div class="separator" style="clear: both;">
அரிசிமாவு,தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படும் முறுக்கு சுவை கொண்ட பதார்த்தம்.கீழக்கரையில் பணியக்காரத்தெரு என்றே ஒன்று உள்ளது.இரண்டு,மூன்று இஞ்ச் நீளத்திற்கு தயாரித்து விற்கின்றனர்.திருமணச்சீரில் இதே பணியம் முக்கால் அடி நீளமாக உருவெடுத்து விடும்.இதனை சீப்புப்பணியம் என்றும் சொல்வார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
<div style="text-align: center;">
4.தேங்காய்ப்பால் முறுக்கு</div>
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiommyN_lhNa1ggw9QsH6v86QESbOPKYjjVW-rwwntQfSJAlj8GH9xfwENpsP-bf4-RexK2LlVuKAVGW2zc1qsvYvSEBmr4e4PqqvDEr0AoofkqEWCLtJNOGzZOOBhhwSQXNZPbvp8FBm8/s1600/DSC05039.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiommyN_lhNa1ggw9QsH6v86QESbOPKYjjVW-rwwntQfSJAlj8GH9xfwENpsP-bf4-RexK2LlVuKAVGW2zc1qsvYvSEBmr4e4PqqvDEr0AoofkqEWCLtJNOGzZOOBhhwSQXNZPbvp8FBm8/s320/DSC05039.JPG" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
பணியம் மாவில் சற்று மேக்அப் செய்து முறுக்காக சுற்றி விற்பனைசெய்கினறனர்.வாயில் போட்டால் கரைந்து விடும் என்பார்களே.அது இதற்கு பொருந்தும்.பல் இல்லாத பெரியவர்கள் முறுக்கு சாப்பிட விரும்பினால் இந்த முறுக்கை பயமில்லாமல் சுவைக்கலாம்.</div>
</div>
<div>
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: center;">
5.வறுத்த மொச்சை</div>
</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXIm1b9x5FTViF5-MCBBtqk9TleNQJg5f7PfZcbI2_fvwGFZocHOImXum-BN0u_BT4SK9yxeUHbff9xywdYr5DMehGqcXkEmPreIvYUI470Y2-eDhxntD7Vptf2ikfZtyXF0a9dXh15kM/s1600/DSC05042.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXIm1b9x5FTViF5-MCBBtqk9TleNQJg5f7PfZcbI2_fvwGFZocHOImXum-BN0u_BT4SK9yxeUHbff9xywdYr5DMehGqcXkEmPreIvYUI470Y2-eDhxntD7Vptf2ikfZtyXF0a9dXh15kM/s320/DSC05042.JPG" width="320" /></a></div>
<div>
<div>
<br /></div>
<div>
மொச்சைக்கொட்டையை ஊற வைத்து அதன் தோலை அகற்றி கரகரப்பாக பொரித்து உப்பு காரம் சேர்த்து வறுத்த கறிவேப்பிலை,முந்திரியால் அலங்கரித்து இருக்கும் சுவையான கறுக்மொறுக்.</div>
</div>
<div>
<br /></div>
<div>
<div style="text-align: center;">
6.நவதானியம்</div>
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3nk7ZwwPK0w8zZ96enHAMkbbFmk0a3aYqomtvvu090hJ1xFj3Bo1sZJsIFUEvok0FfgbW1ERXHPsbLg6IHQrwlGsainZH-pwyBg5O_qYG3CnkSO-fm7Mu2PIxt28Z8c5lNMItd0hqDWE/s1600/IMG-20130522-WA0003.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3nk7ZwwPK0w8zZ96enHAMkbbFmk0a3aYqomtvvu090hJ1xFj3Bo1sZJsIFUEvok0FfgbW1ERXHPsbLg6IHQrwlGsainZH-pwyBg5O_qYG3CnkSO-fm7Mu2PIxt28Z8c5lNMItd0hqDWE/s320/IMG-20130522-WA0003.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
இந்த நவதானியத்தினைப்பற்றி கீழை வாசி சுவைபட முழுபதிவாகவே போட்டு இருக்கின்றார்.மேலும் அறிந்து கொள்ள <a href="http://sonagan.blogspot.in/2009/12/blog-post.html">அங்கே செல்லுங்கள்.</a></div>
</div>
<div>
<br /></div>
<div>
<div style="text-align: left;">
<span style="text-align: center;">7.வெள்ளை முறுக்கு</span></div>
</div>
<div>
<div style="text-align: left;">
<span style="text-align: center;"><br /></span></div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjDM4AZakNCHmEMN4PU3KnmbzStjLoI7r3Ad0pElLvA5u7cUnrNWE8UDcMkpruKlj7ny_FFody9ROGaE_8ALoMR7A14xWHmoTii2ab4lh62GUoU4a63euBZO2La51gbDIn6P-upnSsdLg/s1600/DSC05046.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjDM4AZakNCHmEMN4PU3KnmbzStjLoI7r3Ad0pElLvA5u7cUnrNWE8UDcMkpruKlj7ny_FFody9ROGaE_8ALoMR7A14xWHmoTii2ab4lh62GUoU4a63euBZO2La51gbDIn6P-upnSsdLg/s320/DSC05046.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இடியாப்பமாவை குறிப்பிட்ட முறுக்கு அச்சில் போட்டு வட்டமாக பிழிந்து ஆவியில் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பிறகு எண்ணெயில் பொரித்து சாப்பிடும் முறுக்கு.சென்னைவாசிகள் இதனை வடாம் என்பார்கள்.ஆனால் இதனை எங்களூர் வாசிகள் ஒரு போதும் சாப்பாட்டுடன் சேர்க்கமாட்டார்கள்.தேனீருக்கு முன் சாப்பிடும் ஒரு நொறுக்ஸ்.வெளியூர் வாசிகள் இதனை பொரிக்காமல் வாங்கி வந்து தேவைப்படும் பொழுது பொரித்து சாப்பிடுவார்கள்.உள்ளூரில் பொரித்த வெள்ளை முறுக்கை வாங்கும் பொழுது அதனை பனை நாரில் கோர்த்து தருவது வித்தியாசமாக இருக்கும் இதன் சுவையைப்போலவே.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
8.ஓட்டுமா</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2XSo_O9QxzAUW9ELtoFIa6-saSJVUAIXjlx31e2cQTdWCHnPRxpDt3-flo_nVRCMUHkzhWKdwVaDsA6wtK6dWrqBbGyDuWjMD0w_H9LjyYMH18yPLwyP4I8xM3bNVNVNxtTGVlkNQmbU/s1600/DSC05043.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2XSo_O9QxzAUW9ELtoFIa6-saSJVUAIXjlx31e2cQTdWCHnPRxpDt3-flo_nVRCMUHkzhWKdwVaDsA6wtK6dWrqBbGyDuWjMD0w_H9LjyYMH18yPLwyP4I8xM3bNVNVNxtTGVlkNQmbU/s320/DSC05043.JPG" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
”பசியை இது ஓட்டுமா” என்றால் ஆம் கண்டிப்பாக ஓட்டும்.இரண்டே டீஸ்பூன் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டால் பசி பறந்தோடி விடும் அதிசுவை உள்ள இனிப்பு பதார்த்தம்.அதனாலேயே வெளிநாட்டு வாழ் கீழை வாசிகள் கண்டிப்பாக இதனை வாங்கிச்செல்ல மறக்கமாட்டார்கள்.ஒரு தெலுங்கு நட்புக்கு ஊரில் இருந்து வாங்கி வந்து கொடுத்தேன்.உருவத்தைப்பார்த்ததும் முகத்தை சுளித்து இதனை எப்படி சாப்பிடுவது என்றார்.அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னாலும் அவருக்கு விரைவில் நம்பிக்கை வரவே இல்லை.ஆற்றுமணல் போல் உள்ளதே என்றார்.ஒரு ஸ்பூன் ஒரே ஸ்பூன்தான் எடுத்து பயத்துடன் வாயில் போட்டார் பாருங்கள்.அன்று ஆரம்பித்தது எனக்கு ”ஊருக்கு போகும் போதெல்லாம் ஓட்டுமா ஓட்டுமா என்று வாட்டி,ஓட்டி எடுத்து விடுவார். கீழக்கரை ஓட்டுமாவைப்பற்றி தினமலர் நாளிதழில் வந்த செய்தியை பார்த்து விடுங்கள்.அப்படியே இந்த கீழை வாசி ஓட்டுமாவை ருசித்து,ரசித்து கவிதை பாடி இருக்கின்றார் என்பதையும் பார்க்க <a href="http://keelaiilayyavan.blogspot.in/2013/05/blog-post_19.html">இந்த பதிவுக்கு செல்லுங்கள்.</a></div>
<div>
<br /></div>
<div>
இந்த ஊரில் புகழ்பெற்ற கிருஷ்ணாஸ்வீட் மைசூர்பாவுக்கு பற்பல ஆண்டுகளுக்கே முன்னரே பிரபலம் ஆன ராவியத்துகடை மைசூர் பாகு,எள்ளுருண்டை,கடலை உருண்டை,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இப்படி எக்கசக்கமாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.</div>
</div>
</div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com54tag:blogger.com,1999:blog-5470940579611533398.post-28931745707872552732013-05-18T12:44:00.002+05:302013-05-18T16:13:11.413+05:30தண்ணீர்..தண்ணீர்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF2M8bHNsJByvQeiFjl_xOmuc5iDBGrY04yUDSuiufk8v-Bv5TWM1tVmuC6h2fKgCVxl4r0u0uiZolZi9JbTSdsOHy_OkmSaVpL5s4csR1i79s9ECChsnT5j0heWDBnn2Wuoj09Has41U/s1600/Evening-Tamil-News-Paper_95755732060.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF2M8bHNsJByvQeiFjl_xOmuc5iDBGrY04yUDSuiufk8v-Bv5TWM1tVmuC6h2fKgCVxl4r0u0uiZolZi9JbTSdsOHy_OkmSaVpL5s4csR1i79s9ECChsnT5j0heWDBnn2Wuoj09Has41U/s640/Evening-Tamil-News-Paper_95755732060.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<span style="color: blue;">மண் பானைகள்,,தண்ணீர் நிரப்பி வைக்கும் அண்டா,வாட்டர் பில்டர்கள் இப்படியாகப்பட்ட பொருட்கள் எல்லாம் கண்காட்சியில் வைக்கப்படும் பொருளாக மாறிவிட்டது இந்த மினரல் வாட்டர் வரவால்.கிணற்றடி நீர்,நகராட்சிகள் விநியோகம் செய்யும்குடி நீர்,தெருக்குழாயில் கிடைக்கும் குடிநீர்,லாரிகளில் கிடைக்கும் குடிநீர் இப்படி கஷ்டப்பட்டு குடிநீரைப்பெற்று,அதனை காய்ச்சி,வடிகட்டி தண்ணீர் குடிப்பதற்கு சிரத்தை எடுத்த அம்மணிகள் இன்று சல்லிசாக பணத்தைக்கொடுத்து கேன் வாட்டர் வாங்கி மிக சுலபமாக தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கின்றனர்.இப்படி காசு கொடுத்து வாங்கும் நீர் தரமானதுதானா?உடலுக்கு கெடுதல் விளைவிக்காது என்பதில் உறுதி கிடையாது.தமிழ்நாட்டில் ஐம்பது சதவிகித மக்கள் இந்த மினரல் வாட்டரைத்தான் அருந்துகின்றனர்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">விருந்தினர் வந்தால் குடிப்பதற்கு நீர் கொடுத்தால் “மினரல் வாட்டர் தானே”என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால் முகசுளிப்புத்தான் பதிலாக கிடைக்கும் பலரிடமிருந்து.”எங்கள் வீட்டில் கார்பரேஷன் வாட்டர் எல்லாம் குடிப்பதில்லை”இந்த வார்த்தைகளில் பெருமிதம் கொள்கின்றனர் தமிழக மக்கள்.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மக்களின் மனோபாவத்தை அறிந்த கில்லாடி வியாபாரிகளுக்கு லாபநோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கும் தண்ணீர் பிசினஸில் கல்லாக்கட்டுங்கள் என்ற உரிமையை தாராளமாக வழங்கி வள்ளல் தனம் புரிந்துகொண்டுள்ளது தமிழக அரசு.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்கள் 700க்கும் மேல் இருந்தால் போலியான நிறுவங்கள் 2000க்கும் மேல் என்று ஆய்வுகள் கூறுகின்றது.போலி நிறுவனங்களில் அன்றாடம் ரெய்ட் என்ற பெயரில் ஒரு கண் துடைப்பை நடத்தி,இரண்டு நாட்களுக்கு மூடு விழா நடத்தி இரண்டாம் நாளே ஜகஜோராக வழக்கப்படி கல்லாகட்டும் வேலை ஆரம்பித்து விடுவது வாடிக்கை.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து அங்கீகாரம் இல்லாத தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதிரடி சோதனை நடத்தியதில் உரிமம் பெறாத 103 மினரல் வாட்டர் நிறுவங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டள்ளது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">இந்த அதிரடி நடவடிக்கைகளினால் மற்ற எல்லா தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனங்களும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து</span><br />
<span style="color: blue;">தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டது.வரும் 20 ஆம்தேதி முதல் முழு வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகி வருகிறது.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">ஒவ்வொரு இல்லத்தரசியும் இந்நிலை கண்டு அரண்டு போய் இருப்பது என்னவோ உண்மைதான்.சென்னையில் பல இடங்களில் முறையாக குடிநீர் வரி செலுத்தி வந்தாலும்,மாநகராட்சி வழங்கும் மெட்ரோ வாட்டர் வருடக்கணக்காக வருவதில்லை.பல குடியிருப்புகளில் நிலத்தடி நீர் உண்ணத்தகுதியான தரத்தில் இருப்பதில்லை.பன்னாட்டு உள்நாட்டு நிறுவங்கள்,அடுக்குமாடி குடி இருப்பில் வசிப்பவர்கள், மெட்ரோ வாட்டர் வராத மேடான பகுதிகளில் வசிப்பவர்கள் மினரல் வாட்டரை மட்டும்தான் நம்பி வாழ்கின்றனர்.20 ஆம்தேதிக்கு பிறகுதான் முழு வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தாலும் இப்பொழுதே தண்ணீர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.அக்கம் பக்கத்து கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் தண்ணீர் கேன்களை அதிக விலை கொடுத்து வாங்கி வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.அதுவும் ஸ்டாக் இருக்கும் வரையே.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அரிசி பஞ்சம் வந்த பொழுது மற்ற தானிய பொருட்களை சமைத்து உணவாக்கினர்.பாலுக்கு பஞ்சம் வந்த பொழுது அதிக விலை கொடுத்து பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பெரியவர்கள் கருப்பு நிற காபியை அருந்தி வந்த காலமும் சரித்திரத்தில் உண்டு.பீன்ஸ் விலை 100 ரூபாயானால் பீன்ஸ் பொரியல் இல்லாமலும்,பீன்ஸ் போடாத வெஜிடபிள் புலாவும் இல்லாமல் மக்களால் வாழ முடியும்.வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகம் காட்டிய பொழுது நான்கு வெங்காயம் சேர்த்து செய்யும் சமையலில் பாதி வெங்காயத்தை சேர்த்து சமையலை கச்சிதமாக முடிக்கும் திடம் வாய்ந்தவர்கள் தமிழகத்து அம்மணிகள்.ஏன் தங்கம் விலை உச்சாணிக்கு போன போது பெண் மக்களின் திருமணங்களில் சவரன் எடை கிராமாக மாற்றமாகிப்போனது.ஆனால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டால்...?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தண்ணீர் வந்து குற்றால அருவியாக கொட்டும் என்ற அதீத எதிர் பார்ப்பில் 30000 லிட்டருக்கு பெரிய சம்ப் ஒன்று கட்டி வருடங்கள் ஆறை கடந்து விட்டாலும் இதுவரை ஒரு சொட்டு கார்பரேஷன் தண்ணீர் வந்து விழவில்லை.துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது போல் கார்பரேஷன் நீர்தான் வரவில்லை என்று லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி சம்பை நிரப்பிக்கொள்ளும் துர்பாக்கிய நிலை இல்லாமல் இறைவன் கிருபையால் நிலத்தடி நீர் அட்ஷ்ய பாத்திரமாக விளங்கினாலும் குடிப்பதற்கு தகுதி இல்லையே?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காலி கேன்களை எடுத்துக்கொண்டு தண்ணீருக்கும் அலையப்போகும் நிலை தண்ணீர் தண்ணீர் சினிமாவை நினைவூட்டி பீதியைக்கிளப்புகிறது.(உறவினர் இருக்கும் ஏரியா பள்ளமான பகுதியாதலால் கார்பரேஷன் நீர் சம்பில் நயாகரா நீர்வீழ்ச்சியாக கொட்டி ஓவர் ஃப்ளோ ஆகி அதனைப்பார்த்துவிட்டு மாநகராட்சி ஆட்கள் ஸ்பாட்பைனை தீட்டிவிட்டு செல்வது தனிக்கதை)</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சென்னையை பரபரப்பாக்கிக்கொண்டு இருக்கும் குடி நீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி லாரிகளில் நீர் விநியோகம் செய்ய ஆரம்பித்தாலும் உரிமம் பெறாத தண்ணீர் கம்பெனிகள் கன ஜோராக மீண்டும் சைலண்டாக திறக்கப்பட்டு வெகு விரைவில் கல்லா கட்டி,பரபரப்பாக பேசப்பட்டு வரும் தண்ணீர் தட்டுப்பாடு வெகு விரைவில் நீங்கிவிடும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் .</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><br /></span>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
ஸாதிகாhttp://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com25