September 9, 2010

ஈத் முபாரக்!


அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அழகுற வளர்த்திட்டு
அன்பையும் பண்பையும்
பாங்குற கற்பித்த அன்னையரே
ஈத் முபாரக்!

குடும்பம் செழித்திட
மெழுகாய் பனியாய்
உருகி உழைத்த தந்தையரே
ஈத் முபாரக்!

குலம் செழிக்க வளம் பெருக்க
வந்துதித்த கண்மணிகாள் என்றென்றும்
வளத்துடனும் நலத்துடனும்
வாழ்வாங்கு வாழ்க!
செல்வங்களே உங்களுக்கு என்னினிய
ஈத் முபாரக்!

தம்பிக்கு கொடுங்க
எனக்கு போதுமென
தள்ளி நின்று பூரித்து நிற்கும்
அண்ணன்மாரே
ஈத் முபாரக்!

கண்கள் கலங்கி
தவித்த வேளை
பரிவுடன் முந்தானைகொண்டு
துடைத்துவிட்ட அக்காமாரே
ஈத் முபாரக்!

அவளுக்கு மட்டும்
அதிகம் எதுக்கு
அதையும் எனக்கே எப்பவும் கொடுங்க
அடம் பிடிக்கும் தங்கையரே
ஈத் முபாரக்!

தக்பீர் முழங்கும்
சப்தத்துடனே
சங்கையாய் வந்து இன்முகத்துடன்
வாழ்த்து சொல்லும் மாமாமாரே
ஈத் முபாரக்!

பாசத்துடனே பரிவு காட்டி
கதை பல சொல்லி
பாங்குற ஊட்டி உணவை அளித்த பாட்டிமாரே
ஈத் முபாரக்!

எம் கூச்சல் கேட்டு எரிச்சலை விட்டு
ஏசாதிருந்து ஏற்புடன் நடந்து
ஏற்றம் புரிய
துணை நின்ற தாத்தாமாரே
ஈத் முபாரக்!


கல்விக்கண் திறக்க
பாங்காய் கற்பித்து
படிப்பைத்தந்த ஆசிரியரே
ஈத் முபாரக்!

வாழ்விலும்,தாழ்விலும்
ஒன்றுபோல் தோள் தந்து
உதவிட்ட தோழர்களே
ஈத் முபாரக்!

பொழுதை போக்குவதற்கு
கணினி முன்னமர்ந்து
கிறுக்கியதை அருமையென
சிலாகித்து உவந்து
தவறாது தட்டிக்கொடுத்து
ஓட்டளித்து பின்னூட்டும்
வலையுலக நட்புக்களே
உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த
ஈத் முபாரக்!

30 comments:

Mahi said...

ஈத் முபாரக்!

சீமான்கனி said...

உங்களுக்கும் அட்வான்ஸ் ஈத் பெருநாள் வாழ்த்துகள்...இறைவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்கு உரித்தாக்குவானாக ஆமீன்.

இலா said...

நட்புகள் அனைவருக்கும் எனதினிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

அருமையான கவிதை.ரசித்து மகிழ்ந்தேன் தோழி .ஸாதிகா உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் என் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

உங்கள் வாழ்த்துக் கவிதை அழகா இருக்கு, ஸாதிகா அக்கா.

என் ப்ளாக்குக்கு வந்த உங்களுக்கு அங்கேயே வாழ்த்து சொல்லிவிட்டேன். இங்கேயும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்:) !

Chitra said...

ஈத் முபாரக்!

Unknown said...

தங்களுக்கும்,மற்றும் நட்புகள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸாதிகா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

ரம்ஜான் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

அருமையான கவிதை மழையில் அழகான ஈத் வாழ்த்து அருமை ஸாதிகா அக்கா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்

அந்நியன் 2 said...

முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்

அந்நியன் 2 said...

பொழுதை போக்குவதற்கு
கணினி முன்னமர்ந்து
கிறுக்கியதை அருமையென
சிலாகித்து உவந்து
தவறாது தட்டிக்கொடுத்து
ஓட்டளித்து பின்னூட்டும்
வலையுலக நட்புக்களே
உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த
ஈத் முபாரக்!

நக்கலு ....சேம் டூ யூ

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா.

என் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

கவிதை அழகா இருக்கு, ஸாதிகா அக்கா.

Menaga Sathia said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!

ஹைஷ்126 said...

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

kavisiva said...

ஷாதிகா அக்காவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆமீர் குட்டிக்கும் எனதி இதயம் நிறைந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!

மின்மினி RS said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஈகைத்திருநாளாம் இந்நன்னாளில் நாம் எல்லாவளமும் பெற்று வாழ்வில் சந்தோசத்தை என்றென்றும் நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..

vanathy said...

பெருநாள் வாழ்த்துக்கள்!

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

இமா க்றிஸ் said...

ஸாதிகாவுக்கும் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

ஈத் முபாரக் அம்மணி.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal
அருமையான கவிதை மழையில் அழகான ஈத் வாழ்த்து அருமை ஸாதிகா அக்கா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள். //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

பித்தனின் வாக்கு said...

valthukkal sakothari.
insaah allahh will fullfill all desires.

Unknown said...

ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்!

ஸாதிகா said...

வாழ்த்திய அன்புச்சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய இதயங்கனிந்த நன்றி!