February 9, 2010

யாதும் ஊரே

கார் போர்டிகோவில் நுழைந்ததுமே வாயெல்லாம் பல்லாக சந்தோஷசிரிப்புடன் ஓடி வந்து கார்க்கதவை திறந்து விட்டாள் அந்த கருப்பினப்பெண்.ஒரு ஓரமாக வைத்திருந்த ஆரத்தி தட்டினை எடுத்து வந்து வித்தியாசமாக சுற்றிப்போட்டதைப்பார்க்கும் பொழுது மஹிமாவுக்கு அலுப்பை மீறி லேசாக சிரிப்பு வந்தது.

காரில் இருந்து இறங்கிய சதீஷ் "மஹி இவள் தான் அபாபா.நம்ம வீட்டு ஹவுஸ்மெயிட்.உன்னை நல்லா கவனிச்சுப்பா.புதுசா வர்ரவங்களை எப்படி அழைக்கணும் என்று கேட்டுகேட்டு இந்த ஆரத்தியை ரெடி பண்ணிட்டாள் பார்த்தியா"அபாபாவை அறிமுகப்படுத்தினான்.

"போம் டியா சென்ஹோரா.பென் விண்டோ சென்ஹோரா'வணக்கம் கூறி வரவேற்பு செய்து கைகளைபற்றியவாறு பாசத்துடன் ழைத்துச்செல்பவள் பாஷை புரியாமல் இருந்தாலும் ஆறுதலாகத்தான் இருந்தது.

சதீஷ் அபாபாவுடன் போர்ச்சுகீசில் பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.வீடு எதிர் பார்த்ததற்கும் மேலாக அழகாகவும்,பெரியதாகவும் இருந்ததில் மஹிக்கு லேசான திருப்தி.முழுதாக ஒரு நாள் பிரயாணம்.சென்னையில் இருந்து மபுடோ வருவதற்கு.நாண்கு பிளைட் மாறி வந்ததில் உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது.


அலுப்பு தீர குளித்துவிட்டு வரும் பொழுதே"சென்ஹோரா பெபர் கஃபே"காப்பி கோப்பைகளை நீட்டிய பாங்கு பிடித்து இருந்தாலும் மஹியின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

புது கணவருக்கு படிப்பும் ,அறிவும்,திறமையும் இருந்தும் எல்லோரையும் போல் உள்ளூரிலே வேலை இருந்தால் எப்படி இருக்கும்?இப்படி கண்டம் விட்டு கண்டம் வந்து இருக்கும்படியாகி விட்டதே.பெற்றோரை,ஊரை நினைக்கும் பொழுது கண்களில் நீர்கட்டிக்கொண்டது.



அதே பிளாட்டில் வசிக்கும் இபிசிம் குடும்பத்தினரை அறிமுகபடுத்திவைத்தான் சதீஷ்.அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது சோளமாவில் உப்புமா போல் கிளறிய ஒருபதார்தத்துடன் கொஞ்சம் பிரஞ்ச்பிரைஸும் கொடுத்து உபசரித்தவள் மஹிமாவின் கண்களில் ஒரு அந்நிய தன்மையும்,மிரட்சியையும் உணர்ந்து கொண்டவள்

"நமு டென்ஹா மெடோ.நமு செ ப்ரியோக்யூபே எஸ்டாமஸ் அஃயி"
மிசஸ் இபிசிம் பேசுவது துளியும் புரியாமல் வெறுத்துப்போனாள்.அதே வெறுப்புடன் வீட்டிற்கு வந்து கட்டிலில் குப்புற படுத்து விம்மியவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் திகைத்தான் சதீஷ்.


ஆயிற்று ஊரை பிரிந்து,பெற்றோரை பிரிந்து,இனத்தைப்பிரிந்து தாலிகட்டியவன ஒருவனை மட்டுமே நம்பி இங்கு வந்த மஹியை இன்னும் சமாதானப்படுத்த முடியவில்லை.சனி ஞாயிறுகளில் வெளியில் அழைத்து செல்வான்.

சிலசமயம் கிராமத்துபகுதிகளுக்கு அழைத்து செல்லும் பொழுது தோளில் தொட்டில் கட்டி குழந்தைகளை சுமந்தவண்ணம் நிற்கும் பெண்களைக்கண்டு ,அவர்கள் சேர்ந்து ஆடும் நடனம் கண்டு,மற்றவர்களை வினோதமாக பார்க்கும் பார்வையைக்கண்டு ஆச்சரிப்பட்டாள்.

தூரத்தே தெரியும் பாதையை காட்டி"மழை நாளில் இது ஆறாகிவிடும் ,ஆச்சரியம் என்ன வென்றால் சீக்கிரமே தண்ணீர் வடிந்து விடும்"கணவர் சொல்வதை வியப்புடன் கேட்டுக்கொள்வாள்.







கணவன் ஆஃபீஸ் சென்றதும் வாட்டும் தனிமை அவளை பயமுறுத்தியது.தமிழ் காதில் விழாமல் எதையோ இழந்தவள் போலானாள்.பேசுவதற்கு தமிழ் முகம் காணாமல் ஏக்கம் தலை தூக்கியது.கணவரை அலுவலகம் அனுப்பி வைத்த மறு நிமிடத்தில் இருந்து மாலை அவரது வருகைக்காக தவம்புரிய ஆரம்பித்தாள்.

டிவியை திறந்தால் புரியாத பாஷை ஒலித்து வெறுப்பைத்தான் வளர்த்தது.அபாபா இருந்து என்ன செய்வது?லேசான புன்னகையைத்தான் பறிமாறிக்கொள்ள முடியும்.
அம்மாவிடம் இருந்து போன் வந்த பொழுது பிழிய பிழிய அழுதாள்.ஊர் நினைப்பு வரவர இன்னிக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று மனதினுள் தீர்மானம் செய்து கொண்டாள்.மாலை திரும்பும் சதீஷிடம் எப்படியெல்லாம் பேசி வழிக்கு கொண்டு வரவேண்டும் யோசிக்கலானாள்.


வாசலில் கார் சப்தம்.வழக்கம் போல் எழுந்து செல்லாமல் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

உள்ளே நுழைந்த சதீஷ் மனைவியின் ருத்ர தோற்றம் கண்டு அமைதியான குரலில்

"எனி ப்ராப்ளம் மஹி?"

"இங்கே இருப்பதுதான் ப்ராப்ளம்.வேண்டாங்க.நாம ஊருக்கே போய்விடலாங்க.எனக்கு பிடிக்கவே இல்லேங்க.எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல் இருக்கு."
கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமென கொட்டியது.
அழும் மனைவியை காண சகிக்காமல்கைகளை ஆதரவாக பிடித்து
"கூல்..கூல் மஹி"வழக்கம் போல் முகத்திலும் ,பேச்சிலும் கனிவையும்,பொறுமையையும் குழைத்து மென் குரலில் ஆறுதல் படுத்தினான்.







"ஊரில் இருந்தால் எப்படி எல்லாம் சுதந்திரமாக இருப்பேன்.இங்கே மனுஷாள் யாரும் இல்லே.தனியே வெளியே செல்ல முடியலே.வேண்டாங்க.ஊருக்கே போய்டுவோம்.அங்கே நல்ல வேலை கிடைக்காமலா போய்விடும்" புலம்பி அழுது முடிக்கும் வரை பொறுமையாக கேட்டவன் கலைந்த கேசத்தை சீர்படுத்தி,கண்களை துடைத்து அபாபா பிளாஸ்கில் போட்டு வைத்து விட்டு சென்ற காபியையும்,உருளை வறுவலையும் எடுத்து மனைவியிடம் நீட்டினான்.

"உன் கஷ்டம் புரியுது மஹி.நான் சொல்வதை பொறுமையா கேட்கிறாயா"
"ம்"

நான் ரெண்டு வருஷத்துக்கு முன்பு வந்த பொழுது எனக்கும் தனிமை இப்படித்தான் இருந்தது மஹி.இப்ப உனக்காவது நான் இருக்கேன் .ஆஃபீஸ் போனால் என்ன?ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் கூப்பிடுறேனா இல்லையா?ஆஃபீஸும் பக்கத்திலேயே..நினைச்சால் ஓடி வந்துடலாம்.மாறுதலை மனுஷ மனம் உடனே ஒத்துக்காதுதான்,போகப்போக பாரேன்,இந்த மொஸாம்பிக் நாட்டை விட்டு போக பிரியப்படவே மாட்டே"

"இல்லேங்க..எப்படியாவது நம்ம ஊரிலேயே ஏதாவது வேலை தேடிக்கலாம்.." ஆரம்பித்தவளை ஆசுவசப்படுத்தி
"உனக்கு பாஷை தெரியாது.அப்படித்தானே?மனசு வச்சா ஒரே மாதத்தில் கத்துக்கலாம்.என் கொலீக் வைஃப் போர்ச்சுகீசும்,இங்க்லீஷும் தெரியும்.அவரை உனக்கு அறிமுகபடுத்தறேன்.நெட் கனக்ஷன் இருக்கு அதிலே உட்கார்ந்து பழகினால் பொழுதும் போய்டும்.புக்ஸ் வாங்கித்தர்ரேன்.போர்ச்சுகீஸ் மொழியை கத்துக்கற புக்ஸ் நிறைய இருக்கு.நீ தான் கிராஃப்ட் ஐட்டம் நல்லா பண்ணுவேன்னு சொன்னியே?ஒரு லிஸ்ட் கொடு.இந்தியா போற பிரண்டு கிட்டே வாங்கி வரச்சொல்லுறேன்.அறிவும் விருத்தியாகும்.எல்லாவற்றுக்கு ரெண்டு பக்கம் இருக்கு.நீ ஏன் நெகடிவ் ஆக நினைக்கிறாய்?பாசிடிவ் ஆக நினை."
"......"
"இதை நினைத்தே மனசை போட்டு அலட்டிக்கொள்ளாதே,இது உனக்கே உனக்கு என்று இறைவன் கொடுத்த அற்புத நேரம் என்று நினைத்துக்கோ.இங்கேயும் நிறைய தமிழ் குடும்பம் இருக்கு.அதையெல்லாம் கண்டு பிடித்து சேர்ந்துக்கலாம்.இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது.பொறுமையா இரு..சரியா?"
"....."
நாம் புதுபுது மனுஷங்களோட பழகினால் புதுபுது அனுபவங்கள் கிடைக்கும்.புது உலகம் அறியலாம்.போகப்போக பாரேன் .உனக்கே அந்த வித்தியாசம் பிடித்துப்போய்விடும்"

"...."

"உனக்கு இந்த அருந்ததி ராய் தெரியுமா?தனிமை கிடைத்ததால்தான் நாவல் எழுதி புக்கர் பரிசையே வாங்கினார்..இப்படி தனிமை காரணத்தாலேயே உலகத்திலே எத்தனையோ பேர் உயர்ந்து இருக்காங்க"

"...."

"உனக்கு எப்பவும் நான் இருக்கேன்மா.கொஞ்சம் பொறுமையா இரு.எனக்காக..ப்ளீஸ்..இன்னும் மூன்றே மாதம்.அப்பவும் உனக்கு இந்த உணர்வுகள் இருக்கும் என்றால் கண்டிப்பா நாம் ஊருக்கு போய்டலாம்.அங்கே போய் நீ சொல்லுவது போல் வேறு வேலை தேடிக்கலாம்..ம்..சரியா..அது வரை கொஞ்சம் பொறுமையா இரேன்.ப்ளீஸ்..ப்ளீஸ்.."

கனவரின் கொஞ்சல் வார்த்தைக்கு கட்டுபட்டாள்.அன்றிரவு முழுக்க கணவன் சொன்னதே காதில் ரீங்காரமிட்டது. புயல் மாதிரி காற்று அடித்த இந்திய நகர வாழ்க்கை இப்பொழுது தென்றல் போல் மெதுவாக வீசும் காற்றினைப்போல் உணர்ந்தாள்.

மறு நாள் மஹிமாவின் முகம் பிரகாசமாக இருந்தது.குரலில் வழக்கத்துக்கு மாறாக உற்சாகம்..ஆஃபீஸ் போகும் ஆடையுடன் டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் அடுக்கி வைத்த டிபன் வகைகளைப்பார்த்து அசந்து விட்டான்.

"வாவ்..வாட் சர்ப்ரைஸ்..பொங்கல்,வடை,கேசரி,குலோப்ஜாமூன்..சாதரணமாக பிரட் தானே இருக்கும்"
"இன்னிக்கு என்ன நாள்"

"என்ன நாள்"திருப்பிக்கேட்டான். "மறந்துட்டீங்களா?இன்னியோட நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் முடிந்து விட்டது"
"வாவ்.."
"என்னங்க..நேற்று என்னை டோட்டலா மாற்றிட்டீங்க.நான் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன்"

"வெரி நைஸ்"
சதீஷையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"மதியம் அபாபாவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாங்க.நானும் அபாபாவும் மார்க்கட் போய் கொஞ்சம் மீட் வாங்கிட்டு வர்ரோம்.லன்சுக்கு பிரியாணி செய்து இப்சிம் வீட்டிற்கும் கொடுக்கலாங்க"

"உய்ங்ங்ங்.."உற்சாக மிகுதியால் விசில் அடித்தான்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்..."மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் மஹி.

சந்தோஷத்தில் குலோப்ஜாமூனை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டவாறே சிறிய ஆட்டத்துடன் எதிர் பாட்டு பாட ஆரம்பித்து விட்டான்,சதீஷ்.
"பொன்னான உலகம்.இந்நேரம் உதயம்

செவ்வானம் மீது சிங்காரக்கோலம்
"

இவர்கள் அடிக்கும் லூட்டியை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அபாபாவும் புரியாமலேயே சிரித்துகொண்டிருந்தாள்.

30 comments:

அண்ணாமலையான் said...

நல்ல கதை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை நல்லாருக்கு ...

வேலன். said...

மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள்!!//
இந்த வரிகளும் மிக்க அருமையாக இருக்கு சகோதரி...கதை அருமை. வாழ்க வளமுடன், வேலன்.

ஹைஷ்126 said...

நல்ல கதை...

வாழ்க வளமுடன்

சீமான்கனி said...

கதை அருமை ... ஒவ்வொரு காட்சியும் கண்ணுல ஓடுற மாதிரி எழுதி இருக்கீங்க...வாழ்த்துகள்...

ஜெய்லானி said...

நல்ல கதை

அன்புடன் மலிக்கா said...

ஸாதிக்காக்கா. அருமையான கதை வாழ்த்துக்கள்..

இன்று இனியபாதையில். தவறுகளின் தலை- வந்து பார்க்கவும்

தாஜ் said...

assalaamu alaikkum

நாடு விட்டு நாடு வருபவர்களின் மனதை அப்படியே படிப்பது போல் இருந்தது.

இப்படி புலம்பிய ஜீவன்களில் நானும் ஒருத்தி.

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

Jaleela Kamal said...

ஸாதிகா யு ஆர் வெரி கிரேட், உள்ளூரில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் உள்ள பெண்களின் மன நிலை, வாழ்க்கை ஆரம்பத்தை அப்படியே படம் போட்டு காண்பித்து விட்டீர்கள். சூப்பர், படிக்க படிக்க ஏன் முடியுது என்ற அளவிற்கு ஸ்வாரஸ்யம்.

Unknown said...

அக்கா கதை ரொம்ப சூப்பர்..

SUFFIX said...

கதை ஓட்டம் நல்லா இருக்கு, இந்த மாதிரி சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்த பலரை நானும் இங்கே கேள்விப் பட்டதுண்டு. இன்று போர்ச்சுகீசிய மொழியில் முதன் முதலாக சிறிது கற்றுக் கொண்டேன்.

Asiya Omar said...

ஸாதிகா
நாம் புதுபுது மனுஷங்களோட பழகினால் புதுபுது அனுபவங்கள் கிடைக்கும்.புது உலகம் அறியலாம்.போகப்போக பாரேன் .உனக்கே அந்த வித்தியாசம் பிடித்துப்போய்விடும்" -அருமை.
சதீஸ் மகிக்கு சொன்னது அனைத்தும் எத்தனையோ இளம் தம்பதியினர் நாடு விட்டு நாடு சென்று தவிப்பவர்கள் அனைவருக்கும் அருமையான அறிவுரை இந்த கதையில் பொதிந்து கிடப்பது உண்மை..

ஹுஸைனம்மா said...

ஆமாக்கா, கிடைக்கிற சந்தர்ப்பங்களைச் சரியாப் பயன்படுத்திக்கணும். மொஸாம்பிக்ல போர்ச்சுக்கீஸ் மொழி பேசுவாங்களா? புதிய தகவல்.

Menaga Sathia said...

வாவ்வ்வ் ரொம்ப நல்லாயிருக்குக்கா கதை.அப்புறம் உங்களுக்கு போர்த்துகல் மொழியும் தெரியமாக்கா.அதையும் சொல்லிக் கொடுக்கலாமே...

suvaiyaana suvai said...

interesting story!

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
கதை ரொம்ப நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

யம்மோய்,விட்டா எங்க எல்லாரையும் கையோட மொசாம்பிக் கூட்டி போய்ட்டு வந்துடுவீங்க போல் இருக்கு.கதை சூப்பர்.சீக்கிரம் அடுத்த கதை ஆரம்பிச்சுடுங்க.ஏங்க ஏதோ தக்கா பிக்கான்னு போர்ர்சுகீசு மொழியை போட்டு இருக்கீங்களே அருத்தமும் போட்டா தேரிஞ்சுப்போம்ல

Unknown said...

ஏங்க ////"உய்ங்ங்ங்.."////ன்னா அடிப்பாங்க விசில்?ஹிஹ்ஹிஹ்ஹிஹ்

இலா said...

நல்ல கதை ஷாதிகா ஆன்டி!!! நேத்து பாத்தேன் தமிழ்ல பதிவு போட முடியலை... இன்னைக்கு கூடுதல் படங்கள் .. அருமை... அப்படியே அங்க உள்ள மக்களை பத்தி எழுதுங்க... ரொம்ப நாளைக்கு முன்னாடி குமுதத்தில் ஒரு ஆப்ரிக்க கதை ( மொழிபெயர்ப்பு) வந்திருந்தது.. அப்புறம் ஒரு நாள் லைப்ரரியில் முழுக்கதையும் ஆங்கிலத்தில் படித்தேன்... வேற நாட்டவர்கள் பத்தி படிக்கும் போது ரொம்ப சுவாரசியமா இருக்கு... மேலும் எழுதுங்க...

ஸாதிகா said...

சகோதரர் அண்ணாமலையான்,
உடன் கருத்துக்கும்,தொடர் கருத்துக்கும் மிக்க நன்றி!

சகோதாரர் ஸ்டாஜன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

சகோதரர் வேலன்,
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

சகோதரர் ஹைஷ்,
தங்கள் கருத்துக்க்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

சகோதரர் சீமான்கனி
//ஒவ்வொரு காட்சியும் கண்ணுல ஓடுற மாதிரி எழுதி இருக்கீங்க..//தங்கள் ஊக்க வரிகளுக்கு மிக்க நன்றி!

சகோதரர் ஜைலானி,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

தங்கை மலிக்கா,
கருத்துக்கு மிக்க நன்றி!இடுகை பார்த்து பதிவும் போட்டு விட்டேன்.

சகோதரி தாஜ்,
//நாடு விட்டு நாடு வருபவர்களின் மனதை அப்படியே படிப்பது போல் இருந்தது.//வரிகளில் மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

சகோதரி பாத்திமா ஜொஹ்ரா'
கருத்துக்கு மிக்க நன்றி.

தங்கை ஜலி,
//வரிகளை பர்ரக்கும் பொழுது மகிழ்வாக இருந்தது.கருத்துக்கும் மிக்க நன்றி!

தங்கை பாயிஷா,
தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி!

சகோதரர் ஷஃபி,
// போர்ச்சுகீசிய மொழியில் முதன் முதலாக சிறிது கற்றுக் கொண்டேன்.//நானும் இந்த கதை எழுத்தப்போய் போர்ச்சுகீசிய மொழியில் இருந்து ஓரிரு வார்த்தை கற்றுக்கொண்டேன்.தொடர் கருத்துக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

தோழி ஆசியா,
கதையில் நல்ல அறிவுரை இருப்பதாக கூறி இருக்கின்றீர்கள்.இது புது கோணம்.உங்களின் உற்சாக மெயிலால்தான் எனக்கு கதை எழுது ஆசையே வந்தது.நன்றி தோழி!

தங்கை ஹுசைனம்மா,
கருத்துக்கு மிக்க நன்றி!மொஸாம்பிக்கர்களின் தாய் மொழியே போர்ச்சுகீஸ்தான்.மற்ற ஆப்ரிக்க நாடுகளைப்பற்றித்தெரியாது.

தங்கை மேனகா,
கருத்துக்கு மிக்க நன்றி!//உங்களுக்கு போர்த்துகல் மொழியும் தெரியமாக்கா.அதையும் சொல்லிக் கொடுக்கலாமே//ஹாஹா..என்னப்பா மேனகா ரெண்டு வரி எழுதிய உடனே டீச் பண்ணுங்க என்கிற அளவுக்கு போய்ட்டீங்க.கற்றுக்கொடுக்கலாம்தான்.என்ன செய்ய?தெரியாதே:(இந்த கதை எழுதுவதற்காக கணவரிடம் இருந்து கற்றுக்கொண்டது இந்த வரிகள்!

ஸாதிகா said...

தோழி செல்வி,
கதை நன்றாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.சந்தோஷம்.கருத்துக்கு மிக்க நன்றி!

சகோதரர் செய்யத்,
"தக்கா பிக்கா" என்று நான் எழுதிய போர்ச்சுகீசின் தமிழாக்கம் தானே வேண்டும் இதோ..


//"போம் டியா சென்ஹோரா.பென் விண்டோ சென்ஹோரா'//இதன் அர்த்தம் காலை வணக்கம் மேடம்.உங்களை அன்போடு அழைக்கிறேன் மேடம்.

//"நமு டென்ஹா மெடோ.நமு செ ப்ரியோக்யூபே எஸ்டாமஸ் அஃயி"// இதன் அர்த்தம்"பயப்படாதே !கவலைப்படாதே.நாங்கள் எல்லாம் இருக்கிறோம்."

அர்த்தம் தெரிஞ்சாச்சு இல்லை?

//ஏங்க ////"உய்ங்ங்ங்.."////ன்னா அடிப்பாங்க விசில்?ஹிஹ்ஹிஹ்ஹிஹ்//

எனக்கு அடிக்கத்தெரியாதுங்க.ஏதோ எழுதிட்டேன்.:(நேரில் என்னை கலாய்க்கிறது போதாது என்று இப்ப இங்கேயும் வந்துடுறே.ரொம்ப சந்தோஷம்.நன்றி!


தங்கை இலா,
கதையின் நடையிலேயே இன்னும் கொஞ்சம் மொஸாம்பிக் மக்களின் வாழ்க்கைமுறையை எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்லலாம்தான்.ஆனால் கதை நீண்டு விடும்.இப்பவே சற்று நீளமாகி விட்டது.

படங்கள் பிடித்து இருந்ததா?எனக்கு மிக மிக மிக பிடித்தமான படங்கள்.ஓவியத்தில் அப்படியே உணர்வுகளை கொட்டி வரையபட்டுள்ள அற்புதமான சித்திரம்.

தாய் தன் பிள்ளையை அரவணைத்து இருக்கும் படம் கதைக்கு பொருத்தம் இல்லாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் போட்டுள்ளேன்.

கூகுளில் இருந்து இப்படி மாதிரி ஓவியங்கள் எக்கசக்கமாக கலெக்ட் செய்து என் போல்டரில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.அவ்வப்பொழுது அவற்றை எல்லாம் கண்டு களிக்கும் பொழுது மனம் ரம்யமாகி விடும்.நன்றி இலா.

Vijiskitchencreations said...

கதை நல்லாருக்கு,வாழ்த்துக்கள்..

athira said...

ஸாதிகா அக்கா, சூப்பர் சிறுகதை.. நான் இதை எப்படித் தவறவிட்டேனோ தெரியவில்லை. இன்றுதான் படித்தேன்.

நிஜத்தை அப்படியே எழுதியிருக்கிறீங்கள், அதுவும் நீங்கள் இப்படி ஒரு நிலைமையை அனுபவிக்காமலே.. அனுபவித்து எழுதியதுபோல எழுதியுள்ளது மிக அருமை.

ஸாதிகா said...

விஜி,கதை பிடித்து இருந்ததா?மிக்க மகிழச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி!

அதிரா,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வாழ்த்திவிட்டீர்கள்.நன்றி.அடுத்த கதை எப்போ?

kavisiva said...

சாதிகா அக்கா இந்த கதையை இன்றுதான் படித்தேன். அப்படியே என் வாழ்வில் நடந்தது போல் உள்ளது. இங்கு வந்த புதிதில் தனிமையாலும் மொழி தெரியாமலும் என்னவரை ரொம்பவே படுத்தியிருக்கிறேன் :).

மீண்டும் பழையதெல்லாம் ஞாபகத்துக்கு வந்திடுச்சு.

chitravel said...

Awesome story !This story is going to be my permanent book mark!!

Keep up the good work!